Jump to content

என் உணர்வின் மொழி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவதும் இன்று பேசப்படுகின்ற 6'000 மொழிகளில் அரைவாசிக்கு மேல் அழிந்து போகும் தருவாயில் உள்ளது என்று சென்ற ஆண்டு தாய்மொழி தினத்தில் யுனேஸ்கோ அமைப்பு அறிவித்திருந்தது. இதில் 2'500 மொழிகளிற்கு மேல் வெறும் 10'000ற்கும் குறைந்த மக்களால் மட்டுமே பேசப்படுகின்றது என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல். 

போர், இடப்பெயர்வு, வெளியேற்றப்படல் என்று பல தவிர்க்முடியாத காரணங்கள் இருந்தாலும் ஏனைய மொழிகளை, அழிப்பதில் முக்கியபங்கு வகிப்பது மொழிக்கலப்பு. மொழிகளின் அழிவில் முன்னிற்பது எந்த மொழியென்று ஆராய்ந்து பார்த்தால் அதில் ஆங்கிலமே முன்னிற்கின்றது. உலகளாவிய ரீதியில் ஆங்கிலத்தில் அச்சிடப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளை உள்ளூர் மொழிகளில் அச்சிடப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகின்றது. 

அதிகாரத்தில் எந்த மொழி இருக்கின்றதோ அந்த மொழி ஏனைய மொழிகளை விழுங்க நினைத்தன் விளைவே உலக தாய்மொழி தினமாக 21. மாசி மாதம் பிறப்பெடுக்க காரணமாகவும் இருந்தது. 

21. மாசி 1952 ஆம் ஆண்டு அன்றைய பாகிஸ்தான் தலைநகர் தக்காவில் ஊர்து மொழியை அரசமொழியாக்கும் தீர்மானத்திற்கெதிராக போராட்டம் வெடித்தது. அன்றை காலகட்டத்தில் வெறும் 3வீதம் பாகிஸ்தானியர்களால் பேசப்பட்ட மொழியே ஊர்து மொழி. துரதிஷ்ரவசமாக இந்த 3வீதத்தினரிடமே 
பாகிஸ்தானின் அதிகாரம் இருந்தது. 56வீதமானவர்கள் பெங்காளி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தனர். ஒன்பது மாத உள்நாட்டு போரிற்கு பின்னர் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து தனிநாடாக 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் பிறப்பெடுத்தது. பங்களாதேசின் தேசியமொழியாக பெங்காளி மொழி அறிவிக்கப்பட்டது. 

சுருக்கமாக சொல்லப்போனால் அதிகாரத்தில் உள்ள மக்களின் மொழி, அதிகாரத்தில் இல்லாதவர்களின் மொழிகளை விழுங்க நினைக்கின்றது. 

இந்தியாவில் மட்டும் 750ற்கு அதிகமான பிராந்தியமொழிகள் நடைமுறையில் உள்ளன. ஒரு மொழியின் அழிவில் அதன் பாரம்பரியம் பண்பாடு போன்ற அனைத்தும் அழிந்துபோகின்றது என்று யுனேஸ்கோ அமைப்பு சொல்கின்றது. எனவே தான் யுனேஸ்கோ அமைப்பு தாய்மொழியில் கட்டாயக் கல்வியை வற்புறுத்துகின்றது. 

குழந்தை பிறந்தவுடன் தானாகவே ஒரு மொழியை கற்றுக்கொள்ளும் திறனை பெற்றுக்கொள்கின்றது. நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான். அந்த குழந்தையுடன் பேசினாலே நாம் பேசுவதை உள்வாங்கி அந்த குழந்தை தனது தாய்மொழியின் அடிப்படையை கற்றுகொள்கின்றது. 
அதன் பின்னர் ஆரம்பக்கல்வி அவர்களின் தாய்மொழி அறிவை மேலும் மெருகூட்டுகின்றது. ஆனால் ஆரம்பக்கல்வியே எமக்கு வேறொரு மொழியாக இருந்தால் கிட்டத்தட்ட நாம் தாய்மொழியற்றவர்களாகவே ஆகின்றோம்.எந்த மொழியிலும் முழுமையடையதவர்கள் ஆகின்றோம். எனவே தான் ஆரம்பக்கல்வியை தாய்மொழியில் தொடர்வது முக்கியமாகின்றது. தாய்மொழி கற்கும் போதே வேறொரு மொழியை கற்பதற்கான திறனை நாம் பெறுகின்றோம் என்கிறது அறிவியல். 
எனவே வேறொரு மொழியை கற்க முதல் தாய்மொழியில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாக அமைகின்றது. தாய்மொழியை முழுமையாக பயின்றவர்கள் இலகுவாக இன்னொரு மொழியை கற்றுக்கொள்வார்கள் என்பது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை . 

தாய்மொழியை முழுமையாக கற்க முதலே பாடசாலையில் வேறொரு மொழியை கற்பவர்கள் "அரைமொழி" (semilingualism) என்றழைக்கபடுகின்றார்கள். தாய்மொழியை விட வெறொரு மொழியை பெருமையாக கருதுவதாலேயே இந்நிலை உருவாகின்றது. என் மொழி என் அடையாளம் என்பதை பலர் உணர்ந்துகொள்வதில்லை. எத்தனை மொழிகளை கற்றறிந்தாலும் தாய்மொழியே உணர்வுகளின் மொழியாக இருக்கமுடியும். 

சுவிஸ் நாட்டை பொறுத்தவரை வெளிநாட்டு பிள்ளைகள் தங்களின் தாய்மொழியை கற்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். இதில் அவர்களிற்கு ஒரு சுயநலமும் உண்டு. தாய்மொழியில் சரளமாக யார் பேசுகின்றார்களோ அவர்களே இந்நாட்டு மொழியை விரைவாக கற்ககூடியவர்களாக உள்ளனர். சுவிஸ் நாட்டில் பேசப்படுகின்ற மொழிகளை வெளிநாட்டு பிள்ளைகளிற்கு இரண்டாவது மொழியாகவே அவர்கள் பார்க்கின்றனர். தாய்மொழியே அவர்களிற்கு முதல்மொழியாக கருதுகின்றனர். 

தங்கள் நாட்டு மொழியை வெளிநாட்டு பிள்ளைகளிற்கு முதல் மொழியாக பயிற்றுவிக்க அவர்கள் முற்படுவதில்லை. அது வெற்றியும் அழிப்பதில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றார்கள். எனவே தான் இங்கே பல நூலகங்களில் ஒன்பதற்கு மேற்பட்ட மொழிகளில் நூல்களை வைத்துள்ளனர் என பேர்ண் மாநிலத்தல் அமைந்துள்ள ஒரு நூலகத்தின் இயக்குனர் தெரிவிக்கின்றார். தற்பொழுது சுவிசில் 14 நூலகங்களில் வெளிநாட்டு பிள்ளைகளின் தாய்மொழி திறனை அதிகரிப்பதற்காக அவர்களின் தாய்மொழியில் நூல்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டு வருகின்றனர். 

இவர்களில் யாரும் வேற்று மொழிகளிற்கு எதிரிகள் கிடையாது. மாறாக மொழிகளின் முக்கியத்துவம் அறிந்தவர்கள். ஆங்கிலம் மற்றும் பிரேஞ் மொழிகள் சிறுவயது முதலே இங்கே கட்டாயப்பாடமாக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற பரந்துபட்ட தேசங்களில் உள்ள நடைமுறைக்கும் ஜரோப்பிய நாடுகளில் உள்ள நடைமுறைக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. இங்கே அந்தந்த பிராந்தியங்களில் வாழுகின்ற மக்களின் மொழிகளே கல்விமொழியாகவும் பாடமொழியாகவும் உள்ளது. வேற்று மொழிகளிற்கேற்றாற்போல் பாடத்திட்டங்களையோ பாடங்களையோ மாற்றி அமைப்பதில்லை. சுவிஸ் போன்ற நான்கு மொழிகளை கொண்ட ஒரு சிறிய நாட்டில் அந்தந்த பிராந்தியங்களியிலயே கல்வி கற்றுக்கொடுக்கப்படுகின்றது. ஆங்கிலமோ பிரேஞ்சோ இங்கே ஒரு பாடம் மட்டுமே. இந்த மொழிகளும் ஒரு குறிப்பிட்ட வயதுவரையே கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மேற்படிப்பிற்காக தேர்ந்தெடுக்கின்ற கல்வியை பொறுத்தே இந்த மொழிகளை நாம் கற்க வேண்டுமா இல்லையா என முடிவாகின்றது. 
ஆகமொத்தம் தாய்மொழி தவிர்ந்த வேற்று மொழிகளின் அடிப்படை தெரிந்திருந்தால் போதும் என்பதே இதன் பொருள். அதன் பின்னர் ஆர்வம் உள்ளவர்கள் விரும்பினால் தொடர்ந்து இம் மொழிகளை படிக்கலாம். 

அதிக மக்களால் பேசப்படுகின்றது என்ற ஒரே காரணத்திற்காக ஒரு மொழியை ஆட்சிமொழியாக்கலாம் என்றால், உலகிலயே அதிக மக்களால் பேசப்படுகின்ற சீன மொழியை உலக மொழியாக்க இரண்டாவது இடத்திலுள்ள ஆங்கியேர்களும் மூன்றாவது இடத்திலுள்ள "இந்தியர்களும்" சம்மதிப்பார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.