Jump to content

ஆரம்பிக்கப் போகிறது வடக்கின் போர்


Recommended Posts

வடக்கின் சமரில் எதுவும் நிகழலாம் என்ற நிலை


யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் அணிக்கும் யாழ். மத்திய கல்லூரி அணிக்கும் இடையில் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் 108ஆவது வடக்கின் சமரில் எதுவும் நிகழலாம் என்ற நிலை இன்றைய நாள் ஆட்டநேர முடிவின்போது காணப்பட்டது.

குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்ட இப் போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவின்போது யாழ். மத்திய கல்லூரி அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கட்களை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதன் பிரகாரம் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கட் மீதமிருக்க யாழ். மத்திய கல்லூரி அணி 124 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

மத்திய கல்லூரி அணி சார்பாக இரண்டாவது இன்னிங்ஸில் கே. சன்சயன் (26), ஜூனியஸ் கனிஸ்டன் (15), பீ. ஹிரோஜன் (13), எஸ். சௌமிதரன் (12) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைத் தொட்டனர்.

பந்துவீச்சில் ஆர். லோகாதீஸ்வர் 13 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 27 ஓவர்கள் பந்துவீசி 38 ஓட்டங்களுக்கு 5 விக்கட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் இப்போதைக்கு இந்தப் போட்டியில் 91 ஓட்டங்களுக்கு 11 விக்கட்களைக் கைப்பற்றியுள்ளார்.
நேற்றுக்காலை தனது முதலாவது இன்னிங்ஸை 6 விக்கட் இழப்புக்கு 50 ஓட்டங்கள் என்ற இக்கட்டான நிலையிலிருந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த செய்ன்ற் ஜோன்ஸ் அணி, எஞ்சிய நான்கு விக்கட்களையும் இழந்த போது அதன் மொத்த எண்ணிக்கை 122 ஓட்டங்களாக இருந்தது.

எம். நிலோஜன் (22 ஓட்டங்கள்), ஆர். லோகாதீஸ்வர் (21 ஓட்டங்கள்) ஆகிய இருவரும் கடைசி விக்கட்டில் பகிர்ந்த 54 ஓட்டங்களே செய்ன்ற் ஜோன்ஸ் அணிக்கு கைகொடுத்தது.

மத்திய கல்லூரி பந்துவீச்சில் பி. நிரூபன் 6 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 17 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 5 விக்கட்களையும் எஸ். மதுசன் 40 ஓட்டங்களுக்கு 4 விக்கட்களையும் எஸ். அலன்ராஜ் 4 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும் கைப்பற்றினர்.

முதலாவது இன்னிங்ஸில் யாழ். மத்திய கல்லூரி 162 ஓட்டங்களையும் செய்ன்ற் ஜோன்ஸ் 122 ஓட்டங்களையும் பெற்றன. மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

 

 

http://www.virakesari.lk/?q=node/362143

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
வடக்கின் போரில் முறுகல்
 
 
யாழ். மத்திய கல்லூரிக்கும் சென்ஜோன்ஸ்  கல்லூரிக்கும் இடையில் நடைபெற்று வரும் துடுப்பாட்ட போட்டிக்கு ரசிகர்கள் இடையூறு விளைவித்ததாக  தெரியவருகின்றது.

இன்றைய ஆட்டம் தேநீர் இடைவேளைக்காக இடைநிறுத்தப்பட்ட போது  மதுபோதையில் மைதானத்துக்குள் உள்நுழைந்த மத்திய கல்லூரி ரசிகர்கள் விக்கட்டினை பிடுங்கி குழப்பம் விளைவித்தனர்.

அதனை தொடர்ந்து பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிசார் மைதானத்துக்குள் நுழைந்து ரசிகர்களை வெளியேறுமாறு பணித்தனர் எனினும் வெளியேற மறுத்த ரசிகர்களுக்கும் பொலிசாருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டு தணிந்ததுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=743322741114380060#sthash.ugZoqfBi.dpuf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இதன் பிரகாரம் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கட் மீதமிருக்க யாழ். மத்திய கல்லூரி அணி 124 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

 

 

தமிழ் ஊடகக்காரர்களுக்கு மொழிகள் மட்டுமல்ல.. கணிதமும் பிரச்சனை.

 

94+40= 134 .. சாருங்க. :)

Link to comment
Share on other sites

 

இன்றைய ஆட்டம் தேநீர் இடைவேளைக்காக இடைநிறுத்தப்பட்ட போது  மதுபோதையில் மைதானத்துக்குள் உள்நுழைந்த மத்திய கல்லூரி ரசிகர்கள் விக்கட்டினை பிடுங்கி குழப்பம் விளைவித்தனர்.

 

 

 

செரியான குழப்படி பெடியங்கள் போலக் கிடக்கு. பாவம் வேம்படிஸ் பெண்கள்.

 

சுண்டிக்குள் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள், பரியோவான் கல்லூரி ஜென்றில்மன் களை நண்பர்காள கிடைக்க. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செரியான குழப்படி பெடியங்கள் போலக் கிடக்கு. பாவம் வேம்படிஸ் பெண்கள்.

 

சுண்டிக்குள் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள், பரியோவான் கல்லூரி ஜென்றில்மன் களை நண்பர்காள கிடைக்க. :)

 

பரி யோவான் ரசிகர்கள் தான் மத்திய கல்லூரிக் காரர் மாதிரி உடையணிந்து சென்று குழப்பம் விளைவித்ததாக பி.பி.சி சொல்கிறது! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

பரி யோவான் ரசிகர்கள் தான் மத்திய கல்லூரிக் காரர் மாதிரி உடையணிந்து சென்று குழப்பம் விளைவித்ததாக பி.பி.சி சொல்கிறது! :icon_mrgreen:

 

பிபிசி யில் இருக்கும் 'றோ' காரர்களின் விளையாட்டு இது... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் வாழ்கலையில சாகசம் அப்பா..பாவம் SJC பொடியள் மனம் நொந்து போடுவங்கள் ...நெடுகலும் தோத்த சரியில்லை ..பிழைச்சு போகட்டும்

Link to comment
Share on other sites

இதெல்லாம் வாழ்கலையில சாகசம் அப்பா..பாவம் SJC பொடியள் மனம் நொந்து போடுவங்கள் ...நெடுகலும் தோத்த சரியில்லை ..பிழைச்சு போகட்டும்

 

என்ன செய்கிறது இப்படி என்றாலும் சொல்லி தப்ப வேண்டியதுதான் :icon_mrgreen:  நல்ல காலம் இங்க நிழலி தான் ஒரு ஆள் பரியோவான் கல்லூரி போல :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றக்கள் பயத்தில இருக்கினம் ...முதல் இன்னிக்ஸ் மாதிரி 60 க்குள் சுருண்டலும் என்று :)

Link to comment
Share on other sites

என்ன செய்கிறது இப்படி என்றாலும் சொல்லி தப்ப வேண்டியதுதான் :icon_mrgreen:  நல்ல காலம் இங்க நிழலி தான் ஒரு ஆள் பரியோவான் கல்லூரி போல :D:lol:

 

நாங்கள் வீரர்கள்.. வெற்றியையும் தோல்வியையும் சமமாக எடுப்பவர்களாக்கும்

 

(எதுக்கும் இப்பவே இப்படிச் சொல்லி வைப்பம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மத்திய கல்லூரிக்குத்தான்... சப்போட்.
எனக்கு சென் ஜோன்ஸ் மாணவர்களை... கண்ணிலும், காட்டக் கூடாது.
மாணவிகளில்... வேம்படியை விட, சுண்டுக்குளிக்குத் தான் என் ஆதரவு.mo13.gif:D

Link to comment
Share on other sites

வெற்றியை தீர்மனிக்கும் இறுதி கட்டத்தில் இரு அணிகளும் பெரும் சமர் 27-02
news

வடக்கின் போர் என்று வர்ணிக்கப்படும் சென்.ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகள் மோதும் துடுப்பாட்ட போட்டியில் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி முதல் இனிங்சஸில் 162 ஓட்டங்களையும் இரண்டவது இனிங்ஸில் 94 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி  முதல் இனிங்சஸில்   122  ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது
இரண்டாவது .இனிங்ஸில் 134 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்து ஆடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி  அணி 27  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து துடுப்பெடுத்து ஆடி வருகின்றது

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=784922742615222276#sthash.RdGP0Ntu.dpuf

Link to comment
Share on other sites

பொன் அணிகளின் போர்": சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் மோதலில் பலி


பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையில் இன்று நடைபெற்ற துடுப்பாட்ட போட்டியில்  ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி, இன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

50 பந்து பரிமாற்றங்களைக் கொண்ட இப் போட்டியில் 40 பந்து பரிமாற்றம் முடிவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலிலையே குறித்த இளைஞன் மைதானத்திலுள் வைத்து  அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகொலையானவர் பிரதான வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவனுமான ஜெயரட்ணம் டினோசன் அமலன் (வயது 24 ) என்னும் ஒரு பிள்ளையின் தந்தையார் ஆவார்.

மோதல் சம்பவம் நடைபெற்ற மைதானத்தில் பொலிசார் கடமையில் இருந்த போதிலும் மோதலை தடுக்காமல் அவர்கள் வேடிக்கை பார்த்ததாகவும் மைதானத்தில் இருந்து 200 மீற்றர் தூரத்திலையே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் அமைந்திருந்த போதிலும் மேலதிக பொலிசாரை அழைத்து மோதலை தடுக்காமல் இருந்ததாவும் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.

அதேசமயம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் பொலிசாரின் அசண்டையீனத்தால் தான் இந்த கொலை நிகழ்ந்ததாகவும் குறித்த பொலிசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் அதற்கு ஊடகங்களே துணைபுரிய வேண்டும் என கோரி யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை காரியாலயம் முன்பாக சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அதேவேளை யாழில் நடைபெற்று வரும் மற்றுமொரு துடுப்பாட்ட போட்டியான 'வடக்கின் பெருஞ் சமர்'' என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரி,யாழ்.புனித பரியோவான் கல்லூரி அணிகளுக்கிடையிலான 108 ஆவது துடுப்பாட்ட  போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையானதால் ஏற்பட்ட குழப்ப நிலையினால் போட்டி, முடிவு எதுவுமின்றிக் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.virakesari.lk/?q=node/362160

Link to comment
Share on other sites

மத்தியஸ்தரினால் மீளப்பெறப்பட்ட தீர்ப்பை ஒரு தரப்பு மறுத்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது

யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் அணிக்கும் மத்திய கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கட் போட்டி, மத்தியஸ்தரின் மீளப்பெறப்பட்ட தீர்ப்பு ஒன்றின் காரணமாக மூன்றாம் நாள் காலை 10.45 மணியுடன் ஆட்டம் கைவிடப்பட்டது.
போட்டியில் எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற நிலையில் இன்று


மத்தியஸ்தரினால் மீளப்பெறப்பட்ட தீர்ப்பை ஒரு தரப்பு மறுத்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது

யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் அணிக்கும் மத்திய கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கட் போட்டி, மத்தியஸ்தரின் மீளப்பெறப்பட்ட தீர்ப்பு ஒன்றின் காரணமாக மூன்றாம் நாள் காலை 10.45 மணியுடன் ஆட்டம் கைவிடப்பட்டது.
போட்டியில் எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற நிலையில் இன்று காலை தொடரப்பட்ட ஆட்டத்தில் 125 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு செய்ன்ற் ஜோன்ஸ் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியது. அவ்வணி 27 ஓட்டங்களுக்கு 2 விக்கட்களை இழந்திருந்தபோது எஸ். மதுசனின் பந்துவிச்சில் பீ. துவாரகசீலனை விக்கட்காப்பாளர் ஜூனியஸ் கனிஸ்டன் ஸ்டம்ப் செய்து கேள்வி எழுப்ப மத்தியஸ்தர் ஆட்டமிழப்புக்கான சமிக்ஞையைக் கொடுத்தார். ஆனால்; விக்கட்களின் மேலுள்ள பெய்ல்ஸ் விழாததை அவதானித்த பிரதான மத்தியஸ்தர் அது ஆட்டமிழப்பல்ல என்பதை மற்றைய மத்தியஸ்தருக்கு எடுத்துக்காட்ட அவர் தனது தீர்ப்பை மீளப்பெற்று துவாரகசீலன் ஆட்டமிழக்கவில்லை என அறிவித்தார்.

இதனை அடுத்து மத்தியஸ்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மத்தய அணியினர் போட்டியைத் தொடர மறுத்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.

இப் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸில் 162 ஒட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 94 ஓட்டங்களையும் பெற்றது.

செய்ன்ற் ஜோன்ஸ் கல்லூரி முதல் இன்னிங்ஸில் 122 ஓட்டங்ளையும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் கைவிடப்பட்டபோது 2 விக்கட்களை இழந்து 25 ஓட்டங்களையும் பெற்றிருந்தது.

 

http://www.virakesari.lk/?q=node/362166

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சினுக்கு ஏன் பத்மஶ்ரீ விருதெல்லாம் கொடுக்கினம் என்டு இப்பதான் கொஞ்சம் விளங்குது...!

Link to comment
Share on other sites

நடுவர்களின் செயற்பாடே போட்டி கைவிடப்பட காரணம் : அதிபர்
 

 

நூற்றாண்டு வரலாற்றுப் பெருமைமிக்க வடக்கின் பெரும் போர், துடுப்பாட்டப்போட்டி நடுவர்களின் தவறான தீர்ப்பினாலேயே கைவிடப்பட்டது என யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின்  அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் கவலை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சென்றல் நைற் ஒன்று கூடல் நிகழ்வு சனிக்கிழமைஇரவு 7.30 மணிக்கு கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் பழைய மாணவ சங்கத் தலைவர் எஸ்.தமிழ்அழகன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டியானது, வரலாற்றுப் பாரம்பரியத்தினை கொண்ட வடமாகாணத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இடம்பெற்று வருகின்றது. இரு பாடசாலைகளும் வரலாற்றுப் பாரம்பரியங்களைக்கொண்ட புகழ்பூத்த கல்லூரிகளாக விளங்குகின்றது.

இவ்விரு பாடசாலைகளுக்கும் இடையில் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற போட்டியானது கைவிடப்பட்டமை கவலையளிக்கின்றது. இம்முறை  வடக்கின்பெரும் போர் போட்டியில் ஏதாவது ஒரு பாடசாலை வெற்றிபெறும் என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்த எங்களுக்கு நடுவர்களின் தவறான செயற்பாடு காரணமாக போட்டி கைவிடப்பட்டமை அதிர்ச்சியளிக்கின்றது.

இவ்விரு பாடசாலைகளுக்கும் இடையில் நீண்ட நட்புப்பாரம்பரியம் காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் நூற்றாண்டினைத் தாண்டியும் இப்போட்டியினை நடத்தி வருகின்றோம்.

இரு பாடசாலைகளினதும் பழைய மாணவர்களும் மாணவர்களும் போட்டியை நடாத்துவதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கியிருந்தமை பாராட்டிற்குரியது.

ஆனால் எதிர்பார்ப்புடன் விறுவிறுப்பினை ஏற்படுத்திக்கொண்டிருந்த போட்டியில் நடுவர்களின் செயற்பாடு போட்டியினை கைவிடும் நிலைக்கு கொண்டு சென்று விட்டது.

வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட பாடசாலைகளின் போட்டிக்கு நடுவர்களாக கடமையாற்றுபவர்கள் பொறுப்புணர்வுடன் நடுநிலையாக தமது கடமைகளை ஆற்ற வேண்டியது முக்கியமாக அமைக்கின்றது.

அடுத்து வருகின்ற வடக்கின் பெரும் போர் போட்டி இவ்வாறான குறைகள் நீக்கப்பட்டு சிறந்த முறையில் நடாத்தப்படவுள்ளது. எமது பாடசாலையினை பொறுத்தவரையில் பழைய மாணவர்களுடைய செயற்பாடு பாராட்டிற்கு உரியதாக விளங்குகின்றது என்றார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=490342745716691531#sthash.3IzD8K4Z.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஞாயமாக  ஸ்டம்ப் பண்னும்போது போல்ஸ் விழாவிட்டால் அது அவுட்டாகாது, சிலசமயம்  அம்பயர் தவறாகக் கொடுத்திருந்தால் அதை இரண்டு அணிக் கப்டனும் நடுவர்களும் தமக்குள் பேசித் தீர்த்து  தொடர்ந்து விளையாடி இருக்க வேண்டும். அதுதான் விளையாட்டுக்கும் , பாடசாலைகளின் மாண்புக்கும் அழகு. வெற்றி தோல்வி  எல்லாம் அதற்கப்புறம்தான். யாழின் இரு பிரதான பாடசாலைகளிடமே  பண்புக்குப் பஞ்சம் என்டால் என்ன சொல்வது. இதன் மேல் அதிபர்கள் ,விளையாட்டு ஆசிரியர்கள் தலையிட்டாவது அதைத் தீர்த்து விளையாட விட்டிருக்க வேண்டும்.

 

அதை விட்டிட்டு  உலகெங்கிலுமுள்ள  லட்சக்கணக்கான ரசிகர்களையும், மாணவர்கள் , ஆசிரியர்களையும் ஏமாற்றிவிட்டார்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர்களைக் குறைசொல்லும் மத்திய கல்லூரி அதிபரின் கூற்று அதிர்ச்சியளிக்கின்றது! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருந்த என்ர வாயை அதிபர் தன் வாயைத் திறந்து கிளறிப் போட்டார்.

 

ஒரு நடுவர் தவறான தீர்ப்புக் கொடுக்க, மற்றைய நடுவர் (பிரதான நடுவர்) ஆதாரத்தோடு தீர்ப்பை மாற்றிக் கொடுக்கிறார். பின்னர் இரண்டு நடுவர்களும் ஒரே தீர்ப்பை பரி யோவான் அணிக்கு சார்பாக கொடுக்கின்றனர். விடயம் இவ்வளவு எளிதானது.

 

மத்திய கல்லூரி அணியும் , பழைய மாணவர்களும் தீர்ப்பை மாத்தி எழுதும் படி நடுவர்களை நிர்ப்பந்திக்கும் வகையில் நடந்து கொண்டதால் போட்டி கைவிடப் பட்டது. இதில் நடுவர்களிலும் பிழை இல்லை, பரி யோவான் அணியிலும் பிழை இல்லை. Sportmanship என்றாலே என்ன எண்டு தெரியாத மத்திய கல்லூரி அணியினரின் தலைமை, பழைய மாணவர்கள், இப்ப சொன்ன கருத்தை வைத்துப் பார்க்கும் போது கல்லூரியின் அதிபர்/விளையாட்டுப் பொறுப்பாசிரியர், இவர்களில் தான் முழுப் பிழையும். இந்த லட்சணத்தில் அடுத்த ஆண்டுப் போட்டியைப் பற்றியும் இப்பவே திட்டம் வேற!

 

ஒரு யோசனை:

 

அடுத்த போட்டிக்கு கல்லூரியின் பழைய மாணவர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து நடுவராக வைக்கலாம். அல்லது "நடுவர் தீர்ப்புகள் இறுதியானவை" என்ற விதி எங்களுக்குச் சரி வராததால் நடுவர் இல்லாமலே "தெருக் கீரிக்கட்டு" மாதிரி விளையாடலாம்! 

 

விளையாட்டு என்றால் பந்தை விசுக்குறதும் மட்டையைச் சுழற்றுறதும் மட்டும் தான் எண்ட ஐடியாவோட மாணவர்களின் நேரத்தையும் சக்தியையும் வீணாக்காமல் ஒரு இரண்டு வருஷத்துக்கு கீரிக்கட்டைச் சுருட்டி வைச்சுப் போட்டு மனப்பாங்கை முதலில திருத்துங்கோ! "பாரம்பரியம் பன்னாடை" எண்டு டயலாக் விட்டுக் கொண்டு இருக்காம ஒழுக்கமாக விளையாடுங்கோ அல்லது சும்மா இருங்கோ!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.