Jump to content

புத்தகத் திருவிழாவும் தமிழகப் பயணமும்!


Recommended Posts

புத்தகத் திருவிழாவும் தமிழகப் பயணமும்! ( பகுதி - 1)

 

 

ஜீவநதி  சிற்றிதழின்

சித்திரை மாத இதழில் வெளியான

எனது கட்டுரை

10154372_237584819776695_1125860041_a.jp

 

 

 

 

 

 

 

    தமிழியல் வெளியீடான எனது ‘திரையும் அரங்கும் :கலைவெளியில் ஒரு பயணம்’ நூலின் தயாரிப்பு வேலைகள் முடியும் தறுவாயில் இருந்தன. ‘காலச்சுவடு’ பதிப்பகம் கணினியில் தட்டச்சு வேலைகளை  முடித்து மின்னஞ்சலில் எனக்கு அனுப்ப,பிழைகளைத்  திருத்தி  காலச்சுவடிற்கும் தமிழியல் பொறுப்பாளரான - இலண்டனிலுள்ள பத்மநாப ஐயருக்கும், முன்னரே அனுப்பிவிட்டேன். நூலில் சேர்க்கவேண்டிய படங்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. பத்மநாப ஐயரும், அவுஸ்திரேலியாவிலுள்ள நண்பர் ரஞ்சகுமாரும்

படங்களைச் சேகரித்தனர்; ரஞ்சகுமாரே 175 படங்களை இணைத்து, நூலின் வடிவமைப்பையும்

செய்தார். ஆனால், அச்சிடுவதில் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் இருப்பதாக

காலச்சுவடு பதிப்பகம் அறிவித்தது; ஆயினும், அவ்வாறான பிரச்சினைகள் ஏதாவது ஏற்பட

வாய்ப்பில்லை என, பதிப்புத்துறை அனுபவம் நிறைந்த ரஞ்சகுமார் தெரிவித்தார். இந்நிலையில் பிரச்சினை தீர்ந்து, அச்சிடும் வேலைகள் முடிந்து புத்தகத் திருவிழாவின்போது நூல் வெளிவருமா என்பதில், ஐயம் தோன்றியது. எனது நூல் வெளிவருவதையும், இதுவரையில் சென்று பார்க்காத புத்தகத் திருவிழாவைப் பார்ப்பதையும் இணைத்து, சென்னை செல்ல விரும்பிய எனக்கு, பயணத்தைத் தீர்மானிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், “புத்தகம் எப்படியும் வந்துவிடும்; பயண ஆயத்தங்களைச் செய்யுங்கள்” என, நண்பர் பத்மநாப ஐயர் தெரிவித்தார். எனவே, ஆயத்தங்களைச் செய்து, சென்னையிலுள்ள நண்பர் சிலருக்கும் அறிவித்தேன். 37 ஆவது புத்தகத் திருவிழா தை 10 – 22 வரை நடைபெறுமெனவும், எனது நூலின் வெளியீடு 11ஆம் திகதிக்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாகவும், காலச்சுவடு கண்ணன் அறிவித்தார். எனவே, தைமாதம் 10ஆம் திகதிக்கு விமானச்சீட்டைப் பதிவுசெய்தேன். கே.எஸ். சிவகுமாரன் அவர்களும் அதே திகதியில் -  ஒரேநேரத்தில் - சென்னை செல்வதாகப் பின்னர் தெரிந்தது; அவரது நூல்கள் இரண்டு 12ஆம்திகதி வெளியிடப்படுவதாகவும் அறிந்தேன்.  கொழும்பில் அவருடன் சேர்ந்து, அவர் ஏற்கெனவே ஒழுங்குசெய்திருந்த வாடகை வண்டியில் கட்டுநாயக்கா விமான நிலையம் சென்றேன்; செலவினைப் பகிர்ந்து என்னிடம் பணம் பெற்றுக்கொள்ளச் சிவகுமாரன் மறுத்துவிட்டார்! சென்னையில் நண்பர் சோமீதரனின் வீட்டில் தங்கினேன்

 

    நந்தனத்திலுள்ள வை.எம்.சி.ஏ.உடற்பயிற்சிக் கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு, இடம் பகுதிபகுதியாகப் பிரிக்கப்பட்டு புத்தக விற்பனை நிலையங் களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது; விரிப்புகளினால் மூடப்பட்டு நிலம் மறைக்கப்பட்டிருந்தது. 700 அரங்குகளில் ஐந்து இலட்சம் தலைப்புகளிலான நூல்கள் என, ஓர் அறிவிப்புத் தெரிவிக்கிறது! எங்கும் ஒளிவெள்ளமும் சனக்கூட்டமும்! சென்னையில் நின்றபோது புத்தகத் திருவிழாவுக்குப் பல நாள்கள் சென்றேன்; அங்கு நடைபெற்ற சிலபுத்தக வெளியீடுகளையும் கவிதை அரங்குகளையும் பார்வையாளனாக அவதானிக்க முடிந்தது; அங்கு வந்திருந்த எழுத்தாளர், கவிஞர், பதிப்பாளர்  பலருடன் கதைக்கவும் முடிந்தது.

 

1.  நூல் வெளியீடுகள்

 

 ஜீவா சிற்றரங்கம், வெளி அரங்கம் என்பவற்றில் நூல் வெளியீட்டுக் கூட்டங்கள் நடைபெற்றன. சிற்றரங்கத்தில் சுமார் 60பேர் வரையில் அமர்ந்துகொள்ளலாம்; வெளியரங்கத்தில் சுமார் 200பேர் வரை அமரும் வசதி இருந்தது. ஆயினும், சிற்றரங்கக் கூட்டத்துக்கு முப்பது பேர்களுக்குள்தான் பார்வையாளரைக் காணமுடிந்தது! தவிர, சில விற்பனைக்கூடங்களிலும் கொஞ்சப்பேருடன் எளிமையாக வெளியீடுகள் சில நடைபெற்றன. ஒருவர் நூலை வெளியிட  ஒருவர் பெற்றுக்கொள்வார்; வெளியிடுபவர் பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள் நூலைப்பற்றிய கருத்துகளைத் தெரிவிப்பார். இந்த முறையில்தான் சிற்றரங்கக் கூட்டங்கள் நடைபெற்றன. முறையான அறிவிப்புகள் இல்லாமையால் பலருக்கும் நிகழ்ச்சிகளின் விபரங்கள் தெரிவதில்லை; இதனால் அவற்றில் பலவற்றைத் தவறவிட நேர்கிறது; நானும் இவ்வாறு சில நிகழ்வுகளைத் தவறவிட்டேன். வருங்காலத்திலாவது பொது அறிவிப்புப் பலகையில் நிகழ்ச்சி விபரங்கள் தெரியப்படுத்தப்படுவது நல்லது.

 

 10155099_237593593109151_553348920_a.jpg

 

அ). 11.01.2014 சனிக்கிழமை மாலை, காலச்சுவடு ஒழுங்குசெய்த நான்கு நூல்களின் வெளியீடு, ஜீவா சிற்றரங்கத்தில் நடைபெற்றது.

 

    சு.தியடோர் பாஸ்கரனின் ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே’, அரவிந்தனின் ‘கேளிக்கை மனிதர்கள்’, எனது ‘திரையும் அரங்கும் : கலைவெளியில் ஒரு பயணம்’, சா.பாலுசாமியின்’ நாயக்கர்காலக் கலைக்கோட்பாடுகள்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன; முதல் மூன்று நூல்களும் திரைப்படம் பற்றியவை.

10154360_237595429775634_1425969799_a.jp

 

முறையே பெருந்தேவி, அசோகமித்திரன், அம்ஷன்குமார், த.பழமலை ஆகியோர் நூல்களை வெளியிட்டுப் பேசினர். இரண்டு ஆண்டுகளின் பின்னர் அசோகமித்திரனைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. ஜீவநதி 6 ஆம் ஆண்டுச் சிறப்பிதழையும், கலைமுகம் இதழொன்றையும் அவரிடம் கொடுத்தேன்; தியடோர் பாஸ்கரனிடமும் அம்ஷன் குமாரிடமும் கலைமுகம்

இதழின் பிந்திய மூன்று இதழ்களையும் ஜீவநதி இதழ்களையும் கொடுத்தேன். பிறிதொரு

நாளில், ‘நிழல் திருநாவுக்கரசு’வுக்கும் கலைமுகம், ஜீவநதி இதழ்கள் சிலவற்றைக்

கொடுத்தேன். இவ்விதழ்களில், திரைப்படம் பற்றிய எனது கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

 

 

ஆ.) 12.01.2014 ஞாயிற்றுக்கிழமை மணிமேகலை பிரசுரத்தின் 31நூல்களின் வெளியீடு இருப்பதாகவும், அதில் தனது இரண்டு நூல்களும் அடங்குமெனவும் சிவகுமாரன் தெரிவித்திருந்தார்; வெளியரங்கத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. எனினும்

நிகழ்வுக்கு வரப் பிந்திவிட்டேன். காரணம், நான் தங்கியிருந்த சாலிக்கிராமம்

நேருநகரிலிருந்து ஏழு நிமிடங்கள் நடந்து தசரதபுரம் வந்து, அங்கிருந்து பேருந்திலோ

பகிர்வு ஓட்டோவிலோ வடபழனி பேருந்து நிலையத்துக்கு வந்து, பின்னர் பெசன்ட்நகர் பேருந்தில் சைதாப்பேட்டைக்கு வந்து இறங்கி, அங்கிருந்தும் சுமார் பத்து நிமிடம் நடந்துதான்

புத்தகத் திருவிழா நடைபெறும் – நந்தனம் வை.எம்.சி.ஏ. விளையாட்டுத் திடலைச்

சேரவேண்டும்; போக்குவரத்து எப்போதும் மிகுந்த சிரமத்தைத் தந்தது. நான் வந்தபோது

சிவகுமாரனின் நூல்களின் வெளியீடு நடைபெற்றுவிட்டது; தொடர்ந்து வேறு பலரின் நூல்கள்

வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன. மேடையில் பிரமுகர் பலர் இருந்தனர்; திரைப்பட

நடிகரும் நெறியாளருமான பொன்வண்ணன், நடிகை தேவயானியும் திரைப்பட நெறியாளரான கணவரும்அவர்களுள் சிலராவர். சபையில் நிரம்பிய கூட்டம். அட்டகாசமான விளம்பர அறிவிப்புகளுடன் ரவி தமிழ்வாணன், வியாபார உத்திகளைப் பாவித்துக் கொண்டிருந்தார்! ஒருநூலின் வெளியீட்டின்போது, நூலாசிரியரின் வருங்கால மனைவியையும் மேடைக்கு வருமாறு ஒலிபெருக்கியில் அழைத்தார்; அவ்வாறே பெற்றோர் நண்பர்களையும்....! அவரது தொடர்ந்த ‘அட்டகாசங்கள்’ என் பொறுமையைச் சோதிக்கவே எரிச்சலுடன் எழுந்து, புத்தகத் திருவிழா நடைபெறும் பந்தலுள் சென்றுவிட்டேன்!

 

 இ). சில நாள்களின் பின்னர், முக்கிய விமர்சகரும் கவிஞரும் சிறுகதையாளருமான சி. மோகனின், ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்னும் நாவலின் வெளியீடு சிற்றரங்கத்தில் நடைபெற்றது. 1982 ஆம் ஆண்டிலிருந்து மோகனுடன் பழக்கமிருந்தது;

எனவே விருப்பத்துடன் சென்றேன். கூட்டத்தில் சாம்ராஜ், லீனா மணிமேகலை, தமிழச்சி

தங்கபாண்டியன் முதலியோர் பேசினர். இராமானுஜம் என்ற உண்மையான ஓர் ஓவியக் கலைஞனைப் பற்றியது இந்த நாவல். எல்லோருமே நாவலைச் சிறப்பானதென்று பாராட்டினர். எனினும், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சே என்னைக் கவர்ந்தது; இவர் ஆங்கிலப்

பேராசிரியருமாவார்! பலரும் சூழ்ந்துகொண்டிருந்ததில் மோகனுடன் அதிகம் கதைக்க முடியவில்லை.

 

 ஈ). 17.01.2014 இல், காலச்சுவடு ஒழுங்குசெய்த நூல் வெளியீட்டு நிகழ்வு சிற்றரங்கத்தில் நடைபெற்றது. சிலம்பு நா.செல்வராசுவின் ‘கண்ணகி தொன்மம்’, ‘ஸ்ரீதரன் கதைகள்’, நாகரத்தினம் கிருஷ்ணா மொழியாக்கம் செய்த ‘லெ கிளேஸியோ’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. முறையே க.ப.அறவாணன், பி.ஏ. கிருஷ்ணன், க.பஞ்சாங்கம் ஆகியோர் நூல்களை வெளியிட்டுப் பேசினர். தமிழியல் வெளியீடாக வந்துள்ள ‘ஸ்ரீதரன் கதைகள்’ மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பிந்திய மூன்று கதைகள் மிகமுக்கியமானவை என்றும் பி.ஏ. கிருஷ்ணன் தெரிவித்தார்.

 

1978619_237596069775570_215747598_a.jpg

 

உ). 18.01.2014 இல், அதே இடத்தில், காலச்சுவடு வெளியீடுகளான- கீதா சுகுமாரனின் மொழியாக்கமான ‘தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி’, செந்தியின் ‘தனித்தலையும் செம்போத்து’, அனாரின் ‘பெருங்கடல் போடுகிறேன்’, க.வை.பழனிச்சாமியின் ‘காற்றில் கரையும் கணினி’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. முறையே அனார், சுகுமாரன், இந்திரன்,  க.மோகனரங்கன் ஆகியோர் நூல்களை வெளியிட்டுப் பேசினர். “.... அனாரின் பல கவிதைகள் நிறத்தைப் பற்றியவை. ஒரு metaphor இன்மேல் இன்னொரு metaphor வைக்கப்படுகிறது. இது சிறப்பு. ‘நிறங்களை அழுபவள்’ மிக முக்கிய கவிதை. ‘மாபெரும் உணவு மேசை’ புதுமையான மொழி வெளிப்பாடு ....” என இந்திரன்தெரிவித்தார்.

 

2. கவிதை அரங்குகள்

 

  அ). வெளி அரங்கில் 18.01.2014 இல் கவிதை அரங்கு இடம்பெற்றது. கலாப்பிரியா, கல்யாண்ஜி, சாம்ராஜ், சுகிர்தராணி, சே.பிருந்தா, அய்யப்ப மாதவன், கவின்மலர்  ஆகிய தமிழகக் கவிஞர்களுடன்- ஈழத்தைச் சேர்ந்தஈழவாணி, நளாயினி தாமரைச்செல்வன், தமிழ்நதி ஆகியோர் கவிதை வாசித்தனர். எட்டுக் கவிஞர்களின் கவிதை வாசிப்பையே கேட்டேன்; பலரின் கவிதைகள் வெறும் வசனங்களாக இருந்தன; (புதுக்கவிதைக்காரரின்

வழமையான!) வாசிப்பு முறையில், உணர்வு வெளிப்படவில்லை. இவ்விடத்தில், “.... நவீனத்

தமிழ்க் கவிதை அல்லது புதுக்கவிதை உரத்த குரல் வாசிப்புக்குப்  பொருத்தமானதல்ல. .... பெரும்பாலும் உரைநடை சார்ந்து எழுதப்படும்  புதுக்கவிதைகள் மௌன வாசிப்புக்குப் பொருந்துபவையே தவிர மேடைகளில் வாசிக்கப் பொருத்தமற்றவை” என்ற கவிஞர் சுகுமாரனின் வரிகளையும்  இணைத்துப் பார்க்கலாம்! ஆயினும் கல்யாண்ஜி, தமிழ்நதி, நளாயினி தாமரைச்செல்வன் ஆகியோரின் கவிதைகளும் வாசிப்பு முறையும்

வித்தியாசமாயிருந்தன!

 

1504039_237596666442177_941052800_a.jpg

 

ஆ). இதே அரங்கில், 19.01.2014  அன்று, ‘கடவு’ அமைப்பும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து, தென்மொழிக் கவிஞர்களின் கவிதை வாசிப்பு நிகழ்வை நடத்தின. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிக் கவிஞர்கள் கவிதை வாசித்தனர்; என். டி. ராஜ்குமார் ( தமிழ்), அனிதா தம்பி (மலையாளம்), விமலா மோர்த்தலா (தெலுங்கு), மம்தா சாகர் (கன்னடம்), சேரன் (தமிழ்) ஆகியோரே அக்கவிஞர்கள். பிறமொழிக் கவிதைகளின்  தமிழ்

மொழியாக்கங்களும் வாசிக்கப்பட்டன. பிறமொழிக் கவிதைகளை முறையே சுகுமாரனும் கௌரி கிருபானந்தனும் பாவண்ணனும் மொழியாக்கம் செய்தனர்; மலையாளக் கவிதையின் மொழியாக்கத்தை சுகுமாரனும், ஏனையவற்றை சுகிர்தராணியும் வாசித்தனர். கவிதை வாசிப்பு நிகழ்வு ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது! ராஜ்குமாரினதும் சேரனதும் தமிழ்க் கவிதை வாசிப்புகள்  உயிர்த்துடிப்புடன் அமைந்து நல்ல வரவேற்பைப் பெற்றன. அதுபோல், மேடையின் பல பக்கங்களிலும் நடந்தபடி மம்தா சாகர் தனது கவிதைகளை வாசித்தமையும், சுகிர்தராணி அவரது கவிதையின் மொழியாக்கத்தை வாசித்தபோது – தனது  கன்னட மூலக் கவிதையை மெல்லிய குரலில் வாசித்தபடி மேடையைச் சுற்றி வந்தமையும், அருமையான நிகழ்த்துகலை அனுபவத்தைத்  தந்தன!

 

1601466_237597643108746_558051906_a.jpg

 

3. வேறு நிகழ்வுகள்

 

   அ). பொங்கல் நாளையொட்டியதாக ‘தமிழர் திருவிழா’ நிகழ்வுகள், இராயப்பேட்டை வை. டபிள்யு. சி.ஏ. மைதானத்தில் மூன்று நாள்கள் நடைபெற்றன. புத்தகத் திருவிழாவில் சந்தித்த

ஈழத்து  நண்பர்கள் அ. இரவி, விஜயரட்ணம், சோதிலிங்கம் ஆகியோர் முதல் நாள் தாங்கள் அங்கு சென்றதையும் நல்ல நிகழ்ச்சிகள் என்பதையும் கூறி, இன்று தங்களுடன் அங்கு வருமாறும் கேட்டனர்; சிதம்பரநாதனும் பத்மினியும் அவர்களுடன் நின்றனர். நானும் சென்றேன். நாட்டுப் பாடல்களும், கிராமிய  நடனங்களும், தப்பாட்டம் போன்றவையும் நன்றாகவிருந்தன; தி.மு.கவுக்கான பிரச்சாரமும் அடிக்கடி அந்த மேடையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதே வளாகத்தில் தனியாக, தோற்பாவைக் கூத்தும் நடைபெற்றது; கொஞ்சநேரம் அதனையும் பார்த்து இரசித்தேன்!

 

 

    ஆ). 24 ஆம் திகதிய தினத்தந்தி நாளேட்டில், ‘முத்தமிழ்ப்பேரவையின் 36ஆம் ஆண்டு இசை விழா’ ஆரம்ப நிகழ்வு பற்றிய செய்தியைக் கண்டேன்; அடையாறிலுள்ள நாதஸ்வர வித்துவான் ரி. என். ராஜரத்தினம்பிள்ளை நினைவரங்கத்தில், மு.கருணாநிதி தலைமையில் இரவு அது நடைபெறுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. நானிருக்குமிடத்திலிருந்து

வெகு தொலைவில் அவ்வரங்கம்  இருந்தது;  எனினும் தமிழிசையில் ஆர்வம் உள்ளவனாதலால், எப்படியும் போய்ப் பார்ப்பதென முடிவெடுத்து இடத்தை விசாரித்துச் சென்றேன். நான் சென்றபோது நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு இசைக் கலைஞர்கள் பலர் கெளரவம் செய்யப்பட்டனர்; தமிழிசையைப் பரப்ப முயன்றவர்கள் எதிர்கொண்ட சில சவால்கள் பற்றிய விபரங்களும் தெரிவிக்கப்பட்டன; தி.மு.கவுக்குச் சார்பான கருத்துகளும் சொல்லப்பட்டன. மேடையில் மு.கருணாநிதியுடன், கௌரவிக்கப்பட்ட கலைஞர்களும் அமர்ந்திருந்தனர்; பட்டம்மாளின் பேர்த்தியும்  கர்நாடக இசைக்கலைஞருமான நித்தியஸ்ரீயும் கௌரவம் பெற்ற ஒருவர். அன்று இசை நிகழ்வெதுவும் நடைபெறவில்லை; அதனால்  ஏமாற்றம் அடைந்தேன்! மண்டபத்தில் குறைந்த அளவு

கூட்டமே இருந்தது. அரங்கத்தின் வெளியே முன்புறச் சுவரில், முக்கியமான இசைக் கலைஞர்

பலரின் பெரிய அளவு உருவப் படங்கள் வைக்கப் பட்டிருந்தமை மகிழ்வை அளித்தது!

 

இ). ‘தாயகம் கடந்த தமிழ் கருத்தரங்கு

 

10173759_237598036442040_774789550_a.jpg

 

சென்னைப் பயணம் பற்றிய தகவலை எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்துக்கு மின்னஞ்சலில்

அறிவித்தபோது, தமிழ்ப் பண்பாட்டு மையம் ஒழுங்குசெய்து  கோவையில் நடைபெற விருக்கிற, ‘தாயகம் கடந்த தமிழ்’ அனைத்துலகக் கருத்தரங்கு பற்றிய தகவலைத் தந்து, நான் பேராளராகப் பதிவுசெய்வதற்குரிய தொடர்புஇணைய முகவரியையும் அனுப்பிவைத்தார். கருத்தரங்கின் நிகழ்ச்சிநிரலைப் பார்த்தபோது சேரன், எஸ். பொ., அ. முத்துலிங்கம், அனார் ஆகிய ஈழத்தவர் பெயர்களைக் கண்டேன்; கண்பார்வை இழந்தவராக முதுமை நிலையிலுள்ள கோவை ஞானியைச் சந்திக்கும் விருப்பும் இருந்தது. எனவே கோவை செல்லத் தீர்மானித்து, பேராளராகப் பதிவுசெய்துகொண்டேன்.சென்னையில் நின்றபோது தொடர்புகொண்ட செயப்பிரகாசம் அவர்கள், 20 ஆம் திகதி காலைசென்று 23ஆம் திகதி காலை திரும்புவதற்குரிய சென்னை – கோவை தொடருந்துப் பயணச்சீட்டைத் தனது செலவில் பதிவுசெய்து தந்தார்; கோவையில் தங்குமிடத்தை கருத்தரங்க அமைப்பாளருள்ஒருவரான கவிஞர் சேரன் ஒழுங்குசெய்தார்.

 

    20 ஆம் திகதி மாலை தொடக்க நிகழ்வு, கலை நிகழ்ச்சிகளும் கருத்துரைகளுமாக நடைபெற்றது. தொடர்ந்து இரண்டு நாள்களிலும் ‘தாயகம் கடந்த தமிழ் ; ஓர் அறிமுகம்’, ‘தாயகம் பெயர்தல்: வலியும் வாழ்வும்’, ‘புதிய சிறகுகள்’, ‘தொழில்நுட்பம் தரும் வாய்ப்புகள்’,’தமிழ்கூறும் ஊடக உலகம்’, 'மொழிபெயர்ப்பு : வெளி உலகின் வாயில்’, ‘தாயகத்திற்கப்பால் தமிழ்க் கல்வி’ ஆகிய தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன;

பேராளர்களின் கேள்விகளுக்கு விளக்கங்களும் கொடுக்கப்பட்டன. கருத்தரங்குகளில்

திருத்தமான தமிழில் கட்டுரை படித்தும் கேள்விகளுக்கு விளக்கமும் அளித்த,  ஜேர்மனியைச் சேர்ந்த உல்ரிக்கே நிக்கொலஸ் மற்றும் சீனப் பெண்மணியான கலைமகள் இருவரும், கூடுதல் கவனத்தையும் மதிப்பையும் மண்டபத்தில் இருந்தோரிடம் பெற்றனர்! முடிவு நிகழ்ச்சியின்போது, இருநாள் நிகழ்வுகளைப் பற்றிய மதிப்பீட்டுக் குறிப்பை ஐந்து நிமிடங்களுக்குள் தெரிவிக்கும் வாய்ப்பு, இருவருக்கு வழங்கப்பட்டது; அந்த இருவரில் ஒருவராக நானும் கருத்துரைத்தேன்!   

 

10176142_237598229775354_505086191_a.jpg

 

தங்கியிருந்த ஹொட்டேலிலும் ( The Hotel Residency) கருத்தரங்க மண்டபத்திலும் சிற்பி எல்.

முருகேசன், கவிஞர் சிற்பி, முனைவர் ரெ. கார்த்திகேசு, சீ.ஆர். ரவீந்திரன்,

எஸ்.பொ., இளைய அப்துல்லா, கோவை ஞானி, மாத்ருபூமி உதவி ஆசிரியர் விஜயகுமார்,

புவியரசு, பீக்கிங் வானொலியின் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவில் வேலை பார்க்கும்

கலைமகள், இலக்கியா, ஈஸ்வரி ஆகிய தமிழ் பேசும் சீனப்பெண்கள் எனப் பலருடன் கொஞ்சநேரம் உரையாட முடிந்தது; இந்திரன், மாலன், சேரன், அனார் ஆகியோரிடம் கூடுதலாக உரையாட வாய்ப்புக் கிடைத்தது. கலைமகளுக்கு, கைவசமிருந்த ஜீவநதி இதழொன்றையும் கொடுத்தேன்.

 

                                                                                                            (தொடரும்)

====   அ.யேசுராசா ==  முகநூல் ==  Athanas Jesurasa

Link to comment
Share on other sites

புத்தகத் திருவிழாவும் தமிழகப் பயணமும்! ( பகுதி - 2 )
 

10156136_237950013073509_164639370_a.jpg

 

4. சந்தித்த எழுத்தாளர் – இலக்கியத் துறை

    சார்ந்தோர்

 

 

  புத்தகத் திருவிழாவிலுள்ள விற்பனை அரங்குகளிலும், ஏனைய நிகழ்வுகளிலும் பலரைச் சந்திக்க முடிந்தபோதும், ஆறுதலாக உரையாடும் வாய்ப்பு குறைவாகவே இருந்தது; சூழலும் தேவைகளும் கதைக்கும் நேரத்தைக் குறுக்கிவிட்டன. நீண்டகாலத் தொடர்புள்ள சி.மோகன், அசோகமித்திரன், திலீப்குமார், வசந்தகுமார், கண்ணன், வேதாந்தம், அம்ஷன்குமார், நிழல் திருநாவுக்கரசு, சேரன், அ .இரவி ஆகியாரை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியே! ஈழத்தைச் சேர்ந்த உமா வரதராஜன், மீராபாரதி, தமிழ்நதி, ஆழியாள், ஊடறு ரஞ்சி, நளாயினி தாமரைச்செல்வன், தீபச்செல்வன், தெ. மதுசூதனன், அந்தனி ஜீவா, த.துரைசிங்கம் முதலியோரையும் அங்கு சந்திக்க முடிந்தது. சிலருடன் மட்டுமே ஆறுதலாக அமர்ந்து உரையாட வாய்ப்புக் கிட்டியது.

 

 

   அ). சா.கந்தசாமி

 

10177966_237950359740141_2070853243_a.jp

 

ஒரு நாள், தெருவிலிருந்து  புத்தகத் திருவிழாவின் வெளி வாயிலைக் கடந்து உட்செல்கையில், சிறுதூரத்தில் முன்னால் செல்பவர் எழுத்தாளர் சா. கந்தசாமி என அடையாளங் கண்டேன். ‘சாயாவனம்’ என்ற நாவலின்மூலம் பெயர்பெற்றவர் அவர்; பின்னர் வேறு நூலுக்காகச் சாகித்திய அக்கடமிப் பரிசையும் பெற்றார். விரைவாக நடந்து அவரருகில் சென்று, “ நான் யேசுராசா.... யாழ்ப்பாணம்” என்று சொல்லி, 1982 இல் அவரது வீட்டில் காலை உணவு அருந்தியதையும் தெரிவித்தேன். “ஓ.... நினைவிருக்கு” என்றபடி ”எப்ப வந்தீங்க....?” என விசாரித்துக் கதைத்தார். நான் எனது நூல்வெளியீடு நடந்தது பற்றிய விபரத்தைத் தெரிவித்தேன். ஒருதடவை வீட்டுக்கு வரும்படி கூறி தொலைபேசி இலக்கத்தையும், வழி விபரங்களையும் குறித்துத் தந்தார். ஒருநாள்அவருக்கு அறிவித்தபின்னர், பெசண்ட் நகரில் வசிக்கும் எனக்குத் தெரிந்த -யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  ஒரு குடும்பத்தினரைச் சந்தித்துவிட்டு, நண்பரின் மகனுடன் மோட்டார் சைக்கிளில் கந்தசாமியின் வீட்டுக்குச் சென்றேன். அங்கு சூடான பஜ்ஜியைச் சாப்பிட்டு, “காப்பி”யையும் குடித்தபடி உரையாடினோம். அவரது சில

கருத்துக்கள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் எழுப்பின! தியடோர் பாஸ்கரனின்

சினிமா பற்றிய எழுத்துக்களைச் சாதாரணமானவை என்று சொன்னார். எஸ்.பொவின்  ‘வரலாற்றில் வாழ்தல்’ நூலைக் கோவை ஞானி மிகச் சிறப்பான நூலாக அடையாளங் காட்டியிருப்பதை நான் சொன்னபோது, அந்த நூல் முக்கியமானதல்ல என்றும், கோவை ஞானி மேம்போக்காகக் கருத்துக் கூறுபவர் என்றும் சொன்னார். அதைப்போல, நான் விரும்பும் மலையாள எழுத்தாளரான எம்.டி. வாசுதேவன் நாயரின் நூல்களைப் பற்றிச் சொன்னபோதும், மலையாளத்தில் வைக்கம் முகம்மது பஷீரை மட்டும்தான் குறிப்பிடலாம் என்றும் சொன்னார்!

 

 

    ஆ). கி. அ. சச்சிதானந்தம்

 

 

 

10168134_237950549740122_1294291042_a.jp

 

      1982 ஆம் ஆண்டு,

நாகர்கோவிலில் சுந்தர ராமசாமி வீட்டில் முதலில் சந்தித்தபோதே பிரமிப்பைத் தந்தவர்

சச்சிதானந்தம்; மீசைக்காரப் பூச்சியிலிருந்து இமயமலையின் பௌத்த துறவிகள்,

தத்துவங்கள் எனப் பலவற்றை அன்று கதைத்தார்! அவரது பயணங்களும் பரந்த வாசிப்பும்

அதன் அடித்தளம்! நகைச்சுவை உணர்வுடன் உரையாடுவார். இம்முறை சென்னையில், வடக்குக் கோபாலபுரத்திலுள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். ஹிந்து ஆங்கிலப் பத்திரிகை அண்மையில் ஒழுங்குசெய்த இலக்கிய விழாவில், வாழ்நாள் பங்களிப்புக்காக ஐம்பதினாயிரம்

ரூபா பணமும், விருதும் இவருக்கு வழங்கப்பட்டன. சிறுகதைகள், திறனாய்வுகள், மொழியாக்கங்கள், தொகுப்புகள், பதிப்புகள் என இவரது நூல்கள் பல வெளிவந்துள்ளன. மொழியாக்கம்செய்து நூல் வடிவம் பெறாத அரிய பிரதிகள் பலவற்றையும் வைத்திருக்கிறார். நூல் வடிவம் பெறாமல் இவை நீண்டகாலம் தேங்கிக் கிடப்பதைப் பற்றி இப்போதும் அலட்டிக் கொள்ளாமலே  இருக்கிறார். “எனது பணி முடிந்தது; மற்றையோர்பற்றி

ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றார். குட்டி இளவரசன் நூலை ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்திருக்கிறார் (பிரெஞ்சு மூலத்திலிருந்து செய்யப்பட்ட மொழியாக்கம், ஏற்கெனவே க்ரியா வெளியீடாக வந்துள்ளது); இரண்டு ஆண்டுகளின் முன்னர் சென்னையில் இவரைச் சந்தித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர், நூலாக வெளியிடுவதாகக் கூறி ஒரு பிரதியைப் பெற்றுக் கொண்டு சென்றதாகவும்குறிப்பிட்டார். அவ்வாறு நூலெதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பதை, அவருக்குத் தெரிவித்தேன்!

 

 

    இ). க்ரியா ராமகிருஷ்ணன்

 

 

    க்ரியா தமிழ் அகராதி தமிழ் உலகில் புகழ் பெற்றது; பல பதிப்புகளையும் கண்டது. நவீன இலக்கிய நூல்களை நவீன வடிவமைப்புடன் -  திருத்தமான பதிப்பாக,

எண்பதுகளிலேயே வெளியிடத் தொடங்கிய முன்னோடிப் பதிப்பகம், க்ரியா பதிப்பகம் ஆகும்.

அவ்வாறே உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு, ஜெர்மன் மொழிப் படைப்புகளை நேரடி மொழியாக்கமாக  -  தகுதியானவர்களைக் கொண்டு ஆக்கியும் வெளியிட்டு வருகிறது. இப்பதிப்பகத்தின் இயக்குசக்தியாக இருப்பவர்தான் ராமகிருஷ்ணன். 1982 இல் முதலில்

சந்தித்தேன்; 1984 இல், ‘அறியப்படாதவர்கள் நினைவாக....!’ என்ற எனது கவிதைத் தொகுதியையும், எம்.ஏ. நுஃமானும் நானும் இணைந்து தொகுத்த, ‘பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்’ நூலையும் ஏற்கெனவே வெளியிட்டவர். நீண்ட காலத்தின் பின்னர் இம்முறை அவரைச் சந்தித்தேன். திருவான்மியூரிலுள்ள அலுவலகத்திற்குச் சென்று கண்டேன்; கலைமுகம் 50ஆவது சிறப்பிதழையும் பிந்திய மூன்று இதழ்களையும், எனது ‘பதிவுகள்’ நூலையும் கொடுத்தேன். ஆர்வமாக அவற்றைப் புரட்டிப் பார்த்தார். நீண்ட காலத்தின் பின் சந்திப்பதைக் குறித்து உரையாடிவிட்டு, தனது வீட்டுக்குக் கூட்டிச்சென்றார்.

அங்கு சுவையான மரக்கறிச் சாப்பாட்டை இரசித்துச் சாப்பிட்டேன். புதிய சொற்களையும்

விளக்கங்களையும்  சேர்த்து அகராதியை மேம்படுத்துவது பற்றிப் பேசினார். சொல்வங்கிக்கு யாரும் தரவுகளை அனுப்பலா மெனவும், அதுபற்றிய செயல்முறையையும் ஆர்வத்துடன் செய்து காட்டினார். புதிய நூல்களின் செம்மையான பதிப்புக்குரிய

உழைப்பின் முக்கியத்தையும் பேச்சில் உணர்த்தினார். பார்வையற்றோருக்கான பிரெய்லி

முறையிலான க்ரியா அகராதியையும், குட்டி இளவரசன் நூலின் பிரெய்லி பதிப்பையும்

காட்டினார்; மகிழ்ச்சியாயிருந்தது. மேலும், எனக்குத் தேவையான நூல்களை க்ரியா

அரங்கில் பெற்றுக்கொள்ளும்படியும், தான் அங்குள்ள அலுவலருக்குத் தெரிவிப்பதாயும்

சொன்னார். காஃவ்காவின் ‘விசாரணை’ நாவலின் புதிய பிரதியைக் கட்டாயம் பெற்றுக்கொள்ளுமாறு சொன்னார். என்னிடம் முதலாம் பதிப்பு இருந்தது; ஆனால், மொழியாக்கத்தில் அநேக திருத்தங்கள் செய்யப்பட்டமையைக் குறிப்பிட்டே அதனை வலியுறுத்தினார். அவரது அர்ப்பணிப்பு நிறைந்த முயற்சிகளுக்கும் அன்புக்கும் நன்றி தெரிவித்தேன்; அவர் கூறியதற்கிணங்க மறுநாள், க்ரியா அரங்கில் முக்கியமான நூல்களை- குறிப்பாக மொழியாக்க நூல்களை – பெற்றுக்கொண்டேன்!

 

 

    ஈ). கோவை ஞானி

 

 

 

1797510_237950713073439_955001853_a.jpg

 

1982 தைமாதம் சென்னையிலும், பங்குனியில் கோவையிலும் பின்னர்  1984 இல் கோவையிலும் அவரைச் சந்தித்து உரையாடியுள்ளேன்; அப்போது அவருக்குக் கண்பார்வை இருந்தது. 1998இல் திருநெல்வேலியில் ஒரு லொட்ஜில் சந்தித்தபோது, அவருக்குப பார்வை இல்லாமலாகிவிட்டது! அன்று நள்ளிரவு வரை ஈழத்து அரசியல் பற்றியும் இலக்கியம் பற்றியும் ஆர்வத்துடன் உரையாடினார்! நீண்ட காலத்துக்குப் பிறகு, தாயகம் கடந்த தமிழ் கருத்தரங்கில், 21ஆம் திகதி மதிய உணவு வேளை அவரருகில் சென்று, அவரைத் தொட்டபடி “நான் யேசுராசா....” என்று சொன்னபோது, “யேசுராசாவா....!” என்று வியப்புடன் கேட்டு கையைப் பற்றியபடி இருந்தார்; பின்னர், “இந்தியாவும் தமிழக அரசும் ஈழத் தமிழருக்குத் துரோகமிழைத்துவிட்டன” என்று சொன்னார். அன்று மாலை அவரது வீட்டுக்கு வருவதாகச் சொல்லி, சேரனும் நானும் - எஸ்.பொவும் மனைவியுமாக அன்று இரவு ஞானியின் வீட்டுக்குச் சென்றோம். வழமைபோல் அரசியல் இலக்கியம் பற்றிய கதைகள். பின்னர் நூல்கள் உள்ள அவரது அறைக்குக் கூட்டிச் சென்றார்; தனது உதவியாளரான பெண்ணை அழைத்து, தனது நூல்கள் பலவற்றை எடுத்து எமக்குக் கொடுக்குமாறு சொன்னார். சிலவற்றைப் பெற்றுக்கொண்டோம். அவரது ‘நிகழ்’ சிற்றிதழ்த் தொகுப்பையும் தந்தார். அவர் தனது முக்கிய நூற்சேகரிப்பு முழுவதையும் யாழ்ப்பாணப் பொது நூலகத்துக்கு வழங்க விரும்புவதாகவும், அவற்றை அங்கு கொண்டுசேர்க்கும் பொறுப்பை நூலகம் ஏற்கவேண்டுமெனவும் தெரிவித்து அறிவித்ததாகவும், அங்கிருந்து பதில் ஏதும் வரவில்லை எனவும் அவரது உதவியாளர் சொன்னார். யாழ்ப்பாணம் சென்றதும் பிரதம நூலகரிடம் இதுபற்றித் தெரிவிப்பதாகச் சொன்னேன்; அதுபோல், இங்கு வந்தபின்னர் நூலகரிடம் கதைத்து, ஞானியுடன் தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் முகவரியையும் கொடுத்துள்ளேன்!

 

 

    உ). மாலதி மைத்ரி கேட்டுக்கொண்டபடி, தை 26 ஆம் திகதி காலை, பேருந்தில்  பாண்டிச்சேரி புறப்பட்டேன்; பா. செயப்பிரகாசத்துக்கும் தெரிவித்தேன். அவர், பாண்டிச்சேரியில் நடிகர் சிவாஜி சிலையடியில் இறங்குமாறு அறிவுறுத்தினார். 

அங்கு இறங்கியபோது அவர் என்னைச் சந்தித்து, பக்கத்திலுள்ள – பாரதி பாடிய

குயில் தோப்புக்குக் கூட்டிச்சென்றார்; அது சரியாகப் பேணப்படாமல் உருமாறி

இருந்தது! பின்னர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்துக்கும், பாரதி வாழ்ந்த

இல்லத்துக்கும் சென்றோம். ஆனால் அன்று குடியரசு தினமென்பதால், இரண்டு இடங்களும்

பூட்டியபடி இருந்தன; அவற்றின் உள்ளே சென்று பார்க்க முடியாமல் போனமை  ஏமாற்றமாகிவிட்டது. பின்னர், மாலதி மைத்ரியின் வீட்டிற்குச் சென்றோம்.

மீனவர் நலவுரிமைக்காக உழைக்கும் கணவன் மனைவி ஆகிய இருவரை அங்கு சந்திக்க நேர்ந்தது. தமிழக மீனவர்களால் ஈழத்து மீனவர்களுக்கு நேரும் அவலங்களை விளக்கினேன். தமிழகக் கடல் வளம் அழிக்கப்பட்டது போன்று எமது கடல் வளம் மிக மோசமாகப் பாதிக்கப் படுவதையும், ஒவ்வொருமுறையும் கச்சதீவில் மீன்பிடிக்கும்போதுதான் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள் எனத் தமிழக ஊடகங்களும் தலைவர்களும் சொல்வது பொய் என்பதையும், தமிழக மீனவர்கள் எமது இடங்களின் கரைகளுக்கு அருகிலேயே வருகிறார்கள் என்பதையும்  விளக்கினேன்.

 

 

பின்னர் உணவருந்தி செயப்பிரகாசமும் நானும் மாலதி மைத்ரியும் கதைத்துக் கொண்டிருந்தோம்; இலக்கிய அரசியல், ஈழத்து நிலைமைகள் பற்றியதாக அது இருந்தது. மாலை அங்கிருந்து சென்னை புறப்பட்டேன்; இரவு

எனது பொருள்களை ஒழுங்குபடுத்தி, மறுநாள் காலை விமானத்தில் இலங்கை திரும்பினேன்!

அன்றிரவே கொழும்பிலிருந்து யாழ்ப்பாண மெயில் வண்டியில் பயணம்செய்து, மறுநாள் காலை கிளிநொச்சி வந்து, பேருந்தில் யாழ்ப்பாணம் வந்து வீடு சேர்ந்தேன்! 

 

1978613_237951303073380_2055652609_a.jpg

 

    அண்மையில் தொலைபேசியில் கதைத்த ஒரு நண்பர், “தமிழகப் பயணம் பயனளித்ததா?” எனக் கேட்டார்; “ஓம்!” எனச் சொன்னேன். புத்தகத் திருவிழாவில் ‘புத்தகக் கடல்’ இருந்தது;

இலட்சக்கணக்கான மக்கள் வந்து புத்தகங்களைப் பார்ப்பதும் விருப்பமானவற்றை

வாங்குவதுமாக இருந்தனர். ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழா, சென்னைவாசிகளின் கலாசார வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டது! ஆரம்பத்தில் பத்துவீதமாகத் தமிழ்ப் புத்தகங்களும் மிகுதி ஆங்கிலப் புத்தகங்களுமாக இருந்த நிலைமை, இன்றோ தலைகீழாகிவிட்டது! புதிய

புதிய பதிப்பகங்கள் தோன்றுகின்றன; முக்கியமான படைப்புகள் அழகிய நவீன

வடிவமைப்புகளுடன் தமிழில் வருகின்றன; முக்கியமான மொழியாக்கங்களும் அவ்வாறே. நாமெல்லாம் அவாவுறுகிற புத்தகக் கலாசாரம் என்பது வளர்கிறது. இத்தகைய அரிய நிகழ்வில் முதல்முறையாகப்  பங்குபற்றியமையும், எனது நூலொன்று இவ்விழாவில் வெளிவர நான் நேரில் கலந்துகொண்டமையும், மகிழ்வைத் தருகின்றன. தொண்ணூறுகளில் ஒரு நண்பர் இரவல்வாங்கித் தொலைத்துவிட்ட (க.நா.சு. மொழியாக்கம் செய்த) ‘விலங்குப் பண்ணை’ நூலை நீண்ட காலத்தின் பின்னர், இங்குதான் வாங்கமுடிந்தது; ‘காட்சிப் பிழை’ இதழில் விடுபட்ட இதழ்கள் பலவும், ‘மந்திரச் சிமிழ்’ இதழ்களும் கிடைத்தன. இவ்வாறே, எனது ‘முதல்  விருப்பமான’  திரைப்படம் பற்றிய நூல்கள் பலவற்றையும் பெற

முடிந்தது! ராகுல்ஜி எழுதிய ‘ஊர்சுற்றிப் புராணம் நூலை நீண்ட காலத்தின் முன்பே  இரசித்துப்படித்துவிட்ட  எனக்கு, அங்குமிங்குமான பயணங்கள் எப்போதும் விருப்பமானவையே; அதனால்தான், எழுபதுகளிலிருந்தே ‘பயணி’ என்னும் புனைபெயரையும் வைத்துள்ளேன்! சென்னையிலிருந்து கோவைக்கும் கோவையிலிருந்து சென்னைக்கும்  பகல்வேளையில் செய்த நீண்ட தொடருந்துப் பயணங்கள், வித்தியாசமான அனுபவங்களுடன் அருமையாகவிருந்தன!  நான் மதிப்பு வைத்திருக்கும் கோவை ஞானி, க்ரியா ராமகிருஷ்ணன், கி. அ. சச்சிதானந்தம், பா.செயப்பிரகாசம், அசோகமித்திரன்  முதலியோரைச் சந்தித்தமையும் : சேரன், அ. இரவி முதலிய ஈழத்து நண்பர்களை மிக நீண்ட காலத்தின் பின் சந்தித்தமையும் எல்லாம்.... எனது பயணத்துக்குப் ‘பெறுமதியான அர்த்தத்தை’ வழங்கிக்கொண்டே  இருக்கின்றன! 

 

                                                                                                                       

                                                                                                                                14.03.2014.

 

                                                                       


 

 

                                                    

                                                                    ***

 

 


 

10155320_238071869727990_1047447720_a.jp

 

 

அ.யேசுராசா ==  முகநூல் ==  Athanas Jesurasa   ==  நன்றி: ஜீவநதி
                                                                                     சித்திரை - 2014

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (18) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதாக, பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி விதிமுறைகளை மீறி பயணிப்பதால் மாணவர்கள் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை போட்டி போட்டு அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் பயணிப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/299532
    • "சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்"     சிந்து சம வெளியில் சிறுவர்களின் வாழ்வைப் பற்றி எமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அங்கு கண்டு எடுக்கப்பட்டவைகளில் இருந்து நாம் சில தகவல்களை ஊகிக்கக் கூடியதாக உள்ளது. சுட்ட களி மண்ணில் செய்த பொம்மை வண்டி, பொம்மை மிருகம் போன்றவற்றுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என அறிகிறோம். உதாரணமாக, தலையை குலுக்கும் பொம்மை பசு, கயிறு ஒன்றில் வழுக்கி செல்லும் பொம்மை குரங்கு, சின்ன அணில் போன்றவற்றுடன், மழை வெயிலை தவிர்க்க கூடிய, சிறு கூரை அமைக்கப் பட்ட பொம்மை வண்டிலையும் தொல் பொருள் ஆய்வாளர்கள் அங்கு கண்டு எடுத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் மனித இனம் பொம்மைகளுடன் 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடத் தொடக்கிவிட்டது என்பதை காட்டுகிறது.   சிந்து சம வெளி நாகரிகத்தில் சிறுவர்கள் முற்றத்திலும், வீதியிலும் தட்டையான கூரையிலும் விளையாடி யிருக்கலாம். மேலும் இன்று எம் சிறுவர்கள் தொலைக் காட்சியில் மகிழ்ந்து நேரத்தை செலவழிப்பது போல இல்லாமல், அன்று இந்த சிறுவர்கள் எளிமையான விசில் [சீழ்க்கை] போன்ற ஒன்றில் மகிழ்ந்து திரிந்தார்கள். பண்டைய இந்த இந்தியர்களே விசிலை கண்டுபிடித்து அதைப்பற்றிய சிந்தனையை எமக்கு ஊட்டியவர்களாக அதிகமாக இருக்கலாம். சிந்து சம வெளி சிறுவர்கள் மெருகூட்டாத மண்ணால் [terracotta] செய்யப்பட்ட சக்கரத்தில் இழுக்கக்கூடிய பொம்மை மிருகம், கிலுகிலுப்பை [rattles], பறவை உருவம் கொண்ட சீழ்க்கை [விசில் / whistles] போன்ற வற்றுடனும் விளையாடி பொழுதை இன்பமாகக் கழித்துள்ளார்கள்.   மேலும் அங்கு ஒரு சிறுவன் சிறு தட்டு ஒன்றை கையில் ஏந்தி நிற்கும் களி மண் உருவம் கிடைத்துள்ளது. அதிகமாக இது ஒரு எறிந்து விரட்டும் [throw-and-chase game] விளையாட்டாக இருக்கலாம். சிந்து சம வெளி இளம் சிறுவர்கள் சிறிய நாளாந்த வீட்டு வேலைகளில் ஈடுபடும் அதேவேளையில், மூத்த பிள்ளைகளுக்கு வேட்டை, கட்டிட கலை, விவசாயம் போன்ற செயற் திறன்கள் போதிக்கப்பட்டன. அத்துடன் சிந்து சம வெளி முதிர்ந்த மக்கள் சூதாட்டத்திலும் பலகை [போர்ட்] விளையாட்டிலும் தங்களது ஓய்வு நேரத்தில் ஈடுபட்டார்கள். தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா பகுதியில், குறிப்பாக கலிபங்கன், லோதல், ரோபர், அலம்கிர் பூர், தேசல்பூர் [Kalibangan, Lothal, Ropar, Alamgirpur, Desalpur] மற்றும் இவையை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் மணற் கல்லாலும் மெருகூட்டாத மண்ணாலும் செய்த தாயக் கட்டைகளை [பகடைக் காய்களை] கண்டு பிடித்தார்கள். சில கி மு 3000 ஆண்டை சேர்ந்தவையாகும். இவை சூதாட்டத்திற்கு பாவிக்கப் பட்டன. இந்த கட்டைகளே அதிகமாக உலகின் மிகப் பழமையானதாகவும் இருக்கலாம். ஆகவே இன்று நாம் பாவிக்கும் தாயக்கட்டை போன்று ஆறு பக்கங்களையும் புள்ளிகளையும் கொண்ட ஒன்றை முதல் முதலில் பாவித்தவர்கள் இந்த சிந்து சம வெளி மக்களாகவே இருப்பார்கள். இந்த தாயக்கட்டைகள் பின்னர் மேற்கு பக்கமாக பாரசீகத்திற்கு பரவியதாக நம்பப்படுகிறது. தாயக்கட்டை பற்றிய உலகின் மிகப் பழமையான குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணலாம். இவை சிந்து சம வெளியை வென்ற பின் / கடந்த பின்  ஆரியர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது .   "தாயக்கட்டைகளுடன் என்றுமே விளை யாடாதே. உன்னுடைய வேளாண்மையை செய், அதன் செழிப்பில் மகிழ், அதற்கு மதிப்பு கொடு, உனது கால் நடைகளை நன்றாக பராமரி, உனது மனைவியுடன் திருப்திபடு, இது ஆண்டவன் அறிவுறுத்தல் "   என கி மு 1500–1100 ஆண்டு ரிக் வேதம் 10-34-13 கூறுகிறது.   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் பண்டைய தமிழக தகவல்களை தரும் ஒரு சுரங்கமாக இருப்பதுடன், அவை வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பலவற்றையும் பிரதி பலிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளுடன் அங்கு சிறுமிகள் அல்லது இளம் பெண்கள் விளையாடியதை தமிழ் சங்க பாடல், நற்றிணை குறிக்கிறது. அதே போல, பொம்மை வண்டிகள், மற்றும் கடற்கரையில் மணல் வீடு கட்டி சிறுவர்கள் விளையாடி யதை குறுந்தொகை எடுத்து கூறுகிறது. மேலும் சமய சம்பந்தமான நடனங்கள், புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன தாயக்கட்டைகளுடன் விளையாடுதல், வரிப்பந்து என அழைக்கப்படும் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய மகளிரின் வழக்கமாக இருந்தது. மாடி வீடுகளில் மேல் மாடத்தில் வரிப்பந்தாடியது பற்றிப் பெரும்பாணாந்றுப்படை   ‘‘பீலி மஞ்ஞையின் இயலிக் கால தமனிப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப் பந்தசைஇ’’   என எடுத்துரைக்கின்றது. மேலும் மரத்தின் கிளையில் பனை நாரில் [கயிற்றில்] கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்தல் பொதுவாக இளம் பெண்களின் பொழுது போக்காக இருந்தது. அப்போது பாடும் பாடல் ஊசல் வரியாகும். இதனைத் திருப்பொன்னூசல் என்று திருவாசகம் குறிப்பிடுகின்றது. தலைவன், தலைவியை ஊசலில் வைத்து ஆட்டியதை,   ‘‘பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க ஊக்காள்’’   என்று குறிஞ்சிக்கலி குறிப்பிடுகின்றது.   பண்டைய தமிழகத்தில் இளம் பெண்கள் ஒப்பீட்டு அளவில் கூடுதலான சுதந்திரத்துடனும் மகிழ்ச்சி யுடனும் தமது வாழ்வை அனுபவித்தார்கள். இந்த மணமாகாத இளம் பெண்கள் எப்படி விளையாடி இன்பமாக பொழுதை போக்கி கழித்தார்கள் என்பதை சங்க இலக்கியம் எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. எனினும் அவர்கள் மகிழ்ந்து விளையாடிய விளையாட்டு அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபட்டன. அவர்கள் களங்கமில்லாத, அப்பாவி பேதை பருவத்தில், தமது கூட்டாளிகளுடன் தமக்கு மிகவும் பிடித்த, மனகிழ்ச்சி ஊட்டும் பாவை விளையாட்டு விளை யாடினார்கள். அவர்கள் வண்டல் மணலால் அல்லது புல்லால் பாவை (பொம்மை) செய்து அதற்குப் [வண்டற் பாவைக்குப்] பூச்சூட்டி அல்லது பனிக் காலத்தில் கொட்டிக் கிடக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி பூந்தாதுகளைச் சேர்த்துப் பிடித்து பாவை செய்து விளையாடுவர். இதனை   'தாதின் செய்த தண் பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு என',   அதாவது மகரந்தம் முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சியையுடைய விளை யாட்டுப் பாவையானது அடுத்த நாள் காலை அதன் வண்ணம் மங்கிவிடும். ஆதலால் அழாதே” என்று கூறித் தோழியர் தலைவியைத் தேற்றினர். என்று குறுந்தொகை 48 குறிப்பிடுகிறது.   பெரும்பாலும் பெண்களின் பல பொழுது போக்கு ஐவகை நிலத்திலும் பொதுவாக இருந்தன, சங்கம் பாடல், ஐங்குறுநூறு 124 இல் தலைவியின் தோழி தலைவனிடம்   "நெய்தல் நிலத் தலைவனே! நான் உன்னிடம் உறவுக் கொண்டவளைப் பார்த்தேன். அந்த பூங்கொடியின் வண்டற் பாவையை அலை கொண்டு பெருங்க கடல் பறித்து சென்றதால் அவள் கடலை உலர்த்தி அதை இல்லாமல் அழிக்க, நுண்மணலை கோபத்துடன் அதனுள் எறிகிறாள்" என கூறுகிறாள்.   "கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே வண்டற் பாவை வெளவலின் நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே". [ஐங்குறுநூறு 124]   முத்து பதித்த தங்க வளையல்கள் அணிந்தவளே, காந்தள் பூப் போன்ற விரல்களை உடையவளே, அகப்பை போன்ற அழகான முன்கையை கொண்டவளே, நீ சிறு மட்பானையுடனும் வண்ண பாவையுடனும் விளையாடவா இங்கு வந்தாய்? கவர்ச்சி கூட்டும் உன் கால் கொலுசு ஓசை ஒலிக்க, பட்டுப் போன்ற உன் கூந்தல் தோளின் கிழே அவிழ்ந்து விழ, நீ நடந்து வர நான் கண்டேன். நீ என்னை கண்டும் காணாதவளாய் அலட்சியம் செய்து மௌனமாய் விலகிப் போகையில் நான் என்னையே இழந்தேன், என்னை கவனி என, தலைவன் தலைவியிடம் கலித்தொகை 59 இல் கெஞ்சி கேட்கிறான். இதில் குறிப்பிடப்பட்ட பாவை, பிற் காலத்தை சேர்ந்த மரத்தால் செய்யப்பட்ட, கண்ணை கவரும் வண்ண பாவையாக அதிகமாக இருக்கலாம்.   "தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடைத் தாமரை முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கைச் சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் விளையாட அரிப் பெய்த அழகு அமை புனை வினை ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி" [கலித்தொகை 59]   இதேபோல், சிறு பையன்கள் பொம்மை தேரை உருட்டி விளையாடினார்கள் என்பதை அகநானுறு 16 இலும், பட்டினப் பாலை 20-25 இலும் நாம் காண்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்தில் கடற்கரை சார்ந்த பாக்கங்களில் வாழ்கின்ற மகளிர் தங்கள் வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்காக நெல்லைப் பரப்பியிருந்தனர். அப்போது அந் நெல்லைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், ஒரு செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாள். ஆனால் அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்தது. அது, அவ்வழியே சிறுவர்கள் ஓட்டிச் சென்ற முக்கால் சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம். இதனை,   ‘அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின் நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும் கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும் முக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்”   என்ற பட்டினப் பாலை அடிகளால் (20-25) அறியலாம்.   பொம்மலாட்டம் இந்தியர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது பல ஆண்டுகளாக செய்திகளை மக்களிடையே பரப்பும் ஒரு ஊடகமாகவும் இருந்தது. எதற்கெடுத்தாலும் தலையாட்டும் பேர் வழிகளை, 'சும்மா. தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலையாட்டாதே' என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள்.   ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட மன்னர் சுயமாய் சிந்திக்காமல், ராணி சொன்னதற் கெல்லாம் தலை யாட்டிக் கொண்டே  இருந்தாராம். இதனால் வெறுத்துப் போன குடிமக்கள், ராஜாவை நூதன முறையில் கிண்டலடிக்க, தலையாட்டி பொம்மைகளைச் செய்து வீட்டுக்கு வீடு ஆட்டிவிட்டு தம் செய்தியை பரப்பினர் என்கின்றனர். இந்த பொம்மலாட்டம் சிந்து சம வெளியில் பிறந்து இப்ப மற்றைய பல நாடுகளிலும் காணப்படுகிறது. சிந்து சம வெளி அகழ்வில், கிமு2500 ஆண்டளவை சேர்ந்த பிரிக்கக்கூடிய தலையை கொண்ட பொம்மை ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு எடுத்துள்ளார்கள். இந்த தலைகளின் அசைவுகளை ஒரு நூலினால் கையாளக் கூடியதாக உள்ளது. இது பொம்ம லாட்டம் [puppetry] அங்கு இருந்தது என்பதற்கான சான்றாக உள்ளது. ஒரு குச்சியில் மேலும் கீழும் ஏறி இறங்கக் கூடியதாக கையாளக் கூடிய பொம்மை மிருகங்களும் வேறு அகழ்வு ஒன்றில் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது, இதை மேலும் உறுதிப் படுத்துகிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் கூட, குறள் 1020 இல் மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது என்கிறார். இதனை,   "நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று".   [குறள் 1020] என்ற அடிகளால் திருவள்ளுவர் கூறுகிறார்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • துபாய் வெள்ளத்துக்கு செயற்கை மழை திட்டம்தான் காரணமா? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன. துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார். ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும். மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பட மூலாதாரம்,ANNE WING படக்குறிப்பு,துபாயிலிருந்து உலகின் பலபகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமானச் சேவைகள் முடங்கின வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா? ஆம் என்கிறார்கள் நிபுணர்கள். துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது. துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. "வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு," என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம். பட மூலாதாரம்,REUTERS/ZAHEER KUNNATH படக்குறிப்பு,வெள்ளக்காடான துபாய் விமான நிலையம் துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா? இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது. எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். "இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார். உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. "நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்," என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா? செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும். விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும். இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர். ‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை. செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாய் மழை "மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்," என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார். மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். "இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை," என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ். பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார். "மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது," என்றார். அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology - NCM) நடத்தப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன' தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா? கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது. துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை. "அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை," என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார். "உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்," என்றார். இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது. https://www.bbc.com/tamil/articles/crgydzpy7vyo
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • உங்களைத் தவிர இங்கு யாருக்குமே விளக்கமில்லை உறவே! 74=52, இது யாருக்கு விளங்கும்😂?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.