Jump to content

நண்பனும்.. கலவியும்.. கொங்கையும்.. காஸும் நகைச்சுவையா..??!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Nanban_film.jpg

மூன்று முட்டாள்கள் (3 idiots) என்ற பெயரில் வெளி வந்த ஹிந்தி திரைப்படத்தை அப்படியே முழுங்கி சங்கர் எடுத்த வாந்தியே.. பொங்கலுக்கு சில நாட்கள் முன் வெளிவந்துள்ள.. நண்பன் படம் ஆகும்.

அதில் விஜய்.. ஜீவா.. சிறீகாந்த்.. சத்யன்.. சத்யராஜ்.. இலியானா என்று பல பேர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்தில் விஜயின் அறிமுகத்தில்.. ஒரு காட்சி.. ராக்கிங் (பகிடிவதை) என்று ரவுசரை கழற்றிப் போட்டு ஜட்டியில் நிற்பது..!

ஆரம்பத்தில் புகுத்தப்பட்ட அந்த பழக்கம்... படம் முழுக்க வியாபித்து விடுகிறது. நண்பனுக்கு நன்றி சொல்லவும் ரவுசரை கழற்றிறாங்க.. அந்தளவுக்கு அது எல்லை மீறிப் போனதை காண முடிகிறது.

ஆரம்பத்தில் அந்தக் காட்சி.. ராக்கிங்கின் கொடூரத்தை காட்ட செய்யப்படுகிறது என்று தான் படம் பார்ப்பவர்கள் நினைப்பார்கள். ஆனால் அந்தக் கொடூரத்தை நகைச்சுவை போல.. படம் முழுக்க ஏன் படத்தின் இறுதிவரை சங்கர் தொடர்ந்து செய்திருப்பது கல்லூரிகளில் ராக்கிங்கில் செய்வதை விட கொடுமையானதாக உள்ளது. சிலர் அதனை நகைச்சுவை என்கின்றனர். அப்போ அதையே ராக்கிங்கில் செய்யும் போது அதையேன் கொடுமை என்கிறார்கள்..???!

இன்னொரு காட்சியில் சத்யன் ஆசிரியர் தினத்தை ஒட்டி தனது கல்லூரி முதல்வரான சத்தியராஜை வாழ்த்தி பேசுவார். அதற்கு என்று தயாரிக்கப்பட்ட பேச்சில்.. சத்யனை.. வைரஸ் கிருமி என்று அழைக்கப்படும் சத்யராஜை பழிவாங்க என்று விஜயும் நண்பர்களும்.. அந்தப் பேச்சை கணணியின் உதவியோடு மாற்றி எழுதி வைப்பார்கள். சத்யன் அமெரிக்காவில் இருந்து வந்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு நல்ல இலக்கணத் தமிழ் வராது. அந்த வகையில்.. இவர்கள் சத்யனின் பேச்சில் எழுதி வைத்திருந்த ஆபாச வார்த்தைகளை சத்யன் புரிந்து கொள்ளாமல் அதை விழா மேடையில் மனப்பாடம் செய்து பேசுவார்.

அதில்.. கல்விக்கு.. கலவி என்றும்.. கொள்கைக்கு.. கொங்கை என்றும்..கற்பிப்பிற்கு.. பாலியல் வல்லுறவு என்றும்...மாற்றி எழுதி வைக்க.. பேச்சு படு ஆபாசமாக அமைந்து விடுகிறது. கேள்வி என்னவென்றால்.. கலவியும்.. கொங்கையும்.. ரவுசரை கழற்றிறதும்.. தானா நமக்கு.. நகைச்சுவை...??!

கலவியும்.. கொங்கையும் நகைச்சுவைக்குரிய அம்சங்களா..???!

சரி அதுபோக.. படத்தில்.. சத்யன் ஞாபக சக்தியை அதிகரிக்க என்று லேகியம் சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாக.. அந்த லேகியம் தந்த விளைவால்.. அவரின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசும். அவர் காஸ் விட்டால் அது அந்தச் சூழலையே நாறடிச்சு விடும். ஆனால் அதுவே.. படம் முழுக்க.. சத்யனை பற்றிய நகைச்சுவை வசனமாக அமைந்து விடுகிறது. அதில் அப்படி என்ன நகைச்சுவை உள்ளது. காஸ் விடுறது.. நகைச்சுவையா..???!

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு என்று வரைவிலக்கணம் வகுக்க வேண்டாம்.. ஒரு தராதரம் அமைக்க வேண்டாமோ..??! பெண்களின் அந்தரங்க உடல் உறுப்புக்களை பற்றி பேசுவதும்.. பாலியல் சார்ந்த விடயங்களை கலந்து பேசுவதும்.. அந்தரங்க உடைகளை காண்பிப்பதும்.. காஸ் போன்ற இயற்கையான உடல் சார்ந்த கழிவகற்றல்களை.. வாயு வெளியேற்றங்களை கதைப்பதுமே.. நகைச்சுவை என்று ஏற்று நகைக்கும் நிலையிலா தமிழ் ரசிகர்கள் இருக்கின்றனர்..??!

எனக்கென்றால்.. அவற்றில் நகைச்சுவையை விட.. தவறான வழிகாட்டல்களே அதிகம் இடம்பெற்றுள்ளதாக.. உணர முடிந்தது. நகைச்சுவை என்பது எது என்ற உணர்தலை தவறாக இனங்காட்டுவதாகவே அது இருக்கிறது.

எதிர்காலத்திலாவது.. தமிழ் சினிமா இது குறித்து சிந்திக்குமா.. உருப்படியான சமூகப் பயன்மிக்க நகைச்சுவைகளை புதிய தலைமுறைக்கான சரியான வழிகாட்டலோடு முன் வைக்குமா..??!

இந்தப் படத்தில் நல்ல அம்சங்கள் என்று சொன்னால்.. All is well என்று மனதை சாந்தப்படுத்திக் கொள்வது.. மற்றும் கல்வி சார்ந்த தற்கொலைகள் பற்றிய அறிவூட்டல்.. தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் நிலவும் போட்டி கற்கைச் சூழலில் ஏற்படும்.. மன அழுத்தங்கள்.. திறமைக்கு முன்னுரிமை அளிக்காது.. குடும்ப தேவைகளுக்காக பிள்ளைகள் மீது அவர்கள் விரும்பாத படிப்பை திணிப்பது.. ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அதிக பாரத்தை சுமத்தி.. மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் மனப் பயம் மூலம் பாதகமான விளைவுகளை உண்டு பண்ணுவது.. புத்தகத்தில் உள்ளதை வெறும் பாடமாக பாவனைக்கு உதவாது மனப்பாடம் செய்து படிப்பது தவறு என்று சுட்டிக்காட்டுவது.. ஒருவரின் மன ஓட்டத்தை கண்டறியும்.. Demo.. விளக்கம்.. போன்றவற்றை இனங்காட்டாமலும் இருக்கக் கூடாது.

நகைச்சுவையிலும் இந்த தரத்தை வெளிப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தமிழ் சினிமாவில் புதிய தலைமுறை நகைச்சுவைக்கு முன்னுதாரணமாக அமைந்திருக்கும்.

நன்றி.

பார்த்ததில் உணர்ந்ததைச் சொல்வது...

நண்பன் படம் பார்த்தவன்.

ஆதாரம்: http://kundumani.blogspot.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் பட‌ம் பார்த்தாராம் அதை இவர் விமர்சனமாக எழுத வந்திட்டாராம்...பட‌த்தை போய் தியேட்டரில் பார்த்தேன் என வெளிப்படையாக எழுத வேண்டியது தானே

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவன் நண்பன் என்ற படத்தைப் பார்த்ததில், தான் உணர்ந்து கொண்டதை இங்கே பர்கிந்திருக்கிறார். :rolleyes:

நான் இன்னும் பார்க்கவில்லை, உங்கள் பகிர்விற்கு நன்றி நெடுக்ஸ்!

Link to comment
Share on other sites

நான் ஹிந்தியில் வெளியான 3 idiots உம் பார்த்தேன் நண்பனும் பார்த்தேன் ஹிந்தியில் வெளியானதை எந்தவித மாற்றமும் இன்றி தமிழில் தமிழில் தந்துள்ளார் இங்கு 2 பாடல்கள் அதிகமாக சேர்க்கபட்டுள்ளன

சங்கரே சொல்லி இருந்தார் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்கு வாருங்கள் எண்டு எனக்கு படம் பிடித்து இருந்தது . இந்தியாவிலுள்ள பாடத்திட்டம் பற்றி போட்டு கிழித்துள்ளனர்.

. படம் நல்ல படம் பார்க்கலாம் எல்லோருமே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது.

ஏதோ காரணத்தால் மறுத்துவிட்டார்.

நான் புதிய சினிமாப் படங்கள் பார்ப்பது அரிது.

இப்படியான விமர்சனங்கள் மூலம் சிலவற்றை அறிந்து கொள்வேன்.

இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நெடுக்கர்!

நான் இன்னும் பார்க்கவில்லை!!

Link to comment
Share on other sites

'க ற் ப ழி ப் பு' எனும் பெண்மீதான பாலியல் கொடூர வன்முறைச் சொல் மிகவும் சாதாரணச் சொல் போன்று அதுவும் நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்ட கொடுமையை என்னவென்பது. சங்கர் போன்ற வியாபாரிக்கு இந்தச் சொல் சிரிப்பை ஏற்படுத்தும் ஒரு சொல்லாம்..

தமிழ் சினிமாவின் இன்னொரு சாக்கடை சங்கர்

Link to comment
Share on other sites

நேற்று வார இறுதி என்பதால் மகன் என்னுடன் வந்து நின்றான். வீட்டில் இருந்தால் அவனுக்கும் Boring ஆக இருக்கும் என்று நண்பன் படத்துக்கு கூட்டிச் சென்றேன். 3 idiots பார்க்கவில்லை என்பதால் கதை பிடித்து இருந்தது. ஆனால் சங்கர் எனும் சாக்கடை புகுத்தி இருந்த வசனங்களும் underwear இனைக் காட்டி ஆசிர்வாதம் வாங்குவது நகைச்சுவையாம் என்று காட்டிய காட்சிகளும் வெறுப்பையும் எரிச்சலையும் தந்தன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வார இறுதி என்பதால் மகன் என்னுடன் வந்து நின்றான். வீட்டில் இருந்தால் அவனுக்கும் Boring ஆக இருக்கும் என்று நண்பன் படத்துக்கு கூட்டிச் சென்றேன். .............????????

சுத்தம்...மகனுக்கு என்ன வயசு?

Happy Feet2, etc.......???

Link to comment
Share on other sites

இலினா என்று பல பேர் நடித்திருக்கிறார்கள்

அது இலியானா சார் :D

சத்யன் அமெரிக்காவில் இருந்து வந்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு நல்ல இலக்கணத் தமிழ் வராது.

இது தவறான கருத்து. அவரிற்க்கு தமிழ் வரும். நாம் பேசுவதும் இலக்கண தமிழ் இல்லையே. சத்தியனிற்க்கு எதையும் மனப்பாடம் பண்ணி படிப்பதே வழக்கம். அப்படி மனப்பாடம் பண்ணும் போது அதன் கருத்தை அவர் கவனித்தில் எடுப்பதில்லை. அதனால் தான் அவர் மற்றவர்கள் மாற்றியதை அப்படியே அனைவரிற்க்கும் முன் வாசிக்கின்றார். ஆழமாக படிக்காமல் வெறும் மனப்பாடம் செய்து படிப்பதன் விளைவையே இது காட்டுகின்றது. ஆனாலும் எனக்கும் அந்தக் காட்சிகள் பிடிக்கவில்லை.

ஒட்மொத்தமாக வழமையான ஒரு குப்பயே நண்பன். நல்ல படங்களை கொப்பி பண்ணுதே இன்றைய சினிமாக்காரர்களிற்க்கு கடினமாக உள்ளது. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது இலியானா சார் :D

உங்கள் வேதனை புரிஞ்சு கொண்டு.... :lol::D தட்டச்சில் நிகழ்ந்து கவனிக்கப்படாது போன பிழையை திருத்திக் கொண்டிருக்கிறோம்.

நன்றி சார். :)

Link to comment
Share on other sites

உங்கள் வேதனை புரிஞ்சு கொண்டு.... :lol::D தட்டச்சில் நிகழ்ந்து கவனிக்கப்படாது போன பிழையை திருத்திக் கொண்டிருக்கிறோம்.

நன்றி சார். :)

சற்று நிமிடங்கள் தாமதம் ஆகி இருந்தால் உங்களுடைய உருவ பொம்மையை இ.மு.க. (இலியான முன்னேற்றக்கழகம்) எரித்திருக்கும். :D

Link to comment
Share on other sites

அதென்ன இலையான், அது இதென்ற பெயர்? ஆளாவது பார்க்க நல்லா இருக்கிறாரா படத்தில? அவர் எங்க நடிக்கப் போறார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன இலையான், அது இதென்ற பெயர்? ஆளாவது பார்க்க நல்லா இருக்கிறாரா படத்தில? அவர் எங்க நடிக்கப் போறார்?

உங்கள் ஆதங்கம் புரிகிறது. இலியானா.. இலியானா என்றாங்களே.. ஒரு படத்தைக் கிடத்தை போட்டு கதைக்க மாட்டேங்கிறாங்களே.. என்று.. கவலைப்படுறீங்க என்றும்.. புரிகிறது..

உங்கள் கவலைகள் தீர... ஆள் பார்க்க நல்லாத் தான் இருக்கா. நல்ல.. சிலிம்மா வேற இருக்கா..! :):lol:

ileana_dcruz_01.jpg

ileana_dcruz_03.jpg

Link to comment
Share on other sites

நல்லாத் தான் ஆராய்ச்சி செய்யுறீங்க போல நெடுக்ஸ்.

அதுசரி, இவ ஏன் ஒரு மாதிரியா நிக்கிறா? இடுப்புல சுளுக்கா? :lol::D

Link to comment
Share on other sites

படத்தில இலையான் பார்க்க நன்னாவே இல்ல.. போஷாக்கு குறைபாடு .. ??? :rolleyes: :rolleyes:

இவதான் ஹீரோயினியான்னு சந்தேகமே வந்துட்டுது.. படம் முடியும்மட்டும் வேறொருத்தி வரமாட்டாளான்னு ஒரு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில இலையான் பார்க்க நன்னாவே இல்ல.. போஷாக்கு குறைபாடு .. ??? :rolleyes: :rolleyes:

இவதான் ஹீரோயினியான்னு சந்தேகமே வந்துட்டுது.. படம் முடியும்மட்டும் வேறொருத்தி வரமாட்டாளான்னு ஒரு...

நீங்கள் மட்டுமில்ல.. படக்குழுவினினரும்... இலையான் பற்றி சொல்லுறதை கேளுங்க.. :lol:

http://www.youtube.com/watch?v=xTjRDqFDNi4&feature=related

2.50 வது நிமிடம்... வருது என்று நினைக்கிறன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு திரைப்படங்கள் பார்ப்பதில் அதில் நேரத்தை செலவளிப்பதில் ஆர்வமில்லை..ஆனால் இப்படி யாழுக்குள் விமர்சனங்கள் யாரச்சும் எழுதினால் வந்து பார்த்துட்டு போவன்..நண்பன் திரைப்படத்தைப் பற்றிய பகிர்வில் தலையங்கப்பகுதியில் எழுதி இருக்கும் சில கண்றாவி சொல்பிரயோகங்களை மற்றும் கருத்துப் பகிர்வை பார்துட்டே நினைச்சேன் இது ஓரளவுக்கு வயது வந்தவர்களுக்கு அவர்களின் வாழ்க்கைப் புரிதலோடு கூடிய ஒரு திரைப்படமாகத் தான் அமைந்திருக்கும் என்று...இப்போ சிலருடைய விமர்சனங்களைப் பார்க்கும் போது என் நினைப்பும் திரைப்படத்தின் பங்கும் ஓரளவுக்கு தன்னும் சரியாகத் தான் இருக்கிறது போல் இருக்கிறது..நேற்றைய தினம் என் மைத்துனியோடு கதைக்கும் போது சொன்னார் தானும் பிள்ளைகளும்,தன்னுடைய சகோதரியும் நண்பன் படம் திரை அரங்கில் பார்த்தாக..நல்ல திரைப்படமா என்று கேட்டேன் சும்மா பம்பலாக போச்சுது என்று சொன்னார்.ஓரளவுகுக்கு பன்னிரண்டு வயது,பதின் ஐந்து வயது பிள்ளைகள் என்றாலே நாங்கள் அவர்களைக் கூட குழந்தைகள்,சின்னப் பிள்ளைகள் என்று தான் சொல்லிக் கொள்கிறோம்...யாராச்சும் ஏதாவது கேட்டால் கூட அவர்களா,அவர்கள் இன்னும் சின்னப்பிள்ளைகள்,குழந்தைகள் என்று தான் பட் என்று வாயில் வந்துடுகிறது...

இது ஒன்பது வயது,ஏழு வயது, ஆறு வயதுப் பிள்ளைகளை கொண்டுபோய் வைச்சு கொண்டு இப்படியான திரைப்படங்களை பார்ப்பது எனக்கு மனதுக்கு சங்கடமாக பட்டது.இங்கு பாடசாலைகளில் மிக சிறிய வயதிலயே அப்பா,அம்மா கண்டிச்சால் என்ன செய்யவேணும் என்பதில் இருந்து இன்னும் பல தேவை அற்ற விடையங்களை பிள்ளைகளுக்கு புரியாத பருவத்திலயே சொல்லிக் கொடுக்கிறார்கள் தான் இல்லை என்று சொல்லி மறுக்க இல்லை..ஆனாலும் எங்கள் குழந்தைகளை பக்குவப்படுத்தி நல்லவளிக்கு இட்டு செல்வதில் நாங்கள் நிறையவே கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டியவர்கள்..எனக்கு இந்தக் கருத்தை பகிர வேணும் போல் இருந்திச்சு அது தான் சொல்கிறன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவன் நண்பன் என்ற படத்தைப் பார்த்ததில், தான் உணர்ந்து கொண்டதை இங்கே பர்கிந்திருக்கிறார். :rolleyes:

நான் இன்னும் பார்க்கவில்லை, உங்கள் பகிர்விற்கு நன்றி நெடுக்ஸ்!

அது தான்,அங்க தான் இருக்கு விச‌யம் இந்தப் பதிவில் இவர் என்ன எழுதியிருக்கிறார் என வாசியுங்கள் :lol:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96525

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தான்,அங்க தான் இருக்கு விச‌யம் இந்தப் பதிவில் இவர் என்ன எழுதியிருக்கிறார் என வாசியுங்கள் :lol:

http://www.yarl.com/...showtopic=96525

பார்க்க பரிதாபமா இருக்குது. என்னடா என் டவுட்டை ஒருத்தரும் கிளியர் பண்ணுறாங்கல்லையே என்று அக்காச்சி நீங்க பரிதவிக்கிறது விளங்குது. :lol:

நான் படத்தை தியேட்டரில பார்க்கல்ல. போதுமா அக்காச்சி..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க பரிதாபமா இருக்குது. என்னடா என் டவுட்டை ஒருத்தரும் கிளியர் பண்ணுறாங்கல்லையே என்று அக்காச்சி நீங்க பரிதவிக்கிறது விளங்குது. :lol:

நான் படத்தை தியேட்டரில பார்க்கல்ல. போதுமா அக்காச்சி..! :lol::D

:) :) :)

Link to comment
Share on other sites

நெடுகு சார்

விஜய் சார் குத்து அடி வெட்டு இல்லாம நடிச்ச இந்த படதுகு பாராட்டனும் எலே

என்டாலும்

குசுவ படதில மூனு மணிதியாலமாய் கேலி செய்தை கண்டிகோணும் எலே

என்டாலும்

வேலாயுததை விட இது பரவாயில எலே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.