Jump to content

ஆறுமுகன் தொண்டமான் ராஜினாமா


Recommended Posts

ஆறுமுகன் தொண்டமான் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்தார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்றுமாலை சமர்ப்பித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள்தெரிவித்தன.

எனினும் கால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இந்த ராஜினாமாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/38335-2012-03-26-15-12-57.html

Link to comment
Share on other sites

ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை

பொருளாதார நெருக்கடி [வங்கிரோது] காரணமாக மதுபான சலுகையினை இவருக்கு

ராஜபக்ச நிறுத்தியிருக்க கூடும்......? :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மாற்றத்தை தனக்கு சாதகமாக்க தற்போதே அடித்தளம் போடுகிறார். இனி பேச்சுவார்த்தையில் பேரம்பேசும் வலு அவருக்கு அதிகரிக்கும்என கணக்கு போடுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கால்நடை அமைச்சருக்கு தண்ணி அடிக்க நேரம் போதவில்லை.

தலீவர் வேறு பாராளுமன்றத்திற்க தண்ணி போத்திலுக்கு தடை போட்டுட்டார். 

அதான்க்...ரிசைன்.

Link to comment
Share on other sites

அப்பாடா,மலையக மக்களின் ரத்தத்தை அட்டை குடித்ததை விட இந்தாள் குடித்த ரத்தமே அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா,மலையக மக்களின் ரத்தத்தை அட்டை குடித்ததை விட இந்தாள் குடித்த ரத்தமே அதிகம்.

பில்லியன் டாலருக்கு தம் ஏழை மக்களிடம் சுரண்டினான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

thonda-Mahinda.jpg

நீ இராஜனாம செய்துபோறது சரி வெளியில்போய் என்னைப்பற்றி ஏதாவது பேசினால் கழுத்தில் போட்ட துண்டாலையே கொன்றுபோடுவேன் என்று சொல்லுறாரோ ?

Link to comment
Share on other sites

அமைச்சர் ஆறுமுகனின் இராஜினாமாவையடுத்து முத்துசிவலிங்கத்துடன் அமைச்சர் பஷில் பேச்சு _ 001_112.jpg

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும் கால்நடைகள் வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதையடுத்து எழுந்துள்ள ச்ர்ச்சைக்கு தீர்வு காணும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிய வருகிறது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கத்துடன் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இவ்விவகாரம் தொடர்பில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்துள்ளபோதிலும் அவரது பதவி விலகலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையிலேயே நேற்று பிரதியமைச்சர் முத்து சிவலிங்கத்துக்கும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்குமிடையில் நீண்டநேரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப்பீடம் பேச்சுவார்த்தை நடாத்த விரும்புவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் நம்பகரமாக தெரியவருகின்றது. கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அவிபிருத்தி அமைச்சின் கீழ் வரும் தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நியமனத்தில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்தே அமைச்சுப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யும் முடிவினை அமைச்சர் தொண்டமான் எடுத்திருந்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் முரண்பாட்டுக்கு தீர்வு காணப்படாதவிடத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகும் நிலை ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

http://www.virakesar...asp?key_c=37308

Link to comment
Share on other sites

thonda-Mahinda.jpg

நீ இராஜனாம செய்துபோறது சரி வெளியில்போய் என்னைப்பற்றி ஏதாவது பேசினால் கழுத்தில் போட்ட துண்டாலையே கொன்றுபோடுவேன் என்று சொல்லுறாரோ ?

யார் யாருக்கு சொல்லுகிறார் ? :D

Link to comment
Share on other sites

thonda-Mahinda.jpg

நீ இராஜனாம செய்துபோறது சரி வெளியில்போய் என்னைப்பற்றி ஏதாவது பேசினால் கழுத்தில் போட்ட துண்டாலையே கொன்றுபோடுவேன் என்று சொல்லுறாரோ ?

இந்தப் படத்தில் ஆறுமுகனின் தலையை ஓட்டும் போது இன்னும் கொஞ்சம் சின்னதாக ஓட்டியிருக்கலாம்.

இந்தியப் பயங்கரவாதக் குழுவின் நீண்டகால கைப்பொம்மையான முத்து சிவளிங்கத்தாலோ, ஆறுமுகனாலோ அமைச்சு பதவி இல்லாமல் வாழ முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பயங்கரவாதக் குழுவின் நீண்டகால கைப்பொம்மையான முத்து சிவளிங்கத்தாலோ, ஆறுமுகனாலோ அமைச்சு பதவி இல்லாமல் வாழ முடியாது.

உண்மை ஆராவமுதன், இன்னும்... ஒரிரு நாட்களில், தனது ராஜினாமாவை மீளப் பெறுவதாக ஆறுமுகன் அறிவிப்பார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.