Jump to content

ஆரம்பிக்கப் போகிறது வடக்கின் போர்


Recommended Posts

வடக்கின் சமரில் எதுவும் நிகழலாம் என்ற நிலை


யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் அணிக்கும் யாழ். மத்திய கல்லூரி அணிக்கும் இடையில் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் 108ஆவது வடக்கின் சமரில் எதுவும் நிகழலாம் என்ற நிலை இன்றைய நாள் ஆட்டநேர முடிவின்போது காணப்பட்டது.

குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்ட இப் போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவின்போது யாழ். மத்திய கல்லூரி அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கட்களை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதன் பிரகாரம் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கட் மீதமிருக்க யாழ். மத்திய கல்லூரி அணி 124 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

மத்திய கல்லூரி அணி சார்பாக இரண்டாவது இன்னிங்ஸில் கே. சன்சயன் (26), ஜூனியஸ் கனிஸ்டன் (15), பீ. ஹிரோஜன் (13), எஸ். சௌமிதரன் (12) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைத் தொட்டனர்.

பந்துவீச்சில் ஆர். லோகாதீஸ்வர் 13 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 27 ஓவர்கள் பந்துவீசி 38 ஓட்டங்களுக்கு 5 விக்கட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் இப்போதைக்கு இந்தப் போட்டியில் 91 ஓட்டங்களுக்கு 11 விக்கட்களைக் கைப்பற்றியுள்ளார்.
நேற்றுக்காலை தனது முதலாவது இன்னிங்ஸை 6 விக்கட் இழப்புக்கு 50 ஓட்டங்கள் என்ற இக்கட்டான நிலையிலிருந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த செய்ன்ற் ஜோன்ஸ் அணி, எஞ்சிய நான்கு விக்கட்களையும் இழந்த போது அதன் மொத்த எண்ணிக்கை 122 ஓட்டங்களாக இருந்தது.

எம். நிலோஜன் (22 ஓட்டங்கள்), ஆர். லோகாதீஸ்வர் (21 ஓட்டங்கள்) ஆகிய இருவரும் கடைசி விக்கட்டில் பகிர்ந்த 54 ஓட்டங்களே செய்ன்ற் ஜோன்ஸ் அணிக்கு கைகொடுத்தது.

மத்திய கல்லூரி பந்துவீச்சில் பி. நிரூபன் 6 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 17 ஓவர்களில் 25 ஓட்டங்களுக்கு 5 விக்கட்களையும் எஸ். மதுசன் 40 ஓட்டங்களுக்கு 4 விக்கட்களையும் எஸ். அலன்ராஜ் 4 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டையும் கைப்பற்றினர்.

முதலாவது இன்னிங்ஸில் யாழ். மத்திய கல்லூரி 162 ஓட்டங்களையும் செய்ன்ற் ஜோன்ஸ் 122 ஓட்டங்களையும் பெற்றன. மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

 

 

http://www.virakesari.lk/?q=node/362143

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
வடக்கின் போரில் முறுகல்
 
 
யாழ். மத்திய கல்லூரிக்கும் சென்ஜோன்ஸ்  கல்லூரிக்கும் இடையில் நடைபெற்று வரும் துடுப்பாட்ட போட்டிக்கு ரசிகர்கள் இடையூறு விளைவித்ததாக  தெரியவருகின்றது.

இன்றைய ஆட்டம் தேநீர் இடைவேளைக்காக இடைநிறுத்தப்பட்ட போது  மதுபோதையில் மைதானத்துக்குள் உள்நுழைந்த மத்திய கல்லூரி ரசிகர்கள் விக்கட்டினை பிடுங்கி குழப்பம் விளைவித்தனர்.

அதனை தொடர்ந்து பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிசார் மைதானத்துக்குள் நுழைந்து ரசிகர்களை வெளியேறுமாறு பணித்தனர் எனினும் வெளியேற மறுத்த ரசிகர்களுக்கும் பொலிசாருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டு தணிந்ததுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=743322741114380060#sthash.ugZoqfBi.dpuf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இதன் பிரகாரம் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கட் மீதமிருக்க யாழ். மத்திய கல்லூரி அணி 124 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

 

 

தமிழ் ஊடகக்காரர்களுக்கு மொழிகள் மட்டுமல்ல.. கணிதமும் பிரச்சனை.

 

94+40= 134 .. சாருங்க. :)

Link to comment
Share on other sites

 

இன்றைய ஆட்டம் தேநீர் இடைவேளைக்காக இடைநிறுத்தப்பட்ட போது  மதுபோதையில் மைதானத்துக்குள் உள்நுழைந்த மத்திய கல்லூரி ரசிகர்கள் விக்கட்டினை பிடுங்கி குழப்பம் விளைவித்தனர்.

 

 

 

செரியான குழப்படி பெடியங்கள் போலக் கிடக்கு. பாவம் வேம்படிஸ் பெண்கள்.

 

சுண்டிக்குள் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள், பரியோவான் கல்லூரி ஜென்றில்மன் களை நண்பர்காள கிடைக்க. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செரியான குழப்படி பெடியங்கள் போலக் கிடக்கு. பாவம் வேம்படிஸ் பெண்கள்.

 

சுண்டிக்குள் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள், பரியோவான் கல்லூரி ஜென்றில்மன் களை நண்பர்காள கிடைக்க. :)

 

பரி யோவான் ரசிகர்கள் தான் மத்திய கல்லூரிக் காரர் மாதிரி உடையணிந்து சென்று குழப்பம் விளைவித்ததாக பி.பி.சி சொல்கிறது! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

பரி யோவான் ரசிகர்கள் தான் மத்திய கல்லூரிக் காரர் மாதிரி உடையணிந்து சென்று குழப்பம் விளைவித்ததாக பி.பி.சி சொல்கிறது! :icon_mrgreen:

 

பிபிசி யில் இருக்கும் 'றோ' காரர்களின் விளையாட்டு இது... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதெல்லாம் வாழ்கலையில சாகசம் அப்பா..பாவம் SJC பொடியள் மனம் நொந்து போடுவங்கள் ...நெடுகலும் தோத்த சரியில்லை ..பிழைச்சு போகட்டும்

Link to comment
Share on other sites

இதெல்லாம் வாழ்கலையில சாகசம் அப்பா..பாவம் SJC பொடியள் மனம் நொந்து போடுவங்கள் ...நெடுகலும் தோத்த சரியில்லை ..பிழைச்சு போகட்டும்

 

என்ன செய்கிறது இப்படி என்றாலும் சொல்லி தப்ப வேண்டியதுதான் :icon_mrgreen:  நல்ல காலம் இங்க நிழலி தான் ஒரு ஆள் பரியோவான் கல்லூரி போல :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றக்கள் பயத்தில இருக்கினம் ...முதல் இன்னிக்ஸ் மாதிரி 60 க்குள் சுருண்டலும் என்று :)

Link to comment
Share on other sites

என்ன செய்கிறது இப்படி என்றாலும் சொல்லி தப்ப வேண்டியதுதான் :icon_mrgreen:  நல்ல காலம் இங்க நிழலி தான் ஒரு ஆள் பரியோவான் கல்லூரி போல :D:lol:

 

நாங்கள் வீரர்கள்.. வெற்றியையும் தோல்வியையும் சமமாக எடுப்பவர்களாக்கும்

 

(எதுக்கும் இப்பவே இப்படிச் சொல்லி வைப்பம் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மத்திய கல்லூரிக்குத்தான்... சப்போட்.
எனக்கு சென் ஜோன்ஸ் மாணவர்களை... கண்ணிலும், காட்டக் கூடாது.
மாணவிகளில்... வேம்படியை விட, சுண்டுக்குளிக்குத் தான் என் ஆதரவு.mo13.gif:D

Link to comment
Share on other sites

வெற்றியை தீர்மனிக்கும் இறுதி கட்டத்தில் இரு அணிகளும் பெரும் சமர் 27-02
news

வடக்கின் போர் என்று வர்ணிக்கப்படும் சென்.ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ். மத்திய கல்லூரி அணிகள் மோதும் துடுப்பாட்ட போட்டியில் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி முதல் இனிங்சஸில் 162 ஓட்டங்களையும் இரண்டவது இனிங்ஸில் 94 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென் ஜோன்ஸ் கல்லூரி அணி  முதல் இனிங்சஸில்   122  ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது
இரண்டாவது .இனிங்ஸில் 134 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்து ஆடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி  அணி 27  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து துடுப்பெடுத்து ஆடி வருகின்றது

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=784922742615222276#sthash.RdGP0Ntu.dpuf

Link to comment
Share on other sites

பொன் அணிகளின் போர்": சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் மோதலில் பலி


பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையில் இன்று நடைபெற்ற துடுப்பாட்ட போட்டியில்  ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி, இன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

50 பந்து பரிமாற்றங்களைக் கொண்ட இப் போட்டியில் 40 பந்து பரிமாற்றம் முடிவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலிலையே குறித்த இளைஞன் மைதானத்திலுள் வைத்து  அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகொலையானவர் பிரதான வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவனுமான ஜெயரட்ணம் டினோசன் அமலன் (வயது 24 ) என்னும் ஒரு பிள்ளையின் தந்தையார் ஆவார்.

மோதல் சம்பவம் நடைபெற்ற மைதானத்தில் பொலிசார் கடமையில் இருந்த போதிலும் மோதலை தடுக்காமல் அவர்கள் வேடிக்கை பார்த்ததாகவும் மைதானத்தில் இருந்து 200 மீற்றர் தூரத்திலையே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் அமைந்திருந்த போதிலும் மேலதிக பொலிசாரை அழைத்து மோதலை தடுக்காமல் இருந்ததாவும் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.

அதேசமயம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் பொலிசாரின் அசண்டையீனத்தால் தான் இந்த கொலை நிகழ்ந்ததாகவும் குறித்த பொலிசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் அதற்கு ஊடகங்களே துணைபுரிய வேண்டும் என கோரி யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை காரியாலயம் முன்பாக சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அதேவேளை யாழில் நடைபெற்று வரும் மற்றுமொரு துடுப்பாட்ட போட்டியான 'வடக்கின் பெருஞ் சமர்'' என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரி,யாழ்.புனித பரியோவான் கல்லூரி அணிகளுக்கிடையிலான 108 ஆவது துடுப்பாட்ட  போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையானதால் ஏற்பட்ட குழப்ப நிலையினால் போட்டி, முடிவு எதுவுமின்றிக் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.virakesari.lk/?q=node/362160

Link to comment
Share on other sites

மத்தியஸ்தரினால் மீளப்பெறப்பட்ட தீர்ப்பை ஒரு தரப்பு மறுத்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது

யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் அணிக்கும் மத்திய கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கட் போட்டி, மத்தியஸ்தரின் மீளப்பெறப்பட்ட தீர்ப்பு ஒன்றின் காரணமாக மூன்றாம் நாள் காலை 10.45 மணியுடன் ஆட்டம் கைவிடப்பட்டது.
போட்டியில் எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற நிலையில் இன்று


மத்தியஸ்தரினால் மீளப்பெறப்பட்ட தீர்ப்பை ஒரு தரப்பு மறுத்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது

யாழ். செய்ன்ற் ஜோன்ஸ் அணிக்கும் மத்திய கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கட் போட்டி, மத்தியஸ்தரின் மீளப்பெறப்பட்ட தீர்ப்பு ஒன்றின் காரணமாக மூன்றாம் நாள் காலை 10.45 மணியுடன் ஆட்டம் கைவிடப்பட்டது.
போட்டியில் எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற நிலையில் இன்று காலை தொடரப்பட்ட ஆட்டத்தில் 125 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு செய்ன்ற் ஜோன்ஸ் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியது. அவ்வணி 27 ஓட்டங்களுக்கு 2 விக்கட்களை இழந்திருந்தபோது எஸ். மதுசனின் பந்துவிச்சில் பீ. துவாரகசீலனை விக்கட்காப்பாளர் ஜூனியஸ் கனிஸ்டன் ஸ்டம்ப் செய்து கேள்வி எழுப்ப மத்தியஸ்தர் ஆட்டமிழப்புக்கான சமிக்ஞையைக் கொடுத்தார். ஆனால்; விக்கட்களின் மேலுள்ள பெய்ல்ஸ் விழாததை அவதானித்த பிரதான மத்தியஸ்தர் அது ஆட்டமிழப்பல்ல என்பதை மற்றைய மத்தியஸ்தருக்கு எடுத்துக்காட்ட அவர் தனது தீர்ப்பை மீளப்பெற்று துவாரகசீலன் ஆட்டமிழக்கவில்லை என அறிவித்தார்.

இதனை அடுத்து மத்தியஸ்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மத்தய அணியினர் போட்டியைத் தொடர மறுத்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.

இப் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸில் 162 ஒட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 94 ஓட்டங்களையும் பெற்றது.

செய்ன்ற் ஜோன்ஸ் கல்லூரி முதல் இன்னிங்ஸில் 122 ஓட்டங்ளையும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் கைவிடப்பட்டபோது 2 விக்கட்களை இழந்து 25 ஓட்டங்களையும் பெற்றிருந்தது.

 

http://www.virakesari.lk/?q=node/362166

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சினுக்கு ஏன் பத்மஶ்ரீ விருதெல்லாம் கொடுக்கினம் என்டு இப்பதான் கொஞ்சம் விளங்குது...!

Link to comment
Share on other sites

நடுவர்களின் செயற்பாடே போட்டி கைவிடப்பட காரணம் : அதிபர்
 

 

நூற்றாண்டு வரலாற்றுப் பெருமைமிக்க வடக்கின் பெரும் போர், துடுப்பாட்டப்போட்டி நடுவர்களின் தவறான தீர்ப்பினாலேயே கைவிடப்பட்டது என யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின்  அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் கவலை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சென்றல் நைற் ஒன்று கூடல் நிகழ்வு சனிக்கிழமைஇரவு 7.30 மணிக்கு கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் பழைய மாணவ சங்கத் தலைவர் எஸ்.தமிழ்அழகன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டியானது, வரலாற்றுப் பாரம்பரியத்தினை கொண்ட வடமாகாணத்தின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இடம்பெற்று வருகின்றது. இரு பாடசாலைகளும் வரலாற்றுப் பாரம்பரியங்களைக்கொண்ட புகழ்பூத்த கல்லூரிகளாக விளங்குகின்றது.

இவ்விரு பாடசாலைகளுக்கும் இடையில் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற போட்டியானது கைவிடப்பட்டமை கவலையளிக்கின்றது. இம்முறை  வடக்கின்பெரும் போர் போட்டியில் ஏதாவது ஒரு பாடசாலை வெற்றிபெறும் என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்த எங்களுக்கு நடுவர்களின் தவறான செயற்பாடு காரணமாக போட்டி கைவிடப்பட்டமை அதிர்ச்சியளிக்கின்றது.

இவ்விரு பாடசாலைகளுக்கும் இடையில் நீண்ட நட்புப்பாரம்பரியம் காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் நூற்றாண்டினைத் தாண்டியும் இப்போட்டியினை நடத்தி வருகின்றோம்.

இரு பாடசாலைகளினதும் பழைய மாணவர்களும் மாணவர்களும் போட்டியை நடாத்துவதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கியிருந்தமை பாராட்டிற்குரியது.

ஆனால் எதிர்பார்ப்புடன் விறுவிறுப்பினை ஏற்படுத்திக்கொண்டிருந்த போட்டியில் நடுவர்களின் செயற்பாடு போட்டியினை கைவிடும் நிலைக்கு கொண்டு சென்று விட்டது.

வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட பாடசாலைகளின் போட்டிக்கு நடுவர்களாக கடமையாற்றுபவர்கள் பொறுப்புணர்வுடன் நடுநிலையாக தமது கடமைகளை ஆற்ற வேண்டியது முக்கியமாக அமைக்கின்றது.

அடுத்து வருகின்ற வடக்கின் பெரும் போர் போட்டி இவ்வாறான குறைகள் நீக்கப்பட்டு சிறந்த முறையில் நடாத்தப்படவுள்ளது. எமது பாடசாலையினை பொறுத்தவரையில் பழைய மாணவர்களுடைய செயற்பாடு பாராட்டிற்கு உரியதாக விளங்குகின்றது என்றார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=490342745716691531#sthash.3IzD8K4Z.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஞாயமாக  ஸ்டம்ப் பண்னும்போது போல்ஸ் விழாவிட்டால் அது அவுட்டாகாது, சிலசமயம்  அம்பயர் தவறாகக் கொடுத்திருந்தால் அதை இரண்டு அணிக் கப்டனும் நடுவர்களும் தமக்குள் பேசித் தீர்த்து  தொடர்ந்து விளையாடி இருக்க வேண்டும். அதுதான் விளையாட்டுக்கும் , பாடசாலைகளின் மாண்புக்கும் அழகு. வெற்றி தோல்வி  எல்லாம் அதற்கப்புறம்தான். யாழின் இரு பிரதான பாடசாலைகளிடமே  பண்புக்குப் பஞ்சம் என்டால் என்ன சொல்வது. இதன் மேல் அதிபர்கள் ,விளையாட்டு ஆசிரியர்கள் தலையிட்டாவது அதைத் தீர்த்து விளையாட விட்டிருக்க வேண்டும்.

 

அதை விட்டிட்டு  உலகெங்கிலுமுள்ள  லட்சக்கணக்கான ரசிகர்களையும், மாணவர்கள் , ஆசிரியர்களையும் ஏமாற்றிவிட்டார்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடுவர்களைக் குறைசொல்லும் மத்திய கல்லூரி அதிபரின் கூற்று அதிர்ச்சியளிக்கின்றது! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருந்த என்ர வாயை அதிபர் தன் வாயைத் திறந்து கிளறிப் போட்டார்.

 

ஒரு நடுவர் தவறான தீர்ப்புக் கொடுக்க, மற்றைய நடுவர் (பிரதான நடுவர்) ஆதாரத்தோடு தீர்ப்பை மாற்றிக் கொடுக்கிறார். பின்னர் இரண்டு நடுவர்களும் ஒரே தீர்ப்பை பரி யோவான் அணிக்கு சார்பாக கொடுக்கின்றனர். விடயம் இவ்வளவு எளிதானது.

 

மத்திய கல்லூரி அணியும் , பழைய மாணவர்களும் தீர்ப்பை மாத்தி எழுதும் படி நடுவர்களை நிர்ப்பந்திக்கும் வகையில் நடந்து கொண்டதால் போட்டி கைவிடப் பட்டது. இதில் நடுவர்களிலும் பிழை இல்லை, பரி யோவான் அணியிலும் பிழை இல்லை. Sportmanship என்றாலே என்ன எண்டு தெரியாத மத்திய கல்லூரி அணியினரின் தலைமை, பழைய மாணவர்கள், இப்ப சொன்ன கருத்தை வைத்துப் பார்க்கும் போது கல்லூரியின் அதிபர்/விளையாட்டுப் பொறுப்பாசிரியர், இவர்களில் தான் முழுப் பிழையும். இந்த லட்சணத்தில் அடுத்த ஆண்டுப் போட்டியைப் பற்றியும் இப்பவே திட்டம் வேற!

 

ஒரு யோசனை:

 

அடுத்த போட்டிக்கு கல்லூரியின் பழைய மாணவர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து நடுவராக வைக்கலாம். அல்லது "நடுவர் தீர்ப்புகள் இறுதியானவை" என்ற விதி எங்களுக்குச் சரி வராததால் நடுவர் இல்லாமலே "தெருக் கீரிக்கட்டு" மாதிரி விளையாடலாம்! 

 

விளையாட்டு என்றால் பந்தை விசுக்குறதும் மட்டையைச் சுழற்றுறதும் மட்டும் தான் எண்ட ஐடியாவோட மாணவர்களின் நேரத்தையும் சக்தியையும் வீணாக்காமல் ஒரு இரண்டு வருஷத்துக்கு கீரிக்கட்டைச் சுருட்டி வைச்சுப் போட்டு மனப்பாங்கை முதலில திருத்துங்கோ! "பாரம்பரியம் பன்னாடை" எண்டு டயலாக் விட்டுக் கொண்டு இருக்காம ஒழுக்கமாக விளையாடுங்கோ அல்லது சும்மா இருங்கோ!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.