Jump to content

பெருஞ்சோறு அல்லது பெருவிருந்து


Recommended Posts

இந்நாட்டு மக்கள் தனக்கு பெறுவெற்றியை ஈட்டித்தருவர் என்று கருதும் மன்னன் அவர்களுக்கு சோறு அளித்தல் பெருஞ்சோறு அல்லது பெருவிருந்து என வழங்கப்படும். போருக்குச் செல்லும் முன்  வீரர்களுக்கு பெருஞ்சோறு அளித்தலும் நறவம் என்னும் கள் வழங்குதலும் பண்டைக்கால தமிழர் மரபாகும்.

சங்க கால சேர மன்னர்களில் ஒருவனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தம்பியாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற அரசன் பெருஞ்சோறு அளித்ததை பாலைக்கௌதமனார் என்ற புலவர் பதிற்றுப்பத்தில் பாடியுள்ளார்.

வருநர் வரையார் வார வேண்டி
விருந்துகண் மாறா(து) உணீஇய பாசவர்
ஊனத்(து) அழித்த வால்நிணக் கொழும்குறை
குய்யிடு தோறும் ஆனா(து) ஆர்ப்பக்
கடல்ஒலி கொண்டு செழுநகர் நடுவண்
அடுமை எழுந்த அடுநெய் ஆவுதி


தன்னைத் தேடி வருபவர்கள் வரையறை இல்லாமல் உண்ண வேண்டி, விருந்தோம்பலில் இன்றியமையான அன்பு மாறாமல் சமையல்காரர் வைத்து சமைத்துப் போடுவார்.  ஊனை வெட்டும்  மரக்கட்டை மேல் வைத்துக்  கொத்தித் துண்டித்த நல்ல வாசம் பொருந்திய  இறைச்சியின் வெண்ணிறக் கொழுப்பை நெய்யாக்கித் தாளிக்கும்போது எழும் ஒலியானது கடல் அலைகள் எழுப்பும் ஒலி போல் இருக்குமாம். இந்த விருந்தோம்பலானது செழுமையான நகரின் நடுவே வைத்து செய்யப்படும்

நெடுஞ்சேரலாதன்  தந்தையாகிய உதியன் சேரலாதன் பாரதப் போரில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பெருஞ்சோறு அளித்தான் என நிறையப் பேர்கள் கூறுவதும் இதைத்தான்..

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
                                                - புறநானூறு

புரவி ஐவரொடு - ஐவர் எனக் குறிப்பிடுவதால் பாண்டவர் எனவும், ஈரைம் பதின்மரும் - எனக் குறிப்பிடுவதால் கௌரவர் எனவும் கொள்கின்றனர். இது ஆராயத்தக்கது.

தொல்காப்பியத்தில் "பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை" எனக் குறிக்கப் படுகிறது. அதாவது ஒரு காரியம் செய்யும் முன்னே முன்னோர்களின் ஆசி வேண்டி அவர்களுக்கு படையல் செய்து ஊர் மக்களுக்கு / உறவினர்களுக்கு  சோறு படைப்பதையும் பெருஞ்சோறு எனக் கொள்ளப்படும். மன்னன் பெருந்திரளான வீரர்களுக்கு சோறு படைக்கிறான் மற்றவர்கள் உறவினர்களுக்கு சோறு அளிக்கின்றனர்.

சோறு என்ற தமிழ் வார்த்தை பல ஆயிரம் வருடங்களாக உபயோகப்படுத்தி வரும் ஒரு செழுமையான வார்த்தை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோறு சமைக்க... அரிசி (Reis) தேவை.
கிரேக்கம், ஜேர்மன், இங்லிஷ்.
அரிசியில் இருந்து, வந்த சொல் தான்...உலகம் முழுக்க இன்றும், பாவிக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவுகளைப்பார்க்க, தமிழன் எவ்வாறு ஒரு பெருவாழ்வு வாழ்ந்தான் என்று அறியமுடிகின்றது....!

 

களவுக் காதலாகட்டும், அல்லது வீரமாகட்டும், அல்லது விருந்தோம்பலாகட்டும்...., அனைத்திலும் ஒரு பரந்த மனதுடன் அவன் வாழ்ந்ததை அறியும்போது, பெருமையாக இருக்கின்றது !

 

அதே வேளை, அனைத்தையும், தனது பெருந்தன்மையால், அல்லது அறியாமையினால். மற்றவர்களுக்குத் தாரை வார்த்துவிட்டு, சர்வதேசக் கூலியாக, மற்றவர்களால் அடையாளப்படுத்தப் படுவதைக் காண, வெறும் ஏக்கம் மட்டுமே மிஞ்சி நிற்கின்றது!

 

மீண்டும் ஒரு நாள், தமிழன் கோலோச்சும் நாள் வர வேண்டும் என்பது தான் எனது ஆசை!

 

உங்கள் தமிழ்ப்பதிவுகளைத் தொடருங்கள்....ஆதி..!

Link to comment
Share on other sites

தமிழ் சிறி, புங்கையூரன் மற்றும் கறுப்பி உங்களின் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

 

 

உங்கள் பதிவுகளைப்பார்க்க, தமிழன் எவ்வாறு ஒரு பெருவாழ்வு வாழ்ந்தான் என்று அறியமுடிகின்றது....!

 

களவுக் காதலாகட்டும், அல்லது வீரமாகட்டும், அல்லது விருந்தோம்பலாகட்டும்...., அனைத்திலும் ஒரு பரந்த மனதுடன் அவன் வாழ்ந்ததை அறியும்போது, பெருமையாக இருக்கின்றது !

 

அதே வேளை, அனைத்தையும், தனது பெருந்தன்மையால், அல்லது அறியாமையினால். மற்றவர்களுக்குத் தாரை வார்த்துவிட்டு, சர்வதேசக் கூலியாக, மற்றவர்களால் அடையாளப்படுத்தப் படுவதைக் காண, வெறும் ஏக்கம் மட்டுமே மிஞ்சி நிற்கின்றது!

 

மீண்டும் ஒரு நாள், தமிழன் கோலோச்சும் நாள் வர வேண்டும் என்பது தான் எனது ஆசை!

 

உங்கள் தமிழ்ப்பதிவுகளைத் தொடருங்கள்....ஆதி..!

 

 
தன் மீதும் தான் சார்ந்த இனத்தின் மீதும் உயர்வான சுயமதிப்பீடு கொண்ட ஒருவனால்தான் உயர்ந்த லட்சியங்களை எட்ட முடியும் என்பது எனது திடமான நம்பிக்கை. அந்த சுயமதிப்பீடை உருவாக்கவும் பாதுகாக்கவும் பழைய  பாரம்பரியங்களை தொடர்ந்து நினைவு கூறுதல் அவசியம் என்று எண்ணுகிறேன்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.