Jump to content

ஆரம்பிக்கப் போகிறது வடக்கின் போர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் பாடசாலைகளுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில் கல்லுரி மாணவர்கள் யாழ்.நகர வீதிகளில் இசை வாத்தியங்களோடு நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

01%2868%29.jpg

 

04%2832%29.jpg

 

03%2852%29.jpg

 

02%2868%29.jpg

 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=542892713707566447#sthash.V9LwSHlP.dpuf
Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூட்டிய கடைக்கு முன்னால் நிதி சேகரிப்பவர்கள் இவர்களாகத்தான் இருக்கும் ...உதயனுக்கும் இந்த பிக்மச் க்குமான கரள் உலக பிரசித்தம் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளுத்தண்ணிக்குக் காசு சேர்க்க வெளிக்கிட்டினம். இவர்களில் அரைவாசிக்குமேற்பட்டோர ஆனைக்கோட்டையில காணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டில் ஒரு முடிவை காண்பதற்கு மூன்று நாள் ஆட்டம் நிச்சயாமாக தேவைப்படும். மார்ச் 18 முதல் 20 வரை நடைபெற இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  பெயரை   மாத்துங்களப்பா......

தமிழனுக்கு இனி  இது வேண்டாம்...... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வடக்கின் குடிகாரர் ஆட்டம்.. என்ற நிலைக்கு மாறிக்கிட்டு இருக்குது. இந்த அவலை நிலை.. தொடராமல் இருப்பதை.. சமூக ஆர்வலர்கள் உறுதி செய்யனும். புலம்பெயர்ந்தவர்கள் தான்.. அங்க போய் இதனை இன்னும் மோசமாக்குகிறார்கள். :(:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வடக்கின் குடிகாரர் ஆட்டம்.. என்ற நிலைக்கு மாறிக்கிட்டு இருக்குது. இந்த அவலை நிலை.. தொடராமல் இருப்பதை.. சமூக ஆர்வலர்கள் உறுதி செய்யனும். புலம்பெயர்ந்தவர்கள் தான்.. அங்க போய் இதனை இன்னும் மோசமாக்குகிறார்கள். :(:rolleyes:

 

புலம்பெயர்ந்தவர்கள் அப்படி மோசமான குடிகாரர்களா? :unsure:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவர்கள் அப்படி மோசமான குடிகாரர்களா? :unsure:

 

 

மிக மோசமான குடிகாரர்கள். அதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை..! கணக்கெடுப்பு இல்லாததால் விவரம் தெரியல்ல.. எடுத்தால் தெரியும்.. எத்தினை பரலை குடிச்சுத் தள்ளுதுங்க என்று. அதுவும்.. அரசாங்கப் பிச்சைக்காசு எல்லாம்.. பியருக்காலும்.. புகைக்குள்ளாலும்.. சூதுக்குள்ளாகும் அதுக்கே திரும்பிப் போகுது. :icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருங்கடி! அமைச்சர் ஐங்கரநேசன்ர காதில போட்டு விடுறன்! :D


புலம்பெயர்ந்தவர்கள் அப்படி மோசமான குடிகாரர்களா? :unsure:
 

 

இருபது வருஷத்துக்கு முந்தின காலத்தில இந்த மட்சில அதிகப் படியா கள்ளுத் தான் புளங்கும் (அதுவும் களவாக, த.ஈ காவல் துறைக்கும் மாணவர் தலைவர்களுக்கும் ஒளிச்சு நடக்கும்). இப்ப புலம் பெயர் பணக்காரர்களான பழைய மாணவர்கள் பள்ளிக் கூடத்துக்குள்ளயே பெரிய சாமான்கள் எல்லாம் வாங்கிப் போட்டு நடத்தீனம். இதுக்கெண்டே ஊர் போற ஆக்கள் இருக்கீனம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலுமா எழாதா எலுமின்றால் பண்ணிப்பார் கொலிச் கொலிச் சென்ரல் கொலிச்

Link to comment
Share on other sites

எலுமா எழாதா எலுமின்றால் பண்ணிப்பார் கொலிச் கொலிச் சென்ரல் கொலிச்

 

ஏலுமா ஏலாதா ஏலுமென்றால் பண்ணிப்பார் கொலிச் கொலிச் சென்ரல் கொலிச் :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எலுமா எழாதா எலுமின்றால் பண்ணிப்பார் கொலிச் கொலிச் சென்ரல் கொலிச்

 

என்ன..நக்கலா? எங்கட கல்லூரிக் கீதத்திலயே இருக்குது "சென்றல் கொடியென்றும் தாழ்வு பெறாது!" :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன..நக்கலா? எங்கட கல்லூரிக் கீதத்திலயே இருக்குது "சென்றல் கொடியென்றும் தாழ்வு பெறாது!" :D

 

நீங்கள் மத்திய கல்லூரியா..??! :)

 

இந்துக்கல்லூரி மத்திய கல்லூரிக்குத்தான் தார்மீக ஆதரவு நல்குவது..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன..நக்கலா? எங்கட கல்லூரிக் கீதத்திலயே இருக்குது "சென்றல் கொடியென்றும் தாழ்வு பெறாது!" :D

 

வேகமாக தட்டெச்சு செய்யும்போது தவறுகள் நிகழ்ந்துவிட்டது. நான் மத்திய கல்லூரிக்குத் தான் ஆதரவு. எனது தகப்பனார் கல்விகற்ற பாடசாலை. கடைசியாக 90ம் ஆண்டில் நடைபெற்ற போட்டியைப் பார்த்திருந்தாலும் எனக்குப் பிடித்த போட்டி 82, 83களில் நடைபெற்ற போட்டிகள்தான். அப்பொது மத்தியகல்லூரியில் உமாசுதன், போல் பிரகலாதன், தோமஸ், சுதர்சன் போன்றவர்கள் விளையாடியிருக்கிறார்கள். பரியோவான் கல்லூரியில் விளையாடிய விக்னபாலன் கனடாவில் இருக்கிறார்.

Link to comment
Share on other sites

வேகமாக தட்டெச்சு செய்யும்போது தவறுகள் நிகழ்ந்துவிட்டது. நான் மத்திய கல்லூரிக்குத் தான் ஆதரவு. எனது தகப்பனார் கல்விகற்ற பாடசாலை. கடைசியாக 90ம் ஆண்டில் நடைபெற்ற போட்டியைப் பார்த்திருந்தாலும் எனக்குப் பிடித்த போட்டி 82, 83களில் நடைபெற்ற போட்டிகள்தான். அப்பொது மத்தியகல்லூரியில் உமாசுதன், போல் பிரகலாதன், தோமஸ், சுதர்சன் போன்றவர்கள் விளையாடியிருக்கிறார்கள். பரியோவான் கல்லூரியில் விளையாடிய விக்னபாலன் கனடாவில் இருக்கிறார்.

சுதர்சனும் தோமசும் கனடாவில் இருக்கின்றார்கள் ,போல் லண்டன் .இரண்டு வருடங்களுக்கு முன் கனடாவில் மத்திய கல்லூரி மிக பெரிய அளவில் Big Match  வைத்தார்கள் .உலகெங்கும் இருந்து பலர் வந்திருந்தார்கள் .

Big Match ,சிற்றி பேக்கரி பாணும் பருப்பும் ,புது ஸ்கோர் போர்ட் கட்டி மகேந்திரன் அடித்த சென்றசூரி மறக்க முடியாத நாட்கள் . :icon_mrgreen: .

Link to comment
Share on other sites

ஆயிரம் தான் வாழ்த்தினாலும் வெல்லப் போவது என்னமோ என் பரியோவான் கல்லூரிதான்.  எங்கள் சுண்டிக்குளி அழகிகள் வானளாவ வாழ்த்த வெற்றி வாகை சூடப் போவது நாங்கள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் தான் வாழ்த்தினாலும் வெல்லப் போவது என்னமோ என் பரியோவான் கல்லூரிதான்.  எங்கள் சுண்டிக்குளி அழகிகள் வானளாவ வாழ்த்த வெற்றி வாகை சூடப் போவது நாங்கள் தான்.

 

ஓமோம்! இந்த சுண்டுக்குழி அழகிகளின் வானளாவின வாழ்த்துப் பற்றி எனக்கும் அனுபவம் இருக்கு. 1993 போட்டியின் போது சுண்டுக்குழி அழகிகளையும் வேம்படிப் பேரழகிகளையும் தம்பர் மண்டபத்தின் இரு வேறு மாடிகளில் அமர வைத்து போட்டியைக் காண வைத்தோம். சுண்டுகள் இருந்த மாடியில் இருந்து தொடர்ந்து கச்சான் பொதிகளும் கசக்கிய பேப்பர்களும் கீழே நின்றிருந்த மத்திய கல்லூரிப் பெடியள் மீது வந்து விழுந்து கொண்டே இருந்தன. திடீரெண்டு எனக்குப் பக்கத்தில் ஒரு தும்புக் கட்டை வந்து விழுந்தது. கோட்டையில இருந்து வாற செல்லுக்கே படுக்காத நான் பதறிப் போனன். அடுத்த நாள் ஆட்டத்துக்கு சுண்டுக் குழி மகளிர் எல்லாரையும் "பொடி செக்கப்" பண்ணித் தான் உள்ள விட்டனாங்கள்! :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

ரசிகர்களை கவர்ந்திழுக்கும் மாபெரும் போர்.
 

 

வடக்கிலுள்ளவர்களை மட்டுமல்ல இலங்கையின் அனைத்து பிரதேசங்களைச் சேர்ந்த மக்களையும் புலம்பெயர் வாழ் தமிழர்களையும் யாழ்ப்பாணத்தின் பக்கம் கவர்ந்திழுக்கும் வடக்கின் மாபெரும் போர் பெருந்துடுப்பாட்டப் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (13) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையிலே பழமையான துடுப்பாட்டப்போட்டிகளில் ஒன்றான வடக்கின் 'மாபெரும் போர்' துடுப்பாட்டப் போட்டியில் மோதும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியும் இவ்வருடம் 108 ஆவது தடவையாக மோதவுள்ளன.

மட்டுப்படுத்தப்படாத பந்துபரிமாற்றங்களையுடைய இந்த வடக்கின் மாபெரும் போர் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

1904 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டியில் இதுவரையிலும் நடைபெற்று முடிந்த 107 வடக்கின் மாபெரும் போர்களில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 33 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், 39 போட்டிகள் சமநிலையிலும், 7 போட்டிகளின் முடிவுகள் தெரியாத நிலையிலும் ஒரு போட்டி கைவிடப்பட்ட நிலையிலும் இருக்கின்றன.

வடக்கின் மாபெரும் போரின் கடந்த இரண்டு வருடங்களில் நடைபெற்ற இரு போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்திருந்ததுடன், அதற்கு முந்திய 5 போட்டிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி தொடர் வெற்றிகளைப் பெற்றிருந்தது.

வடக்கின் மாபெரும் போர் இதுவரையும் கடந்து வந்த 107 போட்டிகளில் ஒரு இனிங்ஸில் அதிகப்படியான ஓட்டங்களை 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 354 ஓட்டங்களை 9 இலக்குகள் இழப்பிற்கு பெற்றிருக்கின்றது. அத்துடன், துடுப்பாட்ட வீரர் பெற்ற அதிக ஓட்டங்களாக 1990 ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரன் எஸ்.சுரேஸ்குமார் 145 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இம்முறை நடைபெறவுள்ள 108 ஆவது போரில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி பி.துவாரகசீலன் தலைமையிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி கே.ஜுனியஸ்கனிஸ்ரன் தலைமையிலும் களமிறங்கவுள்ளது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி இவ்வருடம் (2014) இதுவரையிலும் இரண்டு நாட்கள் கொண்ட மட்டுப்படுத்தப்படாத பந்துபரிமாற்றங்கள் கொண்ட போட்டிகளில் 10 அணிகளுடன் மோதியிருக்கிறது. இதில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியினை 127 ஓட்டங்களாலும், கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணியினை இனிங்ஸ் மற்றும் 124 ஓட்டங்களாலும், கொக்குவில் இந்துக் கல்லூரி அணியினை இனிங்ஸ் மற்றும் 97 ஓட்டங்களாலும், சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியினை 5 இலக்குகளாலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணியினை 177 ஓட்டங்களாலும், யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியினை இனிங்ஸ் மற்றும் 147 ஓட்டங்களாலும், சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழக அணியினை 142 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றது.

அத்துடன், மாத்தளை சென்.தோமஸ் கல்லூரி அணி மற்றும் காலி தேவபத்திராஜா கல்லூரி அணி ஆகியவற்றுடனான போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இருந்தும், குருநாகல் இப்ராஹமுவ மத்திய கல்லூரியுடனான போட்டியில் 30 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

10 போட்டிகளில் பெற்ற அனுபவத்தினையும் வடக்கின் மாபெரும் போரில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு எதிராக பிரயோகிக்க யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி காத்திருக்கின்றது. அத்துடன், மொத்த வெற்றி எண்ணிக்கையினை சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியினை விட அதிகம் பெறவேண்டும் என்ற உத்வேகத்துடன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி இவ்வருடம் களமிறங்கவுள்ளது.

இதேபோல் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி இவ்வருடம் (2014) இரண்டு நாட்கள் கொண்ட மட்டுப்படுத்தப்படாத பந்துபரிமாற்றங் கொண்ட போட்டியில், 12 அணிகளுடன் மோதியிருக்கிறது. இவற்றில் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணியுடனான போட்டியில் இனிங்ஸ் மற்றும் 197 ஓட்டங்களாலும், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணியுடனான போட்டியில் 10 இலக்குகளாலும், யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அணியுடனான போட்டியில் இனிங்ஸ் மற்றும் 188 ஓட்டங்களாலும், தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணியுடனான போட்டியில் இனிங்ஸ் மற்றும் 369 ஓட்டங்களாலும், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியினை இனிங்ஸ் மற்றும் 3 ஓட்டங்களாலும், மாத்தறை சென்.தோமஸ் அணியுடனான போட்டியில் 25 ஓட்டங்களாலும், சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியுடனான போட்டியில் 161 ஓட்டங்களாலும், சிலாபம் சென்.மேரிஸ் கல்லூரியுடன் 54 ஓட்டங்களாலும், கோட்டை ஆனந்த சஸ்ராலய அணியுடன் 198 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றிருந்தது.

அத்துடன், மவுண்டன் லவினியா சென்.தோமஸ் கல்லூரி அணி மற்றும் கண்டி ரினிற்றி கல்லூரி அணியுடனான போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தது.

இருந்தும் கொழும்பு றோயல் கல்லூரி அணியுடனான போட்டியில் இனிங்ஸ் மற்றும் 131 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

12 போட்டிகளிலும் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினை வீழ்த்தி 8 வருடங்களாக பெறாமல் இருக்கும் வெற்றியினை பெறுவதற்காகக் காத்திருக்கின்றது. (இறுதியாக 2004 ஆம் ஆண்டு சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றிபெற்றிருந்தது).

வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டியென்றால் இரு அணி ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் நிறைந்ததாகவே இருக்கும். இரு பாடசாலைகளையும் சேர்ந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பழைய மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர்கள், வடக்கின் மாபெரும்; போர் துடுப்பாட்டப் போட்டிகளைக் காண்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு இந்தக் காலப்பகுதியில் படையெடுப்பார்கள்.

துடுப்பாட்ட ரசிகர்களுக்கு விருந்தாகவிருக்கின்ற இந்த வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்ட போட்டியில் இரு அணிகளின் வீரர்களும் தங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் அதேவேளை தங்கள் அணியினையும் வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதில் முனைப்புடன் செயற்படுவார்கள் என்பது மட்டும் நிஜமானது.

 

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-47-00/102942-2014-03-12-07-16-30.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைத்தேன் நம்ம சென்ட்ரல் பசங்க இந்தமுறை அப்படியும் இப்படியும் என்று..பார்த்த்தால் நல்ல டீம்போலத்த்தாதான் இருக்க்கு ..காலேஜ் காலேஜ் சென்ட்ரல் காலேஜ் ...நன்றி நவீனன் இணைப்பிற்க்கு ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போடுடா மச்சான் பொல்லுப் பறக்க ,

 

அடியடா மச்சான்  பவுன்றி சிக்சர் ...! :D:icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.