Jump to content

தீபச்செல்வன் மீது எறியப்படும் துரோகக்கற்கள்.


Recommended Posts

தீபச்செல்வன் மீது எறியப்படும் துரோகக்கற்கள்.

 

எல்லோராலும் அறியப்படும் கவிஞர் ஊடகவியலாளர் தீபச்செல்வன் பல தடைகள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தனது எழுத்துக்களால் உயர்ந்த இளைஞன். 2008 காலத்தில் வலைப்பூ வழியாகா உறவாகினார். இனக்கலவரம் மோசமடைந்த 83இல் பிறந்த தீபச்செல்வன் அப்போது யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். பல்கலைக்கழகத்தில் பல பணிகளில் இணைந்திருந்த துணிச்சல் மிக்கவன்.

 
2009 இல் நேசக்கரத்தோடு இணைந்து 2009யுத்த முடிவிற்குப் பின்னர் பல பல்கலைக்கழக மாணவர்களுக்கும், வன்னியில் மீளக்குடியேறி மக்களுக்குமான உதவிகளை கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றிய நன்றிக்குரிய கவிஞன்.
 
தற்போது இந்தியாவில் தனது மேற்படிப்பைத் தொடரும் தீபச்செல்வன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து தீபச்செல்வன் மீது சேறடிக்கும் நடவடிக்கையில் சிலர் தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டு வருவது வேதனை தருகிறது. பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் என பலரது பொய்யான கட்டுக்கதைகள் தீபச்செல்வனின் ஆற்றலை சிதைக்கும் வகையில் நடைபெற்று வருகிறது.
 
எப்படி தீபச்செல்வன் இந்தியாவில் வாழ முடியும் ? எவ்வாறு பணம் வருகிறது ? அவன் அணியும் உடுப்புகள் பற்றிக் கூட சிலர் முகநூலில் விமர்சித்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
 
ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்க நாடுகளிலிருந்தும் இந்தியாவிற்கு விடுமுறையைக் கழிக்கவும் இலங்கைக்கு இரகசிய பயணங்கள் போகவும் இங்குள்ளவர்களுக்கு முடியும் ஆனால் ஏழ்மையில் வாழ்ந்து தனது ஆற்றலால் தனது சொந்த உழைப்பில் வாழும் ஒரு இளைஞன் மீது ஏன் இத்தகைய காழ்ப்பணர்வு கொள்கிறது புலத்து பண்ணைப்படைப்பாளிகள் ?

 

தீபச்செல்வன் போன்றவர்கள் எங்களுக்கு இன்னும் பலர் வரவேண்டும். அவர்களை வாழ்த்தி வரவேற்காது விட்டாலும் பறவாயில்லை தூற்றி அவர்களது ஆற்றலை மண்போட்டு மூடாமல் விட்டாலே பேருதவியாக அமையும்.
 
எல்லா வகையிலும் அவனை வீழ்த்த எடுத்த முயற்சிகள் தோற்றுப்போக சிலரோ அவனுக்கு யாரோ உதவிய உதவிக்கு தாங்கள் உரிமைகோரும் கொடுமையும் மிரட்டலாக அங்கை எழுதுவேன் இங்கை எழுதுவேன் என்ற எச்சரிக்கையாகவும் தொடர்கிறது.
 
தீபச்செல்வன் மற்றவர்களிடம் கடமைப்படுவதையே விரும்பாத ஒருவர். காலம் அவனை ஒருமுறை கல்விக்காக உதவிகோர வைத்தது. அந்த உதவியை இந்த யாழ்களத்தின் கருத்தாளரான கிருபன் வழங்கியிருந்தார்.கிருபன் உதவியை தந்த போது பிரதி பலன் எதையும் கேட்கவுமில்லை. அந்த உதவியைக்கூட கிருபன் மறந்து போனாலும் தீபன் இன்னும் கிருபனின் உதவியை மறக்கவில்லை. ஆனால் அவனைத் தொடர்ந்து தொல்லை கொடுத்து மிரட்டல் விடுக்கும் பெருமையாளர்களுக்கு இது புரியுமா தெரியவில்லை. 
 
தொடர்ந்த தீபச்செல்வனின் வளர்ச்சியில் முடிந்தால் உதவலாம் அல்லது அவனது பாதையில் பொய்யான கதைகளை இட்டு நிரப்பி தொல்லை கொடுக்காமல் இருந்தாலே உதவி. 
 
சிலவேளை யாழிலும் தீபச்செல்வன் பற்றி புனைவாளரால் எழுதப்படக் கூடும். உண்மைகளை சக கருத்தாளர்களும் அறிய வேண்டுமென்பதற்காகவே இங்கே இவ்விடயத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
 
 
Link to comment
Share on other sites

இப்படியான ஒரு பதிவை யாழில் பகிரங்கமாக எழுதச் சொல்லி தீபச்செல்வன் கேட்டவரா?

 

இதை எழுத அவர் சம்மதம் பெறப்பட்டதா?

 

இதில் அவருக்கு உதவியதாகச் சொல்லப்படுபவரின் சம்மதம் தானும் பெறப்பட்டதா?

 

எனக்குத் தெரியும் இவை அனைத்துக்கும் பதிலானது 'இல்லை'  என்பதே..

 

ஏனென்றால் தீபச்செல்வன் உங்களதும் உங்கள் உடன் பிறவா சகோதரம் சாத்திரியின் நோக்கம் புரிந்து நேசக்கரத்தினை விட்டு விலகியவர்

 

உங்கள் மீது குற்றச்சாட்டு எழுப்புகின்றோம் என்றவுடனேயே உங்கள் அமைப்புக்கு உதவியவர்கள் மற்றும் வேலை செய்தவர்களின் பெயர்களை பகிரங்கமாக அறிவிக்கும் உங்கள் குணத்தினை மீண்டும் இங்கு காட்டி விட்டீர்கள்.

 

 

 

இனி எப்படி உங்களை நம்புவது? 

 

ஒரு பிரச்சனை என்றால் உங்கள் அமைப்பினூடாக உதவுகின்றவர்களின், உதவி பெறுகின்றவர்களின் விபரங்களை பகிரங்கப்படுத்த மாட்டீர்கள் என்பதுக்கு என்ன நிச்சயம்?

 

 

ரோட்டில் அம்மணமாக்கப்பட்டு ஓடுகின்றவர்களின் தோலை  பிசினஸ் பண்ணும் உங்களுக்கு என் கேள்விகள் கசப்பானவை தான்.

 

ஆனால் இரட்டை வேடம் போடுகின்றவர்களின் தோல் உரியும் காலம் இது

.

 

 

 

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் மதிப்புக்குரிய பூச்சியண்ணா,
 
தீபச்செல்வனின் அனுமதியோடு தான் எழுதுகிறேன். எங்கேயோ முகமில்லாத பூச்சியின் கேள்விக்கு பயந்து எழுதேல்ல பூச்சி நெ......! ஒருவாரம் விடுமுறை எடுத்துள்ளேன் பல விடயங்கள் எழுத வேண்டும் பலல பணிகள் செய்ய வேண்டும். ஆக நேரம் கிடைத்திருக்கிறது. இதனால் அதிகம் இங்கு எழுதக்கூடியதாக இருக்கிறது.
 
மற்றும் உதவிய கிருபன் உங்களைப்போல கேள்வியில் வேள்வி செய்யும் ஆளில்லை. தனது உதவியை வெளிப்படையாகத்தான் செய்தார்.இது நிழலி உட்பட பலருக்குத் தெரியும். இதுபற்றி அப்போது திண்ணையில் நிழலி உட்பட பலர் பேசியிருந்தோம்.
 
சாத்திரியுடன் உங்களுக்கு ஏதும் தீர்க்கமுடியாத நோயிருந்தால் சாத்திரியிடம் மருந்தை வாங்கிக் கொள்ளுங்கள். இங்கு எனது எழுத்துக்குள் தொடர்பில்லாத ஆட்களை செருகி உங்கள் பெருந்தன்மையை நிலைநிறுத்தாதீர்கள்.
 
தீபச்செல்வன் படிப்பு காரணமாக ஊரில் அதிகம் நின்று செயற்பட முடியாமையால் தான் சிலகாலம் ஓய்வெடுத்துளானே தவிர நேசக்கரத்தை விட்டு நிரந்தரமாக பிரிந்துவிடவில்லை. நானும் தீபச்செல்வனும் தினமும் பேசிக்கொள்ள வேண்டிய தேவைகள் இருக்கிறது பேசுகிறோம் விடயங்களை பகிர்ந்து கொள்கிறோம். இவ்வளவும் உங்களுக்கு போதும்.
 
தீபச்செல்வன் மீது நடைபெறும் தாக்குதல்கள் பற்றி இங்கு கள உறவுகளாக விசுகு அண்ணா மற்றும் தமிழ்சூரியன் போன்ற பல கள உறவுகளுக்கு தெரிவித்திருந்தேன் தொலைபேசியில். ஆக இதில் எந்த ஒளிவு  மறைவும் இல்லை. ஒளிச்சிருந்து தீபச்செல்வனுக்கு எறியும் முகமில்லாதவர்களில் நீங்களும் இருந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது.

 


தீபச்செல்வன் கிளிநொச்சி மக்களுக்கு நேசக்கரம் ஊடாக பெறப்பட்ட உதவிகளை கொடுத்த சில இணைப்புகள் கீழ்வரும் இணைப்புகள் :-

 

http://nesakkaram.org/ta/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-17-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/

 

http://news.lankasri.com/show-RUmoyJSdkCLVi.html

 

http://nesakkaram.org/ta/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE/

http://nesakkaram.org/ta/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4/

http://nesakkaram.org/ta/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2/


தீபச்செல்வனைக்கூட உங்கள் போன்ற கேள்வி நாயகர்கள் கேள்வி கேட்டார்கள். இன்னும் தொடர்ந்துஅவனைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்....! நீ எப்படி இலங்கையரசின் தடைகளைத் தாண்டி இந்தியா போய் வருகிறாய் ? படிக்கிறாய் ? அதேநேரம் பணம் எங்கிருந்து வருகிறது ? 
 
ஏன் உதவிபெற்ற பல்கலைக்கழக மாணவர்களே தீபன் பற்றி புரளியைக் கிழறிவிட்டு அவனை வேதனைப்படுத்தினார்கள். 
 
இப்போது தீபன் பற்றி பினாத்துவோர் சிலர் அவனது உழைப்பை , உயர்வை சேறடித்து அவனை ஒதுங்க வைக்கவே. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான சர்ச்சைகளில் கருத்து வைப்பது தேவையற்றது என்பதால் ஒதுங்கியிருப்பது வழமை. எனினும் எனது பெயரைக் கண்டதால் தெளிவுபடுத்தவேண்டியுள்ளது.

நீங்கள் மேலே குறிப்பிட்டபடி எதுவும் வெளிப்படையாக திரிகளில் பரிமாறப்படவில்லை. எல்லாமே தனிமடல் ஊடாகத்தான் பரிமாறப்பட்டிருந்தது. திண்ணையில் கதைத்தவை பற்றி எனக்கு நினைவில்லை. இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

Link to comment
Share on other sites

கிருபன் பணவிரபங்கள் வெளிப்படையாக பரிமாறப்படவில்லைதனிமடலில் பேசியிருந்தோம். இவ்வுதவி பற்றி திண்ணையில் பேசியிருந்தோம். உங்கள் உதவியை இன்னொருவர் தனது உதவியாக தீபச்செல்வனுக்கு அண்மையில் பிரச்சனை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  இவ்விடயம் தொடர்பில் தீபன் மிகுந்த வேதனையில் இருக்கிறான். 

மற்றும் உங்கள் உதவி உங்கள் பெயரில் கணக்கறிக்கைகளில் உள்ளது. எல்லா வழிகளிலும் அவனது குரலை அடக்க எடுத்த முயற்சிகள் தோற்றதும் கடைசியில் அவனுக்கு நீங்கள் வழங்கிய உதவியையே கையில் எடுத்துள்ளார் குறித்த நபர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபச்செல்வனை

இதுவும் கடந்து   போகக்கடவது............. :(  :(  :(

Link to comment
Share on other sites

2009ம் ஆண்டு வன்னி யுத்தம் நடந்தபோது அங்கு வந்து  தங்கியிருந்து  யுதத்தில் மாட்டுப்பட்டு மீண்டும் பல்கலைக்கழக  வகுப்புக்களிற்கு போக முடியாமல்  யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் பல்கலைக்களகம் சென்றபோது அவர்களிற்கான அனுமதி மறுக்கப் பட்டும் அவர்களிற்கான  அரச உதவி மற்றும் தங்குமிட வசதிகள் மறுக்கப் பட்ட மாணவர்களிற்கு நேசக்கரம் உதவியது. அன்று அந்த மாணவர்களின் நிலை பற்றி அவர்களை வைத்தே ஒரு ஆவணப்படம் எடுத்துத் தருமாறு நான் தீபச்செல்வனிடம் கேட்டுக் கொண்டதோடு அதற்காக 40 ஆயிரம் இலங்கை ரூபாய் பணமும் அனுப்பி வைத்திருந்தேன் . அது நேசக் கரத்திற்காக மக்கள் தந்த பணமே.ஆனால் படம் இன்றுவரை  எடுக்கப் படவில்லை  அந்தப் படத்தைப் பற்றித்தான்  நான் தீபச் செல்வனை இந்த வருடம் சென்னையில் நேரடிநாய் சந்தித்தபோது கேட்டிருந்தேன்.

 

சரி இங்கு சாந்தி சொன்னது போல் கிருபன் கொடுத்த பணமாகவே இருக்கட்டும்.2009ல் வன்னியில் இருந்:து போன மாணவர்களை  வைத்து  எடுக்கத் தொடங்கிய ஆவணப்படம் இன்னுமா எடுக்கப் படுகிறது . அந்த மாணவர்களே  பல்கலை கழகத்தை விட்டு வெளியேறி வேலை செய்யத் தொடங்கியிருப்பாங்கள்.அல்லது  குடும்பம் குட்டி என்று போயிருப்பாங்கள். தீபச் செல்வனே சென்னையிலை குடியேறிட்டான். அடுத்ததாக  அன்று கிருபனிற்கு எப்படி கணக்கு காட்டப் பட்டது?? யாரோ ஒருவரின் பெயரைப் போட்டு இந்த மாணவனிற்கு உதவப் பட்டது என்று காட்டப் பட்டிருக்குமே தவிர ஆவணப் படம் எடுப்பதற்காக கொடுக்கப் பட்டது என்று நிச்சயமாக சாந்தி சொல்லியிருக் கமாட்டார்.இனி கிருபனும் அந்தப் பணத்தைப் பற்றி ஆராய்ந்து கேட்டிருக்கமாட்டார். நம்பிக்கை அடிப்படையில் பேசாமல் இருந்து விட்டிருப்பார். இதைப் போல பல சந்தர்பப்ங்களில் பலருடைய பணங்கள்  வீணடிக்கப்பட்டது. மோசடிகளும் நடந்தது.இவை பற்றி நான்  கேட்கத் தொடங்கியபேதே எனக்கும் சாந்திக்குமான பிரச்சனைகள் தொடங்கியிருந்தது.

Link to comment
Share on other sites

கிருபன் நீங்கள் அனுப்பிய பணம் யாருக்கு யாரின் மூலம் அனுப்பினீங்கள் என்ற விபரத்தை ஒருமுறை சாத்திரி என்பவருக்கு தெரியப்படுத்துங்கள்.
 
தீபச்செல்வனுக்கு கிருபன் உதவிய பணம் பற்றி கிருபன் தான் சொல்ல வேணும்.
 
மற்றும்படி சாத்திரி தனது பணத்தையோ அல்லது வேறு யாரும் கொடுத்த பணத்தையோ நேசக்கரத்திற்கு தந்து அது எதுவும் தீபச்செல்வன் மோசடி செய்யவில்லை. 2010ம் ஆண்டு தான் நேசக்கரம் யேர்மனியில் சட்டப்படியான பதிவும் வங்கிக்கணக்கிலக்கமும் வந்தது. 
 
வளமை  போல சாத்திரி தனது இயல்பான குணத்தை இங்கும் வெளிப்படுத்தியுள்ளார். இதனை யாழ்கள உறவுகள் மட்டுமல்ல வாசகர்களும் புரிந்து கொள்வார்கள்.
 
இதனை விட நான் செய்த திட்டங்கள் யாவுக்குமான அதாவது யாழ்நேசக்கரமாக இயங்கிய காலத்தில் செய்த உதவிகளுக்கான பணம் அனுப்பியோர் அந்தப்பணம் செயற்படுத்தப்பட்ட திட்டம் அப்போது பங்களித்த யாவருக்கும் ஆதாரங்கள் வழங்கப்பட்டது இதே களத்தின் ஊடாக. குறிப்பாக டண் அவர்கள் மற்றும் யம்முபேபி அவுஸ்ரேலியா ஆகியோர் தொடர்போடு இருந்து செய்தவற்றுக்கும் சாத்திரிக்கும் எவ்வித தொடர்புமில்லை. 
 
தீபச்செல்வன் ஒருசதமும் சாத்திரியின் பணத்தில் உதவியை பெறவில்லை. மற்றும் உதவிகள் தந்தவர்களுக்கு அது சென்ற பயனாளிகள் தொடக்கம் பொது உதவிகள் வரையில் வெளிப்படையாகவே தெரிவிக்கப்பட்டது. சாத்திரி சொல்லும் பொய்யில் எவ்வித உண்மையும் இல்லை. கடந்த வருடம் நேசக்கரம் மீது இவர் சுமத்திய குற்றச்சாட்டுகளில் இப்போது கூறுவதும் வந்ததே. 
 
தீபச்செல்வன் ஒரு போதும் மற்றவரின் காசில் வாழ ஆசைப்பட்டோ அல்லது மற்றவரின் தியாகத்தில் குளிர்காய்ந்தோ வாழ்ந்து பழகியவனில்லை. இன்னும் தனது படிப்பு தனது குடும்பத்துக்காகவும் வேலை செய்தே தனது செலவுகளை சமாளிக்கிறான். 
 
அவனது நல்ல குணத்தை நேசக்கரத்திற்கு உதவி புரிந்த ஒரு குடும்பம் 2011இல் இலங்கை போனபோது நேரடியாகவே அவனைச் சந்தித்து யேர்மனி திரும்பியிருந்தார்கள். அவனை தங்கது உறவுப் பெண்ணொருவருக்கு திருமணம் செய்யக்கூட ஆசைப்பட்டார்கள். அந்தக் குடும்பம் மிகவும் வசதி படைத்த குடும்பம். ஆனால் வசதியையோ பணத்iதையோ விரும்பாமல் தனது இலட்சியத்தை அந்தக் குடும்பத்துக்கு கூறுமாறு சொல்லியிருந்தான். அத்தகைய பணத்தை விரும்பாத சுயமரியாதை உள்ள இளைஞன். இவனது வளர்ச்சியை பொறுக்கமாட்டாமல் சுமத்தும் பழிகளுக்கு தீபச்செல்வனோ நானோ எதையும் செய்ய முடியாது. 

குறிப்பாக 2011வரையும் பொதுத்திட்டங்கள் எதுவும் நடந்ததில்லை. தனிப்பட்ட குடும்பங்களுக்கான மாணவர்களுக்கான உதவிகளே வழங்கப்பட்டது. அவற்றுக்கான வங்கியில் வைப்பிடப்பட்டதற்கான வங்கி ரசீது , மற்றும் உதவிபெற்றோரின் கடிதங்களும் உரியவர்களுக்கு அனுப்பப்பட்டது. 
 
 
பிரான்ஸ் உறவுகளான சுவியண்ணா விசுகு அண்ணா ஆகியோரின் சாத்திரியை நம்பி சாத்திரியின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய பணத்தினை சாத்திரி என்ன செய்தார் அது எவ்வாறு இழுபட்டு நேசக்கரத்தை அடைந்தது என்ற விபரம் போன வருடம் இதே களத்தில் உரையாடப்பட்டது.  சுவியண்ணாவும் நானும் இது பற்றி பரிமாறிய செய்திகள் மின்னஞ்சலில் இருக்கிறது.
 
மற்றும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் என சேகரிக்கும் பணமானது அந்தந்த திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதும் அதனை செய்து முடித்தமைக்கான ஆதாரங்களும் இங்கு செய்திகள் மூலமும் உதவியவர்களுக்கும் தெரியப்படுத்தி வழங்கப்படுவதே இன்றுவரையான வளமை. இதில் மேலதிகமாக எவ்வித உதவியும் யாரும் உதவுவதில்லை. 
 
நேசக்கரம் பற்றி அக்கறைப்படும் சாத்திரியும் செய்திகளில் படித்து அறிந்திருப்பாரென்றே நினைக்கிறோம்.

 

Link to comment
Share on other sites

உதவி பெற்ற மாணவர்கள் யாரும் சாகவில்லை. தீபச்செல்வனால் தான் அன்று பல்கலைக்கழக மாணவர்கள் பலர் உயிர் காக்கப்பட்டது. 
 
சாத்திரியின் தொல்லைகள் தொடர்ந்த போது நேசக்கரத்திலிருந்து  நீக்கிய பின்னர் தானாக தன்னை நீதவானாக நிறுவுதற்காக மோசடி என்ற பொய்யை எழுதத் தொடங்கியிருந்தார். இதுபோல நேசம் உணவு உற்பத்தி பற்றி கடந்த வருடம் தனது விசாரணையை தொடங்கியிருந்தார். அது பற்றி தெளிவான பதிலும் முன்னேற்றமும் பற்றி நேற்று முன்தினம் கணக்கும் முன்னேற்றம் பற்றிய விளக்கமும் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இதுபோல சாத்திரி சுமத்திய அனைத்து குற்றச் சாட்டுகளுக்குமான பதில்கள் மெல்ல மெல்ல உண்மைகளோடு வரும்.
 
திங்கள் வரை யாழ் களத்துக்கு வரமாட்டேன் உறவுகளே. எங்களது பெண்கள் அபிவிருத்தி மன்றத்தால் முன்னெடுக்கப்படும் அனைத்துலக பெண்கள் தினத்திற்கு லண்டன் போகிறேன். திங்களின் பிறகு சாத்திரியின் நேசக்கரம் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதில் தருகிறேன்.
Link to comment
Share on other sites

கிருபன் உங்கள் உதவி எப்படி போனது தீபச்செல்வனுக்கு என்பதனை நீங்கள் தெரிவிப்பதன் மூலம் தீபச்செல்வனின் நேர்மையை மற்றவர்கள் அறிய நீங்களே உதவ வேண்டும். 

 

தீபச்செல்வனின் உதவி பற்றி நிழலியும் அறிவார். நிழலியிடமும் உதவி கேட்கப்பட்டிருந்தது. தீபச்செல்வன் தற்போது பரீட்சையில் இருப்பதால் உடனடியாக தனது பதிலினை வழங்க முடியாதுள்ளார். விரைவில் இங்கு சாத்திரி சுமத்திய குற்றச்சாட்டுக்கு தனது பதிலினை தருவார்.

 

ஒருவன் மீது திட்டமிட்டு செய்யப்படும் அவதூறுக்கு இந்த உதவி விடயம் தொடர்பாக பேசியவர்கள் அனைவரும் இங்கு தங்கள் பதிலினை பதிவு செய்து தீபச்செல்வன் மீதான பழியைப் போக்க வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

Link to comment
Share on other sites

தீபச்செல்வனின் உதவி பற்றி நிழலியும் அறிவார். நிழலியிடமும் உதவி கேட்கப்பட்டிருந்தது.

 

ஓம்.. ஒரு சக நண்பனாக கேட்டு இருந்தார்.  அந்த நேரத்தில் வேலை இழந்து இருந்தமையால் உதவ முடியவில்லை.

 

தனிப்பட்ட ரீடியில் இந்த திரியில் கதைக்கும் விடயங்கள் தீபச்செல்வனது மனசை நோகடித்து விடுமோ என்று வேதனையாக இருக்கு. உலகில் எல்லாருக்கும் ஏதோ ஒரு நேரத்தில் மற்றவர்களின் உதவிகள் கண்டிப்பாக தேவையாக இருக்கும். எனக்கும் பல தடவை இவ்வாறான உதவிகள்  மற்றவர்களிடம் இருந்து தேவைப்பட்டு இருக்கு.  அப்படி ஒரு தேவை ஒரு சக மனிசனாக, உறவாக இருக்கும் தீபச்செல்வனுக்கும் ஏற்பட்டு இருந்தது. ஆனால் அதனையே ஒரு விவாதமாக இங்கு கதைக்கப்படுவதை காண உண்மையில் வேதனையாக இருக்கு. :( :( :(

:mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஆளை மாத்தி ஆள் கல் எறியுங்கோ.

ஆனால் எல்லா கற்களுமே எங்கள் மக்கள் மேல் தான் விழுகின்றன என்று மறந்திடாமல் கல்லை எறியுங்கோ. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்.. ஒரு சக நண்பனாக கேட்டு இருந்தார்.  அந்த நேரத்தில் வேலை இழந்து இருந்தமையால் உதவ முடியவில்லை.

 

தனிப்பட்ட ரீடியில் இந்த திரியில் கதைக்கும் விடயங்கள் தீபச்செல்வனது மனசை நோகடித்து விடுமோ என்று வேதனையாக இருக்கு. உலகில் எல்லாருக்கும் ஏதோ ஒரு நேரத்தில் மற்றவர்களின் உதவிகள் கண்டிப்பாக தேவையாக இருக்கும். எனக்கும் பல தடவை இவ்வாறான உதவிகள்  மற்றவர்களிடம் இருந்து தேவைப்பட்டு இருக்கு.  அப்படி ஒரு தேவை ஒரு சக மனிசனாக, உறவாக இருக்கும் தீபச்செல்வனுக்கும் ஏற்பட்டு இருந்தது. ஆனால் அதனையே ஒரு விவாதமாக இங்கு கதைக்கப்படுவதை காண உண்மையில் வேதனையாக இருக்கு. :( :( :(

:mellow:

 

இதைத்தான்  நானும் எழுத நினைத்தேன்

 

அதுவும் முள்ளிவாய்காலால் வந்து நின்றபோது செய்யப்பட்ட  உதவி  என்பது எல்லொருக்குமே  அன்று தேவைப்படட  ஒன்று.  அதுவும் நாற்பதாயிரம் இலங்கை ரூபா.

மனித நேயம் அழிந்து வருவதையே  எங்கும் காணமுடிகிறது :(  :(  :(

பாவம் 

தீபச்செல்வன்

அவரும் முள்ளிவாய்க்காலில்  புலிகள் செய்த குற்றங்கள்  என்று  தலைப்பிட்டு  எழுதி  வாழ்ந்திக்கலாம்...... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எனது பெயரும் வருவதால்  நானும் இதைச் சொல்ல வேண்டும் , இந்த நேசக்கரத்தை இங்கு ஆரம்பிக்கும் போது நாங்கள்யாரும் பெரிய அளவிலே பங்களிப்பு செய்ய வேண்டும் என தொடங்கவில்லை. அன்று எமது மக்களுக்கு முடிந்தவரை சிறு சிறி உதவிகள் செய்தாலே போதும் என நினைத்தோம் . அதனால் மாதம் 10 /20 €  ஈரோக்கள் அன்றாட செலவுடன் செலவாய் சேர்த்து அனுப்புவோம் என்றுதான் தொடங்கி னடத்தி வந்தது . அதில் எனது பணம் நேரடியாய் அனுப்பச் செலவுகூட என்பதால் சாத்திரி மூலமாக அனுப்பி வந்தேன். நான் கொடுத்த பணம் ஒரு சதம் கூடக் குறையாமல் சாத்திரியும் நேசக்கரத்துக்கு அனுப்பி வந்தார், அதேபோல் சாந்தியும் அந்தந்த மாதங்களிலேயே பதிந்து வந்துள்ளார். ஆகவே இருவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள்.

 

கடந்த சில மாதங்களாக எனக்கு சிறிது சிரமமாய் இருப்பதால் பணம் அனுப்பவில்லை. ஆயினும் நான் இரண்டொரு மாதங்களில் இருந்து வழமைபோல் அனுப்புவேன்.

 

நான் விரும்புவது தயவு செய்து நீங்கள் இருவருமே ஈகோவை விட்டு  நாகாக்க வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களைச் சுருக்கமாகச் சொல்லவேண்டியுள்ளது.

1) சாந்தி அக்காவுக்கும் சாத்திரிக்கும் உள்ள தனிப்பட்ட தகராறில் தீபச்செல்வன் இழுக்கப்பட்டுள்ளது போன்று நானும் இழுக்கப்பட்டிருப்பதாகக் கருதுகின்றேன்.

2)பல வருடங்களுக்கு முன்னர் வெளிப்படையாகத் தெரியாமல் செய்த உதவியை பொதுத் தளத்திற்கு கொண்டு வந்து விவாதிப்பது பிழையானது. இதுவரை நான் அந்த உதவியை நேசக்கரம் ஊடாகச் செய்யவில்லை என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். சாந்தி அக்கா இடையில் தனிமடலினூடாக ஒருங்கிணைப்பு செய்திருந்தாலும் நேரடியான உதவியாகவே இருந்தது. நேசக்கரம் கணக்கறிக்கையில் இது வராமல் இருந்திருக்கவேண்டும்.

3) சாத்திரி பணம் கொடுத்தாரா இல்லையா என்பதைப் பற்றி அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

4) எந்த வகையில் எனது உதவி போய்ச் சேர்ந்தது என்று பொதுவெளியில் அலசுவது மிகவும் தவறான விடயம். அதைச் சாந்தி அக்கா கோரியதும் தவறானது.

4) நேசக்கரம் அமைப்பை கொண்டு நடாத்தும் சாந்தி அக்காவும், பொது வெளியில் அரசியல் செய்யும் சாத்திரியும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ளவேண்டும். உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளுக்குள் மற்றவர்களை உள்நுழைக்கவேண்டாம்.

நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க இரண்டு பெரும் ஓரமாக நின்று விளையாடுங்கப்பா... எதுக்கு நடுத்தெருவிலே விளையாடி கொண்டு இருக்கிறீங்கள்.

வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்திலே வரும் ஒரு காட்சி.. :lol:

காலத்துக்கு ஏற்ற கருத்து கிருபன்.

பச்சை இல்லை குத்த.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பச்சை இல்லைக் கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அன்பின் சாத்திரி!
 
என்னுடைய நேர்காணல்களையும் கட்டுரைகளையும் வாசித்தால் என் தங்கை குறித்து நீங்கள் அறிந்திருக்க இயலும். நீங்கள் அவள் குறித்து எழுதியது அவளது பாதுகாப்பிற்கு பிரச்சினையான தகவலாக மாறலாம். அதனால்தான் அதை நீக்கச் சொன்னேன். ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் நாசூக்காக நோகடிக்கும் ஆபத்து விளைவிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தீர்கள். 
 
உங்கள் மகளை 'எனது இளவரசி' என்று அழைக்கும் நீங்கள் மற்றவர்களின் பிள்ளைகளையும் மனிதர்களாக மதியுங்கள். உயிரோடு இருப்பவர்களை கோரமாக இறந்தவர்களாக சித்திரிக்காதீர்கள்.  நாங்கள் வாழும் சூழலை புரிந்துகொள்ளுங்கள். இது எவ்வளவு பொறுப்பில்லாத அறமற்ற செயல். 
 
உயிரோடு இருப்பவரை இறந்தவர் என்று எழுதுகிறீர்கள். ஆபத்தில் வசிப்பவர்களின் பெயர்களை போட்டு ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள். முள்ளிவாய்க்கால் யுத்தமும் மரணமும் உயிர் தப்பியிருத்தலும் உங்கள் நகைச்சுவை விளையாட்டிற்குரிய பொருள்களாகிவிட்டன. 
 
நீங்கள் முகப்புத்தகத்தில் எழுதிய தமிழ் கவி அக்கா பற்றிய குறிப்பில் நான் யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டே வன்னியிலிருந்து என்று எழுதியாக குறிப்பிட்டுள்ளீர்கள். நான் 2010வரையில் எனது முகத்தையோ இருப்பிடத்தையோ காட்டவில்லை. 
 
சோபாசக்திக்கு வழங்கிய நேர்காணலில் நான் எப்போது எங்கிருந்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறன். 'வன்னியிலிருந்து' என்று ஒருபோதும் நான் குறிப்பிடவில்லை. வாசித்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும். 
 
உண்மையில் உங்களை நான் சென்னையில் சந்திக்க விரும்பவில்லை. நீங்கள் சஜந்தனுடன் இருக்கிறீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேன். உங்களை நான் சந்தித்த நேரம் முழுவதும் கார்திக் மற்றும் சஜயந்தன் உடனிருந்தனர். நீங்கள் என்னிடம் பணம் கேட்டீர்களா? இல்லை என்று அவர்களுக்குத் தெரியும். 
 
என் தங்கை பற்றிய தகவலை கண்டபோது நான் மிகவும் வேதனையடைந்தேன். நாங்கள் இந்த யுத்தத்தில் எல்லாமும் இழந்தோம். இன்றைக்கு உயிர்களைத் தவிர எங்களிடம் எதுவுமில்லை. அதற்கும் நீங்கள் ஊறு விளைவிக்கிறீர்கள் என்பதால்தான் கவலையுற்று உங்களை மீண்டும் பேஸ்புக்கிலிருந்து நீக்கினேன். 
 
அதன் பின்னர் நீங்கள் பேஸ்பக்கில் மெசேஜ் வழியாகவே 30ருபா வாங்கியதாக எழுதியிருந்தீர்கள். (ஆதாரம் இணைத்துள்ளேன்) பின்னர் யாழில் 40ஆயிரம் வாங்கியதாககவும் அதை நேரில் கேட்டதாககவும் எழுதியுள்ளீர்கள். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
 
நான் உங்களுடன் எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் வைத்திருக்கவில்லை. நேசக்கரம் கொடுக்கல் வாங்கல் எல்லாமும் சாந்தி அக்காவுடனேயே. எனவே அவருக்கு தான் தெரியப்படுத்தினேன். 
 
"தீபச்செல்வன் சென்னையில் குடியேறி விட்டான்" என்று எழுதுகிறீர்கள். திருநெல்வேலியில் கல்வி கற்கிறேன் என்று நானே உங்களிடமே சொன்னேன். பொய்யான தகவல்ககளையும் பொய்யும் நஞ்சும் கலந்த வார்த்தைகளையும்  மிக மிக எளிதாக மற்றவர்மீது வீசி விடுகிறீர்கள். 
 
நீங்கள் தொடர்ந்தும் இப்பிடிப் பொய்யான கதைகளையே எதுவரை எழுதுவீர்கள்? ஒரு சில நாட்களுக்கு இடையிலேயே நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு மாற்றி மாற்றி பொய் சொல்கிறீர்கள். 
 
இவை எல்லாம் உங்கள் பொய் முகத்திற்குத் சாட்சி!
 
இனியும் நீங்கள் என்ன பொய் சொல்லப் போகிறீர்களோ தெரியவில்லை. அதற்காக நான் பதில் அளிக்கப் போவதில்லை. யாழ் இணையம் வரை வந்திருப்பதனாலும் நண்பர்கள் சிலர் இவ்விடயத்தில் இழுக்கப்பட்டமையாலும் இதை எழுதுகிறேன். 
 
இத்தகைய ஒரு கடிதத்தை தவிர்க்கவே விரும்பினேன். எழுத வேண்டிய நிலை வந்துவிட்டது. அதற்காக வருந்துகிறேன்.  
 
அன்போடு தீபச்செல்வன்
 
(சாத்திரிக்கு முகப்புத்தகம் வாயிலாக அனுப்பப்பட்ட கடிதம்)
 
 
10009467_10152064496398801_555966281_n.j1977578_10152064496503801_484079583_o.jp
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபச்செல்வன்

முள்ளிவாய்க்காலால் வெளியில் வந்து கொஞ்சம் என்றாலும் மனிதாபிமானத்தோடு நடந்தவர்களில்  எழுதியவர்களில் நீங்களும் ஒருவர்.

உங்களையும் கொன்றுவிட்டோம்.

இதற்கு மேல் என்னால் எழுதமுடியவில்லை............

 

இதுவும் கடந்து  போகக்கடவது............... :(  :(  :(

Link to comment
Share on other sites

விசுகு,

 

தனி ஒரு சுயநல பொய்யனுக்காக , நீங்கள் 'கொன்றுவிட்டோம்' என்று பன்மையில் எழுதுவது மிகத் தவறு.

நாம் ஒரு போதும் நேர்மைக்காக நீதிக்காக நின்றவர்களைக் கைவிடோம் என்பதே உண்மை.

 

இந்தத் திரியில் எழுதிய அத்தனை பேரின் கருத்துக்களையும் வாசித்தால் இது புரியும்.  

 

வாய்மையே இறுதியில் வெல்லும். 

 

Link to comment
Share on other sites

வருத்தக்காரே உங்களுக்கு ஐயோ கேடு ................சாகப்போகிறீர்கள் ........... :icon_mrgreen:

Link to comment
Share on other sites



2014-01-28 nesakkaram <nesakkaram@googlemail.com>

திரு.சாத்திரி அவர்களுக்கு,
 
நேசக்கரத்தின் யாழ்வன்னி மாவட்ட இணைப்பாளராக 2009 தொடக்கம் இயங்கிய தீபச்செல்வன் இன்றொரு தகவலை மடலிட்டுள்ளார்
.(தீபச்செல்வன் தற்போதும் நேசக்கரத்தின் உறுப்பினராகவே இருக்கிறார். அவர் இப்போதும் தேவைகளைப் பொறுத்து நேசக்கரத்தோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்)
 
எங்களது சக பணியாளரான தீபச்செல்வன் இன்று அனுப்பிய செய்தி எமது நிர்வாகக்குழுவினருக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. 
 
தங்களிடமிருந்து தீபச்செல்வன் 2வருடங்கள் முன்னர் 30ஆயிரம் ரூபா பணம் பெற்றதாகவும் பல்கலைக்கழகமாணவர்கள் தொடர்பான ஆவணப்படம் எடுப்பதற்கு நீங்கள் வழங்கிய பணத்தை அவர் தராமல் விட்டதோடு உங்களது ஆவணப்படத்தை இன்னும் தரவில்லையென நீங்கள் தீபச்செல்வன் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளதாகவும் அறியத்தந்துள்ளார். 
 
தீபச்செல்வன் உங்களிடம் எவ்வித பணமும் பெறவில்லையென்பதனையும் தெரிவித்துள்ளார். அவரது கல்விக்கு யாழ் இணைய உறவான திரு.கிருபன் மட்டுமே அவருக்கு கல்விக்கு உதவினார். மற்றும் நேசக்கரம் அனைத்துலக அமைப்பாளர் திருமதி.சாந்தி ரமேஷ் வவுனியன் ஆகிய நான் தனிப்பட்ட உதவியாக அவரது கல்விக்காக உதவியுள்ளேன். இதைவிட உங்களிடமிருந்து எவ்வித பணத்தையும் பெறவில்லை என்று தான் எமக்குத் தெரியும். 
 
அவர்மீது நாங்கள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதானால் நீங்கள் தீபனுக்கு பணம் அனுப்பியதற்கான வங்கி ரசீது அல்லது ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் அறியத்தாருங்கள்.
 
தீபச்செல்வன் பற்றி எமது நிர்வாகமும் தாயகத்தில் பணியாற்றும் பணியாளர்களும் நன்கு அறிவார்கள்.யாரிடமும் பணத்தை வாங்காத நேர்மையான நபர். நேசக்கரம் கூட அவரை வைத்து பல வேலைத்திட்டங்களை செய்துள்ளது. அவற்றுக்கான பண கொடுக்கல் வாங்கலில் ஒருபோதும் நேர்மை தவறியதில்லை. அதற்கான சகல ஆதாரங்களும் உதவி பெற்றவர்களின் ஒப்பம் வீடியோ ஓடியோ பதிவுகளுடன் உடனுக்குடன் தந்துதவிய எமது நம்பிக்கைக்கு உரிய ஒரு பணியாளர் என்பதனையும் இத்தால் தங்களுக்கு அறியத்தருகிறோம்.
 
தீபச்செல்வனும்  திருமதி.சாந்தி ரமேஷ் வவுனியன் உட்பட மேலும் சில பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து ஒரு ஆவணப்படம் தயாரிக்கும் முயற்சியில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். அது சில வருடங்கள் ஆரம்பமாகி. எமக்கான முழுமையான வளங்கள் இல்லாமையால் அந்த ஆவணப்படத்தை நாம் இன்னும் முழுமையாக முடிக்கவில்லை. இதில் தீபச்செல்வனின் பங்கானது மிகவும் அளப்பரியது. இது தவிர யாருக்கும் ஆவணப்படம் எடுத்துக் கொடுக்க முன்வரவில்லை. 
 
தயைகூர்ந்து நீங்கள் அவருக்கு பணம் வழங்கியமைக்கான ஆதாரங்கள் இருப்பின் தந்துதவுங்கள் மேலதிக விசாரணைகளை நாம் செய்ய அது உதவியாக இருக்கும்.
 
முக்கியகுறிப்பு :- உங்கள் பதிலினை எழுத்துமூலம் அறியத்தருமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம். தொலைபேசி உரையாடல்கள் சட்டப்படி சட்ட நடவடிக்கைகளில் பயன்படுத்த முடியாது என்பதனை தாங்களும் அறிவீர்கள்.
 
(திரு.சாத்திரி அவர்களுக்கான இம்மடலினை சாந்தி ரமேஷ் வவுனியன், ஜனன் இருவரும் எழுதியுள்ளோம். இம்மடலின் பிரதிகள் நேசக்கரம் தாயக அனைத்துலக செயற்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது)
 
இங்ஙனம்
 
நேசக்கரம் அனைத்துலக அமைப்பாளர் சாந்தி ரமேஷ் வவுனியன் (யேர்மனி)
நேசக்கரம் தாயக அமைப்பாளர்  ஜனன் (இலங்கை)

 
--

"Lassen Sie uns helfen unsere Brüder und Schwestern"

*Let us help our brothers and sisters*



Capture_zpse16b1c6b.png
--
விழ விழ எழுவோம்
cleardot.gif

 

Link to comment
Share on other sites

என்ன விளையாட்டு இது?

உணர்வு பூர்வமாக எழுதுபவர்களை மட்டம் தட்டுவதாக இருக்கிறது.....

 

இது நேசக்கரத்தை விழசெய்யும் முயற்சி போலுள்ளது....... very bad....

Link to comment
Share on other sites

என்ன விளையாட்டு இது?

உணர்வு பூர்வமாக எழுதுபவர்களை மட்டம் தட்டுவதாக இருக்கிறது.....

 

இது நேசக்கரத்தை விழசெய்யும் முயற்சி போலுள்ளது....... very bad....

 

அதுதான் கேக்கிறம் இன்னமுமா எங்களை நம்பறீங்கள்  எண்டு உங்களிற்கே இது கேனைத்தனமா இல்லையா  போய் வேலையை பாப்பிங்களா.??பங்கு பிரிப்பதில் எங்களிற்குள் சின்னப் பிரச்சனை  அதுதான் நானும் சாந்தியும் சண்டை போடுறமாம் இதை நாலுபேர் நிண்டு வேடிக்கை பாப்பாங்களாம்..போவீங்களா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களே உங்களுடைய அயோக்கியத்தனத்தை தெரிவிப்பதால் நீங்கள் நல்லவனாக முடியுமா?

சோபாசக்தி என்பவர் முகநூலில் கூறியவாறு நீங்கள் அடியாள் மட்டுமல்ல... கொலைகளூக்கும் அதன் திசைதிருப்பல்களூக்கும் உடந்தையாகிய தமிழ் சமூக விரோதியும்கூட!! பொது விசயங்களில் இருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.