Jump to content

4வது முறையாக, உலகக் கோப்பையை வென்றது ஜெர்மனி!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பை கால்பந்து: 4வது முறையாக கோப்பையை வென்றது ஜெர்மனி!!

 

ரியோடிஜெனிரோ: உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை 4 வது முறையாக வென்றது ஜெர்மனி.

 

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அர்ஜெர்டினா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.

 

14-1405305481-argentina-lionel-messi444-

 

கோல் அடிக்காமலே....

ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் தாக்குதல் ஆட்டத்தை வேகப்படுத்திய ஜெர்மனி, அர்ஜென்டினாவுக்கு நெருக்கடி கொடுத்தது.

 

14-1405305489-argentina-marcos-rojo-600.

 

கூடுதல் நேரம்

இதனால் 90 நிமிட முடிவிலும் இரு அணியும் கோல் அடிக்காததால் ஆட்ட நடுவர் கூடுதல் நேரம் வழங்கினார்.

 

14-1405305473-argentina-ezequiel-lavezzi

 

மீண்டும் கூடுதல் நேரம்..

முதல் பாதி கூடுதல் நேரத்திலும் அர்ஜென்டினா - ஜெர்மனி அணிகள் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலையில் இருந்தன. இதனையடுத்து இரண்டாம் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

 

14-1405305497-germany-mario-goetze-600.j

 

கோல் அடித்த ஜெர்மனியின் மரியோ கோட்சே

ஆட்ட முடிவுக்கு 8 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், 113-வது நிமிடத்தில் ஜெர்மனியின் மரியோ கோட்சே ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல்கணக்கில் வென்று 4-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது ஜெர்மனி.

 

14-1405305505-fifa-world-cup-2014-final-

 

4வது முறை கோப்பையை வென்ற ஜெர்மனி

இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி 4 வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதில் 3 முறை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுடன் மோதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு ரூ. 207 கோடி பரிசு
 

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. முடிவில்1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜெர்மனி, நான்காவது முறையாக உலகக் கோப்பையை வென்றது.

 

உலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு  சாம்பியன் பட்டத்துடன், ரூ. 207 கோடி பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த அர்ஜென்டினா அணிக்கு ரூ. 148 கோடி பரிசு வழங்கப்பட்டது.

 

அதிக கோல் அடித்தவருக்கான ‘கோல்டன் ஷூ’ விருதை, கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் தட்டிச் சென்றார். ஐந்து போட்டியில் விளையாடிய இவர், மொத்தம் 6 கோல் அடித்தார்.

 

இத்தொடரின் சிறந்த வீரருக்கான ‘கோல்டன் பால்’ விருதை, அர்ஜென்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்சி தட்டிச் சென்றார். ஏழு போட்டியில் விளையாடிய இவர் 4 கோல் அடித்தார். தவிர, 4 முறை ஆட்டநாயகன் விருது வென்றார். சக வீரருக்கு ஒரு முறை கோல் அடிக்க உதவினார்.

 

சிறந்த கோல்கீப்பருக்கான ‘கோல்டன் கிளவுஸ்’ விருது ஜெர்மனியின் நுாயருக்கு வழங்கப்பட்டது.

 

நன்றி நக்கீரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பை இறுதிப் போட்டி!
சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி!


103.jpg

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. முடிவில்1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜெர்மனி, நான்காவது முறையாக உலகக் கோப்பையை வென்றது.

 

நன்றி நக்கீரன்.


4வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றிய ஜெர்மனி
 

இதுவரை நடந்துள்ள 20 உலக கோப்பை தொடரில் பிரேசில், இத்தாலி, ஜெர்மனி, அர்ஜென்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட ஏழு அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

 

அதிகபட்சமாக பிரேசில் அணி 5 முறை (1958, 62, 70, 94, 2002) கோப்பை வென்றுள்ளது.

 

இத்தாலி 4 முறை (1934, 1938, 1982, 2006) கோப்பை வென்றுள்ளது. ஜெர்மனி 4 முறை (1954, 1974, 1990, 2014)  கோப்பை வென்றுள்ளது.

 

அர்ஜென்டினா 2 முறை (1978, 1986) கோப்பை வென்றுள்ளது. உருகுவே 2 முறை (1930, 50)  கோப்பை வென்றுள்ளது.

 

பிரான்ஸ் (1998), இங்கிலாந்து (1966), ஸ்பெயின் (2010) தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'ஃபீஃபா' வரலாற்றிலேயே... முதல் முறையாக,

தெ. அமெரிக்க மண்ணில் வென்ற ஐரோப்பிய அணி ஜெர்மனி!

 

ரியோடி ஜெனிரோ: ஃபீஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தியதன் மூலம் 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே அணியை அதே கோல் கணக்கில் வீழ்த்திய பெருமையை ஜெர்மனி பெற்றுள்ளது. மேலும் தென் அமெரிக்க மண்ணில் உலகக் கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய நாட்டு அணி ஜெர்மனி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஃபீஃபா கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் இருக்கும் மரகானா ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடந்தது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜேர்மனி. கூட்டு முயற்சிக்கான வெற்றி. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.