Jump to content

உலக கிண்ணத்தை தொட்டதால் சர்ச்சைக்குள்ளான பாடகி ரிஹானா


Recommended Posts

 

61997.jpgஉலகப் புகழ்பெற்ற பாடகியான ரிஹானா, உலக கிண்ண கால்பந்தாட்ட சம்பியன் கிண்ணத்தை தனது கைகளால் தொட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 


பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோ நகரின் மரக்கானா அரங்கில் கடந்த ஞாயிறன்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவை தோற்கடித்து சம்பியனான ஜேர்மன் அணியினருடன் இணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டார் பாடகி ரிஹானா. இதன்போது, ஜேர்மனி அணி வீரர்களின் கைகளிலிருந்து உலக கிண்ண கிண்ணத்தை ரிஹானாவும் தொட்டுப்பார்த்தார். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களும் ஊடகங்களின் வெளியாகின.


ஆனால், பாடகி ரிஹானா உலக கிண்ணத்தை தொட்டமை சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (ஃபீஃபா) விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்மேளனத்தின் விதிகளின்படி, உலக கிண்ணத்தை வென்ற வீரர்கள், அதாவது ஏதேனும் ஆண்டில் உலக கிண்ணத்தை வென்ற குழாமில் இடம்பெற்ற வீரர்கள், நாடுகளின் தலைவர்கள், ஃபீஃபா அதிகாரிகள், ஊழியர்கள் மாத்திரமே உலக கிண்ணத்தை தொட்டுப் பார்க்க முடியும். 


இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் பிரபல வீரர்களான வெய்ன் ரூனி, டேனியல் ஸ்டரிட்ஜ் போன்றோர் உலக கிண்ண கால்பந்தாட்ட ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய வேளைகளில்கூட உலக கிண்ணத்தை தொடாமல் மேற்படி விதியை பின்பற்றுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். 


1966 ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்தாட்டத்தில் இங்கிலாந்து அணி சம்பியனாகிய போதிலும்கூட தற்போதைய இங்கிலாந்து அணி வீரர்களுக்கு உலக கிண்ணத்தை தொட்டுப் பார்க்க முடியவில்லை. 


கடந்த வருடம் விழிப்புலனற்றோருக்கான உலக கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து  3 ஆவது தடவை சம்பியனாகிய பிரேஸில் அணியினருக்கு மாத்திரம் ஒரேயொரு விதிவிலக்காக இக்கிண்ணத்தை தொட்டுப்பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.


இவ்வாறான பின்னணியில் பாடகி ரிஹானா இக்கிண்ணத்தை தொட்டுப்பார்க்க அனுமதிக்கப்பட்டமை எப்படி என கேள்வி எழுந்துள்ளது. 

 

61992.jpg

 

61996.jpg


18 கெரட் தங்கத்தலான இக்கிண்ணம் சம்பியன் அணிக்கும் தற்காலிகமாகவே வழங்கப்படுகிறது. அதன்பின் தங்க மூலம் பூசப்பட்ட மாதிரி கிண்ணமொன்றே சம்பியனான நாட்டுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


26 வயதான ரிஹானா பார்படோஸ் நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவர். ஆனால், அமெரிக்காவையே வசிப்பிடமாகக் கொண்டவர். மிக வெற்றிகரமான பாடகிகளில் ஒருவராக விளங்கும் ரிஹானா, இசைத்துறையில் பல விருதுகளையும் வென்றுள்ளார். 

 

61994.jpg

 

61991.jpg


2011 மே முதல் 2012 மே வரையான ஒரு வருடகாலத்தில் அவரின் வருமானம்  5.3 கோடி அமெரிக்கடொலர்கள் என போர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டிருந்தது. அக்காலப்பகுதியில் பொழுதுபோக்குத் துறையில் அதிக வருமானம் பெற்ற நட்சத்திரங்கள் வரிசையில் 4 ஆவது இடத்தில் ரிஹானா இருந்தார்.


இசைத்துறை நட்சத்திரங்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ஐகன் விருதும்' கடந்த மாதம் ரிஹானாவுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை வென்ற முதல் நபர் ரிஹானாதான். 


பாடல்கள் மூலம் அவர் பெரும் புகழையும் கோடிக்கான டொலர் பணத்தையும் சம்பாதித்த போதிலும் அடிக்கடி சர்;சைகளில் சிக்கிக்கொள்வதும் பரபரப்பை ஏற்படுத்துவம் ரிஹானாவின் வழக்கமாகவுள்ளது. 


மேடைகளில் அலங்கோலமான ஆடைகளுடன் தோன்றுதல், போதைப்பொருள் விவகாரம் என பல சர்ச்சைககளில் சிக்கிக்கொண்டவர் இவர். ரிஹானாவின் இசைக்குழுவினர் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு தரைவழியாக பயணம் செய்த வேளையிலும் இரு நாடுகளின் எல்லையில் வைத்து நடத்தப்பட்டபோதையின்போது ரிஹானாவின் குழுவினரின் பிரத்தியேக பஸ்ஸிலிருந்து சிறிய அளவான கஞ்சா மீட்கப்பட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியது.


ரியோ டி ஜெனெய்ரோ மரக்கான அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜேர்மன் ஜேர்மன் அணியினர் வென்றவுடன் பார்வையாளர்கள் மத்தியிலிருந்து எழுந்து நின்ற ரிஹானா, தனது ரீ ஷேர்ட்டை உயர்த்தி பிராவை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. ஜேர்மன் அணி வீரரான 


ஜேர்மனியின் தேசிய கொடியின் வர்ணங்களைக் கொண்ட நீச்சல் உடையுடன் படம்பிடித்து டுவிட்டரில் வெளியிட்டும் ஜேர்மன் அணி மீதான தனது அபிமானத்தை ரிஹானா வெளிப்படுத்தினார். 


ஆனால், இச்சுற்றுப்போட்டியில் ரிஹானா ஆதரவளித்த ஒரே அணி ஜேர்மனி அல்ல. பிரேஸில், கொலம்பியா அணிகளுக்கும் ரிஹானா ஆதரவளித்தார்.

 

61993.jpg


இறுதிப்போட்டியின்போது ரிஹானா ஜேர்மன் அணியின் சீருடை வர்ணங்கள் கொண்ட ரீ ஷேர்ட் அணிந்திருந்தபோதிலும் அவரின் கழுத்தில் வரவேற்பு நாடான பிரேஸின் கொடியை தற்காலிக டாட்டூவாக பொறித்திருந்தார். 


ஆனால் இறுதிப்போட்டியில் ஜேர்மன் அணிக்கு வழங்கிய ஆதரவுக்காகவோ என்னவோ, போட்டியின் பின்னர் ஜேர்மன் அணி வீரர் மெசூட் ஒஸில் ரி ஷேர்டை கழற்றி ரிஹானாவுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.  

 
 

 

Link to comment
Share on other sites

ஜொள்ளு விடுவதில் குறியாக இருந்த ஜேர்மன் வீரர்கள் தொட்டுப் பார்க்க அனுமதித்துவிட்டார்கள்.. ::huh::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜொள்ளு விடுவதில் குறியாக இருந்த ஜேர்மன் வீரர்கள் தொட்டுப் பார்க்க அனுமதித்துவிட்டார்கள்.. : :huh::D

 

என்னத்தை :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது உலகக்கிண்ணதுக்குக் 'கும்பாபிஷேகம்' செய்த மாதிரி...!

 

அதன் மதிப்பு இன்னும் அதிகரித்துள்ளது!  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.