Jump to content

பெண்போராளிகளின் வாழ்வை விலைபேசும் றாம்


Recommended Posts

திரு ராம் அவர்கள் யாழில் தனக்கு நீதி கேட்டு எழுதியது இதுதான் :-

ram athavan

  •  
  • புதிய உறுப்பினர்கள்
  • bullet_black.png
  • 2 posts

Posted Today, 03:43 PM

வணக்கம் நிர்வாக உறுப்பினர்களுக்கு,

எனது பெயர் ராம்,நான் தான் ttn news நிர்வாகி, அதாவது ஊடக தர்மத்தின் அடிப்படையில் தனிநபரின் படமோ,தனி நபரை பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டை எவ்வாறு போடுவது? அது எவ் வகையில் சாத்தியம்? இது தொடர்பாக விளக்கம் தேவை? இவ் செய்தியை நீக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். ஆதாரம் இருந்தால் அதையும் வரவேற்கின்றேன். நன்றி.
 
ராம்.
ஈ.மெயில் ttnnews08@gmail.com
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
திரு ராம்அவர்களுக்கு ,
 
 நீங்கள் பெண்களை மோசமாக எழுதியது இதுவல்ல முதல் தடவை. ஏற்கனவே அனந்தி அக்கா அவர்கள் தேர்தலில் நின்ற வேளை உங்களது ஊதுகுழல் இராவணன் என்ற பெயரில் ஒளிந்து ஊடகமென்றால் எவரையும் எதுவும் எழுத முடியும் என்ற திமிரில் எழுதும் இராவண எழுத்தையும் பார்த்தோம். 80ஆயிரம் பேரின் வாக்கைப் பெற்று மக்களுக்காக குரல் கொடுக்கும் அனந்தி என்ற பெண்ணை உங்கள் ஊடக தர்மம் எப்படி விமர்சித்தது என்பது மறந்து போனீர்கள் போல ?நாங்கள் மறக்கவில்லை.
 
 எனது போராளித்தோழி கணவனை போரில் இழந்தவள். கடந்த வருடம் உங்கள் ஊடகத்தில் நீங்கள் பொய்யாக எழுதிய ஒரு செய்தி பற்றி அவள் கேட்ட போது அவளை அரசபுலனாய்வாளர்களுடன் குடும்பம் நடத்துகிறாள் என எழுதுவேன் என நீங்கள் மிரட்டி அவளை நீங்கள் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் அதாவது தூசண வார்த்தைகளால் பேசிய அனைத்தும் நானும் கேட்டேன். இதோ உன்னை ஒலிப்பதிவு செய்கிறேன் இதோ நாளை போடுகிறேன் என நீங்கள் அவளை மிரட்டிய ஒலிப்பதிவை நாங்கள் இன்னும் தொலைத்துவிடவில்லை.
 
நீங்கள் அஸ்வினியக்கா பற்றி எழுதிய பொய்யான புனைவு பற்றி கேட்க நான் உங்கள் லைகா இலக்கத்திற்கு அழைத்த போது கட் பண்ணினீர்கள். உங்களுக்கான எதிர்வினையை எழுதிவிட்டு பதிவேற்றுவதற்கு 4மணித்தியாலம் முதலும் லைகா எண்ணுக்கு தொடர்பெடுத்தேன் அப்போதும் நீங்கள் எனது தொடர்பை கட்பண்ணியிருந்தீர்கள். உங்களுக்கான எதிர்வினையை பதிவிட்ட பின்னர் எனது தொலைபேசிக்கு எடுத்து நீங்கள் பேசிய தூசணம் கூட உங்களது ஊடக தர்மத்துள்தான் அடக்கமோ ?
 
அஸ்வினியக்காவுக்கு உங்களை நம்பிய போராளிகள்இ செஞ்சோலைப்பெண்பிள்ளைகள்இ மாவீரர்களின் மனைவிகளுக்கு நீங்கள் செய்த கொடுமையை அறிந்தும் மௌனம் காத்தது உங்களால் பாதிக்கப்பட்டவர்களது பாதுகாப்பு வாழ்வை காக்கவே. ஆனால் நீங்களோ தொடர்ந்து காட்டுராசாவாகி ஒவ்வொரு போராளிகளையும் அவர்களது வாழ்வையும் திட்டமிட்டு சீரளிக்கவும் நாங்கள் தொடர்ந்து அமைதி காப்பதுதான் ஊடக தர்மமெனில் அந்த தர்மத்தை நாங்கள் மீறிவிடுகிறோம். 
 
அஸ்வினியக்கா பற்றி எத்தனை பொய்யை எழுதி அவரது சீருடையுடனான படத்தையும் போட்டு அந்தப் பெண்ணின் நிம்மதியை நித்திரையை பறித்துள்ளீர்களே ? ஊடக தர்மம் எங்கே போனது ? 
நீங்கள் வரைந்த கட்டுரைக்கு நீங்களே வேறு வேறு பெயர்களில் அந்தப் போராளி பற்றி என்னவெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் ?ஊடக தர்மம் எங்கே போனது ? 
 
அஜித்குமாரி என்ற தமிழ்பேசத் தெரிந்த இராணுவப்பெண்ணையே வடபோர்முனையின் இராணுவபுலனாய்வாளர் அஜித்குமார என்று மாற்றி அஸ்வினியக்கா மீது உங்களது வக்கிரத்தை எழுதிய போது எங்கே போனது ஊடக தர்மம் ?  
 
எல்லாவற்றையும் இழந்து கணவன் சிறையில் இருக்க தனது சிறு குழந்தையுடன் துன்பத்தோடு வாழ்ந்து புலம்பெயர்ந்தவர்களிடம் நம்பி கையேந்தி போராளியை காமக்கதை பேசி பணம் வசூலிக்கிறாள் என உங்கள் ஊடகத்தில் எழுதி அந்தப் பெண்ணை சாகும் வரையும் நீங்கள் சுமத்திய காமுகி பட்டத்தோடு வலியோடு வாழ்ந்து சாவென்று புனைந்த புனைவிற்கு உங்கள் பதிலென்ன ?
 
உங்களைப் பற்றிய எங்கள் எதிர்வினையும் சரி இன்னும் உங்கள் பற்றிய நீங்கள் சிதைத்த பெண்போராளிகள் இ வெளிநாடு அழைக்கிறேன் என பணத்தை வாங்கிவிட்டு ஆசிய நாடுகளில் அந்தரிக்க விட்ட போராளிகளின் அவலத்துக்கு உங்கள் பதில் என்ன ? 
 
உங்களது அனைத்து அநியாயங்களும் அதற்கு உரிய நபர்களின் வாக்கு மூலங்கள் கண்ணீர் நிரம்பிய கதைகள் எல்லாமும் எங்களிடமும் இருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாய் உங்கள் முன் தர தயாராக இருக்கிறோம். பொது இடமொன்றுக்கு வாருங்கள் உங்களோடு பேச பலர் காத்திருக்கிறோம். 
 
தற்போது 5நாட்களாக உங்களது மாமியார் திருச்சியில் பொலிசாரால் ஏன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ? உங்களது ஏமாற்றுக்கு துணையாய் இருந்த பாவத்தின் சம்பளமாக உங்கள் மாமியார் மாமியார் வீட்டில் அடைக்கப்பட்டுள்ளதற்கும் நீங்களே காரணம்.
 
இன்னும் பல கேள்விகளும் உங்களால் சீரளிக்கப்பட்டவர்களின் கதைகளும் இருக்கிறது....தொடரும்......
 

 

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply

எதிர்பார்ப்புகளின்றி தேசவிடுதலைக்காக நீண்ட காலம் பணிபுரிந்த ஒரு பெண்போராளி பற்றி றாம் நீங்கள் எழுதிய செய்தியை படிக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. தனிப்பட்ட உங்களது சுயநலத்துக்காக புனிதப்படுத்தப்பட வேண்டிய போராளிகளை கொச்சைப்படுத்தியுள்ளீர்கள். எங்கள் உறவுகள் இருக்கிறார்கள் எங்களைக் காப்பாற்றுவார்கள் என நம்பி வந்த எங்களை ஏன் உயிருடன் சாகடிக்கிறீர்கள் ? இச்செய்தியை எழுதிய நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நாம் என்றைக்கு எமக்குள் ஒற்றுமைப்பட்டு ஒன்றுபடுகிறோமோ அன்றுதான் எமக்கு விடுதலை. எம்மைச் சிதைக்க வேண்டுமென நினைக்கும் எதிரிக்கு பக்கபலமாக இருப்பது போன்ற காரியத்தைச் செய்யாதீர்கள். ஏவ்வளவோ சாதித்த பெண்கள் இன்று வாழ வழியின்றி பாதுகாப்பான சூழல் இல்லாது விழுந்து கிடக்கிறார்கள். முடிந்தால் அவர்கள் எழுந்து நிற்க உதவி புரியுங்கள். இல்லையேல் விலகி நில்லுங்கள். தேவையில்லாமல் பெண்களை சீரளிக்காதீர்கள். அவதூறுகளை எழுதி எங்களை கீழ்மைப்படுத்தாதீர்கள். பல பெண் போராளிகளுடன் தடுப்பிலிருந்து வெளிவந்த பெண்தான் அஸ்வினியென்ற போராளி. அவர் தேசவிடுதலைப் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் எந்தக் காரியத்தையும் செய்யவில்லை. பல துன்பங்களைத் தாங்கி தமிழர்களை நம்பி தமிழ்நாடு வந்தவர். தேசவிடுதலைக்காக பல ஆண்டுகள் தன்னை இழந்த அவரை இத்தனை தூரம் அவமானப்படுத்தியுள்ளீர்கள். மனம் குமுறுகிறது , தமிழ் மானம் காக்க தன்னை இழந்த அஸ்வினி அற்ப ஆசைகளுக்காக தன்மானத்தை விற்பவர் அல்ல என்பதை அனைத்துப் போராளிகளும் அவரை அறிந்தவர்களும் அறிவார்கள். றாம் அவர்களே ! நாங்கள் தலைவன் வளர்த்த போராளிகள் அதனால் தான் இத்தனை மரியாதையுடன் எழுதிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் செய்த அனைத்து அசிங்கங்கள் தெரிந்தும் ஆதாரங்கள் இருந்தும் மௌனமாக இருக்கிறோம். தயவு செய்து பெண்களை அசிங்கப்படுத்துவது , கெட்டவார்த்தைகளால் திட்டுவது , ஏமாற்றுவது , ஆசைகாட்டி மோசம் செய்வது போன்ற கீழ்த்தரமான வேலைகளைச் செய்யாதீர்கள். தன்னைத் தான் திருத்தினால் சமூகம் தானாகவே திருந்தும் என்ற கூற்றுக்கு அமைய றாம் நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள். ஆதர்ஷன்

 

கருத்துக்களத்தினருக்கு :- எனக்கு யாழ் இணையம் புதிது. நண்பர் ஒருவரின் உதவியுடன் தான் உறுப்பினர் ஆகியுள்ளேன். தவறாக போராளிகளை எழுதும் றாமுக்கு பதிலை தர வேண்டும் என்பதற்காகவே உறுப்பினராகியுள்ளேன். இனிமேல் நானும் யாழ்கருத்துக்களத்தில் இணைந்திருப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்ப்புகளின்றி தேசவிடுதலைக்காக நீண்ட காலம் பணிபுரிந்த ஒரு பெண்போராளி பற்றி றாம் நீங்கள் எழுதிய செய்தியை படிக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. தனிப்பட்ட உங்களது சுயநலத்துக்காக புனிதப்படுத்தப்பட வேண்டிய போராளிகளை கொச்சைப்படுத்தியுள்ளீர்கள். எங்கள் உறவுகள் இருக்கிறார்கள் எங்களைக் காப்பாற்றுவார்கள் என நம்பி வந்த எங்களை ஏன் உயிருடன் சாகடிக்கிறீர்கள் ? இச்செய்தியை எழுதிய நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நாம் என்றைக்கு எமக்குள் ஒற்றுமைப்பட்டு ஒன்றுபடுகிறோமோ அன்றுதான் எமக்கு விடுதலை. எம்மைச் சிதைக்க வேண்டுமென நினைக்கும் எதிரிக்கு பக்கபலமாக இருப்பது போன்ற காரியத்தைச் செய்யாதீர்கள். ஏவ்வளவோ சாதித்த பெண்கள் இன்று வாழ வழியின்றி பாதுகாப்பான சூழல் இல்லாது விழுந்து கிடக்கிறார்கள். முடிந்தால் அவர்கள் எழுந்து நிற்க உதவி புரியுங்கள். இல்லையேல் விலகி நில்லுங்கள். தேவையில்லாமல் பெண்களை சீரளிக்காதீர்கள். அவதூறுகளை எழுதி எங்களை கீழ்மைப்படுத்தாதீர்கள். பல பெண் போராளிகளுடன் தடுப்பிலிருந்து வெளிவந்த பெண்தான் அஸ்வினியென்ற போராளி. அவர் தேசவிடுதலைப் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் எந்தக் காரியத்தையும் செய்யவில்லை. பல துன்பங்களைத் தாங்கி தமிழர்களை நம்பி தமிழ்நாடு வந்தவர். தேசவிடுதலைக்காக பல ஆண்டுகள் தன்னை இழந்த அவரை இத்தனை தூரம் அவமானப்படுத்தியுள்ளீர்கள். மனம் குமுறுகிறது , தமிழ் மானம் காக்க தன்னை இழந்த அஸ்வினி அற்ப ஆசைகளுக்காக தன்மானத்தை விற்பவர் அல்ல என்பதை அனைத்துப் போராளிகளும் அவரை அறிந்தவர்களும் அறிவார்கள். றாம் அவர்களே ! நாங்கள் தலைவன் வளர்த்த போராளிகள் அதனால் தான் இத்தனை மரியாதையுடன் எழுதிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் செய்த அனைத்து அசிங்கங்கள் தெரிந்தும் ஆதாரங்கள் இருந்தும் மௌனமாக இருக்கிறோம். தயவு செய்து பெண்களை அசிங்கப்படுத்துவது , கெட்டவார்த்தைகளால் திட்டுவது , ஏமாற்றுவது , ஆசைகாட்டி மோசம் செய்வது போன்ற கீழ்த்தரமான வேலைகளைச் செய்யாதீர்கள். தன்னைத் தான் திருத்தினால் சமூகம் தானாகவே திருந்தும் என்ற கூற்றுக்கு அமைய றாம் நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள். ஆதர்ஷன்

 

கருத்துக்களத்தினருக்கு :- எனக்கு யாழ் இணையம் புதிது. நண்பர் ஒருவரின் உதவியுடன் தான் உறுப்பினர் ஆகியுள்ளேன். தவறாக போராளிகளை எழுதும் றாமுக்கு பதிலை தர வேண்டும் என்பதற்காகவே உறுப்பினராகியுள்ளேன். இனிமேல் நானும் யாழ்கருத்துக்களத்தில் இணைந்திருப்பேன்.

 

உங்களது அத்தனை  கருத்துக்களும்

ஆதங்கமும்

 கோபமும்............

 

நீதியானது

சரியானது

 

ஆனால் உங்களது இதுவரையான  ஒதுங்கதல்களும் இவற்றிற்கு ஒரு காரணம்  என்பதையும் தாங்கள் ஏற்றுக்கொண்டு

தொடர்ந்து எழுதணும்

வரலாற்றைத்திரிப்போர்

மாவீரரது தியாகங்களை  விற்போர்

விமர்சிக்கின்றோம் என்றபடி  போராளிகளைக்காட்டிக்கொடுப்போர்..........

 

பற்றி எழுதணும்

தொடருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்

முள்ளிவாய்க்காலுக்குப்பின்

இதனைச்செய்வோர் தொகை மிகமிக குறைவடைந்துள்ளதும்

பல கறையான்கள் வெளியில் வரவும் உலாவவும் காரணம்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவில் நான் எதிர்பார்க்கும் பலர் இன்னமும் தங்கள் எதிர்ப்பை முன் வைக்கவில்லை.சும்மா பேச்சுக்கும் ,விலாசத்திற்கும் தேசியம் கதைக்காமல்

நேர்மையாக செயற்படுங்கள்

Link to comment
Share on other sites

இவர்கள் ஒரு போராளி அல்ல பல போராளிகளை பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார் தனது இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
இன்னும் பல பெண் ,ஆண் போராளிகளின் வாழ்வை இணையத்தில் பதிவு செய்வுள்ளார்,இந் இணையத்தை பாவித்து பலரிடம் பண மேசடி செய்கிறான்,
அங்கு ஈழத்தில் இவரால் மட்டும் எப்படி இந்த உதவிகளை கொண்டு செல்ல முடியும் எண்டு கொஞ்சம் நினைத்து பாருங்கள். 
இவர்களை(TTNnews ram) இராணுவப் புலனாய்வுப்பிரிவினர் இயக்குகிறார்கள் , 
எங்களிடம பல ஆதாரங்கள் இருககின்றன.
விரைவில் வெளிவரும் .....
Link to comment
Share on other sites

இந்தப் பதிவில் நான் எதிர்பார்க்கும் பலர் இன்னமும் தங்கள் எதிர்ப்பை முன் வைக்கவில்லை.சும்மா பேச்சுக்கும் ,விலாசத்திற்கும் தேசியம் கதைக்காமல்

நேர்மையாக செயற்படுங்கள்

ஊரில் உள்ளவர்களை காட்டி கொடுப்பான் என்று பயம். .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவில் நான் எதிர்பார்க்கும் பலர் இன்னமும் தங்கள் எதிர்ப்பை முன் வைக்கவில்லை.சும்மா பேச்சுக்கும் ,விலாசத்திற்கும் தேசியம் கதைக்காமல்

நேர்மையாக செயற்படுங்கள்

 

அதுகும் "ம்" எண்டவுடன் பெண்ணியம் ஆணியம் பேசும் ஆட்களைத் தான் நானும் தேடுறன்! மர்மமா இருக்குது! :unsure:

Link to comment
Share on other sites

வன்னிமைந்தன் என்ற பெயரை தனது புனைபெயராகக் கொண்ட நபர் ஒரு இணையத்தை நடாத்தி வருகிறார். அவரது  இணையம் யாழின் தடைசெய்யப்பட்ட கறுப்புப்பட்டியலில் இருக்கிறது. வன்னிமைந்தனும் சளைத்தவரில்லையென்பதற்கு அடையாளமாக கடந்த காலங்களில் பலபெண்கள் , ஆண்களை மிகவும் மோசமாக எழுதியும் பலருக்கு துரோகிப்பட்டமும் வழங்கியவர். இவர் எனக்கும் பலமுறை துரோகிப்பட்டம் வழங்கி கௌரவித்தது மட்டுமன்றி நேசக்கரத்திற்கும் பல வகையில் இடைஞ்சலாக இருந்தவர்.
 
இவர் றாமுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளவர். இன்று எனக்கொரு மின்னஞ்சலை பல கேள்விகளை முன் வைத்து அனுப்பியுள்ளார். றாமிற்கு குரல் தர வல்ல சட்டத்தரணியின் அந்தஸ்தை பெற்றுள்ள வன்னிமைந்தன் என்பவர் எழுதிய மடலை இங்கு பதிவிடுகிறேன் யாழ் கள உறவகளின் பார்வைக்கு. இவரது மடலுக்கு தனியே பதிலளித்தால் அஸ்வினியக்காவிற்கு றாம் சூட்டிய பட்டம் போல வன்னிமைந்தனால் எனக்கு மேலும் புதிய பட்டங்கள் சூட்டப்படும். எனவே இங்கு பேசப்படும் விடயத்தில் வன்னிமைந்தனின் மடலும் இணைக்க வேண்டிய தேவையை உணர்ந்து இங்கு பதவிடுகிறேன்.
 
இக்களத்தில் தன்னை பதிவு செய்து வந்த றாமிடம் இங்கு பல கேள்விகளை முன் வைத்துள்ளோம். எனினும் றாம் இதுவரையில் தனது பதில் எதனையும் தரவில்லை. போராளி அஸ்வினி மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கும் றாம் செய்த பல மோசமான வேலைகளுக்குமான பதிலையே கேட்டுள்ளோம். ஆக பொதுத்தளமான யாழ் மூலம் நேர்மையாகவும் பொறுப்புணர்வோடும் றாம் விடயம் விவாதிக்கப்படுகிறது. அதேநேரம் போராளிகள் பலரும் தங்களது கருத்துக்களையும் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். 
 
இந்த இடத்தில் வன்னிமைந்தன் என்பவர் சட்டத்தரணி பதவியை எடுத்துக் கொண்டு வந்திருப்பதானது றாமை காப்பாற்றவே என்பது தெளிவாகிறது. றாம் அவர்கள் இங்கு நாம் பேசும் விடயங்களுக்கு தனது நேர்மையான கருத்துக்களை எழுதுவதன் மூலம் நான்காம் நபரான வன்னிமைந்தனின் சட்டத்தரணி நுளைவு தேவைவற்றதாகும்.
 
ethiri1_zpse2a7a4e1.jpg
ethiri2_zps74ee1f78.jpg
ethiri3_zpsbafd6525.jpg
ethiri4_zps9bcdb06b.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிப்புக்குரிய சட்டத்தரணி வன்னிமைந்தன் அவர்களே,

ஊடக்க்த்தின் தர்மத்தை காப்பாற்றும் ராம் அவர்கள்,ஒரு பெண் போராளியை சீருடையில் பிரசுரித்து.தவறாக எழுதியது உங்கள் கவனத்துக்கு யாரும் கொண்டுவரயில்லையா?அல்லது நீங்கள் அப்போது அதை காணவில்லையா? அல்லது கண்டுகொள்ளவில்லையா?

எங்கெல்லாமோ ஓடி ஓடி முடியாமல் உங்கள் நீதிமன்றத்துக்கு வந்துவிட்டாரோ?

நீங்கள் சட்டத்தரனியா?விசாரணையாளரா?அவருக்கான பதிலை அவருக்கு கொடுக்க எமக்கு தெரியும்.உங்களையும் உங்கள் நட்பையும் உங்களுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சாந்தி? உங்கட பதில் ஏதாவது பிரசுரிக்கச் சொல்லி  பன்னி மைந்தனிட்டக் கேட்டனீங்களோ? ஆதாரம் தராவிட்டால் பிரசுரிக்க மாட்டன் என்கிறார் சி.என்.என் கணக்கா? ஒரு கொம்பியூட்டரை வைச்சுக் கொண்டு வெட்டி ஒட்டி ஒரு இணையத்தளம் நடத்துற ஆள் இப்பிடி ரெட் ரர்னர், ரூபேர்ட் மர்டொக் கணக்கா அறிக்கை விடுகுது? சிரிச்சு எனக்கு வயிறு புண்ணாப் போச்சுது! :D

Link to comment
Share on other sites

என்ன சாந்தி? உங்கட பதில் ஏதாவது பிரசுரிக்கச் சொல்லி  பன்னி மைந்தனிட்டக் கேட்டனீங்களோ? ஆதாரம் தராவிட்டால் பிரசுரிக்க மாட்டன் என்கிறார் சி.என்.என் கணக்கா? ஒரு கொம்பியூட்டரை வைச்சுக் கொண்டு வெட்டி ஒட்டி ஒரு இணையத்தளம் நடத்துற ஆள் இப்பிடி ரெட் ரர்னர், ரூபேர்ட் மர்டொக் கணக்கா அறிக்கை விடுகுது? சிரிச்சு எனக்கு வயிறு புண்ணாப் போச்சுது! :D

உங்களுக்கு சிரிப்பா கிடக்கு யஸ்ரின். எனக்கு அந்த வன்னி மைந்தன் ஒரே ரெலிபோன் எடுத்து தொல்லையா கிடக்கு. ஏற்கனவே இவருடைய தொல்லைகளால் யேர்மனிய குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் 2011இல் வழக்கொன்று பதிவு செய்திருந்தேன். இனிமேல் எந்த வில்லண்டத்துக்கும் வரமாட்டேனென்று அவர் கேட்டதற்கமைய மன்னித்து அவ்வழக்கு pending இருக்கிறது. 
 
இப்போ திரும்பவும் அந்த வழக்கை புதுப்பிக்க வேண்டிய நிலமைக்கு வன்னிமைந்தன் தானே வழியைத் திறப்பது போல நிலமையிருக்கிறது.
Link to comment
Share on other sites

என்ன சாந்தி? உங்கட பதில் ஏதாவது பிரசுரிக்கச் சொல்லி  பன்னி மைந்தனிட்டக் கேட்டனீங்களோ? ஆதாரம் தராவிட்டால் பிரசுரிக்க மாட்டன் என்கிறார் சி.என்.என் கணக்கா? ஒரு கொம்பியூட்டரை வைச்சுக் கொண்டு வெட்டி ஒட்டி ஒரு இணையத்தளம் நடத்துற ஆள் இப்பிடி ரெட் ரர்னர், ரூபேர்ட் மர்டொக் கணக்கா அறிக்கை விடுகுது? சிரிச்சு எனக்கு வயிறு புண்ணாப் போச்சுது! :D

 

அண்ணா ஐந்தாறு நாளாய் அழுது கொண்டிருந்தனான் ,இண்டைக்கு வாய் விட்டு சிரிக்க வைத்துட்டீங்களே ,நீங்க எழுதினதை பார்க்க பார்க்க சிரிப்பு சிரிப்பாய் வருகிறது .அண்ணை முடிஞ்சா வ [ப] ன்னி மைந்தனுக்கு தமிழ் சுத்தமாய் எழுத சொல்லிக்கொடுங்க ,தாய் மொழி   தமிழை கொலை கொலையா ப [வ ] ண்ணி வைத்திருக்கிறார் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல தியாகங்களைப் புரிந்தவர்களை கொச்சைப்படுத்துவதுதான் இப்போது சிலருக்குத் தேசியச் செயற்பாடு போலுள்ளது. உண்மையிலேயே தமிழ் மக்களின் நல்வாழ்வில் அக்கறை இருந்தால் போர் முடிந்து ஐந்து ஆண்டுகளாகியும் அவல வாழ்வில் இருந்து மீளமுடியாமல் இருப்பவர்களுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும். இல்லாவிட்டால் உபத்திரமாவது செய்யாமல் இருக்கவேண்டும்.

பழிவாங்கும் உணர்வோடு இன்னும் பலி எடுக்கவேண்டும் என்ற சிந்தனை கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்டத்தின் தாக்கங்களினால், அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே!

 

அதுவும் இராணுவத்தாலும், சிங்களக்காடைகளாலும் பாதிக்கப்பட்டதை விடவும், எமது இனத்தவர்கள் வடிவில் இருக்கும் ' பருந்துகளால்' பழிவாங்கப்பட்ட கோழிக்குஞ்சுகளே அதிகம்!

 

வெளிநாட்டுக்கு அனுப்பும் மீட்பர்களாக, குடும்பத்தலைவர்களை இழந்த விதவைகளின் 'ஆபத் பாந்தவர்களாக', யாரோ சில நல்ல இதயங்கள் அளிக்கும் உதவிகளைப் பகிர்ந்தளிப்பதில் கூடத் தமது வக்கிரங்களைக் காட்டும் 'அரசியல் வாதிகளாக, சமூக சேவையாளர்களாக', ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 'பெண்மையைச்' சூறையாடுகின்றார்கள்!

 

இதைத் தடுப்பதற்கான ஒரே வழி, சாந்தி போன்றவர்களால், இப்படியானவர்கள் 'பொது வெளியொன்றில்' வைத்து, அவர்களின் முகமூடிகள் கிழிக்கப்படுவதே!

 

சாந்தி, உங்களுக்கு 'சட்ட ரீதியான' செலவுகள் ஏற்படுமிடத்து, என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்ய முயல்வேன்!

 

தங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்களும், தனியொரு பெண்ணாக, சமுதாயச் சீர்கேடுகளின் 'வெளிக்கொணர்வுக்கு' எனது பாராட்டுக்களும்!

Link to comment
Share on other sites

விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல தியாகங்களைப் புரிந்தவர்களை கொச்சைப்படுத்துவதுதான் இப்போது சிலருக்குத் தேசியச் செயற்பாடு போலுள்ளது. உண்மையிலேயே தமிழ் மக்களின் நல்வாழ்வில் அக்கறை இருந்தால் போர் முடிந்து ஐந்து ஆண்டுகளாகியும் அவல வாழ்வில் இருந்து மீளமுடியாமல் இருப்பவர்களுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும். இல்லாவிட்டால் உபத்திரமாவது செய்யாமல் இருக்கவேண்டும்.

பழிவாங்கும் உணர்வோடு இன்னும் பலி எடுக்கவேண்டும் என்ற சிந்தனை கூடாது.

Link to comment
Share on other sites

மேன்மை தங்கிய வ.மைந்தன் தொடர்ந்து எனது வீட்டுத்தொலைபேசி , செல்லுலாபேசி இரண்டிற்கும் தொடர்ந்து தொல்லை தர வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். இங்கு றாம் பற்றிய விடயம் கருத்தாடப்படுகிறது. இதில் உங்கள் வீரத்தை தொலைபேசியில் காட்டி எனது நேரத்தை வீணாக்காமல் முடிந்தால் கருத்துக்களத்தில் வந்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
 
வ.மைந்தன், யாழ்களம் பொதுவான நேர்மையான ஊடகம் இங்கு நீங்களும் பேசுவதே நியாயம்.
 
எல்லாம் இழந்து ஏமாந்து போனவர்களுக்கு உதவுங்கள் வ.மைந்தன் முடியாவிட்டால் ஒதுங்கி நில்லுங்கள். அதுவே பேருதவியாகும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தன் ,றாமிற்காக ஏன் கடுமையாக,இவ்வளவு காஸ்ரப்படுகிறார்?ஓ ஓ ஓஓஓஓ இதுதான் நட்பா?நட்பு சரி ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகள் யார்?அவர்கள் தடைசெய்யப்பட்டுவிட்டனர் என்று கூறுகின்றார்.அப்படி புலிகள் இல்லைஎன்று சொல்லி சந்தோசப்பட்டுக்கொள்ளும் இந்த (சிங்கள)மைந்தன் யார் ராமுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?இவர்கள் தமிழ் ஊடகம் நடாத்தும் நோக்கம் என்ன? பெண்போராளிகளை ஏன் குறிவைக்கின்றார்கள்? ராம் தொடர்பான ஆதாரங்களை எதற்காக கேட்கின்றார்?

(சிங்கள) மைந்தனின் ஓட்டம் எதன் அடிப்படியிலோ இருந்துவிட்டு போகட்டும்.ஆனால் எங்களின் பார்வையில் இப்போ (சிங்கள) மைந்தன் விழுந்துவிட்டார்!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீதாஞ்சலி நகுலேஸ்வரன் அவர்கள் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சிமாவட்ட இணைப்பாளர் ஆவார். இவர் 2010ம் ஆண்டு தொடக்கம் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரை அணுகி தனக்கு ஆதரவு தருமாறு வேண்டிக் கொண்டிருப்பவர். இறுதிப்போரின் பின்னர் சரணடைந்த ஊடகம் மற்றும் விடுதலைப்புலிகளின் சட்டக்கல்லூரியில் படித்தவர்கள் சட்டத்தரணிகள் , போராளிகள் , போராளிகள் குடும்பங்கள் , பெண்கள் என பலர் கீதாஞ்சலியிடம் உதவிக்கு போயிருந்தார்கள்.

தடுப்பு முகாம்களில் இருந்து விடுதலையான பலருக்கு வேலை வாய்ப்புகள் இல்லை. உதவிகள் இல்லாத நிலமையில் இருந்த பலர் கீதாஞ்சலியிடம் சென்று தங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டனர். இப்போது கீதாஞ்சலி தன்னிடம் உதவி கோரி வந்த போராளிகள், பெண்களுக்கு சிறு சிறு உதவிகளை அரசாங்கத்திடமிருந்து பெற்று வழங்கினார். வசதியில்லாமல் இருந்த சிலருக்கு கீதாஞ்சலி உயர்ந்த பதவிகள் கொடுத்து அவர்கள் மதிப்பை பெற்றுக் கொண்டார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த பலரின் ஏழ்மையைப் பயன்படுத்தி தனது உதவிகளால் தன்வசப்படுத்தினார். அவர்களில் சிலரை வைத்து புலம்பெயர் அமைப்புகளையும் பொதுமக்களையும் நாடினார். இதேவேளை மகிந்தவை நேரில் வாரம் ஓருமுறை விசேடமாக சந்தித்து ஆலோசனைகளையும் பெற்று அதன்படி கீதாஞ்சலி தனது நகர்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.

தன்னிடம் உதவிபெற்ற ஊடகம் சட்டத்துறையில் தேர்ச்சி பெற்ற முன்னாள் போராளிகள் குழுவொன்றை வைத்து வடக்கில் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்க திட்டமிட்டார். இவருடன் நின்ற சில முன்னாள் போராளிகள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் உதவிகளைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மூலம் பத்திரிகையை ஆரம்பித்து அதனை புலம்பெயர் நாடுகளுக்கும் அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யத் தொடங்கியிருந்தார்.

இத்திட்டத்தை தங்கள் தகவல்பரிமாற்ற வட்டத்திலிருந்து உடனுக்குடன் பெற்றுக் கொண்டிருந்த சில அமைப்புகள் கீதாஞ்சலியினதும் கீதாஞ்சலியுடன் இணைந்து உதவுமாறு தேடிவந்தவர்களையும் இனம் கண்டு கொண்டார்கள். இது பற்றி பலருக்கு தெரிவித்து இருந்தார்கள். பின்னர் கீதாஞ்சலி தானே பலருடைய தொலைபேசிகளை எணஇகளைப் பெற்று எடுத்து தான் பெண்களுக்கான புது வாழ்வை உருவாக்கவே அரசோடு இணைந்திருப்பதாகவும் கூறினார். தன்னிடம் உதவி கேட்டு போன பெண்போராளிகள் ஊனமடைந்தவர்களின் படங்கள் குடும்ப விபரங்களை பலருக்கு வழங்கி அவர்களுக்கு நேரடியாகவே உதவுங்கள் என்று விபரங்களையும் கொடுத்தார்.

இந்த இடத்தில் தான் றாமின் பலவீனத்தை இனங்கண்ட கீதாஞ்சலி குழுவினர் றாமிடமும் தொடர்பு கொண்டு உதவி கேட்டிருந்தார்கள். றாம் ஏற்கனவே புலம்பெயர் நாடுகளில் இயங்கும் விடுதலைப்புலிகளின் அமைப்புகள் யாவற்றுடனும் முரண்பட்டிருந்தார். காரணம் இவரது பல விரும்பத்தகாத நடவடிக்கைள் மூலம் இவரை இங்குள்ள அமைப்புகள் கிட்டவும் நெருங்க விடாமல் இருந்தார்கள்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் றாமை அணுகி பத்திரிகை தொடங்கும் விடயத்தையும் கூறினார்கள். லட்சக்கணக்கான பணத்தை போட்டு பத்திரிகையை தொடங்குவதைவிட தன்னால் இணையம் ஒன்றை ஆரம்பிக்க முடியும் என்றும் கூறி கீதாஞ்சலி குழுவை குசிப்படுத்தினார் றாம். ஏற்கனவே விடுதலைப்புலிகளின் ஊடகமான ரீரீஎன் என்ற பெயரை கீதாஞ்சலி குழுவே பரிந்துரைந்தது றாமுக்கு. மக்கள் இலகுவாக நம்பக்கூடிய பெயரான ரீரீஎன் என்ற பெயரை றாம் மூலம் பதிவுசெய்து கொண்டார்கள்.

இணையம் ஆரம்பித்ததுமே கீதாஞ்சலி குழுவினர் சென்று வரும் ஊர்களில் உள்ள முன்னாள் போராளிகள் போரால் பாதிக்கப்பட்டவர்களின் படங்கள் உதவிக்கான விண்ணப்பங்களும் றாமுக்கு வழங்கப்பட்டது. அவர்களது விபரங்களை றாம் தனது இணையத்தில் வெளியிட்டு உதவிகளை பெற்றுக் கொடுக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. விடுதலைப் புலிகளின் பெயரில் இருந்த ஊடகத்தின் மூலம் தங்கள் காரியத்தை நிறைவேற்ற புலிகள் அமைப்பில் இருந்தவர்களை வைத்தே புலம்பெயர்ந்தவர்களிடம் சென்றது கீதாஞ்சலியின் திட்டம்.

கடுமையான காயங்களுக்கு உள்ளானவர்களின் படங்களை றாம் புலம்பெயர்ந்த அமைப்புகள் தனிநபர்களுக்கு மின்னஞ்சல் செய்து பலருக்கு உதவிகளை செல்ல வைத்தார். ரீரீஎன் றாம் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர் என்பதால் இலகுவாக மக்களை நம்ப வைக்கக்கூடியதாக இருந்தது. இதனை சாதகமாமக பயன்படுத்தி றாம் இந்தியாவுக்கு சென்று வரத் தொடங்கினார்.

மகிந்தவின் மகன் நாமலுடன் இணைந்து வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தும் வேலையை செய்து கொண்டிருந்தார் கீதாஞ்சலி. அவரை நம்பி போன பலரை அவுஸ்ரேலியா , கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு அனுப்பவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து கப்பலேறியவர்களை அவர்களே காட்டிக் கொடுத்து இடையில் பிடிபட வைத்தார்கள். காலி முதல் பல கடற்கரைகளில் இருந்து வெளிநாடு செல்ல போன தமிழர்கள் கைது என்ற செய்திகளின் காரணம் கீதாஞ்சலி , நாமல் குழுவினரின் நாடகம் ஆகும்.

கீதாஞ்சலியை நம்பிய பெண் போராளிகள் பலர் றாமை தங்களது உதவும் அண்ணனாகவே நினைத்தார்கள். அவர்களை வெளிநாடு அழைக்க தானே ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். றாமால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இலங்கையில் இருக்க முடியாத சூழல் இருப்பதாகவும் அவர்கள் மூலமே புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அறியப்படுத்தினார். இப்படியானவர்களிற்கு உதவியவர்களும் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற இந்தியா , தாய்லாந்து , இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு றாமால் அழைக்கப்பட்டார்கள்.

நாமல் , கீதாஞ்சலி கூட்டணியின் முகவராக றாம் தானாகவே போய் சிக்கிக்கொண்டு தனது இணையத்திற்கு ஈபீடிபி இன்னும் சிலரை வைத்து செய்திகளை இலவசமாகவே பெற்றார். அதேநேரம் செய்திகளையும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் வன்னி மக்களின் உண்மை நிலமைகளை வெளிப்படுத்துவது போலவும் செய்திகளை அப்டேற் செய்வோர் வழங்க வேண்டும் என்பதையும் கீதாஞ்சலியே கவனித்தார்.

புலம்பெயர்ந்தவர்கள் ஆதரவை கீதாஞ்சலிக்கு திரட்டும் வேலையை றாம் தன்னை அறியாமலே செய்யத் தொடங்கி முற்றுமுழுதாக அவர்களது வலையில் சிக்கிக்கொண்டார். முன்னமே றாமின் பலவீனங்களை சரியாக கணித்த இந்தக் குழுவினர் பல போராளிப் பெண்களின் வாழ்வை றாமினால் பலியெடுக்கும் நிலமைக்கு தள்ளியிருந்தனர். இனி இவர் விரும்பினாலும் தான் செய்த தவறுகளுக்காக கீதாஞ்சலி குழுவோடு புலிவால் பிடித்த கதையாக நிற்க வேண்டிப் போய்விட்டது.

றாம் இப்படியான மோசடியை செய்வார் என நினைக்காது பலர் உதவிகளை வழங்கிய குடும்பங்களும் வேறு வழியின்றி உதவிகளைத் தான் பெற்றுக் கொண்டார்கள்.

தான் உதவுவதாக தனது இணையத்தில் தனது தொடர்பு இலக்கத்தையும் றாம் அறிவித்துள்ளதை பார்த்த பல போராளிகள் தங்களுக்கு உதவுமாறு தொடர்பு கொண்டு கேட்டு அறிமுகமாகினார்கள். அவர்களுக்கு இவரின் பின்னால் நிற்கும் சக்தியை தெரியாது. வறுமையால் உதவிக்காக இவரது வலையில் சிக்கியவர்கள் பலர்.

சில போராளிகளுக்கு புலம்பெயர்ந்தவர்களிடம் சேகரித்த பணத்தில் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்து பல போராளிகளின் விபரங்களை திரட்டி கீதாஞ்சலி குழுவிற்கு கொடுத்துள்ளார். இந்தப் பின்னணியில் பல போராளிகள் திடீர் கைதுகளுக்கும் ஆளாகி சிறையில் இருப்பதை அண்மைய செய்திகளில் வாசகர்கள் அறிவீர்கள்.

ஏற்கனவே 2000 – 2006 வரை றாம் இந்தியா திருச்சியில் மீற்றர் வட்டிக்கு பல லட்ச ரூபாய் பணத்தை பெற்றுத்தான் வெளிநாடு வந்திருந்தார். மீற்றர் வட்டிக்கு பெற்ற கடனை திருப்பிச் செலுத்தாமல் திருச்சியில் வட்டிக்கு பணத்தை வழங்கிய இந்தியர்கள் வழக்கு தாக்கல் செய்தனர். இக்கடன்களை மருமகனுக்கு முன்னின்று வாங்கிக் கொடுத்தவர் றாமின் மனைவியின் தாயார். றாமின் மாமியார்.

தனது கடனில் இருந்து மீளுவதற்கு றாம் கையில் எடுத்த கதை. இந்தியாவில் வட்டிக்கு பெற்ற பணம் தலைவர் பிரபாகரனுக்கு ஆயுதம் அனுப்பவும், போராளிகள் , மாவீரர்கள் குடும்பங்களுக்கு வழங்கியது என்பதும் ஆகும். 2000 – 2006 வரை விடுதலைப் புலிகள் இருந்த பலம் யாவரும் அறிந்ததே இந்தக் காலப்பகுதியில் றாமிடம் கடன் வாங்கும் நிலமையில் விடுதலைப் புலிகள் இருந்தார்களா ? என்பதனை மக்கள் சிந்திக்க வேண்டும்.

கீதாஞ்சலியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவருக்கு றாம் கணணியொன்றும் தொலைபேசி வசதிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். அந்த நபர் இலங்கையின் பிரபல பத்திரிகைகளின் செய்தியாளர். ஆவரை கீதாஞ்சலியின் ஆளென்பதை யாரும் தெரிந்து கொள்ளாமல் இருக்க கீதாஞ்சலியால் உருமறைக்கப்பட்டு செய்தியாளராக பத்திரிகைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

மிகவும் திட்டமிட்ட முறையில் கீதாஞ்சலியின் வலையில் வீழ்த்தப்பட்ட றாம் இனி தப்புவதற்கும் வழியில்லை. ஏற்கனவே றாம் செய்த மோசடிகளை மறைக்கவும் வழியின்றி அல்லாடுகிறார் அப்பாவியாக. இறுதி யுத்தத்தில் காணாமற்போன ஒருவரின் மனைவியும் நண்பர்கள் சிலரால் றாம் உதவுகிறார் என்பதை அறிந்து தொடர்பு கொண்டார்.

அந்தப் பெண்ணை கடந்த வருடம் ஊரில் இருக்க முடியாதென புலத்தில் உதவும் பலருக்கு கடிதங்கள் எழுத வைத்து தொலைபேசியில் அழ வைத்து ஊரவர் பணத்தில் அப்பெண்ணை இந்தியா அழைத்தார். அவருடன் இந்தியாவில் உல்லாசம் அனுபவித்துவிட்டு தற்போது அவரை தமிழ்முறைப்படி திருமணம் செய்துள்ளார்;. இவர் திருமணம் செய்வாரென நம்பி இந்தியா வந்து ஏமாந்துள்ளார். இந்தியாவில் ஒரு தனியார் கிளினிக்கில் குறித்த பெண் கருக்கலைப்பு செய்யப்பட்டார். இறுதியில் றாமால் கைவிடப்பட்ட நிலமையில் தனது குழந்தையுடன் இலங்கை சென்று வாழ்கிறார்.

றாம் தனது தவறுகளை மறைக்க சில ஆயிரம் ரூபாய்களை உதவியாக வழங்கிய பெண் போராளிகளிடம் தனக்கான ஆதரவை திரட்ட முற்பட்டுள்ளார். தனக்கு ஆதரவு கொடுக்க மறுக்கும் அனைவரையும் தனது இணையத்தில் எழுதுவேன் என மிரட்டுவது தொடர்கிறது. இவ்வகையிலேயே றாமின் போலி முகத்தை அறிந்து அவரது உதவிகளை மறுத்த அஸ்வினியை இலக்கு வைத்தது தனது தவறுகளை மறைக்கவும் தனது எண்ணங்களுக்கு ஒத்துழைக்காதவர்களை மறைமுகமாக மிரட்டும் நோக்கோடுமே அஸ்வினியை இலக்கு வைத்தார்.

ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய்களை உருவாக்கும் றாமின் போலி முகத்தை இனியாவது தமிழர்கள் புரிந்து கொள்ளுங்கள்.

உதவி தேவை என்பதற்காக இத்தகையவர்களை நம்பி யாரும் ஏமாறாமல் இருங்கள். உங்களது தாயகத்து போராளி நண்பர்கள் , தோழிகளுக்கு இப்படியானவர்களின் உண்மையான நோக்கங்களை தெரியப்படுத்துங்கள். இலங்கையரசின் திட்டமிட்ட இனவழிப்பில் நீங்களும் உடந்தையாகாதீர்கள். எங்கெங்கே என்னென்ன பலவீனங்கள் உள்ளதோ அவற்றை இனங்கண்டு எதிரியானவன் தனது பணியை நன்றே செய்கிறான். இதனை புரிந்து கொன்டு செயற்படுங்கள்....

Link to comment
Share on other sites

இவ்வாறான சுயநல மிருகங்களை துணிவாக இனம் காட்டிய சாந்தி அவர்களுக்கு நன்றிகள். இதில் உதவி செய்ய பணம் அனுப்புபவர்கள் ஏன் இவ்வாறானவர்களிடம் ஏமாறுகிறார்கள்? இவர்களை தவிர்த்து எவ்வகையில் உதவி செய்பவர்களையும், உதவி பெற இருப்பவர்களையும் இணைப்பது? நேசக்கரம் ஒரு வழி , ஆனால் உதவி தேவைப்படுபவர்கள் பல நாடுகளிலும் இருக்கிறார்கள். இவற்றை எவ்வாறு இணைப்பது? இவை பற்றியும் கருத்துக்கள் அவசியம். இதில் ராம் போன்ற மனிதர்கள், ஏமாற்றுவதற்கு நாமும் காரணம் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சிறிலங்கா புலநாய்வுப் பிரிவு பலரின் ஊடாக இயங்கிறது, இவர்களை எமது ஊடகங்கள் தயவு தாட்சணியம் இன்றி அடையாளம் காட்ட வேண்டும். இந்த வகையில் இந்தச் செய்தியை இங்கே பிரசுரிக்க அனுமதித்த யாழ்க் களக நிர்வாகத்தினருக்கும் நன்றி சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிட்சயம் என்னும் உண்மைகள் வெளியே வரும்.

Link to comment
Share on other sites

ஆண்டவா காப்பாற்று மேதகு வன்னிமைந்தனின் தொல்லை தாங்க முடியேல்ல. வடக்கை போற ஆற்றை கிழக்கை வெட்டித் திருப்பெண்டு அடம்பிடிக்கிறதை யாரிட்டை சொல்லியழ ?
 
இன்று ஒரு மெயில் போட்டுள்ளார். கள உறவுகளே இங்கே எழுதப்பட்ட எதிர்வினைக்கான கருத்துக்களை பலர் வைத்துள்ளீர்கள். அதனை புரியாமல் தொடர்ந்து ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கிறார். அதையும்விட இப்ப சைபர் கிரைம் கிறிமினல் என்று புலம்பல் எதற்கு புரியவில்லை. 
 
வன்னி மைந்தனின் கடிதம் :-
vanni_zps25ef4391.jpg

வன்னிமைந்தனே உங்கள் மீது ககலங்கம்(இது உங்கள் தமிழ்) விளைத்தமைக்காகவும் எண்ணெய்( இது உங்கள் தமிழ்) போன்ற உங்கள் வெண்ணை எழுத்துக்கும் நீங்களே பொறுப்பாளி. முதலில் சைபர் கிரைம் நடவடிக்கையை எடுங்கோ. உங்கள் செலவில் நாங்களும் உங்கள் மீதும் நீங்கள் செய்த எல்லாவற்றுக்கும் நீதி கேட்க இலகுவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னிமைந்தன் முதலில் உண்மையை சொல்லுங்கள்.நீங்கள் தமிழ் தெரிந்து எழுதுகின்றீர்களா?அல்லது யாராவது எழுதிக் கொடுக்கின்றார்களா? ஆதாரம் அதாரம் என்று கேட்கின்றீர்களே உங்கள் நண்பன் ராமிடம் கேட்கவும்,அவருடைய ஆதாரங்கள் எப்படியென்று.காவல்த்துறைதான் குற்றங்களை விசாரிக்கும்.இது என்ன புதுக்கதை குற்றவாளிகளே விசாரணை செய்வதா?இப்படித்தான் மகிந்தவும் தங்கள் போர்க்குற்றங்களை தாமே விசாரிப்பார்களாம்.

Link to comment
Share on other sites

இவர் இந்தியாவில போய் என்னவெல்லாம் செய்துபோட்டு வந்தவர் என்டுறதைச் சொன்னால் தமிழருக்கே கேவலம்.இயக்கத்தில 1992 இல விலாசமடிக்கலாம் எண்டுதான் தம்பி சேர்ந்தவர்.பிறகு தொண்டமனாற்றில கொண்டுபோய் காவலரணில விட்டபிறகுதான் தம்பிக்கு தமிழீழம் கண்னுக்க இருட்டத்  தொடங்கினது.அங்கிருந்து ஓடத்தொடங்கியவர் பிரித்தானியாவில வந்துதான் பிரேக் போட்டவர்.இப்ப லண்டன் மிச்சம் கவுன்சிலில கசெடுத்துக் கொண்டு அது காணாதெண்டுதான் போராளிகளுக்கு உதவுவதாகக் கூறிக்கொண்டு அதுவும் விசேடமா பெண்போராளிகளுக்கு எண்டு வெளிக்கிட்டு சுருட்டுறதெல்லாம் சுருட்டிக்கொண்டு கொஞ்சம் ஜெமினி கணேசன் பாணியிலையும் 
 தன்ர விளையாட்டைக் காட்ட வெளிக்கிட்டவர்.இனியும் துள்ள வெளிக்கிட்டால் தம்பியின்ட கவுன்சில் காசுக்கு  ஆப்பு வைக்கிறத்துக்கு சுழியோடிகள் மிச்சம் குளத்துக்குள்ள  பாயவேண்டிய நிலைதான் ஏற்படும்."""""சாந்தியக்காவுக்கு நன்றி """"""
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இவர் இந்தியாவில போய் என்னவெல்லாம் செய்துபோட்டு வந்தவர் என்டுறதைச் சொன்னால் தமிழருக்கே கேவலம்.இயக்கத்தில 1992 இல விலாசமடிக்கலாம் எண்டுதான் தம்பி சேர்ந்தவர்.பிறகு தொண்டமனாற்றில கொண்டுபோய் காவலரணில விட்டபிறகுதான் தம்பிக்கு தமிழீழம் கண்னுக்க இருட்டத்  தொடங்கினது.அங்கிருந்து ஓடத்தொடங்கியவர் பிரித்தானியாவில வந்துதான் பிரேக் போட்டவர்.இப்ப லண்டன் மிச்சம் கவுன்சிலில கசெடுத்துக் கொண்டு அது காணாதெண்டுதான் போராளிகளுக்கு உதவுவதாகக் கூறிக்கொண்டு அதுவும் விசேடமா பெண்போராளிகளுக்கு எண்டு வெளிக்கிட்டு சுருட்டுறதெல்லாம் சுருட்டிக்கொண்டு கொஞ்சம் ஜெமினி கணேசன் பாணியிலையும் 
 தன்ர விளையாட்டைக் காட்ட வெளிக்கிட்டவர்.இனியும் துள்ள வெளிக்கிட்டால் தம்பியின்ட கவுன்சில் காசுக்கு  ஆப்பு வைக்கிறத்துக்கு சுழியோடிகள் மிச்சம் குளத்துக்குள்ள  பாயவேண்டிய நிலைதான் ஏற்படும்."""""சாந்தியக்காவுக்கு நன்றி """"""

 

 

இதைச் செய்யுங்க முதல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னிமைந்தனுக்கு என்ன வேணும்

ஆதாரம் வேணுமென்றால் ராமிடமே கேட்டகவும்.அவர்தான் அதற்கு சொந்தக்காரர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.