Jump to content

இந்துக்களின் கிரிக்கெட் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து வெற்றிபெற வாழ்த்துகின்றேன். மற்றைய போட்டிகளுக்கு முன்னுதாரணமாக இந்துக்கள் செயற்படுவார்கள் மீண்டும் வாழ்த்துகின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  சிறப்பாக நடைபெற  வாழ்த்துக்கள்  கல்லூரிகளுக்கு ...! :D :D

Link to comment
Share on other sites

1238875_726981984000162_1399495858_n_zps

 

மேலதிக படங்களுக்கும் செய்திக்கும்  http://www.newjaffna.com/fullview.php?id=Mzc2NDU=

இங்கு இணைக்கமுடியாததால் லிங்கை தந்து உள்ளேன்

Link to comment
Share on other sites

வெற்றி வாகை சூடியது யாழ். இந்து
 

 

இந்துக்களின் பெரும் போரின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.

இந்துக்களின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் கொழும்பு இந்துக் கல்லூரி அணிக்கும் யாழ். இந்துக் கல்லூரி
அணிக்கும் இடையிலான ஐந்தாவது துடுப்பாட்டப் போட்டி நேற்று யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ். இந்துக் கல்லூரி அணி முதலில்
களத்தடுப்பை தீர்மானித்தது.

இதனைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கொழும்பு இந்துக் கல்லூரி அணி  200 ஓட்டங்களுக்கு
அனைத்து விக்கெற்றினையும் இழந்தது 39.3 ஓவர்களில் ஆட்டத்தினை நிறைவுசெய்துகொண்டது.


இதனை எதிர்த்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  யாழ்.இந்துக் கல்லூரி அணி 192 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டினை
இழந்து 48 ஓவர்களில் ஆட்டத்தை நிறைவு செய்தது.

இதனைத் தொடர்ந்து இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் காலை ஆரம்பமாகிய நிலையில்  யாழ்ப்பாணம்  இந்து
கல்லூரி அணி 274 ஓட்டங்களுக்கு சகல விக்கெற்றினையும் இழந்தது.


இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த கொழும்பு இந்துக்கல்லூரி   95 ஓட்டங்களுக்கு சகல விக்கெற்றுக்களையும்
இழந்ததுடன் யாழ் இந்துவுக்கு 21 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்படி யாழ் இந்து கல்லூரி துடுப்பெடுத்தாடி  இலகுவாக இலக்கை அடைந்து வெற்றி வாகை சுடியது.

இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த கொழும்பு இந்துக்கல்லூரி   95 ஓட்டங்களுக்கு சகல விக்கெற்றுக்களையும்
இழந்ததுடன் யாழ் இந்துவுக்கு 21 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்படி யாழ் இந்து கல்லூரி துடுப்பெடுத்தாடி  இலகுவாக இலக்கை அடைந்து வெற்றி வாகை சூடியது.

bbbb1_zpsd580917e.jpg

 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=451792769122761663#sthash.fEFBS0R8.dpuf

Link to comment
Share on other sites

இரண்டாவது இனிங்சில் யாழ் இந்துவினர் பந்தை சுரண்டியுள்ளார்கள் என நினைக்கிறேன்.. :lol:

Link to comment
Share on other sites

இந்துக்களின் போரில் வெற்றி பெற்றது யாழ் இந்துக் கல்லூரி அணி

இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து அணி 66 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 274 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதன் படி யாழ் இந்து அணி முதல் இனிங்ஸில் 74 ஓட்டங்களிளால் முன்னிலை பெற்றிருந்தது.

துடுப்பாட்டத்தில் யாழ் இந்து அணி சார்பில் :

மதுசன் - 66 ஓட்டங்கள்

கஜானன் -34 ஓட்டங்கள்

றுக்ஸ்மன் - 32 ஓட்டங்கள்

பந்து வீச்சில் கொழும்பு இந்து அணி சார்பில் :

யசோதரன் - 4 விக்கெட்டுக்கள்

கயேந்திரன் - 3 விக்கெட்டுக்கள்

இதன் பின்னர் தனது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்துக் கல்லூரி கொழும்பு அணியினால் 30.5 ஓவர்களில் வெறும் 97 ஓட்டங்ளை மட்டுமே பெற முடிந்தது.

துடுப்பாட்டத்தில் கொழும்பு இந்து அணி சார்பில் :

டிவாகரன் - 27 ஓட்டங்கள்

ஸ்டீபன் -16 ஓட்டங்கள்

பந்து வீச்சில் யாழ் இந்து அணி சார்பில் :

பானுகோபன் - 4 விக்கெட்டுக்கள்

மதுசன்- விக்கெட்டுக்கள்

சிந்துஜன் - 2விக்கெட்டுக்கள்

இதன் பின்னர் 24 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த யாழ் இந்து அணி 3.5 ஓவர்களில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 27 ஓட்டங்களை பெற்று ”இந்துக்களின் போரிலே” வெற்றி வாகை சூடியது.

துடுப்பாட்டத்தில் யாழ் இந்து அணி சார்பில் :

பானுகோபன் -12*

கல்கோகன் - 9*

பந்து வீச்சில் கொழும்பு இந்து அணி சார்பில் :

கிரிசாந் - 1 விக்கெட்

இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது மதுசனிற்கு( யாழ் இந்து) வழங்கப்பட்டது.

இதே போன்று சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது யசோதரனுக்கும்(கொழும்பு இந்து)

சிறந்த பந்து வீச்சாளருக்கான விருது பானுகோபனுக்கும் (யாழ் இந்து), சிறந்த களத்தடுப்பாளருக்கான விருது கல்கோகனுக்கும் (யாழ் இந்து) வழங்கப்பட்டது.

இப்போட்டியின் ஆட்டநாயகனிற்கு ரூபா 25,000 பெறுமதியான பரிசும், சிறந்த துடுப்பாட்ட வீரர்,சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த களத்தடுப்பாளர் போன்றோருக்கு தலா ரூபா 10,000 பெறுமதியான பரிசும், அதே போல இப் போட்டியில் வெற்றி பெற்ற யாழ் இந்து அணிக்கு ரூபா 50,000 பெறுமதியான பரிசும் யாழ் இந்துக் கல்லூரியின் லண்டன் வாழ் பழைய மாணவன் பிரதாபன் அவர்களால் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அதே போன்று இப்போட்டியில் ஊடக அனுசரணையினை வழங்கிய தமிழ் எப்.எம் இனால் இப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடுவில் இருப்பவர் யார் ...பிக் மட்சில் டக்லஸ் வந்ததற்கு அதை தலைப்பு செய்தியாக பதிந்தவர்கள் ..யாராம் இந்த வெள்ளை கொட்டு துர்ரை ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் இந்துக்களா.. முதலில.. ஒரு செற்றில்மெண்டுக்கு வாங்க. எந்த இந்துக்களின் மர்ச்சை இந்துக்களின் போர் என்றது என்று. கொஞ்ச நாளாவே உங்க நிலைமை சரியில்ல. ஒருக்கா.. கொக்குவில் இந்துவோடையும் இப்படித்தான் சொல்லி விளையாடினேள். அப்புறம் ஆனந்தாவைக் கூப்பிட்டு கூத்தடிச்சேள். இப்ப தான்.. பழைய வரலாற்றுப்படி விளையாடி இருக்கேள். இதோடவே நிண்டுக்குவியளா... இல்ல...????! :lol::icon_idea:


பை த பை.. கொழும்பு (பம்பலப்பிட்டி) இந்துக்கல்லூரி பசங்க.. நீங்க கிரவுண்டுக்கு (அதை கிரவுண்ட் என்று சொல்லுறதா.. கிறவல்.. நிலமுன்னு சொல்லுறதான்னு புரியல்ல) இராமநாதன் கல்லூரியை சைட் அடிக்காம.. பந்த அடிச்சு பழகுங்கைய்யா. :D

Link to comment
Share on other sites

நடுவில் இருப்பவர் யார் ...பிக் மட்சில் டக்லஸ் வந்ததற்கு அதை தலைப்பு செய்தியாக பதிந்தவர்கள் ..யாராம் இந்த வெள்ளை கொட்டு துர்ரை ...

 

அது எல்லாம் உதயனும்  கூக்குரல் போடுபவர்களும் கண்டு கொள்ளமாட்டார்கள்..

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.