Jump to content

தென் ஆபிரிக்கா எதிர் இலங்கை; முதலாவது போட்டி இன்று


Recommended Posts

தென் ஆபிரிக்கா எதிர் இலங்கை; முதலாவது போட்டி இன்று
 

 

தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் கெத்தாராம ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.


தென் ஆபரிக்கா ஒரு வருடத்திற்கு முன்னர் இங்கு வருகை தந்தபோது 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 4 க்கு 1 என்ற ஆட்டக் கணக்கில் ஏஞ்சலோ மெத்யூஸ் தலைமையிலான இலங்கை தனதாக்கிக்கொண்டிருந்தது.

 


இந்த இரண்டு அணிகளும் இதுவரை விளையாடியுள்ள 56 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 28இல் இலங்கையும் 26இல் தென் ஆபிரிக்காவும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்ததுடன் மற்றைய போட்டியில் முடிவு கிட்டவில்லை.

இந்தத் தொடர் இலங்கையில் நடைபெறுவதால் இலங்கைக்கு வெற்றிவாய்ப்புகள் அதிகமாகத் தென்படுகின்றது.
தென் ஆபிரிக்க அணிக்கு ஏ. பி. டி வில்லியர்ஸும் இலங்கை அணிக்கு ஏஞ்சலோ மெத்யூஸும் தலைவர்களாக விளையாடுகின்றனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6043#sthash.4kwZMvB4.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். :D

 

முதலாவது ஆட்டத்திலேயே சவுத் அப்ரிக்கா 75 ஓட்டங்களினால் அசத்தல் வெற்றி! :)

 

சிறி லங்கா பஸ்ஸை விட்டிட்டு கைகாட்டிக் கொண்டிருக்கிறது!!! :D

Link to comment
Share on other sites

தென் ஆபிரிக்காவுடனான முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வி
 

 

இலங்கை தென்ஆபிரிக்கா அணியுடனான முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

 

இலங்கை - தென் ஆபிரிக்கா அணிகளிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

 

நாயணச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 304 ஓட்டங்களைப் பெற்றது. தென் ஆபிரிக்கா அணி ஒரு நாள் போட்டியில் இலங்கை மண்ணில் பெற்ற அதி கூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

 

ஹஸிம் அம்லா 109 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். ஒரு நாள் போட்டியில் அம்லாவின் 13ஆவது சதம் இதுவாகும். தென் ஆபிரிக்க அணித் தலைவர் டி வில்லியர்ஸ் 75 ஓட்டங்களைப் பெற்றார்.

 

அஜந்த மெண்டில் 10 ஓவர்களில் 61 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 40.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 229 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 75 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

 

சங்கக்கார 88 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய வீரர்களில் டில்ஷான் 40 ஓட்டங்களையும் குசல் பெரேரா 34 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் எவரும் சோபிக்கவில்லை.

 

இம்ரான் தாஹிர் 7 ஓவர்களில் 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

போட்டியின் ஆட்ட நாயகனாக சதம் குவித்த ஹஸிம் அம்லா தெரிவானார். தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 9ஆம் திகதி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6055#sthash.6lhFmECa.dpuf

Link to comment
Share on other sites

87 ஓட்டங்களால் தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இலங்கை : அம்லாவின் சதம் வீணானது
 

 

தென் ஆபிரிக்கா அணியுடனான 2ஆவது ஒரு நாள் போட்டியில் 87 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இலங்கை அணி ஓரு நாள் தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது.

 

பல்லேகல மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றது. அதிகூடுதலாக திலகரட்ண டில்ஷான் 86 ஓட்டங்களைப் பெற்றார்.

 

தென் ஆபிரிக்கா அணியின் பந்துவீச்சாளர் மெக்லரன் 10 ஓவர்களில் 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 38.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 180 மாத்திரம் பெற்று 87 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

 

ஹஸிம் அம்லா தொடர்ச்சியாக 2ஆவது போட்டியிலும் சதமடித்து 101 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஒரு நாள் போட்டிகளில் அம்லாவின் 14ஆவது சதமாகும். தென் ஆபிரிக்க துடுப்பாட் வீரர்களில் வேறு எவரும் சோபிக்கவில்லை.  8 வீரர்கள் 4 ஓட்டங்களைக் கூட தாண்டாது ஏமாற்றமளித்தனர்.

 

பந்துவீச்சில் இலங்கை அணியின் லசித் மாலிங்க 6 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

 

முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்த இலங்கை அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது. 3ஆவது இறுதியுமான போட்டி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6116#sthash.07JnA5un.dpuf

Link to comment
Share on other sites

இலங்கை மண்ணில் முதல் தடவையாக ஒருநாள் தொடரை வென்றது தென் ஆபிரிக்கா
2014-07-12 18:16:26

இலங்கை அணியுடனான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி  82 ஓட்டங்களால் வென்றது.

 

ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி 5 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்களைப்பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 44.3 ஓவர்களில் 257 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தென் ஆபிரிக்கா 31 விகித்ததில் வென்றுள்ளது. இலங்கை மண்ணில் இலங்கையுடனான ஒருநாள் சர்வதேச தொடரில் தென் ஆபிரிக்கா வென்றமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=6141#sthash.BQDcbm5i.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.