Jump to content

என் தலைவா உன்னை இந்த விதமாகத்தான் நான் புரிந்து கொள்ள விரும்புகிறேன்(செத்தும் கொடுத்தான் சீதக்காதி)


Recommended Posts

அண்மையில் நடந்த இரு சம்பவங்கள் பிரபாகரனை நான் எவ்வாறு விளங்கிக் கொண்டேன் என்பதனைக்கூறுமாறு என்னை நிர்ப்பந்தித்தன. பிரபாகரன் என்று சொல்லாமல் தேசியத் தலைவர் என்று அவரை அழைக்கவே விரும்புகிறேன். என் புரிதலில் பிரபாகரன் அவ்வாறானவர் தான். மேலும், தேசியத்தலைவரை மெச்சுவதனாலும்இ தேசிய விடுதலைப் போராட்டம் மீதான ஆர்வத்தினாலும் என் வாழ் நாளை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த முடியாது இடர்ப் படுகின்றேன். அது வெறும் அல்லது ‘சும்மாவான’ இடர்ப்பாடு அல்ல. ஆனால், “அண்ணை கவனம்! அண்ணையை கவனமாகப் பாருங்கோ!” என்று எழுதிவைத்துவிட்டு அனுராதபுரம் விமானப் படைத்தள தாக்குதலில் களப்பலியான லெப்.கேணல்.இளங்கோவனுக்கு முன்னாலேயோ அல்லது ‘அண்ணை’ பெயர் சொல்லி தம்மை கொடையாகக் கொடுக்கின்ற கரும்புலிகள் முன்னாலேயோ என் இடர்ப்பாடு தூசு.

இவர்கள் இப்படி களப்பலி ஆனார்களேஇ கரும்புலி ஆகப் போனார்களே, இவற்றில் இருந்து தான் அல்லது இவர்களில் இருந்து தான் தேசியத் தலைவரை நான் விளங்கிக் கொள்ள முயல்கிறேன். ஹஅடி முடி அறியமுடியாதஇஉணரமுடியாத, விளங்கமுடியாத, அண்டப் பெரும் சக்தி’ என்று அவரை நான் விளங்கிக் கொள்கிறேன்.

இரண்டு சம்பவங்களை முதலில் நான் கூறிவிடுகிறேன். கணேசன் அய்யர் எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் என்ற நூலை வாசித்தது என்பது ஒன்று. மற்றயது, சனல் 4 காணொளியில் தலைவரின் மரணம்பற்றிய மர்மம் துலங்கிவிடும் என்று மக்கள் பதை பதைத்தபடி காத்திருந்தது, அப்படிக் காட்டி விடுவார்களோ என்று அஞ்சி ஒரு தொலைக்காட்சி அதனை ஒளிபரப்பவில்லை. மற்றும் சிலர் அக் காணொளியைக் காண மறுத்தும் விட்டனர்.

அந்த மகா வீரனின் மரணத்தை மர்மமாக வைத்திருப்பது, அம் மாமனிதனுக்கு நாம் செய்யும் மரியாதைக் கேடு.அந்த நூலில் அய்யர் என்ன சொல்ல வருகிறார்? அந்நூல் முழுவதிலும் தேசியத்தலைவர் மீதான குற்றச்சாட்டுக்கள் மூன்று வகைப் படுத்தப் பட்டிருக்கின்றன.

  1. தனிநபர் பயங்கரவாதம்
  2. அராஜகம்
  3. அரசியலின்மை

இப்படி வகைப்படுத்துவது ஒரு சுலபத்துக்கே அன்றி கொச்சைப்படுத்தும் நோக்கமல்ல. இக்குற்றச் சாட்டுக்களை முன் வைக்கின்ற அய்யர் பலசந்தர்ப்பங்களில் இக் குற்றச்சாட்டுகளுடன் ஒத்தோடியாகவே காணப்படுகின்றார் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இப்பொழுது 55 வயதுக்கு மேற்பட்டவரும் அரசியல் முதிர்ச்சியின்பாற்பட்டவருமான அய்யர், களத்தில் நின்றுகொண்டு 20-25 வயதிற்கு இடைப்பட்ட இளம் போராளியான தேசியத்தலைவரை விமர்சித்தல் எங்கனம் தகும்? மேலும், ஆயுதப் போராட்டத்தை திட்டமிடலுடனும் தன்னம்பிக்கை உடனும் கையில் எடுத்துக்கொண்ட ஒருவரை, எவ்வித முன்னெடுப்புகளும் இன்றி, சிறு துரும்புகூட அசைக்காத ஒருவர் குற்றம் சாட்டுதல் என்னவகை நியாயம்?

தேசியத் தலைவரினது தளத்தையும், வயதையும், ஆரம்ப காலத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.’அந்தப் பருவத்தில் அது அப்படித்தான் ஆகும்’ என்ற வாக்கியத்துடன் அதனை கடந்து நாம் போகலாம். தவறுகளில் இருந்து நாம் கற்கவேண்டும். அனுபவத்தை உள்வாங்கி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவேண்டும். அய்யர்அத் தவறுகளில் இருந்து கற்றது என்ன? அந்த அனுபவங்களில் இருந்து எவ்வாறு அவர் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறார்? அப்படியொன்றும் இல்லையெனில் இந்நூல் எழுதுவதன் அவசியம் என்ன?இ அரசியல் என்ன? பிரபா கரனைக் காட்டி இவரும் பிழைப்பு நடாத்துகிறாரா? இந்த அரசியல் சூழலை தனது ‘யாவாரத்துக்குப்’பயன் படுத்துகிறாரா? ‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ கதை தான் நினை வுக்கு வருகிறது.

இரண்டு விசயங்கள் இதில் குறிப்பிட வேண்டி இருக்கின்றன. தேசியத் தலைவர் என்ற பெருமரம் தான் காய்த்தபடி இருக்கிறது. அய்யர் போன்ற சின்னஞ் சிறார்கள்அதற்குக் கல் எறிகின்றார்கள். உண்மையில் ‘செயற்கரிய செய்தவர்’ தேசியத் தலைவர். ‘பெரியன’ செய்ய தேசியத் தலைவர் களம் வருகின்ற போது, களத்தில் யாவற்றையும் கைவிட்டு வெறும் கையோடும் தோல்வி மனப்பான்மையோடும் தமிழகத்துக்கு வள்ளம் ஏற மன்னார் கரையை வந்தடைகிறார் அய்யர். காரியம் செய்தால் தானே குறையும் வரும், பிழையும் தெரியும். ஒரு காரியமும் ஆற்றாவிட்டால் யார் காணப்போகிறார்கள்? நிறைகுடம் தளும்பாது. குடத்தில் ஒன்றும் இல்லாவிட்டாலும் தளும்பாது.

இரண்டு, தலைவர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி விட்டு அந்த அடுக்குகளில் மேல் அமைப்பைக் கட்டியவர்கள் மீதும் அதே குற்றச்சாட்டுக்கள் அடுக்கப் படுகின்றனவே! தலைவர் மீது குற்றம் சாட்டி உமாமகேஸ்வரன் பிரிந்து போகிறார். ஆனால் உமா மகேஸ்வரன் என்ன செய்தார்? என்பதனை கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவல் சொல்லும். முன்னூறுக்கும் மேற்பட்டோரை படுகொலை செய்தவர் உமாமகேஸ்வரன் என்று அந்நாவல் சொல்கிறது. உமாமகேஸ்வரனிடம் இருந்து பிரிந்த தீப்பொறி குழுவினர் உமாமகேஸ்வரனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அந்த உமாமகேஸ்வரன் கொழும்பில் நட்ட நடு வீதியில் படுகொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

ஆனால் நமது தலைவரின் சாதனை என்ன? மாபெரும் இயக்கத்தைக் கட்டி எழுப்பி, பல்லாயிரம் போராளிகளை உருவாக்கி, மகத்தான சாதனைகள் பல புரிந்து, உலகத்தமிழர் அனைவரும் தம் தலைவர் இவர் தான் என உணர வைத்தவர். இது எப்படி சாத்தியப்பட்டது? எப்படித் தேசியத் தலைவரால் இதனை நிகழ்த்த முடிந்தது?

நான் தேசியத் தலைவரை இவ்வாறு தான் புரிந்து கொள்கிறேன். அவரது உண்மை, நேர்மை, உறுதி, வீரம், ஓர்மம், வீறு இவை தாம் அவரை தலைவர் என்ற இடத்தில் நிறுத்தி வைத்திருக்கிறது. இவற்றுடன் கடும் உழைப்பு, முன் முயற்சி, திட்டமிடல், தளம்பாத இலக்கு, தடுமாறாத இலட்சியம், தலைமைத்துவப் பண்பு இவைகளையும் இணைத்துக் கொள்ளவேண்டும். இவற்றுடன், தலைவர்’இறக்குமதி’ அரசியல் செய்யவில்லை. மார்க்சிய புராணம் பாடவில்லை. எவரையும் ஏத்தி ஏத்தி தொழுதவர் இல்லை. நான் சொல்ல ஒன்றே ஒன்று தான் உண்டு. மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்ற அரசியல் நடாத்தினார். தனக்கு எது இயலுமோ அதையே சொன்னார், செய்தார். தனது கொள்கையில் பிறழாது நின்றமையால் வீரனாக அவர் மண்ணில் வீழ்ந்தார். தனது குடும்பத்தையே ஒட்டு மொத்தமாகக் காவு கொடுத்தார். தாயையும் தந்தையையும் மக்களோடு மக்களாக அனுப்பி வைத்தார். உலகில் எந்த ஒரு மனிதன் இவ்வாறு செய்திருப்பான்? மகாத்மா எனப்பட்ட காந்தி செய்திருப்பாரா?

இறைவா, என் தலைவா உன்னை இந்த விதமாகத்தான் நான் புரிந்து கொள்ள விரும்புகிறேன். அது போதும் எனக்கு.

http://www.orupaper.com

Link to comment
Share on other sites

1. இருப்பிடம் எங்கே? - இந்தியா

ஈழத்தமிழர்கள் அகதி முகாமை விட்டே வெளியேறி சுதந்திரமாக நடமாட இந்திய காவல் துறை அனுமதிக்காத காலத்தில், கொலைகளுக்கு துணை போனேன், சேர்ந்தியங்கினேன் எனச் சொல்லிக் கொண்டு ஆயுதப் போராட்டத்துக்கு தயார் என்று சொல்லிக் கொண்டு ஐயர் எப்படி இந்தியாவில், பல வாகன்களின் சொந்தக்காரனாக எந்த பயமும் இன்றி சுதந்திரமாக உலவ முடிகின்றது.

2. சூழ்ச்சி ?

ஐயரின் புத்தகத்தில் உள்ளவை பிழை என்று வாதிடவருபவர்கள் தங்களை வெளிப்படுத்த வேண்டியதுடன் தங்களது செயற்பாடுகளையும் கூறவேண்டியிருக்கும். விவாதத்துக்கு வரட்டும் எல்லோரையும் மாட்டுவோம் என்ற பெரிய சதியின் அங்கமாகவும் இது இருக்கலாம். ஆகையால் ஐயரின் புத்தகத்தை விமர்சிக்க சம்பந்தப்பட்டவர்கள் இப்போதைக்கு தயாரில்லை என அறியக் கிடைக்கிறது.

3. காட்டிக்கொடுத்தல் ?

சுய விமர்சனம் என்ற நோக்கத்தோடு வெளியிடப்பட்ட ஐயரின் புத்தகத்தில், ராகவன், ரவி, குலம், தனி, சற்குணம், ஞானம், கறுப்பி, சாந்தன், மதி, வாத்தி போன்ற பத்துக்கு மேற்பட்டோர் தொடர்பான தகவல்கள் உண்டு. இன்று வேறுவேறு நாடுகளில் வசிக்கும் இவர்களுடன் கலந்தாலோசிக்கப்படாமல் தவறான தகவல்களுடன், உண்மைக்கு புறம்பான கற்பனைகளுடன் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது எனத் தெரிய வருகின்றது.

4. இறுதியாக

சுருக்கமாகச் சொன்னால் நான்குவருடங்கள் மட்டுமே இயக்கத்தில் இணைந்திருந்த ஐயர் அப்ரூவர் ஆகி இருக்கிறார். இனியொரு இணையதளத்தை நடாத்தும் நாவலன் துணை போயிருக்கின்றார். ஹிட்லருடன் கூட இருந்தவர்கள் இன்றும் தேடித் தேடி கைது செய்யப்படுகையில், ஐயரின் தகவல்கள் யாருக்கு பயன்படபோகின்றது என்பதனை யாரும் இலகுவில் ஊகித்தறிந்து கொள்ள முடியும்.

http://www.orupaper.com/blogs/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்ற அரசியல் நடாத்தினார்

அத்துடன் சிங்களத்துக்கும் ஏற்ற அரசியல் நடாத்தினார்....

Link to comment
Share on other sites

ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்,எங்கள்தலைவர் பிறந்தார்......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட தலைவன் நாட்டுக்கு தண்ட குடும்பத்தை கொடுத்தான்.

ஐயனட தலைவர்  மகளை அமெரிக்காவில்  லாயரா வைச்சு சொத்து வேண்டி போடுறார். 

சும்மா கண்ட கண்ட நாய் எல்லாம் காசு பார்க்க எழுத தொடங்கிட்டுதுகள். 

ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்,எங்கள்தலைவர் பிறந்தார்......................

ஆயிரம் இளைய தலைவர்களை உருவாக்கி "மறைந்தார்".

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.