Jump to content

பொறியியல் படிப்பு: பொசுங்கிய கனவு


Recommended Posts

பன்னிரெண்டாம் வகுப்புப் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த ஆண்டும் பெருமளவில் மாணவிகளே தேர்ச்சியுற்ற நிலையில், அடுத்த கட்டக் கல்வி குறித்து மாணவர்களும், பெற்றோர்களும் திட்டமிடத் தொடங்கிவிட்டனர். நாளேடுகளை அடைத்துக் கொண்டு வெளியாகும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி விளம்பரங்கள், அதற்கான தூண்டிலை வீசி நிற்கின்றன.

 

இதே நேரத்தில் இன்னொரு செய்தியும் ஊடகங்களில் வலம் வந்தது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பொறியியல் இடங்கள் நிரம்பாமல் இருப்பதைத் தவிர்ப்பதற்காக பல தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள், புதிய மாணவர்களை ஈர்த்து வருவதற்காக அங்கு ஏற்கெனவே பயிலும் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பல சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது குறித்த செய்தி அது! 

 

ஏற்கெனவே பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவர், இன்னொரு புதிய மாணவரை அதே கல்லூரியில் சேர்த்துவிட்டால் ரூ 10,000 முதல் 15,000 வரை பரிசளிக்கப்படுவதாகவும், பேராசிரியர்களுக்கும் இது போல சலுகைகள் உண்டென்றும் சில தனியார் நிறுவனங்கள் அறிவித்துவிட்டன.

 

உண்மையில், அத்தொகையை வேறுபல காரணங்களைச் சொல்லி ‘சிறப்புக் கட்டணம்’ என்ற பெயரில், கல்லூரி நிர்வாகங்கள் ‘அறுவடை’ செய்துவிடும் என்பது ஒரு செய்தி. இன்னொரு செய்தி, கடந்த ஆண்டைப் போல இந்தாண்டும் பெருமளவிலான பொறியியல் கல்லூரியிடங்கள் நிரம்பாமல் போய்விடுவதைத் தடுக்கச் செய்வதற்கான தனியார் நிர்வாகங்களின் தந்திரம் இது! ஏனெனில், கடந்த 2012-13ஆம் ஆண்டு கல்வியாண்டில், தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் மொத்த இடமான 1.73 இலட்சத்தில், சற்றொப்ப 1.20 லட்சம் இடங்களே நிரம்பின. 50,000க்கும் அதிகமான இடங்கள் நிரம்பாமல் காலியாகவே இருந்தன. இந்தாண்டு இந்த எண்ணிக்கை மேலும் குறையும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்கவே இந்த ‘சலுகை’ ஏற்பாடுகள்!

 பொறியியல் கல்வி என்பது அறிவு சார்ந்த படிப்பாக பார்க்கப்படாமல், வெறும் பணம் ஈட்டும் வழிமுறையாகவே பார்க்கப்படும் சமூகத்தில், இது வெறும் செய்தி மட்டும் அல்ல. ‘பொறியியல் கல்வி படித்தால் கைநிறைய சம்பாதிக்கலாம்’ என ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட நடுத்தர வர்க்கத்தினரின் பெருங்கனவிற்கு இச்செய்தி ஏற்புடையதும் அல்ல.

 ஏனெனில், தற்போதைய நிலவரப்படி, இந்திய அளவில், பொறியியல் படித்த சற்றொப்ப 1 கோடிக்கும் அதிகமானோர் இன்னும் சரியான வேலையின்றி இருக்கின்றனர். தமிழகத்தில், கடந்த 2012 சூன் நிலவரப்படி, இளநிலைப் பொறியியல் (பி.இ) படித்துவிட்டு, 2 லட்சத்துக்கு அதிகமானோரும், முதுநிலைப் பொறியியல் (எம்.இ) படித்துவிட்டு 1 லட்சத்துக்கு அதிகமானோரும் வேலை வேண்டி வேலைவாய்ப்புத் துறையிடம் பதிவு செய்துள்ளனர். உண்மையில், இது பல இலட்சங்களைத் தாண்டும்.

 வங்கிகளில் கடன் வாங்கியும், சொத்துக்களை அடகு வைத்துக் கட்டணம் செலுத்தியும் இங்கு சேர்ந்த பெற்றோரின் நிலை கேள்விக் குறி! பொறியியல் கல்வி குறித்து ஊதிப் பெருக்கிய ஊடகங்களோ, அடுத்து வேலைக்குச் சென்று விட்டன.

 இந்தியத் துணைக் கண்டத்திலேயே ஒரிசாவிற்கு அடுத்து, அதிகளவிலான பொறியியல் கல்லூரிகளைக் கொண்டு, அதிகளவிலான பொறியியலாளர்களை உற்பத்தி செய்யும் தமிழ்நாட்டிற்கு இது நிச்சயம் கவலைக்குரிய செய்தி!

 சற்றொப்ப 7 அரசுப் பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 18 அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், 525 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 553 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. இவை தவிர, 69 எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ. மட்டுமே பயிற்றுவிக்கும் உயர்கல்வி கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. மேலும், தமிழகத்தில் பெருகிய பொறியியல் கல்லூரிகளின் காரணமாக, ஜார்கண்ட் – பீகார் – ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்து மாணவர்கள் இங்கு குவிந்துள்ளனர். 

 

1980களில் இந்த நிலை கிடையாது. அப்போது, பொறியியல் கல்வி என்றாலே அது வசதிமிக்கவர்களின் படிப்பு என்ற நிலை இருந்தது. ஆனால், இப்பொழுது நிலை தலைகீழ்! வீதிக்கு வீதி பொறியியல் கல்லூரிகள் முளைத்து விட்டன. கடந்த 2006-2007ஆம்  கல்வியாண்டில் சற்றொப்ப 1511 பொறியியல் கல்லூரிகளையும், 1132 மேலாண்மைக் கல்லூரிகளையும் கொண்டிருந்த ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பு, 2012-2013ஆம் கல்வியாண்டில் 3495 பொறியியல் கல்லூரிகளும், 2450 மேலாண்மை கல்லூரிகளும் இந்தியாவில் இயங்குகின்றன என்கிறது.

 இந்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் இயங்கும் இந்த ஏ.ஐ.சி.டி.இ. (AICTE) எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி வாரியம் தான், இந்தியத் துணைக் கண்டமெங்குமுள்ள தொழில்நுட்பக் கல்வி சார்ந்த நிறுவனங்களையும், கல்வியையும் ஒழுங்குபடுத்துதற்காக செயலாற்றுகிறது. மேலும் மேலும் அதிகாரக் குவிப்பை விரும்புகிற இந்திய அரசு,   இந்தியாவெங்கும் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களைத் தொடங்க, இவ் அமைப்பிடம்தான் அனுமதி பெற வேண்டும் என்றது.

 மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில்தான் குறைந்த கூலியில் நிறைவான உழைப்பைத் தரும் உழைப்பாளிகள் இருக்கிறார்கள் என உணர்ந்து கொண்ட பல பன்னாட்டு  நிறுவனங்கள், 1990களில் செயலுக்கு வந்த புதியப் பொருளியல் கொள்கையுடன் இந்தியாவில் காலூன்றின. இந்நிறுவனங்களில் பணியாற்ற பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்வியும், ஆங்கில மொழியும் அவசியமாக இருந்தது.

 வெவ்வேறு மொழிகளுடன் இயங்கும் பல்வேறு தேசிய இன மக்கள் வாழும் இந்தியத் துணைக் கண்டத்தில் இந்தி மேலாதிக்கம் செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை, ஆங்கில மேலாதிக்கமாவது முதலில் இருக்கட்டும் என்ற வகையில், இந்திய அரசுக்கும் இது உவப்பாய் இருந்தது. தொழில்நுட்பக் கல்வியின் அதிகார மையமாக ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பு, செயலாற்றியது.

 தில்லியிலிருந்து வரும் இவ்வமைப்பின் அதிகாரிகள், ஒர் தொழில்நுட்பக் கல்லூரி இயங்குவதற்கான இடம், வசதிகள், தொழில்நுட்ப ஏற்பாடுகள் என அனைத்தையும் பார்வையிட்ட பிறகுதான் அக்கல்லூரிக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்பது விதிமுறை. ஆனால், உண்மையில் நடப்பதோ வேறு! பெருமளவிலான ஊழல்களும், கையூட்டுகளும் தான் அங்கு நடக்கின்றன. அதிகாரக் குவிந்துள்ள இடங்களில் தான் ஊழல்களும், விதிமுறை மீறல்களும் எளிதாக நடக்கின்றன என்பது புரியாத செய்தி ஒன்றுமல்ல. ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பின் செயலாளர் ஒருவரே நேரடியாக கையூட்டு பெறும் போது சிக்கிக் கொண்டார்.

 இன்னொரு புறத்தில், கலை – அறிவியல்  உள்ளிட்ட கல்விகளில் அதிகளவில் பணம் ஈட்ட முடியாதென முடிவுக்கு வந்த நடுத்தர வர்க்கம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்வி மீது அதிகளவில் மோகம் கொண்டது. இப்பெரும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய சில ஆயிரம் பேர் மட்டுமே தேவை என்ற நிலையிலும் கூட, அதற்கு நேர் மாறாக பல இலட்சம் பொறியியலாளர்கள் இங்கு உருவாக்கப்பட்டனர். வட அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளைச் சேர்ந்தும் கூட உருவாக்க முடியாத வகையில், இந்தியாவில் சற்றொப்ப 1.5 மில்லியன் பொறியியலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கப்படுகின்றனர்.

 கல்வி வணிகமாக்கத்தின் ஒரு பகுதியாக, பொறியியல் கல்வி ‘பொன் முட்டையிடும் வாத்து’ போன்று ஒரு முக்கியத் தொழிலாக உருவானது. அரசியல்வாதிகள் ‘கல்வி வள்ளல்’கள் ஆனார்கள். தமக்கென சொந்தமாகக் கல்வி நிறுவனம் கொண்டிராத அரசியல்வாதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்ற அளவில், ஒவ்வொரு மாநிலத்திலும் இதே நிலை உருவானது. தமிழகம் மட்டுமின்றி, இந்தியத் துணைக் கண்டத்தின் இதர மாநிலங்களிலும் இதே நிலையே நீடிக்கிறது. இதன் விளைவாக, இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகளைக் கொண்ட மாநிலமாக ஒரிசாவை அடுத்து, தமிழ்நாடு நிற்கிறது.

 பொறியியல் கல்வியில் சேர கடும் போட்டி உருவானது. ஆனால், எந்த நிலையிலும் பொறியியல் கல்வியின் தரமோ – கல்லூரிகளின் தரமோ உயரவில்லை. மேற்கத்திய நாடுகளின் பொறியியல் கோட்பாடுகளும், வழிமுறைகளுமே இங்கு கல்வியாகக் கற்பிக்கப்பட்டன. பயிற்சிகள் தரப்பட்டன. இதன் காரணமாக இங்குள்ள பொறியியல் கல்லூரிகள் பொறியியலாளர்களை உற்பத்தி செய்யவில்லை. மாறாக, பொறியியல் அறிவு கொண்ட பணியாளர்களையே உற்பத்தி செய்கின்றன.

ஆஸ்பிரிங் மைன்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்வி மற்றும் மாணவர்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளை நடத்தி வெளியிட்டு வருகின்றது. கடந்த 2013ஆம் ஆண்டு சூன் மாதம், இந்நிறுவனம் பொறியியல் கல்வி பயின்றோரின் நிலை குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையில், இந்தியாவில் பொறியியல் கல்வி பயின்றவர்களில் 47 விழுக்காட்டினர் எந்தவித வேலைக்கும் தகுதியானவர்கள் அல்ல என்றது அவ் ஆய்வறிக்கை. 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில், ஒட்டு மொத்த இந்தியப் பொறியியலாளர்களில் வெறும் 17.45 விழுக்காட்டினரே பொறியியல் வேலைகளுக்குத் தகுதியானவர்கள் எனத் தெரிவித்தது. (காண்கதி இந்து, எடுகேசன் பிளஸ், 12.03.2012).

 

கோடி, கோடியாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்படும் இப்பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் கல்விக் கூடங்களுக்கு தேவையான அடிப்படை வசதியோ, தேவையான ஆராய்ச்சிக் கூடங்களோ கிடையாது. குறைந்தபட்ச தகுதி கூட இல்லாத ஆசிரியர்களை தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் நியமித்து பாடம் கற்பித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், பல கல்லூரிகளில் போதிய ஆசிரியர் இல்லாத நிலையும் உள்ளது. இதனால், தரமான கல்வியின்றியும் மாணவர்கள் திணறுகின்றனர்.

1000 பொறியியல் கல்லூரிகளோடு தமிழகத்தை இரண்டாமிடத்திற்கு தள்ளி நிற்கும் ஒரிசாவில், பொறியியலாளர்களின் நிலை மிகவும் மோசமானது. கடந்த 2012-2013ஆம் கல்வியாண்டில் சற்றொப்ப 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளிலும், 227க்கும் மேற்பட்ட எம்.பி.ஏ. கல்லூரிகளிலும் 41,603 இடங்கள் நிரம்பாமல் இருந்தன. 2013-2014ஆம் கல்வியாண்டில் இது 52 ஆயிரத்தைத் தாண்டி விட்டது. வேலையில்லாப் பொறியியலாளர்களின் எண்ணிக்கையும் இங்கு பலமடங்கு அதிகமானது.

 எனவே இது குறித்து ஆராய ஒரிசா அரசு ஓர் குழுவை நியமித்தது. மாதுங்கா வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத் துணைவேந்தர் தலைமையில் நியமிக்கப்பட்ட அக்குழு, கடந்த 2014 பிப்ரவர மாதம் தனது ஆய்வறிக்கையை அரசுக்கு அளித்தது. அவ்வறிக்கை, ஒரிசா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் நிலையை எடுத்துக்காட்டியது.

 இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலுமுள்ள தொழில்நுட்பக் கல்வியையும், கல்வி நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்த அமைக்கப்பட்டது தான், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி வாரியம் (AICTE) என்ற அமைப்பாகும். ஆனால், அவ்வமைப்பு பொறியியல் கல்விக்கு அனுமதி அளிக்கிறோம் என்ற பெயரில் நடத்தியுள்ள கூத்துகளை இவ்வறிக்கை அம்பலப்படுத்தியது.

 புதிதாக தொடங்கப்படும் பொறியியல் கல்வி நிறுவனங்கள், புதிய புதிய தொழில்நுட்பக் கல்வியைக் கொண்டு வருகிறோம் என்ற பெயரில் ஏற்கெனவே உள்ள பொறியியல் கல்விகளின் பெயரில் சில மாற்றங்களைச் செய்து, அதை வேறு பெயரில் கற்பிக்கி முற்படுன்றன.

 உதாரணத்திற்கு, AICTE அமைப்பு, electrical engineering, electrical and electronics engineering, electrical and power engineering, electrical engineering (electrical and power), electrical engineering (electronics and power), electrical and electronics (power system) என சற்றொப்ப 42 மின் பொறியியல் படிப்புகளுக்கு அனுமதியளித்துள்ளது. இவற்றை ஒழுங்குபடுத்தி மின் பொறியியல் என்ற ஒரே தலைப்பில் கல்வியாக அளிக்க வேண்டுமெனச் சொல்ல வேண்டியதுதான் AICTE அமைப்பின் கடமை. ஆனால், தனியார் பொறியியல் கல்வி நிறுவனங்களின் ‘நலன்’களுக்காக இத்தனைப் பெயர்களுக்கும் அனுமதி அளித்துள்ளது AICTE. இவற்றையெல்லாம் இவ் ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியதோடு, இதனை தனது பரிந்துரையாகவும் வெளிப்படுத்தியது. (காண்க: தி டைம்ஸ் ஆப் இந்தியா, 17.02.2014).

 இந்தியாவெங்கும் நடைபெறுகின்ற பொறியியல் கல்லூரி மோசடிகளைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டிய AICTE – தனக்கு ஆள்பற்றாக்குறை இருப்பதால் இவற்றை செய்யமுடியவில்லை என்கிறது. அனைத்துக் கல்வியையும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் முழுவதுமாக விட்டுவிட்டால் இக்கேள்விக்கு இடமிருக்காது. ஆனால், அதிகாரக்குவிப்பையே முழுநேரமாகக் கொண்டு செயல்படும் இந்திய அரசு, இதற்கு அனுமதி மறுக்கிறது.

 இதே ஆய்வு நிறுவனம், இந்தியாவெங்கிலும் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே ஆங்கிலப் பயன்பாடு குறித்து ஓர் ஆய்வு நடத்தியது. அதில், சற்றொப்ப 43 விழுக்காட்டுப் பொறியியலாளர்களுக்கு ஆங்கிலத்தை சரியான வகையில் எழுதத் தெரியாது என அவ்வமைப்புக் கண்டறிந்தது. 25லிருந்து 35 விழுக்காட்டுப் பொறியியலாளர்கள் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ள முடியாதவர்களாக உள்ளனர் என்றும் அவ்வறிக்கைத் தெரிவித்தது. (காண்கதி பிசினஸ் ஸ்டான்டர்டு, 25.07.2012)

 இந்தியத் துணைக் கண்டமெங்கும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டுமே பயிற்றுவிக்கப்படும் பொறியியல் கல்வி, உண்மையில் மாணவர்களைப் போய்ச் சேரவில்லை. சேரவும் வாய்ப்பில்லை. தாய்மொழி வழியில் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பக் கல்விகளை கொண்டு சென்றால் மட்டுமே, அக்கல்வியின் தரம் உயர வாய்ப்புள்ளது. ஆனால், இந்தியாவில் அது கேள்விக்குறியே!

 இந்தியாவிலேயே தமிழகத்தில்தான், சென்னை அண்ணாப் பல்கலைக்கழகத்தில் மாநில மொழியில் பொறியியல் கல்வி பயிலும் முறை இருக்கிறது. 1999ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசிடம் போராடி, பல தடைகளைத் தகர்த்துதான் தமிழ்வழிப் பொறியியல் கல்வி இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெறும் காட்சிக்காக ஒரே வகுப்பை வைத்திருக்கும் நிலையை மாற்றி, இதை தமிழகமெங்கும் விரிவுபடுத்துவதும், ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில மக்களின் மொழியில் கல்வியைப் பயிற்றுவித்து அம்மக்களை அடுத்த நிலைக்குக் கொண்டுச் செல்வதும்தான் ஆக்கப்பூர்வமான அரசின் கடமை. ஆனால், இந்தி – ஆங்கில மொழித் திணிப்பை ‘தேசியப்பணி’யாக செய்து வரும் இந்திய அரசு, இதற்கு ஒருபோதும் முன்வராது.

 பள்ளிக்கல்வி – உயர்க்கல்வி என அனைத்தையும் அந்தந்த மாநில அரசுகளின் கையில் முழுவதுமாக விட வேண்டிய இந்திய அரசு, நடைமுறையில் அதிலுள்ள மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இதைப் போராடி முறியடிக்காமல், தொழில்நுட்பக் கல்வியின் தரம் உயர வாய்ப்பே இல்லை.

 இலட்சக்கணக்கில் பொறியியலாளர்களை உற்பத்தி செய்யும் தமிழகத்தில் இயங்குகின்ற பன்னாட்டு – வடநாட்டு நிறுவனங்களில், சில ஆயிரம் பொறியியலாளர்களுக்கே பணி கிடைக்கிறது. அதிலும், தலைமை அதிகாரிகளாக இந்நிறுவனங்களில் உள்ளவர்களில் கணிசமானவர்கள் வெளி மாநிலத்தவரும், பார்ப்பனர்களுமே இருக்கின்றனர். பணியாளர்களில் கணிசமானவர்களாகவும் வெளி மாநிலத்தவரே உள்ளனர். தமிழகத்திற்குள் அயல் இனத்து  மாணவர்களை அதிகளவில் நிரப்பியதன் வெளிப்பாடு இது!

 எனவே, இந்நிலையை மாற்ற, தமிழகத்தில் இயங்கும் அனைத்து பன்னாட்டு – வடநாட்டு நிறுவனங்களும், எந்தத் துறையாக இருந்தாலும் சரி, அவர்களது பணியிடங்களுக்குத் தேவையானவர்களை மாநில அரசின் வேலைவாய்ப்புத் துறையிடம் கேட்டுப் பெற்றே இட ஒதுக்கீடு வழங்கி நிரப்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட வேண்டும். அப்பொழுதுதான், தமிழர்களுக்கு இந்நிறுவனங்களில் சமூக நீதி அடிப்படையில் வேலை கிடைக்கும். அதுவரை, தமிழ்நாடு அயலாரின் வேட்டைக் காடாகவேத் திகழும். பொறியியல் கல்வி போல, கலை – அறிவியல் உள்ளிட்ட ஆராய்ச்சி வகைக் கல்வியிலும் மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்வம் காட்ட வேண்டும்.  

-க.அருணபாரதி

arunabharthi@gmail.com

http://sengodimedia.com/Blog/Description.aspx?id=4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.