Jump to content

Tesco PLC நிறுவனத்துடன் இணைந்து தமது உலகளாவிய பிரசன்னத்தை விஸ்தரிக்கும் MD


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
MdLogo.JPG
MD வர்த்தகநாமத்தின் கீழ் இயற்கை பழச்சாறுகள், ஜாம், சோஸ், கோர்டியல்கள் மற்றும் பிற தயாரிப்புகளை விநியோகித்து வரும் இலங்கையின் முதற்தர விநியோகஸ்தரும், ஏற்றுமதியாளரும் மற்றும் உற்பத்தியாளருமான லங்கா கெனரிஸ் (Lanka Canneries) நிறுவனமானது தமது உலகளாவிய பிரசன்னத்தை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில், பிரிட்டனைச் சேர்ந்த டெஸ்கோ சூப்பர் மார்கெட்டுகளில் தமது தயாரிப்புக்களை விற்பனை செய்யும் வகையில் உலகப்; புகழ்பெற்ற சில்லறை வர்த்தக வலையமைப்பைக் கொண்ட டெஸ்கோ பிஎல்சி UK (Tesco PLC UK) நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
 
உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டெஸ்கோ நிறுவனமானது 12 நாடுகளில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களை கொண்டுள்ளதுடன், ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு தமது சேவைகளை வழங்கி வருகின்றது. 1919ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டெஸ்கோ நிறுவனமானது தரமான மற்றும் பல்வேறு வகையான தயாரிப்புக்கள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஷொப்பிங் அனுபவத்தை வழங்கி உலகளவில் முன்னணியில் திகழ்கிறது.
 
டெஸ்கோ சூப்பர் மார்கெட்டுகளில் பிரசித்தி பெற்ற பழக்கலவை, அன்னாசி மற்றும் விளாம்பழச் சுவை கொண்ட MD ஜாம் வகைகளும், MD இன் புகழ்பெற்ற தயாரிப்புகளான extra hot chillie sauce மற்றும் green chillie sauce போன்ற தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படுகின்றன. டெஸ்கோ சூப்பர் மார்கெட்டுகளில் தற்போது MD கட்டச் சம்பல், மாழ்பழ சட்னி மற்றும் விளாம்பழ நெக்டா பழச்சாறுகள் போன்றனவும் விற்பனை செய்யப்படுகின்றன. 
 
மேலும் எதிர்காலத்தில் ஷர்பட் சிரப் மற்றும் நெல்லி கோர்டியல் போன்ற MD கோர்டியல் வகைகளும் தேங்காய் வினாகிரி மற்றும் கித்துல் பாகு போன்ற தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படவுள்ளன.
 
இந்த அபிவிருத்தி குறித்து லங்கா கெனரிஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.எஃப்.தோஸா கருத்து தெரிவிக்கையில், 'உலகளாவிய சில்லறை வலையமைப்பினை கொண்ட டெஸ்கோ பிஎல்சி போன்ற நிறுவனத்தில் எமது தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உயர்தரத்துடன் நாம் உற்பத்தி செய்யும் தயாரிப்புக்களின் சுவையை தற்போது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பாவனையாளர்களும் அனுபவிக்க முடியும். இது எம்மை இலங்கையின் முன்னணி உணவு மற்றும் குளிர்பானங்கள் உற்பத்தியாளராக எம்மை முன்னேற்ற வழிவகுக்கும்' என்றார். 
 
லங்கா கெனரிஸ் நிறுவனத்தின் MD வர்த்தகநாமமானது பழங்கள் மற்றும் காய்கறி பதப்படுத்தல் துறையில் 80 வருட அனுபவத்தை கொண்டுள்ளது. இலங்கை சந்தையில் MD ஜாம், கோர்டியல் மற்றும் சோஸ் வகைகளுக்கு என தனித்துவமான இடத்தை கொண்டுள்ளது. MD தயாரிப்புக்கள் தற்போது USA, UK, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, மாலைதீவு மற்றும் கனடா உள்ளிட்ட 35 நாடுகளுக்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. MD ஆனது SLS சான்றிதழ், ISO 22,000 மற்றும் HACCP சான்றிதழ்களை பெற்றுள்ளது.
Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

Tesco இலங்கையில் sourcing centre திறந்துள்ளது. சிங்கள நிறுவனங்கள், அதன் ஊடாக பொருட்களை அனுப்புகிறார்கள். 

சாதாரண மார்கெற்றிங்கே தெரியாதவர்கள், Tesco வுடன் இனைவதில் என்ன பிரியோசனம்?

பிரிட்டனில் தமிழர்கள் அதிகம். அவர்கள் கடைகளும் அதிகம். அங்கே விற்கும் விலையிலும் பார்க்க அதிக விலையில் Tesco வில் விற்றால் யார் வாங்குவார்கள்?

Asda எனும் இன்னுமோர் பெரும் அங்காடியில் அதிக விலையில் சூரியா மிளகாய்த்தூள், சீனீசம்பல் பார்த்தேன். அடுத்தவாரம் clearance பகுதியில், discount விலையில் பார்த்தேன். வாங்கினேன். அவர்கள், இந்தியர் நிறுவனம் ஊடாக கொடுத்த படியால், அவர்கள் அதிக விலை போட்டு விட்டார்களாம்.

அவ்வளவுதான். இனி சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை.

முயல்வது நன்று, ஆனால் சரியான Strategy ம் தேவை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரியா மிளகாய்த்தூள் நிரு வின் ஏக போக இறக்குமதி(Monopoly) பொருள். சூரியா தயாரிப்புகள் இங்கு வரமுன்னரே kingsமிளகாய்த்தூள்க்கு எதிராக நிருவின் மிளகாய்த்தூள் போட்டியில் நிற்க முடியாமால் ரெடிமேட் ஆக நிருவால் இந்தியாவில் இருந்து ஏகபோக இறக்குமதி உரிமையை பெற்று ஐரோப்பாவில்  விநியோகம் செய்யபட்டது .

2013 ல் தமிழ்கடைகளை விட tesco வில் niru தயாரிப்புகள் விலை குறைவு இதை தமிழ் பெரிய கடைகள் முற்றாக niru தயாரிப்புகளை நிராகரிக்க தொடங்க niru இறங்கி வந்தது md க்கு முதல் niru தமிழருடையது .தமிழர்கள் அதிகமுள்ள இடங்களில் உள்ள tesco வில் இன்றும் niru ,trs போன்ற தயாரிப்புகளை காணலாம் .நீங்கள் clearanceல்  எடுத்தது அவர்களுடைய உண்மையான விற்பனை விலையாக இருக்கலாம் .

கொசுறு . சூரிய மிளகாய்த்தூள் பெற்ற வெற்றியை தொடர்ந்து சூர்யா கொம்பனி தூள் தவிர்ந்த அவர்களின் மற்றைய தயாரிப்புகளை லண்டனில் அறிமுகபடுத்தி மொக்கை அடி வேண்டுவதும் நடக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா புறக்கணி சொறிலங்கா என்னாச்சு?

ஊருக்குத்தான்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரியா மிளகாய்த்தூள் நிரு வின் ஏக போக இறக்குமதி(Monopoly) பொருள். சூரியா தயாரிப்புகள் இங்கு வரமுன்னரே kingsமிளகாய்த்தூள்க்கு எதிராக நிருவின் மிளகாய்த்தூள் போட்டியில் நிற்க முடியாமால் ரெடிமேட் ஆக நிருவால் இந்தியாவில் இருந்து ஏகபோக இறக்குமதி உரிமையை பெற்று ஐரோப்பாவில்  விநியோகம் செய்யபட்டது .

2013 ல் தமிழ்கடைகளை விட tesco வில் niru தயாரிப்புகள் விலை குறைவு இதை தமிழ் பெரிய கடைகள் முற்றாக niru தயாரிப்புகளை நிராகரிக்க தொடங்க niru இறங்கி வந்தது md க்கு முதல் niru தமிழருடையது .தமிழர்கள் அதிகமுள்ள இடங்களில் உள்ள tesco வில் இன்றும் niru ,trs போன்ற தயாரிப்புகளை காணலாம் .நீங்கள் clearanceல்  எடுத்தது அவர்களுடைய உண்மையான விற்பனை விலையாக இருக்கலாம் .

கொசுறு . சூரிய மிளகாய்த்தூள் பெற்ற வெற்றியை தொடர்ந்து சூர்யா கொம்பனி தூள் தவிர்ந்த அவர்களின் மற்றைய தயாரிப்புகளை லண்டனில் அறிமுகபடுத்தி மொக்கை அடி வேண்டுவதும் நடக்குது .

Exclusive என்று வரவேண்டும். Monopoly வேறு அர்த்தம் அல்லவா?

நான் வாங்கியது சீனி சம்பல் £1. தமிழ் கடைகளில் £2.69.

சூரியா இந்திய தயாரிப்பு. சப் காண்ட்ராக் கொடுத்து அவர்கள் தடை செய்யப்பட்ட டை கலந்து இங்கே இரண்டு தடவை கண்டைனர் தடுக்கப் பட்டதாக கேள்வி. அதனால் நான் வாங்குவது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா புறக்கணி சொறிலங்கா என்னாச்சு?

ஊருக்குத்தான்.....

புறக்கணி ஸ்ரீ லங்கா, kings வீழ்த்த சூரியா எடுத்த ஆயுதம் என்றும் கேள்வி...:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அவர்களுடையது monopoly business தான் ஒரு பிராண்டை உருவாக்கி அவர்கள் எண்ணப்படி விலையை நிர்ணயிப்பது,மற்றயவர்கள் யாரும் அந்த பிரண்ட் பெயரோ அல்லது அந்த பெயரில் இறக்குமதி செய்யவோ முடியாது இங்கு கூட சூரிய கம்பனியால் லண்டனில் சூர்யா மிளகாய்த்தூள் விற்க முடியாது .monopoly business இதில் விண்டோவ்ஸ் ம் அடக்கம் .oligopoly market என்ன என்பது நீங்கள் விளக்குவீர்கள் என நம்புறன் .

கிங்க்ஸ் ன் விலை உடன் பார்க்கையில் உணவுசாலைகளுக்கு சூர்யா மிக மலிவான ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணி ஸ்ரீ லங்கா, kings வீழ்த்த சூரியா எடுத்த ஆயுதம் என்றும் கேள்வி...:rolleyes:

இது பிழையான தகவல்ஆக இருக்கலாம் .

king ன் லைன் வேறு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்,

Monopoly என்பது தனிக்காட்டு ராஜா போன்றது. சூரியா மட்டுமே போட்டியில்லாது மிளகாய்த்தூள் செய்தால் Monopoly. ஆனால், Kings, Leela என சந்தையில் பல இருப்பதால் monopoly கிடையாது. சந்தையில், சில போட்டியாளர்கள், ஒருவர மட்டுமே (சூர்யா?) முன்னிலையில் என்றால் Oligopoly.

இங்கே இருப்பது Oligopoly. ஆனால் யார் முன்னிலை என தெரியவில்லை.

ஆனால் சூரியாவின் மிளகாய்த்தூள், UK விநியோகத்தர், பெருமாள் மட்டுமே ஆயின் exclusive distributor.

மேலும், Windows தனது monopoly நிலையை, ஆப்பிள், Unix போன்ற போட்டியாளர் வரவால் இழந்து விட்டது.

இன்னுமோர் வகையில் பார்ப்போமா? இலண்டணுக்கும், பாரிசுக்கும் ரயில் விடுவதில் ஈரோ ஸரார் Monopoly. விமானசேவையில், Easyjet, BA, Air France, Ryanair இருப்பதால் அங்கே monopoly இல்லை.

ஈரோ ஸரார் monopoly ஆயினும், மக்களுக்கு, விமானம், Ferry என பல choices இருப்பதால், தான் நினைத்த விலை அடிக்க முடியாது.

நீங்கள் சொல்ல வருவதில் எனக்குப் புரிவது என்னவெனில், BMW brand காரில் என்ஜினை அகற்றி, பென்ஸ் brand என்ஜினை போட்டு BMW என விற்க முயல்வது. அது மோசடிக் குற்றம். (Copy right & Brand infringement )

சரி, ஒரு மாதம் இங்கே இலண்டனில் மட்டும் எவ்வளவு 900g மிளகாய்த்தூள் பக்கற் விற்கிறது என ஒரு அனுமானம் சொல்லுங்கள் பார்க்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பிழையான தகவல்ஆக இருக்கலாம் .

king ன் லைன் வேறு .

தெரியும், வேடிக்கைக்காக சொன்னேன்.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிளகாய்த்தூள் அளவா? அண்ணளவாக நான்கு நாப்பதடி கப்பல் சரக்கு கொண்டேனர் சிலவேளைகளில் சமர் லீவு, விண்டர் ,ஆடிமாதம் ஆகிய நேரங்களில் குறையும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிய நிரு ,கிங்ஸ் மட்டும் அல்ல காவேரி.nsr(இதுக்கு ஒரு ரசிகர் மன்றமே உள்ளது ஆனால் குறிப்பிட்ட அளவே வரும்  ),கலைமகள் ,வாணி ,சுவை யாழினி இவ்வளவும் மார்கெட்டில் தனி ராஜாங்கம் இதை விட ஹரின் ,லீலா,சக்தி ,சரோன் முட்டி மோதி முடியாமல் போன லிஸ்ட்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் பிக்கல் பிடுங்கல் எண்டுபோட்டுத்தான் நம்ம ஆக்கள் சிலர் இப்ப மிளகாய்த் தூளில் இருக்கும், மிளகாயை தூக்கிப் போட்டு தனியே தூளை மட்டும் கடத்தி நல்ல சோக்கா வாழீனம் போல :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிய நிரு ,கிங்ஸ் மட்டும் அல்ல காவேரி.nsr(இதுக்கு ஒரு ரசிகர் மன்றமே உள்ளது ஆனால் குறிப்பிட்ட அளவே வரும்  ),கலைமகள் ,வாணி ,சுவை யாழினி இவ்வளவும் மார்கெட்டில் தனி ராஜாங்கம் இதை விட ஹரின் ,லீலா,சக்தி ,சரோன் முட்டி மோதி முடியாமல் போன லிஸ்ட்.

 

மிளகாய்த்தூளுக்கு ரசிகர் மன்றமா பெருமாள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிளகாய்த்தூள் அளவா? அண்ணளவாக நான்கு நாப்பதடி கப்பல் சரக்கு கொண்டேனர் சிலவேளைகளில் சமர் லீவு, விண்டர் ,ஆடிமாதம் ஆகிய நேரங்களில் குறையும் .

அப்படி எண்டால், மாதம், உலகெங்கும் 200,000 பாக்கெற்றுகள் என்று சொல்லலாமா?

சரி நாதமுனி பிராண்டை, எப்படி நம்பர் ஒன் ஆக்கலாம் என்று Tips தாருங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம் ஒரு Tips இந்த மிளகாய்த்தூள் வியாபாரத்தில் உள்ள முதலாளிகள் இருவரும் தற்போது இலங்கையில் இல்லை அவுஸில். இரண்டு கொண்டேனர் uk வந்தால் ஒரு கொண்டேனர் காசு payment அவுஸ்க்கு அடுத்த கொண்டேனர் சொரிலங்கவுக்கு 2010 அளவில் அவர்களின் உற்பத்தி புள்ளியை வடக்கிற்கு மாற்றுமாறு சிலர் கேட்டுக்கொண்டனர் மூன இருவரும் மறுத்து விட்டனர் .ஒரு 900g போத்தில் uk அடக்க விலை 2.10 மேல் போவதுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது .ஆனால் இவர்களின் அடக்கவிலை 4.25 என்றால் இவர்களின் லாபம் எவ்வளவு என காண்க மாதம் ஒரு நாப்பதடி கொண்டேனர் கட்டயாம் தேவை uk மாத்திரம் இங்கு நான் பெயர் சொல்லவில்லை.

இருக்க மீன் ஏற்றுமதியில் சொறிலங்கா ஐரோப்பிய யனியன் இடம் மாட்டுபட்ட வரலாறு தெரியுமா வடிவேலு கொண்டைபோட்டு அடி வாங்கின கதை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிளகாய்த்தூளுக்கு ரசிகர் மன்றமா பெருமாள்? 

பல வீட்டு தலைவிகளின்  நம்பிக்கையான பிராண்ட் என்பதை சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கலாம் ஒரு Tips இந்த மிளகாய்த்தூள் வியாபாரத்தில் உள்ள முதலாளிகள் இருவரும் தற்போது இலங்கையில் இல்லை அவுஸில். இரண்டு கொண்டேனர் uk வந்தால் ஒரு கொண்டேனர் காசு payment அவுஸ்க்கு அடுத்த கொண்டேனர் சொரிலங்கவுக்கு 2010 அளவில் அவர்களின் உற்பத்தி புள்ளியை வடக்கிற்கு மாற்றுமாறு சிலர் கேட்டுக்கொண்டனர் மூன இருவரும் மறுத்து விட்டனர் .ஒரு 900g போத்தில் uk அடக்க விலை 2.10 மேல் போவதுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது .ஆனால் இவர்களின் அடக்கவிலை 4.25 என்றால் இவர்களின் லாபம் எவ்வளவு என காண்க மாதம் ஒரு நாப்பதடி கொண்டேனர் கட்டயாம் தேவை uk மாத்திரம் இங்கு நான் பெயர் சொல்லவில்லை.

இருக்க மீன் ஏற்றுமதியில் சொறிலங்கா ஐரோப்பிய யனியன் இடம் மாட்டுபட்ட வரலாறு தெரியுமா வடிவேலு கொண்டைபோட்டு அடி வாங்கின கதை .

சொல்லுங்க, மீன் கதையை?

சரி, அவுசில் என்கிறீர்கள், நிரு கனடாக் காரர். அவரது உறவினர் லண்டணில், சூரியாக்காரர் என்று கேள்விப்பட்டேன். தவறானதா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.