Jump to content

கடும்போக்குவாதம் நாட்டை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தும் - பைசர் முஸ்தபா


Recommended Posts

கடும்போக்குவாதம் நாட்டை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தும் - பைசர் முஸ்தபா

 
 

 

Buddishim_CI.jpg

கடும்போக்குவாதம் நாட்டை சர்வதேச ரீதிpல் தனிமைப்படுத்தும் என முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நாடடில் மத முரண்பாடுகளை தூண்டும் வகையில் எவரேனும் செயற்பட்டால் அது நாட்டை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த வழியமைக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி சரியான தீர்மானம் எடுப்பார் என்பதில் நம்பிக்கை  இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்நாட்டு சர்வதேச முஸ்லிம்களின் நண்பன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி தைரியமாக ஆதரவளித்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய மதங்களுக்கும் இனங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டியதன் அவசியம் பௌத்த மதத்தில் ஏனைய மதங்களை விடவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இனவாத மதவாத கருத்துக்கள் பிரச்சாரம் செய்வதனை ஊடகங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் மக்கள் நாட்டில் ஒரு அங்குலத்தையேனும் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி இராச்சிய காலம் முதல் நாட்டின் இறைமையை பாதுகாத்துக்கொள்ள முஸ்லிம்கள் போராடியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றுவோரில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஹலால் பிரச்சினையை சிலர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர்.

உலகின் எந்தவொரு நாட்டிலும் ஹலால் சின்னத்திற்கு எதிராக சர்ச்சைகள் எழவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105727/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றுவோரில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

 

 

சகோதரம் என்று முதுகில் தட்டிக் கொண்டு...தமிழைப் பேசி.. தமிழனையே காட்டிக் கொடுக்கிறத எவ்வளவு பெரியமையா கருதிறார்கள்.. அல்லாக்கள் என்று பாருங்கள்.

 

இவங்க எல்லாம் புட்டும் தேங்காய்ப்பாவும். நரகம். :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.