Jump to content

U19 உலக கோப்பை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறியது. நேற்று நடந்த காலிறுதியில் வெஸ்ட் இண்டீசை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மற்றொரு காலிறுதியில், தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில், ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது.

ஐ.சி.சி., சார்பில், 19 வயதுக்குட்பட்டோருக்கான 10வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. நேற்று துபாயில் நடந்த காலிறுதியில், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரமால் லீவிஸ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

பூரன் சதம்:வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹெட்மியர் (1), டாஜினரைன் சந்தர்பால் (4) மோசமான துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த சோலோஜனோ (10), டிராக்ஸ் (0), பிரண்டன் கிங் (7), கேப்டன் லீவிஸ் (1), மோடி–கன்ஹாய் (1), சார்லஸ் (1) சொற்ப ரன்னில் அவுட்டானார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்து திணறியது. விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும், மறுமுனையில் அசத்திய நிகோலஸ் பூரன், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இவர், 133வது பந்தில் சதம் அடித்து அணிக்கு கவுரவமான ஸ்கோரை பெற்றுத்தந்தார். ஜோன்ஸ் (20) ‘ரன்–அவுட்’ ஆனார். அபாரமாக ஆடிய பூரன் 143 ரன்கள் (6 சிக்சர், 14 பவுண்டரி) எடுத்த போது, வால்கர் பந்தில் போல்டானார். வெஸ்ட் இண்டீஸ் அணி 49.5 ஓவரில் 208 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது.

மார்கன் அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜரோன் மார்கன் (55), மாத்யூ ஷார்ட் (52) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அடுத்து வந்த டமியன் மார்டிமர் (10), கேப்டன் கிரிகோரி (3) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய ஜாக் டோரன் (49*) அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. துபாயில், வரும் பிப்., 26ம் தேதி நடக்கவுள்ள அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.

தென் ஆப்ரிக்கா முன்னேற்றம்

சார்ஜாவில் நேற்று நடந்த மற்றொரு காலிறுதியில், தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ‘பேட்’ செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவரில் 197 ரன்களுக்கு சுருண்டது. பின் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 39.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா சார்பில் அய்டன் மார்க்ராம் (105), கிர்வின் கிறிஸ்டோபெல்ஸ் (56) அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்ரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

http://sports.dinamalar.com/2014/02/1393177860/Worldcupcricket.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா கோப்பையோடை நாடு திரும்ப போக்குது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதல் சொன்ன போல தென் ஆப்பிரிக்கா கோப்பையை வென்றது......தென் ஆப்பிரிக்கா அணிக்கு வாழ்த்துக்கள்.......

Link to comment
Share on other sites

இளைஞர் உலக கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்ரிக்கா சாம்பியன்


 

துபாய்: துபாயில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில், பாகிஸ்தான் அணியை வென்று தென் ஆப்ரிக்கா சாம்பியன் பட்டம் பெற்றது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்தது. இதன் பைனலில் தென் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 44.3 ஓவரில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி, 42.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=925565
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.