Jump to content

சிறிலங்கா: போரும் பொய்த்துப் போகும் நல்லிணக்க முயற்சிகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Relatives%20of%20the%20%20missing.jpg

தற்போது சிறிலங்காவில் இனப்பிளவுகளால் மட்டும் மோதல்கள் ஏற்படவில்லை. பல்வேறு மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளாலும் மோதல்கள் ஏற்படுகின்றன. பௌத்த அடிப்படைவாதக் குழுக்களுக்கும் முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மத சமூகங்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. 

இவ்வாறு The Platform என்னும் இணையத்தளத்தில் Anupama Ranawana எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் சிறிலங்கா தொடர்பில் அமுல்படுத்தப்பட்ட தீர்மானமானது நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதில் அதிகம் செல்வாக்குச் செலுத்தும். அமெரிக்காவின் தலைமையில் முன்வைக்கப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது சிறிலங்காவில் தொடரப்பட்ட போரின் போது அதில் பங்கு கொண்ட சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு போர்க் குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கான வழியை உருவாக்கியுள்ளது. 

"அனைத்துலக மனித உரிமைச் சட்டம் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டம் போன்றவை மீறப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படுவதற்கும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைவாத சுதந்திரங்களைப் பாதுகாத்தல் மற்றும் அதனை மேலும் அதிகரித்தலுக்கான சிறப்பு அறிக்கையிடலாளரின் ஆணைகளை உணவுக்கான உரிமை என்ற அடிப்படையில் மேலும் விரிவுபடுத்துவதற்கும் சிறிலங்கா ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என மனித உரிமைகளுக்கான ஆணையாளரின் செயலகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனத்தைச் செலுத்தி தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையானது நாட்டில் நீதியையும் பொறுப்பளிப்பையும் நோக்கிய முதலாவது நகர்வாக சிறிலங்கா மீதான பேரவையின் தீர்மானம் அமைந்துள்ளது. புலம்பெயர் தமிழ் சமூகமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அனைத்துலக சமூகத்திடம் அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த அடிப்படையில், மனித உரிமைகள் தொடர்பில் சிறிலங்கா மீது அழுத்தம் கொடுப்பதற்கு ஏனைய நாடுகள் தமது விருப்பத்தைத் தெரிவிப்பதற்கான உந்துதலை இத்தீர்மானம் வழங்கியுள்ளது. 47 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையின் உறுப்பு நாடுகளில் 25 நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தும், 13 நாடுகள் இதனை எதிர்த்தும், எட்டு நாடுகள் இந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்தும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. 

தமிழர்கள் அதிகம் வாழும் இந்தியாவானது இதற்கு முன்னர் பேரவையில் முன்வைக்கப்பட்ட இரண்டு தீர்மானங்களையும் ஆதரித்து வாக்களித்தது. ஆனால் இந்தத் தடவை இந்தியா தீர்மானத்தை ஆதரிப்பதற்கான வாக்கெடுப்பைப் புறக்கணித்து நடுநிலை வகித்துள்ளது. இது இத்தீர்மானத்தின் பலம் தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பளிப்பதுடன், வெளிப்படைத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது. வடகொரியாவில் நிலவிய சூழல் தொடர்பாக கலந்துரையாடிய போது, நாங்கள் தற்போது அனைத்துலக சமூகத்திடம் சவாலை விடமுடியும் எனவும் சிறிலங்கா அரசாங்கம் மீது உண்மையான விசாரணையை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும் மனித உரிமைகளுக்கான ஐ.நா சிறப்பு ஆணையாளர் நவி பிள்ளை விளக்கியிருந்தார். 

வரலாற்று ரீதியான பதிலை வழங்குவதில் சிறிய பிரச்சினை ஒன்று காணப்படுகிறது. கடந்த காலங்களில் அனைத்துலக சமூகத்தின் தலையீட்டை சிறிலங்கா நிராகரித்து வந்தாலும், சிறிலங்கா அரசாங்கமானது தான் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்பதாகவும், சிறிலங்காவுக்கு வெளியே இது தொடர்பில் வரையப்படும் எந்தவொரு கோட்பாடும் மேற்குலகின் புதிய கொலனித்துவத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும் கூறிவந்தது. இதற்கு சீன அரசாங்கத்திடமிருந்தும் மிகப் பலமான ஆதரவு கிடைக்கப் பெற்றது. இந்த விடயமானது சிறிலங்காவின் சிவில் சமூகமும் அனைத்துலக சமூகமும் இணைந்து சிறிலங்கா மீது போர்க் குற்றச்சாட்டு விசாரணையை கிட்டிய எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கான ஆளுமையைக் கொண்டுள்ளனவா என்கின்ற கேள்வியை எழுப்புகிறது. சிறிலங்கா சமூகத்திற்குள் அதாவது சிறிலங்காவின் கீழ் மட்ட சமூகத்திலிருந்து சிறிலங்கா இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. 

சிறிலங்கா மீது போர்க் குற்ற விசாரணை முற்றிலும் சுயாதீனமாகவும் முழுமையாகவும் மேற்கொள்ளப்பட்டால் இதன்மூலம் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் அதன் இராணுவப் படைகளுக்கும் எதிரான பல்வேறு குற்றங்களை உறுதிப்படுத்த உதவலாம். இதேவேளையில், விசாரணையை மேற்கொள்வதற்கான நகர்வுகள் ஏற்கனவே பிளவுபட்டுள்ள, ஆழமாக உள்ள இனப்பிரச்சினையை மேலும் விரிவுபடுத்தலாம். தற்போது சிறிலங்காவில் இனப்பிளவுகளால் மட்டும் மோதல்கள் ஏற்படவில்லை. பல்வேறு மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளாலும் மோதல்கள் ஏற்படுகின்றன. பௌத்த அடிப்படைவாதக் குழுக்களுக்கும் முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மத சமூகங்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. வடக்கில் கலாசார ரீதியான கொலனித்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கமானது இராணுவமயமாக்கல்கள் மற்றும் சிங்களமயமாக்கலை மேற்கொண்டு வருகிறது. 

சிறிலங்காவில் அண்மையில் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாடு இடம்பெற்ற நாட்களிலும் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக சிறிலங்காவின் வடக்கிற்கு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. போருக்குப் பின்னான சூழலில் சிறிலங்காவில் பெண்கள் பல்வேறு விதமான பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர். 

போரின் போது தமது கணவனை இழந்த பெண்கள் பலர் தமது குடும்பத் தேவைகளை நிறைவு செய்வதற்காக விபச்சாரத் தொழிலில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 'பயங்கரவாத' நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தி புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சிலவற்றை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளது. இவ்வாறான பல்வேறு குழப்பங்கள் சிறிலங்காவில் நிலவுகின்ற போதிலும், தனது நாட்டில் சிறுபான்மை இனங்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என தேசிய ஒற்றுமை மாநாட்டில் அண்மையில் உரையாற்றும் போது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் சிறிலங்கா அரசாங்கத்தின் தலைமையில் நாட்டில் மேற்கொள்ளப்படும் மீளிணக்கப்பாட்டுத் திட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்க விரும்புவதாகவோ அல்லது இதனைத் தவறாகப் புரிந்துள்ளதாகவோ நினைக்க முடியும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். 

போரின் இறுதியில் உண்மையில் என்ன நடந்தது என்பது வெளிப்படுத்தப்பட வேண்டியது மிக முக்கியமானதாகும். எனினும், சிறிலங்கா அரசாங்கத்தை முற்றிலும் முதன்மைப்படுத்தி மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணையும் தமிழீழ விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்ட மீறல்களைக் கூறமுன்வருபவர்களைப் புறந்தள்ளுவதாக அமையும். சிறிலங்காவில் நிலவும் பிரிவினைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக உள்ளுர் குழுக்கள் ஒன்றாக இணைந்து பணியாற்ற முடியும் என்பதை, அனைத்துலக சமூகத்தால் மேற்கொள்ளப்படும் நகர்வுகளைத் தடுப்பதற்காக சிறிலங்காவால் முன்னெடுக்கப்படும் அணுகுமுறைகள் சிதைவுறச் செய்துவிடும். 

விசாரணை என்பது சட்ட ரீதியான, நீதியான, நிறுவக ரீதியான பரிந்துரைகளுக்கு மட்டுமே பதிலளிக்கும். மீளிணக்கப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிலைமாறும் நகர்வுகள் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களையும், ஏற்கனவே ஏற்பட்ட வடுக்களையும் இல்லாமற் செய்யும். போரின் வடுக்களை ஆற்றுவதற்கான உறுதியான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன்மூலம் நாட்டு மக்களின் வடுக்களை எவ்வாறு நீக்குவது, முறைசார் மன்னிப்புக்களைக் கோருவது, சாட்சியங்களின் பதிவுகள், மதத் தலைவர்களின் நடவடிக்கைகள் போன்றன கலந்துரையாடப்பட வேண்டும். துரித மீளிணக்கப்பாட்டை முதன்மைப்படுத்தாது, சிறிலங்காவானது மோதலிலிருந்து சமாதானத்திற்குச் செல்ல முடியாது. இதன்மூலம் வெற்றிகரமான போர்க் குற்ற விசாரணையைக் கூட மேற்கொள்ள முடியாது. இந்த விசாரணை முற்றிலும் செல்லுபடியற்றதாகவே இருக்கும்.

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140419110358

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.