Jump to content

தேவையும் ஆசையும்


Recommended Posts

தேவைக்கும் ஆசைக்கும் இடையில் தமிழீழம் என்ற லட்சியத்திற்க்கு இமக்கிரிகைகள் நடக்கின்றது. இதுவே எமது இனத்தின் வரலாற்றுத் தவறுகளுக்கான தண்டனையுமாகின்றது. ஆனால் பாவம் ஒரு பக்கம் பழி ஒருபக்கம் என வறுமைப்பட்ட மக்களே இறுதியில் செத்து மடிகின்றனர்.

வதை முகாம்களில் வாழும் மக்களுக்கும் சிங்களத்தின் பிடிக்குள் இருக்கும் மக்களுக்கும் தமிழீழம் தேவையான ஒன்று. இது பொருளாதாரம் பாதுகாப்பு போன்றன அடிப்படையில் சுதந்திரமான நோக்கத்தை கொண்டது. புலம்பெயர்வாழ் மக்களுக்கு பொருளாதராம் பாதுகாப்பு போன்ற நோக்கங்களுக்கு அப்பால் தமிழீழம் பெரு விருப்பம் சார்ந்த ஒன்றாக இருக்கின்றது.

ஒரு மனிதன் பாதுகாப்புடனும் பொருளாதார நொருக்கடிகளை சமாளித்து வாழ்வதற்கும் அவனது சொந்த தேசம் அவசியமா என்று ஒரு கேள்வி எழும் போது அவசியம் இல்லை என்ற பதிலாக புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இருக்கின்றார்கள்.

ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்ட ஒரு சுதந்திர தேசம் குறித்த சிந்தனை என்பது லண்டன் கனடா ஜேர்மனி பிரான்ஸ் சுவிஸ் அவுஸ்த்திரேலியா போன்ற நாடுகளுக்கு நகர்ந்து விடுதல் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டு நீண்டகாலம் ஆகிவிட்டது.

ஒரு நகர்தலின் போது மொழி கலாச்சார பாண்பாடு போன்றனவற்றை மூட்டைகட்டிக்கொண்டு மூட்டைக்குள்ளே கடவுளர்களையும் போட்டுக்கொண்டு நகர்ந்து விடலாம். தேசியக் கூற்றில் எஞ்சியிருப்பது நிலம் மட்டுமே. அதைத்தான் தூக்கிக் கொண்டு நகர முடிவதில்லை.

நிலத்தை நம்பி சீவியம் நடத்திய வறுமைப்பட்ட மக்களே எஞ்சிநிற்கின்றனர். அவர்களும் சுதந்திரம் குறித்த மேற்கூறிய சிந்தனைக்குள் சிறைப்பட்டவர்களாக நகர்தலை விருப்பமாக கொண்டு நிற்கின்றர்.

இத்தால் முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒரு சுதந்திர தேசத்திற்கான அத்தியாவசியம் எங்களுக்குள்ளாகவே சிதைக்கப்பட்டுள்ளது என்பதையே ஆகும்.

இதுவே ஒரு பாரிய தோல்வி நிலை. இதன் அடுத்த கட்டம் என்னும் சிதைந்து சிதிலமாகி உருத்தெரியாமல் போகும் என்பதுவே யதார்த்தம்.

இது எவ்வாறெனில் புலம்பெயர்தேசத்தின் அடுத்த தலைமுறைக்கு தமிழீழத்தின் மீதான பெரு விருப்பம் இந்த தலைமுறைக்கு இருப்பது போல் நிச்சயம் இருக்கப்போவதில்லை. மூட்டைகட்டி காவிவந்த தேசியச் சொத்துக்களான மொழி கலாசாரம் பண்பாடுகள் போன்றன விரையமாகிக் கொண்டும் கலப்படமாகிக் கொண்டும் உள்ளது.

இதேபோல் நாட்டில் மக்கள் விரக்தி நிலைக்குச் சென்று அடிமைத்தனத்தை இயல்பாக ஏற்று கிடைத்தளவு வாழ்வே போதுமானது என்ற நிலைக்கு அடுத்த தலைமுறை நகர்கின்றது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் அரசகட்டுப்பாட்டில் வந்த பின்பு உருவாகிய தலைமுறையிடம் இந்த இயல்பு நிலையை காண முடியும். என்னும் பதினைந்து வருடங்களின் பின்பு தமிழீழத்தின் அனைத்து இடத்திலும் இதே இயல்பு நிலையை காண முடியும். தேவைகளில் இருந்தும் தமிழீழம் விலகிச்செல்லும் தூரதிஸ்ட நிலையே இதுவாகும்.

தேர்வுகளில் வெட்டுப்புள்ளிகள் என்றதில் கிழர்ந்தெழுந்த காலமெங்கே இன்று பசியால் தினம் சாகும் நிலையில் உணர்வெங்கே. இன்று எதைச்செய்தால் என்ன அமைதியாக இருக்க வேண்டியதுதான் என்ற நிலைக்கு எவ்வளவு சாதாரணமாக வந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ளுதல் அவசியமாகின்றது.

மனிதனை இயக்கும் மகத்தான சக்திகளான தேவை மற்றும் ஆசை இரண்டில் இருந்தும் இலட்சியம் வழுவுகின்றது. இந்த நிலையில் தோல்வி என்பது தமிழீழத்தை பூர்வீகமாக கொண்ட ஒவ்வொருவனதும் நிச்சயமான தோல்வியாக அமையும்.

தேவை என்பதே யதார்த்தம். அதுவே ஆசைக்கும் தாயாகும். புலம்பெயர் வாழ் தமிழர்கள் தமிழீழத்தில் வாழும் மக்களின் தேவைகளின் குரலாக மாறவேண்டும். அது ஒன்றே எங்கள் பெருவிருப்பமும் நிறைவேற அடித்தளமாக அமையும்.

பெரு விருப்பத்தின் அடிப்படையில் எமது செயற்பாடுகளில் பெரும்பான்மையானவை இருந்ததே ஒரு பின்னடைவு நிலைக்கு எம்மைத்தள்ளியது. எந்த மக்களை சாரந்து தேவை என்ற கருப்பொருள் நிற்கின்றதோ அந்த மக்களின் குரலாக பலமாக நாம் இருப்பது ஒன்றே நேர்மையானது. அதுவே இலட்சியம் நோக்கி முதல் அடியை எடுத்துவைக்கும் முயற்ச்சியாகும். வதை முகாம்களில் வாழும் மக்களின் பாதுகாப்பு மறுவாழ்வுக்கான போராட்டங்களை தவிர வேறெந்த முயற்ச்சியும் எம்மை நாமே வழமைபோல் ஏமாற்றுவதற்கு ஒப்பானதாகும். நெருக்கடியான காலத்தை விட அதிகளவு போராட்டங்களை செய்யவேண்டிய காலம் இதுவாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதேபோல் நாட்டில் மக்கள் விரக்தி நிலைக்குச் சென்று அடிமைத்தனத்தை இயல்பாக ஏற்று கிடைத்தளவு வாழ்வே போதுமானது என்ற நிலைக்கு அடுத்த தலைமுறை நகர்கின்றது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் அரசகட்டுப்பாட்டில் வந்த பின்பு உருவாகிய தலைமுறையிடம் இந்த இயல்பு நிலையை காண முடியும். என்னும் பதினைந்து வருடங்களின் பின்பு தமிழீழத்தின் அனைத்து இடத்திலும் இதே இயல்பு நிலையை காண முடியும். தேவைகளில் இருந்தும் தமிழீழம் விலகிச்செல்லும் தூரதிஸ்ட நிலையே இதுவாகும்
.

யதார்த்தம் இது தான் உண்மையும் கூட

Link to comment
Share on other sites

  • 3 years later...

நல்தொரு பதிவு ஆனால் பலரால் கவனிக்கப்படவில்லை  நான் உட்பட

Link to comment
Share on other sites

நல்தொரு பதிவு, நன்றி சாத்திரி மீண்டும் கொண்டு வந்ததிற்கு. இதுதான் இன்றைய நிலை, ஒரு மாதம் இலங்கைக்கு போய்வந்த நண்பனுடன் கதைத்தபோது சொன்னான்

Link to comment
Share on other sites

நல்தொரு பதிவு, நன்றி சாத்திரி மீண்டும் கொண்டு வந்ததிற்கு. இதுதான் இன்றைய நிலை, ஒரு மாதம் இலங்கைக்கு போய்வந்த நண்பனுடன் கதைத்தபோது சொன்னான்

 

இன்றைய தெரிவில் இது இணைக்கப்பட்டு இருக்கு.

 

இன்றைய தெரிவில் இருப்பதை வாசிப்பவர்கள் ஒரு சின்ன பதிலை போடுவதன் மூலம் 'புதிய பதிவுகள்' தேடலில் மற்றவர்களும் இலகுவாக பார்க்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வதை முகாம்களில் வாழும் மக்களுக்கும் சிங்களத்தின் பிடிக்குள் இருக்கும் மக்களுக்கும் தமிழீழம் தேவையான ஒன்று. இது பொருளாதாரம் பாதுகாப்பு போன்றன அடிப்படையில் சுதந்திரமான நோக்கத்தை கொண்டது. புலம்பெயர்வாழ் மக்களுக்கு பொருளாதராம் பாதுகாப்பு போன்ற நோக்கங்களுக்கு அப்பால் தமிழீழம் பெரு விருப்பம் சார்ந்த ஒன்றாக இருக்கின்றது.
 
சிங்களத்தின் பிடியிலும் முகாம்களிலும் இருக்கிற மக்களின் பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மைக்கான நிலையின் உண்மைத்தன்மை உணராத புலம்பெயர் பெருவிருப்பானது சுத்த தன்னலமிக்க்கது.
 
 
 

 பெரு விருப்பத்தின் அடிப்படையில் எமது செயற்பாடுகளில் பெரும்பான்மையானவை இருந்ததே ஒரு பின்னடைவு நிலைக்கு எம்மைத்தள்ளியது. எந்த மக்களை சாரந்து தேவை என்ற கருப்பொருள் நிற்கின்றதோ அந்த மக்களின் குரலாக பலமாக நாம் இருப்பது ஒன்றே நேர்மையானது. அதுவே இலட்சியம் நோக்கி முதல் அடியை எடுத்துவைக்கும் முயற்ச்சியாகும். வதை முகாம்களில் வாழும் மக்களின் பாதுகாப்பு மறுவாழ்வுக்கான போராட்டங்களை தவிர வேறெந்த முயற்ச்சியும் எம்மை நாமே வழமைபோல் ஏமாற்றுவதற்கு ஒப்பானதாகும். நெருக்கடியான காலத்தை விட அதிகளவு போராட்டங்களை செய்யவேண்டிய காலம் இதுவாகும்

 

இன்னும் இந்த நெருக்கடியான காலத்தைச் சாமாளிக்கும் பக்குவத்தில் ஒரு சிறுபகுதியைக்கூட நாம் அடையவில்லை.
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவில் நடக்க இருக்கும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டத் தொடரில் இறுதி யுத்தத்தில் நடந்த படுகொலைகளுக்கு சுயாதீன விசாரணை வேண்டும் என்று சலசலப்பைக் காட்டிவிட்டு உறக்கத்திற்குப் போய், மே மாதத்தில் விழித்து எழுந்து படுகொலை செய்யப்பட்ட மக்களினை ஒருநாள் நினைவு கூர்ந்துவிட்டு, மீண்டும் நவம்பரில் மாவீரர் தினத்தில் நித்திரையால் எழும்பி உடனடியாக உறக்கத்திற்குச் செல்லுவது ஒரு சுழற்சியாக நடக்கின்றது. இதுதான் எமது தேவைகளும் ஆசைகளும்..

Link to comment
Share on other sites

  • 1 year later...

முகத்தில் அறையும் உண்மைகள்.  எதிரிகளின் வெற்றி தமிழீழத்தின் தோல்வியாகிக் கொண்டிருக்கின்றது.  அதற்கு நாம் துணைபோவதும் வேதனையளிக்கின்றது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
அருவருக்கத்தக்க பல தோற்றங்களுக்கும் ஆழாகி உயிர் பிழைத்துப் பின் மலர்ந்துதான் கண்ணைக்கவரும் வண்ணம், வண்ணத்துப் பூச்சியும் வெளிவந்து பறக்கிறது. தமிழீழம் என்ற வரைபடத்தை முதன்முதலில் பார்த்த தலைமுறையில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வண்ணத்துப் பூச்சியின் முதல் தோற்றத்தில் இருக்கின்றோம் என்றும் கொள்ளலாம். மாற்றங்களைச் சகித்துக் கொள்ளவேண்டிய நேரமிது. 
 
மனிதனை இயக்கும் மகத்தான சக்திகளான தேவை மற்றும் ஆசை இரண்டில் இருந்தும் இலட்சியம் வழுவுவது போன்ற தோற்றம் பொய்யானது என்பதை தமிழர் சமீபத்தில் நிரூபித்தார்கள். பேயின் ஆட்சி போய் வரப்போவது பிசாசின் ஆட்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தாலும். எதிரியும் பேயின் ஆட்சியை விரட்டி நல்வாழ்வு தேட முற்பட்ட வேளையில், அவனும் நல்வாழ்வு வாழவேண்டி ஆதரவு நல்கியதை தை 8ல் கண்டோம். எத்தகைய துன்பத்திலும் பிறர் நலத்திலும் அக்கறைகொள்ளும் மனதையுடைய ஒருவனின் இலட்சியம் நிச்சயம் தோல்வி காணாது. 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.