Jump to content

சென்னை - சிங்காரமா...?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2hhooeg.jpg

 

சென்னை...

 

நடு ரோட்டில் எச்சில் துப்பும்

நவ நாகரிக சமூகமும்..

 

சட்டசபைக் குறிப்பிலிருந்து

நீக்கப்பட்ட வார்த்தைகளும்...

 

சேலை கட்டியிருந்தால்

போதுமென உரசிப்பார்க்கும்

பத்தரைமாற்றுத் தங்கங்களும்...

 

பணம் எந்த வழியில்

வந்தால் என்ன

என் கைக்கு வந்தால் போதும்

என நினைக்கும் முதலைகளும்..

நிறைந்த அழகான ஊர்...

 

சிங்காரச் சென்னை...

 

(நன்றி: நிலாமகள்)

 

 

இப்படி கடுமையாக விமர்சிக்கப்படும் சென்னையின் மறுபுற சிங்காரத்தை, அழகை புகைப்படக் கலவையில் இங்கே காண்போமா? :)

 

.

Link to comment
Share on other sites

  • Replies 88
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை...

-----

சேலை கட்டியிருந்தால்

போதுமென உரசிப்பார்க்கும்

பத்தரைமாற்றுத் தங்கங்களும்...

-----

இப்படி கடுமையாக விமர்சிக்கப்படும் சென்னையின் மறுபுற சிங்காரத்தை, அழகை புகைப்படக் கலவையில் இங்கே காண்போமா? :)

 

 

சேலை கட்டியிருப்பவரையும், பஞ்சாபி போட்டிருப்பரையும்.... உரசிப் பார்ப்பது சென்னையில் மட்டுமல்ல அகில இந்தியாவிலும் நடப்பதை பார்க்க அதிர்ச்சியாக உள்ளது.

பல பெண் தெய்வங்களை கொண்ட மதத்தை பின் பற்றும் நாட்டில், இதுவும் நடக்க என்ன காரணம் என்று.... யோசிப்பதுண்டு.

-------

 

சென்னையின் மறுபுற சிங்காரத்தையும்....

நீங்கள் கட்டணம் வசூலிக்காமல் காட்டினால்,

நாங்கள் பார்க்க.... ரெடி. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையின் மறுபுற சிங்காரத்தையும்....

நீங்கள் கட்டணம் வசூலிக்காமல் காட்டினால்,

நாங்கள் பார்க்க.... ரெடி. :D

 

நன்றி, தமிழ்சிறி.

 

கட்டணம் ஏதுமில்லை..

பார்த்தால் மனம் வசப்படும்..

இப்படி வசை பாடாது..! :lol:

 

vpd8qp.jpg

Link to comment
Share on other sites

என் சகோதரி சென்னையில் தான் வசிக்கின்றார். தன் அனுபவத்தில் பெண்களுக்கு மரியாதையும், அன்பையும் வழங்கும் இடங்களில் சென்னை தான் உசத்தி என்கின்றார்.  தள்ளுவண்டியில் மரக்கறி விற்கும் சின்ன வியாபாரியில் இருந்து, பெரிய ஆட்கள் வரைக்கும் பெண் என்பதால் மரியாதை கொடுப்பார்களாம்.

 

 


அழகான படங்களை; முக்கியமாக இயற்கை அழகுகளை இணையுங்கள் ராசவன்னியன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெரினா கடற்கரையில்...... எனது அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சியுடன் ஒரு மாலைப் பொழுதை கழித்தோம்.
திடீரென்று... கன நேரம் அப்பாவை காணவில்லை.
கொஞ்சம் யோசித்துக்கொண்டிருந்த போது....
அப்பா.... சிரித்துக் கொண்டு, கடுதாசியால் சுற்றிய ஒரு பொட்டலத்தை காட்டினார்.

நாங்கள் அதற்குள்... சுண்டல் மாதிரி, ஏதாவது ஒரு சாப்பாட்டுச் சாமான் என நினைத்தோம்.
ஆனால்....அதற்குள் இருந்தது, ஒரு வலம்புரிச் சங்கு.
அதன் விலையை.. கேட்ட போது அவர் சொல்ல மறுத்து விட்டார்.
அந்தச் சங்கு, பல நாடுகள் போய்... இப்போது, எமது சாமி அறையில் உள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

COOUM__5_102969f.jpg


கூவம் நாற்றம் மட்டும் இல்லை என்றால் அருமையான இடம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்களை; முக்கியமாக இயற்கை அழகுகளை இணையுங்கள் ராசவன்னியன்!

 

நிச்சயமாக.

 

தகவலுக்கு நன்றி.

 

மெரினா கடற்கரையில்...... எனது அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சியுடன் ஒரு மாலைப் பொழுதை கழித்தோம்..

 

So,சென்னை உங்களுக்கு புதிதல்ல... :)

 

கூவம் நாற்றம் மட்டும் இல்லை என்றால் அருமையான இடம் 

 

ஆங்கிலேயர்கள் ஆண்டவரை கூவம் என்பது அழகான நதி. 

அதை நாறடித்தது திருவாளர் சென்னைவாசிகளும், அரசியல்வியாதிகளுமே!

 

5arrld.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

So,சென்னை உங்களுக்கு புதிதல்ல... :)

 

 

25 வருடத்துக்கு முந்திய சென்னை வேறு. இப்போதிருக்கும் சென்னை வேறு.

எக்மோர் ரயில்வே நிலையத்துக்கு முன் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தோம். தம்பி.... கோயம்புத்தூரில்  படித்துக் கொண்டிருந்தார்.

விடுமுறைக்கு, ஊருக்கு... வரும் போது, ஸ்ரீலங்கா ராணுவம் உலங்கு வானுர்தியில் இருந்து சுட்டு, நல்லூர் சிவன் கோவில் வாசலில் இறந்து விட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...விடுமுறைக்கு, ஊருக்கு... வரும் போது, ஸ்ரீலங்கா ராணுவம் உலங்கு வானுர்தியில் இருந்து சுட்டு, நல்லூர் சிவன் கோவில் வாசலில் இறந்து விட்டார்.

 

ஓ..!  வருந்துகிறேன்.

இங்கே யாழில், பலருக்கும் பின்னால் கனதியான சோகம் பொதிந்துள்ளது போலும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னைத் தமிழில்.....
"நைனா... நீ, நாஷ்டா சாப்புட்டியா...?"
என்றால்... என்ன அர்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னைத் தமிழில்.....

"நைனா... நீ, நாஷ்டா சாப்புட்டியா...?"

என்றால்... என்ன அர்த்தம்.

 

தமிழுசிறி நைனா, உன்னோட மெட்ராஸு தமிழு ஷோக்கா கீதுபா.. :)

இப்பால இஸ்கூலுல கத்துக்கினியா?

 

ஐயே.. மெய்யாலுமா 'நாஷ்டா' மீனிங்கு தெராதா ?

இப்போ இன்னா டவுட்டு உனுக்கு?

"ஐயா, நீங்கள் காலை உணவு சாப்பிட்டுவிட்டீர்களா..?" இதாம்பா மீனிங்கு!

மெட்ராஸு பாஷைல உஷாரா இரு மாமு..! இல்லன்னா

நிஜார உருவிடுவானுங்க..!!

டங்குவார் புட்டுக்கும்..!!!

 

Link to comment
Share on other sites

நான் தமிழ் நாட்டையும் அங்கு வாழும் தமிழில்,தமிழனில் விருப்பு உள்ளவர்களை மதிக்கிறேன். தமிழ் நாட்டுக்கும் வந்துள்ளேன்.அங்கு பிடிக்காத விடையங்களில் ஒன்று இந்த கூவம் ஆறு . இந்த நவீன தொழில்னுட்ப உலகில் ஏன் கூவம் ஆற்றிற்கு ஒரு தீர்வு காணமுடியாது? என்னால் ஒரு சிக்கனமான தீர்வு கொடுக்க முடியுமா? என பலதடவை நினைப்பது உண்டு. அல்லது உலக நிருவனங்களின் உதவிகள் மூலம்( ஐ. நா சுகாதார நிருவனம்) தீர்வு காணலாம் என நினைக்கிறேன்.இது ஒரு சுகாதார பிரச்சனை. எனக்குள் சில தீர்வுகள்,வழிமுறைகள் உண்டு. ஆனால் எப்படி உதவுவது? ராசவன்னியன் அவர்களே..

Link to comment
Share on other sites

லண்டனின் தேம்ஸ் ஆறுகூட முன்பு அசுத்த நீராகத்தான் இருந்ததாம். :huh: (இன்று நிலைமை பரவாயில்லை.. அவ்வளவே.. :lol: ) அரசு முயன்றால் காலப்போக்கில் சீர்செய்யலாம். :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கேரளாவாக்கும் ராசவன்னியரே ???

 

ஈஸ்வரா...

 

சென்னைக்கு அருகேயும் 40 கி.மீ தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில், மகாபலிபுரம் செல்லும் வழியில் கோவளம் என்ற ஊர் இருக்கப்பு.. :)

300px-MTC_white_line_bus.jpg

இந்த கோவளம் கிராமம் வரைக்கும் ஆங்கிலேயர்கள் பக்கிக்ஹாம் கால்வாய் அமைத்து படகுப் போக்குவரத்து நடைபெற்றது ஐயா. இந்த கிராமத்திற்கு சென்னை பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 19G என்ற மாநகரப் பேருந்தும் செல்கிறது.

Link to comment
Share on other sites

உலகில் என்னை வசிப்பதற்கு ஒரு நகரத்தை தெரிவு செய்ய சொன்னால் சென்னை தான் எனது முதல் தெரிவு .காரணம் எனது வாழ்க்கை முறையை ஒட்டிய பல விடயங்கள் .

 

பிடிக்காத பல விடயங்களும் இல்லை என்று சொல்லவில்லை குறிப்பாக பெண்கள் பற்றிய விடயம் .இந்த விடயத்தில் நிழலியின் கருத்துடன் உடன் பாடில்லை .இந்த விடயத்தில் நாகரீகம் இலங்கையர்களுடன் அவர்களை ஒப்பிடவே முடியாது .

 

எனது மனைவி சொன்னார் தான் இரவு பஸ்சில் தாயாருடன் தஞ்சாவூர் சென்றபோது முன்னிருக்கையில் இருந்தவர் வலிய இருக்கையை பின்னுக்கு சரித்து தொடர்ந்தும் கஷ்டம் கொடுத்துக்கொண்டு வந்தாராம் .டீ குடிக்க பஸ்ஸை நிறுத்தியபோது விசயத்தை தங்களை கூட்டிக்கொண்டு போனவரிடம் சொல்ல அவர் சீட்டின் சாயும் இடத்தையே புடுங்கி எடுத்துவிட்டாராம் .(நம்ம சங்கர் - பாலு மகேந்திராவின் மனைவியின் தம்பி) 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கேரளாவாக்கும் ராசவன்னியரே ???

காரைநகரில் மட்டுமில்லை சென்னையிலும் கோவளம் என்ற பெயர் உண்டு ஈசனாரே.......
Link to comment
Share on other sites

ஈஸ்வரா...

 

சென்னைக்கு அருகேயும் 40 கி.மீ தொலைவில் கிழக்கு கடற்கரை சாலையில், மகாபலிபுரம் செல்லும் வழியில் கோவளம் என்ற ஊர் இருக்கப்பு.. :)

300px-MTC_white_line_bus.jpg

இந்த கோவளம் கிராமம் வரைக்கும் ஆங்கிலேயர்கள் பக்கிக்ஹாம் கால்வாய் அமைத்து படகுப் போக்குவரத்து நடைபெற்றது ஐயா. இந்த கிராமத்திற்கு சென்னை பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 19G என்ற மாநகரப் பேருந்தும் செல்கிறது.

 

 

 

 

நீர்த் தாவரங்களையும் ( ஆகவே நன்னீர் ) படகோட்டி வைத்திருக்கும் குச்சியையும் பார்த்து கேரளாவாக்கும் என்று நினைத்துவிட்டேன். கோவளம் கடற்கரை பற்றி அறிந்திருந்தாலும் நன்னிர் டெல்டா இருப்பது தெரிந்திருக்கவில்லை. (போனதில்லை)
 
கேரள கோவளம் ஏற்கனவே அறிந்தது.
 
 
 

 

காரைநகரில் மட்டுமில்லை சென்னையிலும் கோவளம் என்ற பெயர் உண்டு ஈசனாரே.......

 

 

 

கோவல‌ம் நம்ம தாய்வழிப் பாட்டனார் பூர்வீகம். ( கேரளாக் கோவளம் அல்ல)
 
கோ ‍  - அரசன்
வலம் ‍-  ரவுண்ட்ஸ்  :D
Link to comment
Share on other sites

சென்னை 375: ஒரு முன்கதைச் சுருக்கம்

 

madras_day_2064667h.jpg

இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி உருவாவதற்கு 119 ஆண்டுகளுக்கு முந்தைய காலம் அது. விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்டு திருப்பதி அருகே உள்ள சந்திரகிரியில் ஒரு ராஜா இருந்தார். அவருக்குக் கட்டுப்பட்டவராக பூந்தமல்லியின் நாயக்கரான வேங்கடகிரி இருந்தார். அவர்களின் பிடியில் இன்றைய சென்னையின் நிலம் இருந்தது.

ஒரு குடியிருப்பைக் கட்ட நிலம் தேடி கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் பிரான்ஸிஸ் டேவும் ஆண்ட்ரூ ஹோகனும் புதுச்சேரி வரை கடற்கரையில் அலைந்தனர். பெரி திம்மப்பா எனும் வணிகரின் சைகை மொழிபெயர்ப்பு உதவியோடு, மனித வாடை இல்லாத சுமார் ஐந்து கி.மீ. தூரமுள்ள கடற்கரையோர நிலம் வேங்கடகிரியிடமிருந்து வாங்கப்பட்டது. ஆங்கிலேயர் குடியிருப்பின் சுற்றுச்சுவருக்கு வெளியே கருப்பர் நகரம் உருவானது. சென்னை நகரின் முதல் குடும்பம் என்ற பெயரை பெரி திம்மப்பாவின் குடும்பம் பெற்றது. ஆக, சென்னையின் ஸ்தாபகர்களாக பிரான்ஸிஸ் டே, ஆண்ட்ரூ ஹோகன், பெரி திம்மப்பா ஆகிய மூவரும் வரலாற்றில் இடம்பிடித்துவிட்டனர். ஆனால், அவர்கள் பெயரில் ஒரு தெருகூட சென்னையில் இன்னமும் இல்லை.

ஆங்கிலேயர்களின் குடியிருப்புக்கு உள்ளே இந்தியாவின் முதல் ஆங்கில மருத்துவமனை 1664-ல் உருவானது. பிறகு, கோட்டைக்கு வெளியே வந்தது. அதுதான் இன்றைய அரசு பொது மருத்துவமனை. 1842 முதல் இந்தியர்களுக்கும் அதில் மருத்துவம் செய்யப்பட்டது.

 

மதறாஸ் நகராட்சி

1668-ல் திருவல்லிக்கேணியை உள்வாங்கிக்கொண்ட சென்னை 1688-ல் சென்னை நகராட்சியாக (அதாவது மதறாஸ் நகராட்சி) இங்கிலாந்து அரசரால் அறிவிக்கப்பட்டது. அப்போது ஆசியாவில் எங்கும் அப்படிப்பட்ட உள்ளாட்சி முறை இல்லை. இதற்கிடையே சந்திரகிரி ராஜாவை கோல்கண்டா சுல்தான் தோற்கடித்தார். சுல்தானைப் பேரரசர் அவுரங்கசீப் தோற்கடித்தார். வென்றவர்களிடம் போய் நின்று தங்கள் சென்னை கோட்டைக்குப் பாதுகாப்பு தேடிக்கொண்டார்கள் ஆங்கிலேயர்கள்.

1701-ல் அவுரங்கசீப் படைகள் சென்னைக் கோட்டையை லேசாகத் தட்டிப்பார்த்தன. 1746-ல் பிரான்ஸ் படைகளால் கோட்டை கைப்பற்றப்பட்டது. பிற்காலத்தில் பெரும்புகழ் அடைந்த ராபர்ட் கிளைவ், சென்னை நகருக்கு வெளியே ஓடிப்போய் ஒரு கோட்டையில் ஒளிந்துகொண்டார். வடஅமெரிக்காவில் தங்களிடம் இருந்த ஒரு தீவை பிரான்ஸுக்கு விட்டுக்கொடுத்து, சென்னையை ஆங்கிலேயர்கள் 1748-ல் மீண்டும் வாங்கினார்கள்.

ஆர்க்காடு நவாப் சாந்தோம் பகுதியை ஆங்கிலேயர்களுக்குப் பரிசாக வழங்கினார். மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை போன்றவை ஆங்காங்கே தீவுகள் போன்று தனித்து இருந்த கிராமங்கள். சென்னையின் வளர்ச்சி எனும் கடல் அவற்றை இடைவெளி விடாமல் தழுவிக்கொண்டது.

1711-ல் முதல் அச்சகம் சென்னையில் அமைக்கப்பட்டது. கிறிஸ்தவப் பாதிரியார்களைத் தவிர யாரும் அச்சகங்களை வைத்திருக்கக் கூடாது என கிழந்திய கம்பெனியின் தடை 1840 வரை இருந்தாலும், சென்னை மாகாண ஆளுநராக இருந்த எல்லீஸ் உள்ளிட்டோரின் முன்முயற்சியால் தமிழ் நூல்கள் அச்சாகின. சென்னையில் அச்சான நூல்கள்தான் பிற்பாடு எழுந்த தமிழ் மறுமலர்ச்சியின் மையம்.

 

பஞ்சமும் போர்களும்

தென்னிந்தியாவில் 1876 முதல் 78 வரை தாதுவருசப் பஞ்சம். ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். சென்னையில் பஞ்சத்துக்கான நிவாரண வேலைக் கூலியாக 6 பைசாவும் அரை கிலோ தானியமும் தந்து பக்கிங்காம் கால்வாய் கட்டப்பட்டது.

முதல் உலகப் போரின்போது ஜெர்மன் கப்பல் எம்டன் சென்னையின் மீது குண்டுவீசிவிட்டு மறைந்தது. 1942-ல் இரண்டாம் உலகப் போரின் பீதி சென்னை மக்களை வெளியேற்றியது.1943-ல் ஜப்பான் விமானங்கள் நகரில் குண்டுகளை வீசின.

சென்னை கோட்டையைச் சுற்றி உருவாகியிருந்த கருப்பர் நகரம், பிரான்ஸ் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டது. கருப்பர் நகரம் இருந்த இடத்தைச் சுற்றி 1708-ல் ஒரு கோட்டை கட்டப்பட்டது. 1911-ல் அந்தக் கோட்டைக்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னனின் பெயர் சூட்டப்பட்டது.

சென்னை சாலையின் முதல் காரை பாரி அண்ட் கோவின் இயக்குநர் 1894-ல் ஓட்டினார். அதற்கு அடுத்த ஆண்டு ஆரம்பமான டிராம் சர்வீஸ் 1953-ம் ஆண்டு 'டாட்டா' காட்டியது. 1931-ல் முதல் மின்சார ரயில் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை ஓடியது.

1901-ல் சென்னையின் மக்கள்தொகை: 5,40,000. பரப்பளவு: 70 சதுர கிலோமீட்டர். 1914-ல்தான் சென்னையில் கழிவுநீர் அமைப்புகளும் தெருவிளக்குகளும் குடிநீர் அமைப்புகளும் உருவாகின. ஆங்கிலேயர்களின் காலத்திய அந்த அமைப்புகளில் ஏற்படும் அடைப்புகளை எடுக்கத்தான் நவீன இயந்திரங்களும் சில நேரங்களில் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி மனிதர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

சென்னையில், 1917-ல் முதல் விமானம் பறந்தது. 1923-ல் 80 சதுர கிலோ மீட்டராக வளர்ந்தது. 1925-ல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. ரிப்பன் மாளிகையிலிருந்து வானொலி ஒலிபரப்பு 1930-ல் தொடங்கியது.

1946-ல் சைதாப்பேட்டை நகராட்சி உட்பட வேளச்சேரி முதல் அயனாவரம் வரை பல பகுதிகள் சென்னையுடன் இணைந்தன. 1947-ல் மதராஸ் மாகாணத்தின் தலைநகராக மெட்ராஸ் எனும் சென்னை தேர்வானது. 1950-ல் 129 சதுர கிலோ மீட்டராக சென்னை விரிந்தது. 1969-ல் மெட்ராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. 1996-ல் மெட்ராஸ் மாநகரம் சென்னை என பெயர் மாற்றப்பட்டது. 2011-ல் 9 நகரங்கள், 8 பேரூராட்சிகள், 25 பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டு 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இன்றைய பெருநகரமாக சென்னை விரிவடைந்துள்ளது.

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-375-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6327962.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.