Jump to content

யாழ்ப்பாணத்தமிழ் பேசும் ஜேர்மனிய பெண்!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தமிழ் பேசும் ஜேர்மனிய பெண்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இதை பார்த்தாவது தமிழ்பேசமறுக்கும் அனவருக்கும் ரோசம் மானம் வெட்கம் வரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கதைக்கிறதை தவிர்த்து வேற்று மொழி பேசுபவர்கள் இதைப்பார்த்தாவது திருந்தட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், புலவர்...! :lol:

 

செந்தமிழ் நாடென்னும் போதினிலே,

இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே....... பாரதியார்.

 

அன்னியர் தேசத்தின் 'மண்ணினிலே'

என் தமிழ் கொஞ்சுது நெஞ்சினிலே.......  புங்கை  :icon_idea:

Link to comment
Share on other sites

wow Sehr gut ! very nice!

Link to comment
Share on other sites

இந்த பெண்மணி லண்டனில் நான் வாழும் பகுதியில் தான் வசிக்கின்றா. 
எமது பெண்கள் இவரிடமிருந்து கற்க நிறையவே இருக்குது.
2009 காலபகுதியில் லண்டன் மாநகரம் எமது போராட்டங்களால் திணறிய வேளை, எம்மவர்களுக்கு உணர்வூட்டி வீதியில் இறங்கப் பண்ணியதில் இவரின் பங்களிப்பை யாருமே மறுக்க முடியாது.
ஈழத்தில் பிறந்து வெஸ்டேர்ன் கலாசாரத்தில் கரைந்து போன எம்மவர் மத்தியில், மேலை நாடொன்றில் பிறந்து எமது கலாச்சாரத்துடன் வாழும் இவர் உண்மையில் போற்றுதற்கு உரியவர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவா எங்கட மானத்த வாங்கிறதென்டு முடிவு பண்ணிட்டா இனி ஒண்டும் செய்யேலா

Link to comment
Share on other sites

இவர் அழகாக தமிழ் மொழி கதைப்பது மட்டுமன்றி தாய்மொழிக் கல்வி, தாய்மொழியின் பயன் போன்றனவற்றுடன் இன்னொரு மொழியினைக் கற்றுக் கொள்வதால் வரும் நன்மைகளையும் பேசுகின்றார்.

 

ஆனால் ..இவர் தமிழ் பேசுகின்றார் என்று பெருமைப் படுவதை விட 'யாழ்பாணத்' தமிழ் பேசுகின்றார் என்று பெருமைப்பட்டுக் கொள்வதில் தான் நாங்கள் அதிகம் மினக்கெடுகின்றம் போலக் கிடக்கு.

Link to comment
Share on other sites

வேறு நாட்டவர் தமிழில் கதைப்பதே பெரியவிடயம் அதிலும் சுத்த யாழ்பாணத்தமிழில் கதைப்பது உண்மையில் வியக்கவைக்கின்றது.  வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

அவர் தமிழ் கதைத்தால் பெருமை  என்றால் நாங்கள் ஆங்கிலம் கதைத்தால் தானே பெருமை . :icon_mrgreen:

______________

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அழகாக தமிழ் மொழி கதைப்பது மட்டுமன்றி தாய்மொழிக் கல்வி, தாய்மொழியின் பயன் போன்றனவற்றுடன் இன்னொரு மொழியினைக் கற்றுக் கொள்வதால் வரும் நன்மைகளையும் பேசுகின்றார்.

 

ஆனால் ..இவர் தமிழ் பேசுகின்றார் என்று பெருமைப் படுவதை விட 'யாழ்பாணத்' தமிழ் பேசுகின்றார் என்று பெருமைப்பட்டுக் கொள்வதில் தான் நாங்கள் அதிகம் மினக்கெடுகின்றம் போலக் கிடக்கு.

 

ஓம் உண்மைதான்..யாழ்ப்பாணத்தான் மற்ற தமிழ்பேச்சுவழக்குகளை நக்கலடிச்சதில்லை.ஆனால் வேறை தமிழ்பேச்சு நடைகளிலை கதைக்கிறவயள் யாழ்ப்பாண தமிழை அந்தமாதிரி  நக்கலடிக்கிறது உங்களுக்கு தெரியதோ?

மட்டக்களப்பிலை நான் கொஞ்சக்காலம் இருந்தபோது அவையள் அடிச்ச நக்கல் கொஞ்சநஞ்சமில்லை.பகிடிக்குத்தான் நக்கலடிச்சாலும்......அதையே திருப்பித்திருப்பி நக்கலடிக்கேக்கை அது பகிடியில்லை.

தமிழகத்திலையும் இது இருக்குது.திரைப்படங்களிலை யாழ்ப்பாணத்தமிழை வைச்சு அடிக்கும் நகைச்சுவையளுக்கும் பஞ்சமில்லை.......

 

ஏன் எங்கடை புலம்பெயர்சனம் மெட்ராஸ் தமிழை கதைக்க வெளிக்கிடேக்கை.....ஒரு வெள்ளைச்சி யாழ்ப்பாணதமிழ்கதைக்கிறதிலை நான் பெருமைப்படுறன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தமிழ் கதைத்தால் பெருமை  என்றால் நாங்கள் ஆங்கிலம் கதைத்தால் தானே பெருமை . :icon_mrgreen:

______________

 

சேர்.பொன் இராமநாதன்,ஜீ.ஜீ பொன்னம்பலம் காலத்திலையிருந்து உதைத்தானே செய்து கொண்டு வாறியள்.அதுவும் நுனி நாக்காலை....... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயே  நீ  வாழிய பல்லாண்டு...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அருமையாக தமிழ் பேசுகின்றார். இங்கு ஒரு கேள்வி? தமிழ் கதைக்கிறார் என்பது சரியா அல்லது பேசுகின்றார் என்பது சரியா? கொழும்பு தமிழில் நாங்கள் பேசுதல் என்று குறிப்பிடுவோம். யாழ் வழக்கில் ''பேசுதல்'' என்பது வித்தியாசமான அர்த்தத்தை கொடுக்கின்ற‌தே? ஏது சரியானது? 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அழகான வசனங்கள் இருக்கு, சொற்கள் இருக்கு, அது இங்கிலிஷிலோ ஜெர்மன்லயோ இல்லை, எல்லோரும் கொஞ்சம் கூட முயற்சிபண்ணி பார்ப்பீங்களோ...!"

"ஒருவரும் வெட்கப்படாம தயவுசெய்து தமிழ்ல கதையுங்கோ.. அழகான மொழி..வெட்கப்படாதீங்கோ..!"


உண்மையிலேயே நம்ப முடியவில்லை, இவ்வளவு அழகாக தமிழில் பேசும் ஜெர்மனியப் பெண் பாராட்டுக்குரியவர். applause.gif

 

நன்றி, பெண்மணி!

Link to comment
Share on other sites

பாராட்டுகள்; வாழ்த்துகள்.இதில் குறிப்பிடத்தக்க சிறப்பு என்னவென்றால்
ஜெர்மனியர்கள் மிகுந்த தனித்தன்மை கொண்டவர்கள்.அறிவார்வம் கொண்ட‌
முயற்சிகளின் முன்னோடிகள்.உண்மையில் ஜெர்மனி, பிரான்சு,இங்கிலாந்து
போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்கள் ‍‍‍‍‍== இளம்தலைமுறையினர் == அவர்களின் மொழியில், வாழ்க்கையில் உள்ள‌
சிறப்பான விடயங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்.அந்த அறிவார்வம்
நம்மிடையே பல்கிப்பெருகவேண்டும்.இவருடைய முன்னுதாரணம் நமக்கு
வழங்கும் செய்தி அதுவேயாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியம்மா

 

உன் தாய் மொழியை  பின்னுக்கு தள்ளிவிட்டு

என் தாய் மொழியில்

என்னைத்தமிழைக்காப்பாற்றுங்கோ

நானும் பிள்ளைகளுடன் வருகின்றேன் என்பது எனது பலவீனத்தையும்

என் தாய் மொழியின் வளத்தையும் எனக்குக்காட்டி  நிற்கிறது

வெட்கப்படுகின்றேன்

 

நன்றி  தாயே

தமிழ் வாழும்  என்ற  நம்பிக்கை  வருகிறது

Link to comment
Share on other sites

தாய்மொழியை மறந்த தமிழருக்கும்  தாய்மொiழியைப் பற்றிய சிந்தனையற்ற தமிழருக்கும் எங்கட பிள்ளையளுக்கு ரமில் வராது என்பவருக்கும்  நன்றாகத் தமிழ் பாடம் புகட்டியுள்ளார். அவருக்கும் இதனை இணைத்தவருக்கும் எனது பாராட்டுக்கள். 

செண்பகன்

Link to comment
Share on other sites

ஜெர்மன்மொழியை தாய்மொழியாககொண்ட இவர் தமிழரை திருமணம் செய்து மூன்று குழந்தைகளுடன் பிரித்தானியாவில் வாழுகின்றார், 2009 ஆம் ஆண்டு லண்டனின் மத்தியபகுதியில் தொடர்சியாக எம்மவர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் ஒவ்வொருநாளும் தானும் தனது கணவர் பிள்ளைகளுடன் வந்து பங்குபற்றியிருந்தார். இப்பொழுதும் எம்மவர் நிகழ்வுகளில் காணலாம், மாவீரர்தினங்களில் கூட மஞ்சள் சிகப்பு நிறத்தில் சாறி உடுத்தி வந்து உணர்வுடன் பங்குகொள்கின்றவர்.

அவருடைய தமிழ் பற்றுக்கு எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

செவ்வி எடுத்தவரை விட செவ்வி கொடுக்கும் போது எந்த தடுமாற்றமும் இல்லாமல் தமிழில் உரையாடும் அந்த பெண்மணிக்கு வாழ்த்துக்கள்,

Link to comment
Share on other sites

வன்னி தமிழ் ...மட்டக்கிளப்பு தமிழ் எல்லாம் எப்ப கதைப்பா அதையும் போடுங்கோ அண்ணே ..

 

 

Link to comment
Share on other sites

நாங்கள் தமிழர்கள். எங்கள் இனத்திலுள்ள தவறுகளை யாராவது சுட்டிக்காட்டினால் அதில் கவனமெடுத்து தவறுகளைத் திருத்திக்கொள்ள முயல்வதை விடுத்து மேலும் அவர்களுக்குத் தெரியாதிருக்கும் எங்களின் தவறுகளையும் தெரிவிக்கும் ஒரு பழக்கத்தையும் பழகி வந்துள்ளோம் வருகிறோம்.

தமிழ்மொழி கற்றுக்கொண்ட அந்தத் தாய்க்கும், எங்களை அறிந்தோ! அறியாமலோ! எங்கள் பழக்கங்களை ஊட்டிவிட்டுள்ளோம். அந்தத் தாய் எங்கள் எதிர்மறையான பக்கங்களையே அதிகமாகப் பார்ப்பதற்கு வைத்துள்ளமை நன்றாகவவே தெரிகிறது. தமிழர்கள் இங்குவந்து தமிழில் பேச கூச்சமோ! வெட்கமோ! அடைந்திருந்தால் அவரால் எப்படித் தமிழைக் கற்றுக்கொண்டிருக்க முடியும்?. அவர் தமிழைக் கல்லூரியில், தமிழ் ஆசான்களிடம் பயிலவில்லை. அவரே சொல்கிறார்; தனது 12 வயதில் "தமிழ்ப் பிள்ளைகளுடன் பழகியதால் நான் தமிழறிந்தேன்" என்று.

தமிழர்களிடமுள்ள நேர்மறைகளை நாங்கள் எண்ணுவதற்கும், பேசுவதற்கும், எழுதுவதற்கும் பழகிக்கொண்டால் தமிழனையும் உலகம் மதிக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.