Jump to content

சொல்லடை ( சொலவடை )


Recommended Posts

திண்ணையில இருந்தவனுக்கு திடீர் என்று வந்ததாம் கலியாணம் .

விளக்கம் :

ஒருவருடைய வாழ்வில் முயற்சிகள் இல்லாமல் வரும் அதிர்ஸ்டங்களைச் சொல்லக் சொல்லப்படும்

நரி குசு விட்டதாம் கடல் கடலங்கிப்போச்சுதாம் .

விளக்கம் :

ஒருசிறியவிடையத்தை பாரதூரமாக பெரிதாக்கிகாட்டுவதை சொல்ல சொல்லப்படும் .

Link to comment
Share on other sites

  • Replies 231
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா சொலவடைகளும் ரசிக்கும்படியாகவே இருக்கு. ஏதாவது .Pdf இணைப்பு இருந்தால் தாருங்கள், பின்னாளில் அத்தனை சொலவடைகளையும் பிரதியெடுத்து வரிசையாக படித்து ரசிக்க இயலும்.

மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 months later...

தென்னை மரத்தில ஏன்ரா ஏறினாய் என்றால் ,கண்டுக்குட்டிக்கு புல்லு புடுங்க எண்டானாம் . தென்ன மரத்திலை எங்கை புல்லு எண்டால் ,j அதுதான் கீழை இறங்கிறன் எண்டானாம் .

விளக்கம் :

அத்தியாவசிமான விடையங்களில் தேவையற்ற நேரவிரையங்களிச் செய்வதைக்குறிக்கும் .

தொடாத தொழிலை தொட்டவனும் கெட்டானாம் தொட்ட தொழிலை விட்டவனும் கெட்டானாம் .

விளக்கம் :

எதுவித அனுபவமும் இல்லாத வேலையும் , முயற்சியும் இல்லாமல் பேருக்கு செய்கின்ற வேலையும் , தோல்வியிலேயே முடிவதைக் குறிக்கும் .

Link to comment
Share on other sites

  • 1 year later...

" சொலவடையை " இன்றைய தேர்வாக தெரிவு செய்த நியானிக்கு மிக்க நன்றிகள் :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"புங்குடுதீவான் போகாத ஊருமில்லை காகம் பறக்காத இடமுமில்லை"

ஊரிலை பெரியாக்கள் அடிக்கடி கதைப்பினம்.அதோடை ஆரையும் கோமணத்தோடை போகக்கண்டால் "முருகா நீயும் புங்குடுதீவானுக்கு பொயிலை குடுத்தியோ" எண்டும் சிரிச்சு கதைப்பினம்.ஆனால் உந்த வசனங்களின்ரை கருத்தும் அடிஅத்திவாரமும் எனக்குத்தெரியாது. :D

 

அம்பாந்தோட்டையிலிருந்த புங்குடு தீவுச் சுருட்டுக் கடைக்கு ஒருவர் புகையிலை சப்ளை பண்ணினார்.  ஆனால் நிலுவையைக் கலெக்ட் பண்ண முடியவில்லை. அலையாய் அலைந்தார்.  கடைசியில் அலுத்துப்போய் ஒரு தடவை பக்கத்தில் உள்ள கதிர்காமக்கந்தனிடம் சென்று வணங்கிவிட்டு வரப் போனார். மாணிக்க கங்கையில் நீராடிவிட்டுக் கரையேறியபோது போட்டிருந்த உடுப்பைக் காணவில்லை.  கோவணத்தோடு கோவிலுக்குச் சென்றவர் அங்கே கோவணத்தோடு நிற்கும் முருகனின் சிலையைக் கண்டார்.  பரவசப்பட்டவர் "முருகா முருகா நீயும் புங்குடு தீவாருக்குப் போயிலை வித்தாயா?" என்று கேட்டுச் சலித்துக் கொண்டாராம்.  அதுதான் புங்குடு தீவாருக்குப் போயிலை விற்ற கதை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாந்தோட்டையிலிருந்த புங்குடு தீவுச் சுருட்டுக் கடைக்கு ஒருவர் புகையிலை சப்ளை பண்ணினார்.  ஆனால் நிலுவையைக் கலெக்ட் பண்ண முடியவில்லை. அலையாய் அலைந்தார்.  கடைசியில் அலுத்துப்போய் ஒரு தடவை பக்கத்தில் உள்ள கதிர்காமக்கந்தனிடம் சென்று வணங்கிவிட்டு வரப் போனார். மாணிக்க கங்கையில் நீராடிவிட்டுக் கரையேறியபோது போட்டிருந்த உடுப்பைக் காணவில்லை.  கோவணத்தோடு கோவிலுக்குச் சென்றவர் அங்கே கோவணத்தோடு நிற்கும் முருகனின் சிலையைக் கண்டார்.  பரவசப்பட்டவர் "முருகா முருகா நீயும் புங்குடு தீவாருக்குப் போயிலை வித்தாயா?" என்று கேட்டுச் சலித்துக் கொண்டாராம்.  அதுதான் புங்குடு தீவாருக்குப் போயிலை விற்ற கதை.

 

 

 

இவருக்கு

கோவணமும் இல்லாது போகப்போகுது.................. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருநெல்வேலிக்கே  அல்வாவா , புங்குடுதீவில் இல்லாத பொயிலையா ...!  லொஜிக் எங்கோ முட்டுதே...! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.