Jump to content

தமிழக கல்லூரி மாணவர்களின் போராட்டம் வெல்லட்டும்: - செந்தமிழன் சீமான் அறிக்கை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

SEEMAN_150in.jpg

உலக வரலாற்றில் இதுவரை சர்வதேச சமூகம் கண்டிராத இனப்படுகொலையை கடந்த 2009ம் ஆண்டில் சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு எம் தாய் நிலமான தமிழீழ மண்ணில் இழைத்து உள்ளது. பாதுகாப்பு வளையம் என்று இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உயிரை பாதுகாக்க ஓடிவந்த எம்மக்களை சிங்கள அரசு கொன்றொழித்தது. திட்டமிட்ட இனப்படுகொலையை சர்வதேச சமூகம் கடந்த மூன்று ஆண்டுகளாக மெளனமாக இருந்து அங்கீகரித்து வருகிறது என்பது தான் சோதனையான உண்மை. சென்ற நவம்பர் 2012 ஆம் மாதம் ஐ.நா. பெருமன்றத்தில் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானத்தில் இந்தியா இறுதி நேரத்தில் வலியுறுத்தி செய்த திருத்தங்களால் அத்தீர்மானமே வலுவற்று போனது.

  

தற்போதும் அமெரிக்கா தாக்கல் செய்து இருக்கின்ற இலங்கைக்கு எதிரான தீர்மானம் உண்மையில் இலங்கை அரசை தண்டிக்கும் வகையில் இல்லை என்பது ஒருபுறம் இருக்க, இனப்படுகொலைக்கு எதிராக சுதந்திரமான சர்வதேச விசாரனையை நடத்துவதற்கு உகந்த தீர்மானமாக இல்லை என்பது அப்பட்டமான உண்மை. ஒரு இனம் திட்டமிட்டு அழிக்கப்பட்டதை உணர்ந்து சர்வதேச சமூகம் ஈழப்பிரச்சனையை அணுகி இருக்க வேண்டும். ஆனால் அமெரிக்கா தற்போது தாக்கல் செய்துள்ள தீர்மானத்தினால் இனப்படுகொலையை திட்டமிட்டு செய்த சிங்கள பேரினவாத அரசினை தண்டிக்க இயலாது. இந்நிலையில் டெசோ போன்ற அமைப்புகள் வலுவில்லாத,சிங்கள பேரினவாத அரசிற்கு எவ்விதமான நிர்பந்தங்களையும் அளிக்காத அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவது தமிழ் இனத்திற்கு செய்யப்படும் மற்றொரு துரோகம் என்றே நான் கருதுகிறேன்.

 

சுதந்திரமான பொது வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தி முழு இறையாண்மை கொண்ட சுதந்திர தனித்தமிழீழ நாட்டினை சர்வதேச சமூகம் அமைத்து தரவேண்டும் என்பதுதான் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை கோரிக்கையாக இருக்கிறது. தொடக்கம் முதலாகவே ஈழத்தமிழருக்கும், தமிழ்த்தேசிய இனத்திற்கும் இந்தியாவின் நிலைப்பாடு தமிழர்களுக்கு முற்றிலும் எதிராகவே இருக்கிறது. தெற்காசிய பகுதியில் வலிமையான நாடாக, 7 கோடிக்கும் தமிழர்கள் வாழும் நாடாக விளங்கும் இந்திய நாட்டின் நிலைப்பாடு ஈழப்பிரச்சனையில் மிக முக்கியமானது. எனவே தான் தமிழகத்தின் கல்லூரி மாணவர்கள் இந்திய பெருந்தேசத்திற்கு தங்களது உணர்வுகளை உண்ணாநிலை அறப்போர் மூலமாக வெளிப்படுத்தி கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

 

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச விசாரணையை எவ்வித நிர்பந்தங்கள் இல்லாமல் சுதந்திரமாக நடத்துவதற்கு உகந்த திருத்தங்களை அமெரிக்கா தாக்கல் செய்திருக்கின்ற தீர்மானத்தில் ஏற்படுத்தாமல் தற்போதைய வடிவத்திலேயே அமெரிக்கா தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் அது சிங்கள பேரினவாத அரசிற்கு உதவியாகவே இருக்கும். இச்சூழ்நிலையை உணர்ந்து தான் தமிழக கல்லூரி மாணவர்கள் எழுச்சியாக திரண்டு தமிழீழத்திற்கு ஆதரவாக, இனப்படுகொலைக்கு எதிராக ஒருமித்த கருத்துடன் போராட்டி வருகின்றார்கள். தமிழக கல்லூரி மாணவர்கள் முன் வைத்திருக்கின்ற கோரிக்கைகள் இச்சுழலில் மிக அவசியமானது மட்டுமல்ல, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவே நான் கருதுகிறேன்.

 

போராட்டக் களத்தில் நிற்கும் என் மாணவத் தம்பிகளே..தங்கைகளே..

 

மாணவ சக்தி மகத்தானது என்பதைதான் வரலாறு அழுத்தமாக போதிக்கிறது. வெடித்தெழுந்த புரட்சிகளின் தொடக்கம் துளிர்த்த தோட்டங்களாக கல்லூரியின் வகுப்பறைகள் தான் விளங்குகின்றன. போராட்ட வடிவங்கள் மாறலாம், போராட்டம் மாறாது என்கிற உன்னத மொழிக்கேற்ப ஈழ விடுதலைக்காக தன் வயிற்றில் பசி என்னும் நெருப்பினை சுமந்து, தமிழீழம் ஒன்றே தீர்வு என்கிற தெளிவாக முழக்கத்தோடு , மரணத்திற்கு அஞ்சாமல் போராடும் உங்களின் தீரமிக்க போராட்டம் சர்வதேசத்தையே தமிழகம் பக்கம் திருப்பி உள்ளது.

 

அறவழியில் நின்று ஒருமித்த குரலில் நீங்கள் விடுக்கிற விடுதலைக்கான அறைகூவல், இனப்படுகொலைக்கு எதிரான முழக்கம் போன்றவை ஈழ விடுதலைப்பயணத்தில் மைல் கற்களாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்பதை உணர்ந்து தன்னலம் துறந்து இனநலன் காக்க போராட்டக்களத்தில் துணிந்து நிற்கிற சட்டக்கல்லூரி, பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் கல்லூரி உள்ளீட்ட அனைத்துக் கல்லூரி மாணவர்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிவாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது போராட்டம் வெல்லட்டும். நமது மற்றொரு தாய் நிலமான தமிழீழத்திற்கு விடுதலையின் ஒளி கிடைக்கட்டும்.

மேலும் தமிழக மாணவர்களோடு போராட்டக் களத்தில் திரண்டிருக்கும் மதிப்பிற்குரிய வழக்கறிஞர்கள் உள்ளீட்ட அனைத்து ஆதரவு சக்திகளுக்கும் என் நன்றி கலந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தன்னெழுச்சியாக அரசியல் சார்பில்லாமல் போராடும் தமிழக கல்லூரி மாணவர்களை மாநில அரசு எந்த வடிவத்திலும் ஒடுக்க கூடாது என்றும் எவ்விதமான நிர்பந்தங்களுக்கும் தமிழக கல்லூரி மாணவர்களை தமிழக அரசு உள்ளாக்கக் கூடாது என்றும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் அறவழியில் போராடிவரும் தமிழக மாணவர்களின் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் களத்திலும் முழுமையாக துணை நிற்கும் என்றும் உறுதியாக தெரிவித்து கொள்கின்றேன்.

 

நாம் தமிழர்.

செந்தமிழன் .சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

http://www.seithy.com/breifNews.php?newsID=78100&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

தன்னெழுச்சியாக உருவாகியிருக்கும் தமிழக மாணவர்போராட்டம் என்பது எதிர்பாராதது; வியப்பு தருவதாக அமைந்துள்ள

 

விரும்பத்தக்க திருப்பம். 'நீறுபூத்த நெருப்பாக'  தமிழகமாணவர்களிடையே இருந்துவந்த அறம்சார்ந்த கோபஉணர்வின்

 

வெளிப்பாடு. ஈழத்தமிழர்கள் யாருமற்ற அநாதைகளல்ல; நாங்கள் இருக்கிறோம் என்ற ஆதரவுக்குரல். எனவே தமிழகத்தின்

 

எல்லா மட்டத்திலும் அதற்கான ஆதரவுக் குரல் ஒலிப்பது இயல்பானதே. செந்தமிழன் சீமான் அதனையே வெளிப்படுத்துகிறார்

 

போராட்டம் மேலும்மேலும் தீவிரமடைந்து வெற்றிபெறவேண்டும்.

Link to comment
Share on other sites

தேவை தமிழக அரசியல்  மாற்றங்கள்.

நேர்மையான இனப்பற்றுள்ள தலைமைகள் இருந்தால் எட்டு கோடி தமிழினத்திற்கும் இந்த நிலை இருக்காது.

 

அந்த மாற்றத்தை இந்த மாணவர்கள் கொண்டுவரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நிச்சயமாக மாணவர்  எழுற்சி சுயநல அரசியல் செய்யும் அரசியவாதிகளை இனம்கண்டு அவர்களை ஓட ... ஓட விரட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதினையே தற்போதைய மாநிலம் தழுவிய மாணவர் எழுற்சி சுட்டிக் காட்டுகின்றது. 
 
இந்த மாற்றம்:
 
இதற்குமேலும் குடும்ப அரசியலுக்கும் ஊழல் அரசியலும் மத சாதிய அரசியலுக்கும் இடம் அளிக்காது தேசிய நலன்சார்ந்த தமிழர் நலன்களில் அக்கறை கொண்ட அரசு ஒன்றே அமையும் என்று நம்பலாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவை தமிழக அரசியல்  மாற்றங்கள்.

நேர்மையான இனப்பற்றுள்ள தலைமைகள் இருந்தால் எட்டு கோடி தமிழினத்திற்கும் இந்த நிலை இருக்காது.

 

அந்த மாற்றத்தை இந்த மாணவர்கள் கொண்டுவரட்டும்.

 

 

ஈழத் தமிழரின் இனப்பிரச்சனையில் தமிழக அரசியலில் பிழையான வழிகாட்டிகளாக 

இருக்கும் கட்சித்தலைமைகளுக்கும் கட்சிகளுக்கும் இந்த மாணவர்கள் 

அடுத்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்

Link to comment
Share on other sites

  • 1 year later...

ஈழத் தமிழரின் இனப்பிரச்சனையில் தமிழக அரசியலில் பிழையான வழிகாட்டிகளாக 

இருக்கும் கட்சித்தலைமைகளுக்கும் கட்சிகளுக்கும் இந்த மாணவர்கள் 

அடுத்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும்

 

வாத்தியாரின் விருப்பம் நிறைவேறிவிட்டது.. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
    • எப்போதும் 100 விழுக்காடு எந்த நாட்டிலும் இல்லை. 80% கூட மிக அரிது. இந்திய தேர்தல்களில் 70+ என்பது அதிகம்தான். 2019 ஒட்டுமொத்த இந்திய அளவு 67% அதுவும் கூட முன்னைய தேர்தல்களை விட அதிகம். இன்றும் கூட தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய இடங்களில் 62% ஆம்.
    • இல்லை - சென்னையில் இருக்கும் பிபிசி தமிழில் புதிதாக கண்டுபிடித்துள்ளார்கள்🤣. 5 வருடம் சட்டபூர்வமாக வாழ்ந்தால் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த‌ முறை 27 விழுக்காடு ம‌க்க‌ள் வாக்கு அளிக்க‌ வில்லையே ச‌கோ😮...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.