Jump to content

காஷ்மீரை வைத்துக் கொண்டு என்ன செய்வது..?


Recommended Posts

11-nehru-2-300.jpg

பழம்பெரும் எழுத்தாளர், பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார், எழுதியுள்ள பியான்ட் தி லைன்ஸ் என்ற சுயசரிதையில் மெளன்ட்பேட்டன் முதல் மன்மோகன் சிங் வரை பல தலைவர்கள் குறித்த பல அரிய தகவல்களை தொகுத்துள்ளார்.

இந்த நூலில் காஷ்மீர் பிரச்சினை குறித்தும், அதில் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் கொண்டிருந்த நிலைப்பாடு குறித்தும் விவரித்துள்ளார் நய்யார்...

எனது கருத்து என்னவென்றால், பாகிஸ்தான் சற்று அமைதியாக இருந்திருந்தால் காஷ்மீர் அவர்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் தானாகவே கிடைத்திருக்கும். காரணம், இந்தியா காஷ்மீரை முதலில் விரும்பவே இல்லை. குறிப்பாக சர்தார் வல்லபாய் படேல் விரும்பவில்லை. காரணம், காஷ்மீரின் பெரும்பாலான மக்கள் முஸ்லீம்கள் என்பதால்.

ஆனால் பாகிஸ்தான் பொறுமையாக இல்லாமல், பழங்குடியின மக்களைத் தூண்டி விட்டு, தனது ராணுவத்தினரையும் அனுப்பி இந்தியாவுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்ததால்தான் காஷ்மீரை விடுவதில்லை என்ற முடிவுக்கு இந்தியா வந்தது, போரும் வெடித்தது. இன்று வரை பிரச்சினையும் தொடருகிறது.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது காஷ்மீரை யாருடன் இணைப்பது என்ற சர்ச்சை வந்தது. காஷ்மீ்ர் மன்னர், தனது பகுதி இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று விரும்புகிறார். எனவே காஷ்மீர் இந்தியாவுடன்தான் இணைய வேண்டும் என்று நேரு விரும்பினார். ஆனால் அதை ஆட்சேபித்தார் சர்தார் வல்லபாய் படேல்.

இதுகுறித்து பின்னாளில், நான் ஷேக் அப்துல்லாவை சந்தித்தபோது அவர் என்னிடம் கூறுகையில், காஷ்மீர் குறித்து நேருவுக்கும், படேலுக்கும் பலத்த வாக்குவாதம் நடந்தது. காஷ்மீர் முஸ்லீ்கள் நிறைந்த பகுதி, எனவே அது பாகிஸ்தானுக்குத்தான் போக வேண்டும் என்றார் படேல். ஆனால் அதை நேரு ஏற்கவில்லை.

அப்போது காஷ்மீ்ர் மகாராஜா, இந்தியாவுடன் தனது பிராந்தியத்தை இணைக்குமாறு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் அதை ஏற்க மறுத்தார் படேல். ஏற்கனவே இந்தியாவிலேயே பல பிரச்சினைகள் உள்ளன. இதில் காஷ்மீரையும் நாம் ஏன் சுமக்க வேண்டும் என்று கேட்டார் படேல்.

இந்த நேரத்தில்தான் பாகிஸ்தானிலிருந்து பழங்குடியினரை காஷ்மீருக்குள் அனுப்பி இந்தியாவுடன் போரை ஆரம்பித்து விட்டது பாகிஸ்தான். இதனால் நேரு கோபமடைந்தார். இதையடுத்து பாகிஸ்தானிய பழங்குடியினரை எதிர்த்துப் போரிடுமாறு ராணுவத்துக்கு அவர் உத்தரவிட்டு விட்டார் என்றார் ஷேக் அப்துல்லா.

இந்துவான காஷ்மீர் மன்னர் முதலில் சுதந்திரத்தையே விரும்பினார். தான் யாருடனும் இணைய விரும்பவில்லை, எங்களை தனி நாடாக அறிவித்து விடுங்கள் என்பதே அவரது முதல் கோரிக்கையாக இருந்தது. ஒரு வேளை அது முடியாவிட்டால் இந்தியாவுடன் இணைய விரும்பினார்.

ஆனால் அப்படி இந்தியாவுடன் இணைந்தால் தனக்கு முதல் மரியாதை போய் விடும், ஷேக் அப்துல்லாவுக்குத்தான் அதிக மரியாதை கிடைக்கும் என்பதால் அவர் முதலில் மறந்து விட்டார். ஆனால் பின்னர் அதுகுறித்து அவர் யோசித்து சுதாரிப்பதற்குள், காஷ்மீரை உரிமை கொண்டாடி விட்டது இந்தியா.

காஷ்மீர் வேண்டாம் என்பதை, படேல் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியிருந்தால் அதை நிச்சயம் நேரு கேட்டிருப்பார். காஷ்மீரையும் விட்டுக் கொடுத்திருப்பார். ஆனால் அதற்கான வாய்ப்பைக் கூட தர மறுத்து விட்டதுதான் பாகிஸ்தான் செய்த தவறு. இதையே பின்னாளில் மெளன்ட்பேட்டனும் கூறியிருந்தார். காஷ்மீர் பாகிஸ்தானுக்குக் கிடைக்காமல் போக இந்தியா காரணமல்ல, மாறாக பாகிஸ்தான்தான் காரணம்.

www.Thatstamil.com

Link to comment
Share on other sites

அப்படி காஸ்மீர் முதலே பாகிஸ்தானிடம் போய் இருந்தால் ரொம்ம நன்றாக இருந்து இருக்கும். தற்சமயம் பாகிஸ்தான் இமாலய பிரதேசத்தில் அல்லது பஞ்சாப் பிரதேசத்தில் வந்து நின்று இந்தியாவின் கதவை தட்டி இருப்பான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.