Jump to content

அந்தணர் / ஐயர் / பார்ப்பார் சொல் விளக்கம்


Recommended Posts

முதலில் மருத நிலத்தில் உழவர் என்னும் ஒரு வகுப்பினர் இருந்தனர். பின்பு அவர்கள் காலப்போக்கில் பிரிந்து உழவர், அரசர், வணிகர், அந்தணர் எனப்பட்டனர். ஒரே குலமாய் இருந்த தமிழர்கள் தமது தொழில் முறைக்கு ஏற்ப அதே தொழில் செய்வோரிடம் கொண்டும் கொடுத்து வந்ததால் நாளடைவில் வெவ்வேறு குலத்தினராயினர். அதாவது வேறு தொழில் செய்வோரிடத்தில் பெண் எடுத்து பெண் கொடுத்தால் தத்தம் தொழிலுக்கு ஒத்து வராது என்பதால் தம்மை ஒத்த தொழில் செய்வோரிடத்திலே பெண் எடுத்து பெண் கொடுத்து வந்தனர். பின்னாளில் அது தொடர்பற்ற வெவ்வேறு குலமெனும் கருதும் நிலையை அடைந்து ஒவ்வொருவரும் தத்தம் குலமே பெரிதென எழுதி தனித் தனி குலமாயினர்.
 
அந்தணன் என்னும் பெயர் அந்தணாளன் (அம் + தண் + ஆளன்) என்ற வடிவில் தான் பல இடங்களில் வழங்கப்படுகிறது.
அந்தணாளன் => அம் + தண் + ஆளன் = அழகிய குளிர்ந்த அருளையுடையவன் 
அந்தணன் => அம்+தண்மை+அன் =  அழகிய குளிர்ந்த அருளையுடையவன்  
 
“அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்
கொன்றிய வரூஉம் பொருளுமா ருளவே” (தொல்காப்பியம் - மரபியல்: 68)
 
“அந்த ணாளர்க் கரசுவரை வின்றே” - தொல்காப்பியம் - மரபியல்:. 80)
 
“காமஞ் சான்ற கடைக்கோட் காலை
 ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொழ்டு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”
 
தலைவனுந் தலைவியும் சுற்றத்துடன் இல்லறம் இனிது நடாத்தித் வெறுக்கு மளவும் காம இன்பம் துய்த்து மக்களைப் பெற்று முதுமை கொண்டபின் மக்களிடம் குடும்பத்தை ஒப்படைத்து விட்டு பொது நலத் தொண்டு புரிதலே இல்லறம் நடத்தியதன் பயன் என்பதாம்.
 
அறிவும் பொதுநல ஆர்வமும் உடைய இல்லறம் நீத்த பெரியோர்களே அந்தணர் நிலையில் பொதுநலம் புரிந்து வந்தனர் இவர்களில் ஒரு சிலர் தவ வாழ்க்கை நடத்தி வந்தனர் என்பதை
"நாலிரு வழக்கில் தாபதர் பக்கமும்" 
(உழவர், அரசர், வணிகர், அந்தணர் - நால்வர் )
என்பதால் அறியலாம்.
 
திருக்குறளில் அந்தணர் பற்றி 
 
"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்" - குறள்
- எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர். இங்கே அந்தணர் இலக்கணம் கூறியது மட்டுமின்றி அதை துறவிகள் பெருமை கூறும் நீத்தார் அதிகாரத்தில் வைத்துள்ளார். 
 
"அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்" - குறள்
- அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்
 
இங்கே நூல் என்ற சொல் மேற்காணும் குறள்களில் உணர்த்தும் பொருள் 'ஏர், நுகம் அல்லது கலப்பை' என்பதாகும். இது பற்றி இங்கே காணலாம். http://thiruththam.blogspot.com/2009/11/blog-post_28  இந்தப் பொருளின்படி இந்தக் குறளை இப்படியும் பொருள் கொள்ளலாம். அந்தணர்களாகிய உழவர்களின் ஏருக்கும் அவர்தம் அறச்செயலாகிய பசிப்பிணி போக்குதலுக்கும் அடிப்படையாய் இருப்பது மன்னவனின் செங்கோலாகும்.
 
அந்தணர் போற்றுவது மறைநூல் என்று கொண்டால் ..
"நிறை மொழி மாந்தர் ஆணையிற்கிளந்த 
மறைமொழிதானே மந்திரம் என்ப - தொல்காப்பியம்"
 
பெரியோர் தம் ஆணையாற் சொல்லப்பட்டு பிறரியாமல் மறைத்துச் சொல்லப்படும் சொற்றொடரெல்லம் மந்திரம் எனப்படும்.
  
"நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து
மறை மொழி காட்டிவிடும்"
 
நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும்.
 
மேற்கூறியவற்றால் அந்தணர் என்போர் அறவோர்.  அவர் போற்றுவது நூல் மற்றும் அறம். நூல் என்பதற்கு மறைமொழி அல்லது மந்திரம் என்றே பலர் பொருள் தருகின்றனர். ஆனால் சிலர் நூல் என்பதற்கு  'ஏர், நுகம் அல்லது கலப்பை' என்றும் பொருள் தருகின்றனர். எதுவாகினும் அந்தணர் என்போர் உழவர், அரசர், வணிகர்,ஆயர், வேட்டுவர்  என்ற வகுப்பினரில் இல்லறம் முற்றிய பெரியோரே அன்றி தனி வகுப்பினர் அல்லர் என்று புலனாகும்.
 
தமிழ்த் துறவிகளான அந்தணர்கள் பெரும்பாலும் ஓரிடத்தில் நிலையாக தங்கியிராமல் ஊர்தோறும் சென்ற மக்களுக்கு நன்னெறி பகன்று வந்தனர். ஆகவே வெயிலுக்காக குடையும் செருப்பும், நீர் மொண்டு கொள்ள செம்பும், வழித் துணைக்கு ஊன்றுகோலும், தங்குமிடத்தில் விரித்துக் கொள்ள விரிப்பும், நூல்களும் கொண்டவராய் இருந்திருந்தனர் என்பதை கீழ உள்ள தொல்காப்பிய பாடலிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
 
“நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய’’
 
தமிழ முனிவரான அந்தணர், சிறந்த அறிஞராயும் ஆசிரியராயும் ஆக்கவழிப்பாற்றலுள்ளவராயும் இருந்த மையின், அரசர்கள் அவர்களை மதியுரைக்கும் தற்காப்பிற்கும் துணைக் கொண்டனர். இதையே, திருவள்ளுவர் பொருட் பாலில், ‘பெரியாரைத் துணைக்கோடல்’, ‘பெரியாரைப் பிழையாமை’ என்ற அதிகாரங்களிற் கூறுவர். அரசர் போருக்குச் செல்லும் காலத்தில் அந்தணர் அரசப் பொறுப்பை ஏற்றனர். இச்செய்தியை,
அந்த ணாளர்க் கரசுவரை வின்றே” தொல்காப்பியம்  சுட்டிக் காட்டுகின்றது.
 
ஐயர், பார்ப்பார் பற்றி மற்றொரு நாளில் எழுதுகிறேன்...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் ஆண்ட பேராலை ஊரைச் சுத்தி சனங்களுக்கிடையிலை
பிரிவை உருவாக்கிய அந்த அணர்கள் அந்தக் காலத்திலை
அரச சபையிலை அரசனுக்கு எந்த மாதிரி மக்களை அடக்கி ஆளலாம்
எண்டும் பாடம் நடத்தினவையாம்

Link to comment
Share on other sites

வரவுக்கு நன்றி பாரியாரை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொழில்சார்ந்து சக மனிதனை இப்படி பாகுபடுத்தி அழைப்பது சாதியம் இல்லையா..???! இதே இடத்தில்.. வேறு சாதியக் கூறுகள் உச்சரிக்கப்பட்டிருந்தால்..??????! உடனே.. கீழ்சாதி.. மேல்சாதி.. தலித்து.. என்று கொண்டு வந்துவிடுவார்களே.

 

இங்கும் தமிழும் நயமும் உள்ளது..??! :rolleyes:

Link to comment
Share on other sites

தமிழர் மரபில் அந்தணர், ஐயர், பார்ப்பனர் ஆகியோர் யாவர் என்ற கேள்விக்கு விடை கண்டால், திராவிடம் கூறி வரும் ’பார்ப்பன எதிர்ப்பு’ குறித்த தெளிவு கிடைத்துவிடும்.

ஐயர் என்ற சொல் ’தலைவர் 002F சமூகத் தலைவர்’ எனும் பொருளைக் குறிப்பதாகும்.

’பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். கற்பு மணத்தைச் சமூகத் தலைவர்கள் உருவாக்கினர் என்ற பொருளிலேயே இச்சொல் கையாளப்பட்டுள்ளது. ஐயர் என்பது, பார்ப்பனரில் ஒரு பிரிவினரைக் குறிப்பதாகப் பின்னாட்களில் அப் பார்ப்பனர்களாலேயே மாற்றிக்கொள்ளப்பட்டது.

அந்தணர் என்னும் பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் அறிவாளர்கள் ஆவர். அரசு உருவாக்கத்தின்போது, அரசர்களுக்கான அறிவுரைகள் வழங்கியும், மெய்யியல் துறைகளில் ஈடுபட்டும் வந்தவர்கள் அந்தணர் ஆவர். இவர்கள் தமிழர்களே.

சான்றாக, பதிற்றுப் பத்து தொகை நூலில் இரண்டாம் பதிகம் பாடிய குமட்டூர் கண்ணனார் ஒரு அந்தணர்(பதிற்றுப் பத்து தெளிவுரை - புலியூர் கேசிகன்). இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் எனும் சேரப் பேரரசரின் அவையில் இருந்தவர். குமட்டூர் கன்ணனார் பாடிய பதிகங்களைப் படித்தாலே, அக்காலத் தமிழரின் ஆரிய எதிர்ப்பின் வீரியம் விளங்கும்.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், இமையம் வரை படையெடுத்துச் சென்று ஆரிய மன்னரைக் கண்டவிடத்தில் எல்லாம் அழித்து வெற்றி வாகை சூடியவன். இவ்வரலாற்றை கூறும் பதிகத்தில், இமயவரம்பன் ஆளும் நாட்டின் எல்லையை, ‘இமிழ்கடல் வேலித் தமிழகம்’ என்று குறிக்கிறார் கண்ணனார். இமயவரம்பன் இமயம் வரை சென்று ஆரியரை வென்றாலும் அவனது நாடு தமிழகம் என்பது தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆரிய அரசர்கள் தமிழ் அரசனான இமயவரம்பனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டிய செய்திகளையும் குமட்டூர் கண்ணனார் பதிவு செய்துள்ளார்.

’அந்தணர் என்போர் ஆரியப் பார்ப்பனர்தான். தொல்காப்பியம் குறிப்பிடும் அந்தணர் எனும் பிரிவு ஒன்றே, தமிழர் மரபில் பார்ப்பன ஆதிக்கம் இருந்தது என்பதை நிறுவும் சான்று’ என்று ஒரு கற்பிதம் தமிழகத்தில் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. அக் கற்பிதத்தை மறுக்கவே இந்தச் சான்று முன் வைக்கப்படுகிறது.

குமட்டூர் கண்ணனார் எனும் அந்தணர், ஆரியர் அழிவுற்ற காட்சிகளைப் பின்வருமாறு விவரிக்கிறார்:

‘இமயவரம்ப மன்னனே, நீ படையெடுத்துச் சென்ற நாடுகள் எப்படி அழிந்தன தெரியுமா? இமைய மலைச் சாரலிலே கவரி மான்கள் தாம் உண்ட நரந்தம் புல்லைக் கனவில் எண்ணிப் பார்த்தபடிப் படுத்திருக்கும். (அதுபோல செம்மாந்து இருக்கும்) ஆரியர் நிறைந்த பகுதிகளையும் பிற பகுதிகளையும் தாக்கி அழித்தாய். மரணம் வந்து தாக்கிய பிறகு பிணமானது, ஒவ்வொரு நொடியும் அழிந்து கொண்டேயிருக்குமே, அதேபோல் தமது தலைவர்களை இழந்த நாடுகள் கணத்துக்குக் கணம் அழிந்துகொண்டிருந்தன. வயல்கள் எல்லாம் பாழ்பட்டு அங்கே காட்டு மரங்கள் வளரத் தொடங்கிவிட்டன. அவர்களது கடவுள்கள் எல்லாம் காட்டுக்குள் சென்றுவிட்டன. காடுகளின் ஓரங்களில், உனது படையினர் இளம் பெண்களோடு வெற்றிக் களிப்பில் ஆடி மகிழ்கின்றனர்’

அந்தணர் எல்லாரும் ஆரியப் பார்ப்பனர் என்றால், ஆரியர் அழிந்த நிகழ்வை இவ்வளவு உற்சாகத்துடன் பாடியுள்ள குமட்டூர் கண்ணனார் ஆரியரா?

தாம் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குமட்டூர் கண்ணனார் குறிப்பிடுகிறார்.

‘எமது ஆடைகள் பருந்தின் நனைந்த இறக்கைகள் போலக் காணப்பட்டன. எம் உடைகளை மண் தின்று கந்தலாக்கியிருந்தது. அப்படி வந்த எமக்குப் பட்டாடைகள் கொடுத்தாய் அரசே. வளைந்த மூங்கில் போலத் தோன்றும் எம் பாணர் மகளிர் அனைவருக்கும் ஒளிவீசும் அணிகலன்கள் வழங்கினாய்’ என்ற வரிகளிலிருந்து குமட்டூர் கண்ணனார் பாணர் குலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது.

பாணர்கள் என்போர், இசை, கூத்து ஆகிய கலை நிகழ்வுகளின் வல்லுநர்கள். ஆயினும், அவர்கள் நேரடி உற்பத்திசாராத மரபினர் என்பதால், அவர்கள் வறுமையில் வாடியதும் உண்டு. அரசுருவாக்கம் நிகழத் தொடங்கிய பின்னர், அரசர்களைப் பாடியும் அவர்களுக்கு அரசு நடத்தும் முறைமை கற்றுக் கொடுத்தும் தமது இருத்தலை உறுதிப்படுத்தினர் பாணர்கள். விறலியர், கூத்தர் ஆகிய பிற பிரிவினரும் இதே நிலையை ஒத்தவர்களே.

இதேவேளை, பாணர் உள்ளிட்ட உற்பத்தி சாரா பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் வர்க்க நிலையில் பின் தங்கியே இருந்தனர். உற்பத்தியில் ஈடுபட்ட வேளாண் மாந்தரும் அவரையொத்த பிறரும் வர்க்க நிலைமையில் மேம்பட்டிருந்தனர். பின் தங்கிய வர்க்கத்தினராக இருந்தாலும், பாணர்களைத் தமிழ் அரசர்கள் தமக்கு நெருக்கமாக வைத்துப் போற்றினர்.

எனது இக்கூற்றை மெய்ப்பிக்கும் தொல்காப்பிய விதி ஒன்றைக் காண்போம். அகத்திணையியலில் தலைவனது சமூகப் பங்களிப்புகளாகக் கூறப்பட்டுள்ளவை;

‘கல்வி கற்றல், போர்ப் பயிற்சி பெறல், சிற்பக் கலை கற்றல், இவற்றிற்காக வெளியூர் செல்லுதல், முரண்பட்ட இரு அரசர்களிடையே பகை நீக்குதல், அரசர்களிடையே தூதராகச் செல்லுதல், அரசர்களுக்குத் தூதாகச் செல்லும்போதே அரசரது வலிமை, செய்யப் போகும் வேலையின் தன்மை, துணையாக வருவோரின் வலிமை ஆகியவற்றை ஆராய்தல்....’ உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன (அகத்திணையியல் 44).

இவ்விதியில், ‘தலைவன்’ என்ற சொல் இருப்பதால் இவ்விதி அரசனுக்கானது என்று பொருள் கொள்ளல் தவறு. தலைவன் எனும் சொல்லைத் தொல்காப்பியர் அனைத்துப் பிரிவினருக்கும் கையாண்டுள்ளார். அரசு உருவாக்கத்தின்போதும் சமத்துவச் சமூக அமைப்பின் கூறுகளை முன்னிறுத்தியவர் நம் தமிழர் என்பதற்கான சான்று மேற்கண்ட தொல்காப்பிய விதி.

இந்த வகையிலேயே குமட்டூர் கண்ணனார் உள்ளிட்ட எண்ணற்ற அறிவாளர்கள் அரசருக்கு நெருக்கமாக இருந்தனர்.

ஆரியரது அரசக் கோட்பாடுகளோ இதற்கு நேர் எதிரானவை.

‘அரசாட்சி நடத்துவது என்பது உதவியாளர்களை வைத்துக்கொண்டால்தான் சாத்தியமாகும். அரசன் அமார்த்யாயர்களை அமர்த்திக்கொள்ள வேண்டும்.அவர்கள் அபிப்ராயங்களைக் கேட்க வேண்டும்’ என்றான் சாணக்கியன். அமார்த்தியாயர்கள் என்போர் ஆரியப் பார்ப்பனர் ஆவர். அவர்களிலும் வர்க்கத்தால் மேம்பட்டோர் ஆவர். அர்த்த சாத்திர விதிகளின்படி, ’அரசன் அமார்த்தியாயருக்குத் தெரியாமல் எதுவும் செய்யக் கூடாது. அரசனுக்கு உணவு அளிக்கும் உரிமை அரசிக்குக் கூட இல்லை. அமார்த்யாயர்களின் மேற்பார்வையில்தான் உணவு அளிக்கப்பட வேண்டும். அரசன் தன் வாரிசுகளுடன் கூட நெருக்கமாக இல்லாதவாறு பல விதிகள் விதிக்கப்பட்டன.

எல்லாவற்றிற்கும் மேலாக, அரசருக்கும் மக்களுக்குமான உறவு வெகு தொலைவில் இருந்தது. அமார்த்யாயர் எனப்பட்ட ஆரியப் பார்ப்பனரே, உண்மையான ஆட்சியாளர்களாக இருந்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேதம், கடவுள் ஆகியவற்றின் பெயரால் ஆரியப் பார்ப்பனர்கள் செய்து முடித்தனர்.

இந்தக் காலத்தில்தான், தமிழர் மரபு சமூகத்தின் கடைநிலை மாந்தரையும் அரசருக்கு ஆலோசனை சொல்லும் உரிமை உடையவராக அங்கீகரித்தது. அர்த்த சாத்திரம் எழுதப்பட்ட காலம் தொல்காப்பியத்திற்குப் பிந்தியது என்றாலும், அர்த்த சாத்திரத்தின் கூறுகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே ஆரியரிடையே வழக்கத்தில் இருந்தனவே.

ஆரியப் பார்ப்பனரான அமார்த்தியாயர் தமது சிறப்புத் தகுதிகளாகக் கூறிகொண்டவற்றில் ’நிமித்தம் பார்க்கும் திறன்’ ஒன்றாகும். அரசருக்கு நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்துச் சொல்வது இதன் முக்கியப் பணி.

நிமித்தம் என்பது வானியல் அறிவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இந்த வானியல் அறிவும் தமிழரிடமிருந்து ஆரியர் திருடியதே. இது குறித்த ஆழமான ஆய்வு நூல், அறிஞர் குணா எழுதிய ‘வள்ளுவத்தின் வீழ்ச்சி’ ஆகும். தமிழர் அறிவைத் தமது பிழைப்புக்காக மூட நம்பிக்கையாக மாற்றியவரே ஆரியப் பார்ப்பனர் என்பதை உணர்த்துவதற்காகவே இதை இங்கே குறிப்பிடுகிறேன். ஆயினும், பார்ப்பார் குறித்த இக்கட்டுரைக் கருத்துகளை குணா மீது ஏற்றவில்லை.

சங்ககாலத்தில் நிமித்தம் பார்ப்பதைப் பிழைப்பாகக் கொண்டு செயல்பட்டோரும் தமிழகத்தில் ‘பார்ப்பார்’ என்று அழைக்கப்பட்டனர். இப் பார்ப்பாரில் ஒரு பகுதியினர், தொல்காப்பியர் காலத்திலும் சங்க காலத்தின் பிற்பாதிக் காலம் வரையிலும் சமூகத்தின் கடைநிலை மாந்தராகவே இருந்தனர். ஆரியப் பார்ப்பனர், அரசதிகாரத்தின் மறைமுகத் தலைவர்களாக விளங்கினர். தமிழகப் பார்ப்பார் இதற்கு நேர் எதிர் நிலையில் இருந்தனர். இதற்கான சான்றுகளைக் காண்போம்.

பார்ப்பாரின் சமூகச் செயல்பாடுகளாகத் தொல்காப்பியர் கூறுபவை:

‘தலைவன் (கணவன்) தலைவியைப் (மனைவியை) பிரிந்து செல்லும்போது அவனிடம் சென்று ‘நீ பிரிந்து சென்றால் தலைவியின் வேட்கை மிகும்’ எனக் கூறுதல், தலைவன் செல்வதற்கு வாய்ப்பான நிமித்தம் பார்த்துக் கூறல், தலைவியிடம் சென்று ’தலைவன் பிரிந்து சென்றான்’ எனக் கூறல், இவை போன்ற பிற செயல்கள் அனைத்தும் பார்ப்பாருக்கு உரியனவாகும்’ - (தொல்காப்பியம், கற்பியல்-36)

அகநானூற்றுப் பாடல் ஒன்று பார்ப்பாரைப் பற்றிப் பின்வருமாறு விவரிக்கிறது:

‘உப்பு வணிகரின் பொதிகளைச் சுமக்கும் கழுதைகளைப் போல் பாறைகள் கிடக்கும் இடத்தின் வழியாக, தூது செல்வதையே பல காலமாகத் தொழிலாகக் கொண்டுள்ள பார்ப்பான் (‘தூதொய் பார்ப்பான்’) செல்கிறான். அப் பார்ப்பான், மடியிலே வௌ;ளிய ஓலைச் சுவடியை வைத்திருக்கிறான். அவன் வருவதைப் பார்க்கும் மழவர்கள் ’இவன் கையில் வைத்திருப்பது பொன்னாக இருக்கலாம்’ எனக் கருதுவர்.அப்போதே அவனைக்கொன்றும் வீழ்த்துவர். இறந்துகிடக்கும் அப்பார்ப்பானுடைய ஆடைகள் கந்தலாக இருப்பதைக் கண்டதும் அம் மழவர்கள், வெறுப்பில் தம் கைகளை நொடித்தபடியே செல்வர்’- (அகநாநூறு 337)

குறுந்தொகைப் பாடல் ஒன்று பார்ப்பாரை வம்புக்கு இழுக்கிறது.

‘பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருங்க மரத்தின் தடியில் கமண்டலத்தை உடைய, நோன்பிருந்து உண்ணும் வழக்கமுடைய பார்ப்பன மகனே, உங்களுடைய எழுத்து வடிவம் இல்லாத கல்வியாகிய வேதத்தில் (’எழுதாக் கற்பு’) உள்ள இனிய உரைகளில், பிரிந்து சென்ற தலைவன் தலைவியை மீண்டும் புணரச் செய்யும் மருந்து உள்ளதா?’--(குறுந்தொகை 156)

பார்ப்பார் எனப்பட்டோர் தூது செல்வதற்கும் அதற்கேற்ற நிமித்தம் பார்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டனர் என்பவற்றை இப்பாடல்கள் விளக்குகின்றன. மேலும் அவர்களைப் பிற சமூகத்தினர் இழிவாக நடத்தியமையும் இப்பாடல்களிலிருந்து புலனாகின்றன. குறிப்பாக, குறுந்தொகைப் பாடல், வேதத்தைக் கேலி செய்கிறது என்றே கொள்ளலாம். தமிழ் மொழி தொன்மை இலக்கணங்களுடன் செம்மாந்து இருக்கும்போது, பார்ப்பாரின் வேதங்கள் எழுத்து வடிவம் கூட இல்லாமல் வெறும் வாய்வழியாகவே வேதங்கள் பாடி பரப்பபட்டதை அப்பாடல் குத்திக் காட்டுகிறது. மேலும், வேதங்களின் அடிக் கருத்தியல் மறுபிறப்புக் கொள்கையைக் கொண்டவை. இப்பிறப்பில் இன்பம் இல்லை என்பவை. அக வாழ்க்கையை எதிர்த்தவை. ஆதலால்தான், ’பார்ப்பான் மகனே...உன் வேதம் புணர்ச்சிக்கு உதவுமா?’ எனக் கேட்கிறார் புலவர்.

இப்பாடல்களில் குறிப்பிடப்படும் பார்ப்பார் அனைவரும் ஆரியர் அல்லர். குறுந்தொகைப் பாடலில் வரும் ’பார்ப்பான் மகன்’ மட்டும் ஆரியப் பார்ப்பானாக இருக்கலாம். அல்லது ஆரியப் பார்ப்பாரது கருத்தியலைத் தழுவிய தமிழராகவும் இருக்கலாம்.

பார்ப்பாரில் ஆரியக் கருத்தியலைக் கலந்தனர் ஆரியர்கள். தமிழ்ப் பார்ப்பார்கள் தமது வானியல் அறிவால் அரசருக்கு நெருக்கமாக இருந்தனர். இந்த இடத்தைப் பிடிக்க ஆரியர் போட்டியிட்டனர். இதன் விளைவாகவே, பார்ப்பார் குலம் ஆரியச் சார்புடையதாக மாறியது. வானியலை ஆரியர் சோதிடம் ஆக்கினர். வான சாஸ்திரம் என்றனர்.

நான்கு வேதங்களை முன்னிறுத்தல், வேள்விகள் நடத்தி ஆரியக் கடவுள் கோட்பாட்டைத் தமிழ் அரசரிடம் பரப்புதல், நோன்பு இருத்தல், நிமித்தம் என்ற பெயரில் சோதிடக் கருத்துகளை அதிகரித்தல், இல்லறத்தை வெறுக்கச் செய்து மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தல் ஆகியவை ஆரியர் மேற்கொண்ட திட்டமிட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளாகும். இப் படையெடுப்பில் தமிழ்ப் பார்ப்பாரும் அந்தணரும் நேரிடையாகப் பாதிக்கப்பட்டனர். அரச உருவாக்கம் ஆரியரது பண்பாட்டுப் படையெடுப்பை விரைவுபடுத்தியது.

ஆகவே, பார்ப்பார் எனும் சாதி முற்றும் முழுதாக ஆரிய இறக்குமதி அல்ல. அதேவேளை, தமிழ்ப் பார்ப்பார்கள் வானியல் அறிவாளர் குலத்தினராக இருந்து ஆரியபள் பார்ப்பனர் வருகையினால் முக்கியத்துவம் இழந்து சிதைந்தவர் எனலாம்.

‘மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்’ - என்றார் திருவள்ளுவர்.

‘கல்வியை மறந்தாலும் கற்றுக்கொள்ளலாம். பார்ப்பாரது பிறப்பு ஒழுக்கம் குறைந்தால் கெட்டுவிடும்’ என்பது இக்குறளின் நேரிடைப் பொருள். இக்குறளில், பார்ப்பானது பிறப்பு ஒழுக்கம் என்பது என்ன?

பிறப்பு ஒழுக்கம் என்பது ஒருவரது பிறப்பிலிருந்து தோன்றி வரும் ஒழுங்காகும். மரபு அறிவு, கலை முதலியவை அந்தந்த மரபு சார்ந்த குலத்தினருக்கே வழி வழியாக வருபவை. ஆனால், கல்வி என்பது பிறரால் கற்றுக் கொடுக்கப்படுவது. இந்த முரணையே, திருவள்ளுவர் இக்குறளில் முன்வைக்கிறார்.

’பார்ப்பான் தனது மரபு அறிவைக் குன்றச் செய்தால் அது கெட்டுவிடும். கல்வி அப்படிப்பட்டதல்ல, அதை மறந்தாலும் கற்றுக்கொள்ளலாம்’ என்கிறார். பார்ப்பாரது பிறப்பு/மரபு அறிவு எது? வானியல் அறிவே!

இக்குறளில் திருவள்ளுவர் பார்ப்பான் என அழைப்பது, ஆரியப் பார்ப்பனரையே எனக் கருதும் போக்கும் உள்ளது. அது சரியல்ல. ஆரியப் பார்ப்பார் என நாம் அழைக்கும் பிரிவினரின் ஒழுக்கத்தை வள்ளுவர் ’ஆசாரம்’ என்ற சொல்லால் வேறு ஒரு இடத்தில் குறிக்கிறார்.

’கயமை’ எனும் அதிகாரம் ஆரியப் பார்ப்பனரின் கருத்தியல்களைக் கடுமையாகச் சாடுகிறது.

‘தாம் கேட்ட வேதத்தைப் பிறருக்குக் கற்றுக் கொடுத்துப் பரப்புவோர் கயவர்’ என்கிறார் வள்ளுவர்.

’அறைபறை அன்னர் கயவர் தாங்கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்’ என்பது அக்குறள்.

‘அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது’-எனும் குறளில், ‘கீழ்மக்களது ஒழுக்கம் (ஆசாரம்) அச்சம்தான். அதைத் தவிர வேறு ஏதேனும் ஒழுக்கம் உண்டு என்றால் அது ஆசைப்படுவதுதான்’ என்கிறார்.

ஆரியப் பார்ப்பனர் துவக்கம் முதலே, வாழ்வைக் கண்டு அச்சப்படுபவர்தான். தமது அச்சங்களைப் போக்கவே எதற்கெடுத்தாலும் கடவுளிடம் வேண்டும் வழக்கம் அவர்களிடையே தோன்றியது. ஆனால், ஆசைப்படுவதில் அவர்கள் சளைத்தவர்கள் அல்லர். துணிந்து செய்ய அச்சப்படுவது, ஆசைகளைப் பெருக்கிக்கொண்டே போவது ஆகிய இரு முரண்கள்தான் ஆரியப் பார்ப்பனியத்தின் அனைத்து ஊழல்களுக்குமான அச்சாணிகள்.

இதே மனநிலை, அரசதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் இருப்பதுண்டு. அச்சம், ஆசை ஆகிய இவ்விரண்டு பலவீனங்களைக் கொண்டுதான் ஆரியப் பார்ப்பனர், தமிழ் அரசர்களைத் தம்போக்குக்கு வளைத்தனர். இப்போக்கை வள்ளுவர் மேற்கண்ட குறளில் குறிக்கிறார்.

‘தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்’

-என்பதும் ’கயமை’ அதிகாரக் குறளே.

‘தேவர்களும் கயவர்கள்தான். ஏனெனில் அவர்களும் கயவர்கள் போல, தாம் விரும்பிய அனைத்தையும் செய்கின்றனர்’ என்பது இதன் பொருள். ஆசைப்படட அனைத்தையும் செய்வது கயமை என்கிறார். ஆதலால் ‘தேவர்கள்’ கயவர் என்கிறார். இது ஆழ்ந்து நோக்கத்தக்க குறள். ஆரியக் கருத்தியல்கள் மீது வள்ளுவர் வீசிய கணைகள் இவை.

இந்த அடிப்படையில், ’மறப்பினும்...’ குறளில் உள்ள ‘பார்ப்பான்’ எனும் சொல்லை ஆய்ந்தால்தான் முழு விளக்கம் கிடைக்கும். பார்ப்பார் குலத்தினர், தமிழ் மரபில் வந்தோர். அவர்களது குல அறிவான வானியலை ஆரியப் பார்ப்பனர் திருடிக் குன்றச் செய்தபோது வள்ளுவர் இயற்றிய குறள் அது எனக் கொள்ளலாம். இதிலிருந்து, பார்ப்பாரது அறிவையும், அங்கீகாரத்தையும் ஆரியப் பார்ப்பனர்கள் அரசதிகாரத் துணையுடன் தமதாக்கிக் கொண்டனர் என்பது மேலும் உறுதிப்படுகிறது.

ஆரியப் பார்ப்பனர், அரசதிகாரத்துடன் நெருங்கி அடைந்த ஆதாயங்கள் எண்ணிலடங்காதவை. இறையிலி நிலங்கள், பிரமதேய நிலங்கள் ஆகிய பெயர்களில் ஆரியப் பார்ப்பனர்களுக்கு தமிழ் அரசர்கள் வழங்கிய கொடைகள் அனைத்திற்கும் ஆதாரமாக இருந்த வழக்கம் ஒன்றை இங்கே காண்போம்.

குமட்டூர் கண்ணானாருக்கு இமயவரம்பன், 500 கிராமங்களையும் தென் தமிழகத்தில் தனக்கு வரும் அரசு இறையில் ஒரு பங்கினையும் வழங்கினான் என்கிறது பதிற்றுப் பத்து. தமிழ் அந்தணர்களுக்குத் தமிழ் அரசர்கள் இவ்வாறான இறையிலி வழங்கும் வழக்கம் இருந்ததை இச் சான்று உணர்த்துகிறது. இந்தத் தமிழ் அந்தணர்களின் ஃ அறிவாளர்களின் இடத்தைத்தான் ஆரியப் பார்ப்பனர்கள் பிடித்தனர்.

நாடு பிடித்தல், சுரண்டுதல், ஏற்றத் தாழ்வுகளை அதிகரித்தல் ஆகியவை ஆரியரது கொள்கைகள். மனுநீதியும் அர்த்த சாத்திரமும் இவற்றையே வலியுறுத்தின. தமிழர் மரபு இந்தச் சுரண்டல் கோட்பாடுகளை எதிர்த்து வந்தது.

தொல்காப்பியம் முதல் வள்ளலார் பாடல்கள் வரை இந்த ஆரியக் கோட்பாட்டு எதிர்ப்பு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீடிப்பதைக் காணலாம். ஆரியம் என்பது சாதியம் மட்டும் அல்ல; அது தமிழின ஒழிப்புக் கோட்பாடு. ஆரிய எதிர்ப்பு என்பது சாதிய எதிர்ப்பு மட்டும் அல்ல; தமிழ் உரிமையை நிலைநாட்டும் போராட்டம்; தமிழர் தாயகத்தைக் காக்கும் போராட்டம்; தமிழர் மரபுவழி அறிவாற்றலை மீட்டெடுக்கும் போராட்டம். இந்தப் புரிதலும் தெளிவும் தமிழ்த் தேசியர்களுக்கு அடிப்படையாகும்.இந்தப் போரட்டத்தையே தமிழர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆரியருக்கு எதிரான நேரடி போர்கள் நடத்தி, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் உள்ளிட்ட பேரரசர்கள் வெற்றிவாகை சூடினர்.

தமிழரது போர் மறத்தின் முன் நிற்கவியலாத ஆரியர், தமிழர் நாகரிகத்தில் கலந்து அதைச் சீரழிக்க முற்பட்டனர். இதோடு நில்லாமல், தமிழரது அறிவாற்றலைத் தமதாக்கிக் கொண்டனர். தமிழரது உழைப்பாற்றலைச் சுரண்டிக் கொழுத்தனர். இதுவே ஆரியர் நம்மீது நடத்திய பண்பாட்டுப் படையெடுப்பாகும்.

Link to comment
Share on other sites

தொழில்சார்ந்து சக மனிதனை இப்படி பாகுபடுத்தி அழைப்பது சாதியம் இல்லையா..???! இதே இடத்தில்.. வேறு சாதியக் கூறுகள் உச்சரிக்கப்பட்டிருந்தால்..??????! உடனே.. கீழ்சாதி.. மேல்சாதி.. தலித்து.. என்று கொண்டு வந்துவிடுவார்களே.

 

இங்கும் தமிழும் நயமும் உள்ளது..??! :rolleyes:

 

கருத்துக்கு நன்றி நெடுக்ஸ்.

ஒரு மனிதன் மருத்துவம் சார்ந்த தொழில் செய்வதால் அவனை மருத்துவர் என்ற அழைப்பதில் தவறில்லை. இதில் சாதியம் இல்லை. ஆனால் அவன் மருத்துவர் என்பதாலே அவனுக்கு சமூகத்தில் சக மனிதர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் மறுக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும் தான் சாதியம்.  

கொஞ்சம் வரலாறை புரட்டுங்கள் அப்பொழுதுதான் சாதியம் பற்றியும் சாதியின் பெயரால் இழைக்கப்பட்ட அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் தெரிய வரும் !!

 

Link to comment
Share on other sites

தமிழர் மரபில் அந்தணர், ஐயர், பார்ப்பனர் ஆகியோர் யாவர் என்ற கேள்விக்கு விடை கண்டால், திராவிடம் கூறி வரும் ’பார்ப்பன எதிர்ப்பு’ குறித்த தெளிவு கிடைத்துவிடும்.

...........................

தமிழரது போர் மறத்தின் முன் நிற்கவியலாத ஆரியர், தமிழர் நாகரிகத்தில் கலந்து அதைச் சீரழிக்க முற்பட்டனர். இதோடு நில்லாமல், தமிழரது அறிவாற்றலைத் தமதாக்கிக் கொண்டனர். தமிழரது உழைப்பாற்றலைச் சுரண்டிக் கொழுத்தனர். இதுவே ஆரியர் நம்மீது நடத்திய பண்பாட்டுப் படையெடுப்பாகும்.

 

மிக விரிவான தகவலுக்கு நன்றி பொன்மலர்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.