Jump to content

யாழ்ப்பாணமும் மக்களும்-ஒரு பெண்ணுக்காக இரு ஆண்களும், ஒரு ஆணுக்காக இரு பெண்களும் {வீடியோ இணைப்பு}


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று வரைக்கும் வீட்டுக்குள்ள இருந்ததுகள் இண்டைக்கு வெளிக்குட்டுதுகள்… இதுகளால பெரிய பிரச்சனையளும் சேந்தெல்லோ வெளிக்குடுது… நாங்களும் என்னத்ததான் சொல்றது. சொன்னாலும் கேக்கிற நிலமேலையோ உதுகள் இருக்குதுகள்… என்று கூறிக்கொண்டு முதுதியவர் ஒருவர் தனது பேரனை கடைக்கண்ணால் பார்க்கிறார்…

இவர்கள் இவ்வாறு நினைக்க காரணம் யார்… இளைஞர்களா??? இல்லை நம் நாட்டுக்குள் ஊடுருவும் அன்னியநாட்டு கலாச்சாரமா???

நாளுக்குநாள் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, திருட்டு… இவைகள் போதாதென்று வீதி ஓரங்களிலும், பற்ரைகளுக்குள்ளும், குப்பை தொட்டிகளுக்குள்ளும், எறிந்துகிடக்கும் சிசுக்கள்…

யாழ்ப்பாண கலாச்சாரம் அதைத்தான் கற்றுக்கொடுத்ததா இளைஞர்களுக்கு??? இல்லை… அவர்களாகவே கற்றுக்கொண்டார்களா??? இந்த கேள்விகளை கேட்டு பதிலை பெறுவதற்குள் இன்னும் பல சிசுக்களை பொறுக்கிக்கொள்ளலாம் குப்பை தொட்டிகளுக்குள்…

அரசியலையும் நல்லவற்றையும் எழுதிவந்த நாளிதழ்களில் இன்று ஒருபடி மேலாக கொலைகளையும், தற்கொலைகளையும், சேர்த்து எழுதிவருகின்றன… இவைக்குகாரணம் நமக்கு அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான காதல் தோல்வியும், கள்ளக்காதலுமே முன்னணியில் நிற்கின்றன…

காதல் என்ற போர்வையில் இன்றைய இளைஞர்கள் சிலர் ஆடும் ஆட்டங்களுக்கு அளவுகணக்கே இல்லை… மக்கள் நடமாட்டம் குறைந்த வீதிகள், கடற்கரை ஓரங்கள், திரைஅரங்குகள் என்று தமக்கான ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கும் இவர்கள் காணும் மக்கள் முகஞ்சுளிக்கும் வண்ணம் நடந்து கொள்கிறார்கள்… இவை போதாதென்று ஒரு பெண்ணுக்காக இரு ஆண்களும், ஒரு ஆணுக்காக இரு பெண்களும் பிரதான தெருக்களில் கைகலப்புக்களிலும் ஈடுபடுமளவுக்கு நமது யாழ்மண் கலாச்சாரம் மேம்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது… சங்ககாலத்தில் புனிதமான வார்த்தையாக கருதப்பட்டு வந்த காதல் இன்றைய இளைஞர்களின் செயற்பாட்டால் காதல் என்றால் காதை மூடும் அளவுக்கு மாற்றப்பட்டுவிட்டது…

இந்த நிலமை மாற ஒவ்வொரு இளைஞனும் தனக்குத்தான் புத்திகூறி திருந்தினால்த்தான் எம் மண், எமது நாடு எமது இனம் செழிப்படைய வாய்ப்புக்கள் உண்டு… இவை ஒரு இளைஞனாக என் மனதில் குமுறிய விடயங்கள்… இனி ஒவ்வொரு இளைஞனாகவும் உங்கள் அனைவரின் உள்ளங்களுக்குள்ளும் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாக மாறட்டும்…

நாளைய எதிர்காலம் இன்றைய இளைஞர்கள் கையில்…

இல்லை இல்லை எங்கள் கையில்…

{நன்றி}http://www.siruppiddy.net/?p=4259

http://www.siruppiddy.net/?p=4259

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.