Jump to content

சதாம் உசைன் - ஒரு சிங்கம் ஆடான கதை!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சதாம் உசைன் மிக சாதாரண ஆடு மேய்க்கும் குடும்பத்தில் பிறந்தவர் .தன்னுடைய இளைய வயதிலேயே வாழ்கையில் வறுமையையும்,சோதனைகளையும் கொடுமைகளையும் கண்டவர்.தான் பிறப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே அவருடைய தந்தை குடும்பத்தை நிராதாரவாக தவிக்க விட்டு தலை மறைவாகி விட்டார் !.

இறுதி வரை தன்னுடைய தந்தையின் முகத்தை சதாம் உசைன் கண்டதில்லை.அவருடைய தந்தையின் தலை மறைவிற்கு பிறகு அதே ஆண்டில் தன்னுடைய சகோதரனை புற்று நோயில் இழந்தார் சதாம்.

சதாம் உசைன் ஏப்ரல் 28, ஆயிரத்தி தொள்ளயிரதி முப்பத்தி ஏழில் பிறந்தார் .சதாம் என்பதற்கு சோதனைகளை வெல்ல குடியவன் என்று அரபு மொழி அர்த்தம் .

பச்சிளம் குழந்தையாக தன்னுடைய மாமாவிடம் வளர்க்க அனுப்பப்பட்டார் சதாம்.சதாமின் தாய் மீண்டும் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டார்.அதன் மூலம் மூன்று சகோதரர்களை சதாம் பெற்றார்.எனினும் மாற்று தந்தை சதாமை மிக கடுமையாக நடத்தினார். அதனால் மீண்டும் தனது மாமாவிடம் அடைக்கலம் புகுந்தார் சதாம். அப்போது சதாமிற்கு வயது பத்து

சதாம் பாக்தாதில் கல்வி பயின்றார்.பின்னர் சட்ட கல்வியையும் தன்னுடைய மாமாவின் துணையால் படித்து முடித்தார்.ஒரு ஆசிரியாராக தன்னுடைய இருபதாம் வயதில் பாக்தாதில் வாழ்கையை தொடங்கினார் சதாம்.ஆயிரத்தி தொள்ளயிரத்தி ஐய்ம்பத்தி ஏழில் சதாம் பாத் காட்சியில் சேர்ந்தார்.இதன் மூலம் தன்னுடைய வாழ்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு முன்னுரை எழுதினார் என்றே சொல்ல வேண்டும்!

ஏறக்குறைய பத்து ஆண்டுகளில் பாத் காட்சியில் உயரிய பொருபிர்க்கு உயர்ந்தார் சதாம் .வெகு தொடக்கத்தில் அமெரிக்காவின் உளவு அமைபிற்கு உதவியாக அப்போதைய இராக்கிய பிரதமர் அப்துல் கரிமை பதவியில் இருந்து இரக்க சதாம் அமெரிக்காவிற்கு உதவினார்.

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபதுகளின் தொடக்கத்தில் சதாம் மிக போற்றக்கூடிய அரசியல் சக்தியாக உருவெடுத்தார்.இராக்கை ஒரு நவின இஸ்லாம் நாடாகவும்,கல்வி மற்று பாத் கட்சியை வலிமை படுதிடவம் வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

யுனெஸ்கோ இவருடைய கல்வி மேம்பாடு திட்டங்களுக்காக இவரை ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தி மூன்றில் கொவ்ரவித்தது.

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தி ஒன்பதில் சதாம் அப்போதைய இராக்கிய அதிபரை நெருக்கதலுக்கு உள்ளாகி அதிபராக பதவிக்கு வந்தார்.அதிலிருந்து பதவி மற்றும் ஆட்சி அதிகாரங்களை தன்னுடைய கட்டுக்குள் வைத்து கொள்ள சதாம் ஒரு சர்வாதிகாரியாக செயல் பட தொடங்கினார்.

பதவி ஏற்கும் போது பாத் கட்சியின் துரோகிகள் என அறுபத்தி எட்டு பேரை பட்டியலிட்டு படித்தார்.அவர்களை ஒருவர் பின் ஒருவராக கைது செய்து அதில் இருபத்தி இரண்டு பேரை தூக்கிட்டார் சதாம்.பொது மக்களும்,எதிர்கின்ற எவரும் அஞ்ச கூடிய வகையில் சட்டங்களை தன்னுடைய கையில் எடுத்துகொண்டார் சதாம்.

இரான் -இராக் போர் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எண்பதுகளில் தொடக்கி எட்டு ஆண்டுகள் நிகழ்ந்தது.ஷியா பிரிவை கொண்ட இரானிய கொள்கைகள் தன்னுடைய நாட்டிற்குள் புரட்சியை உண்டாகிவிடும் என்று அஞ்சியே இந்த போரை தொடுத்தார் சதாம்.இதன் முலம் ஒரு ஹீரோ இமேஜை அவர் பெற்றார்.

போர் தொடுக்க பட்ட முதல் இரண்டாண்டுகளில் அதில் இருந்து விடுபட சதாம் நினைத்தார் அதற்காக அப்போதைய நலவாழ்வு அமைச்சர் ரியாத் இப்ராஹீம் இடம் ஆலோசனை கேட்டார் சதாம். தற்காலிகமாக சதாம் பதவி இறங்கினால் அமைதி ஏற்படும் என ரியாத் சொல்ல.ரியாதின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அவருடைய மனைவியிடம் அளிக்கப்பட்டது.இது சசாமின் நிஜ முகத்தை வெளிகாட்டியது

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொன்னூறில் தனது அண்டை நாடான குவைத்துடன் எல்லை தகராறில் சதாம் மற்றும் ஒரு போருக்கு வழி வகுத்தார்.முந்தய போரில் அவருக்கு உதவிய அமெரிக்கா இந்த முறை அவருக்கு எதிர்ப்பினை காட்டியது .அதுமட்டுமில்லாமல் இராக்கிய படைகளை தாக்கி ஓடவும் செய்தது.

அமெரிக்காவை தனது தீவிர எதிரியாக சதாம் கருதுவதற்கு இது மேலும் வழி வகுத்தது.இரான் போரில் முதன் முதலில் ரசாயன ஆயுதங்களை பயன் படுத்தினார் சதாம்.இதன் முலம் பல உயிர் இழப்புக்களை இரான் கண்டது

நாட்டின் பொருளாதாரம் மிக சீர் கேடடைந்த நிலையில்,அமெரிக்கா பொருளாதார தடைகளால் மேலும் இராக் சீர் குலைந்தது.மிக அதிகமான எண்ணை வளமிருந்தும் நாட்டு மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சதாமின் ஆடம்பரம்,முரட்டுத்தனமான கொள்கைகள்,சர்வதிகார போக்கு இராக்கிய மக்களை அவர் மீது வெறுப்படைய செய்தது.

இராண்டாயிரதி மூன்றாம் ஆண்டு அமெரிக்கா இராக் ஒரு அச்சுறுத்தும் பயங்கரவாத நாடு என்று கூறி ,சதாமை வெளியேற்ற வளைகுடா போரை தொடங்கியது.

ஒரு சர்வதிகாரியாக,ராஜ போகங்களை அனுபவித்த சதாம் உயிரை காப்பற்றி கொள்ள தலை மறைவானார் ,ஆறு மாத தேடுதலுக்கு பிறகு ஒரு பதுங்கு குழியில் பிடிபட்டார்.ஒரு பிட்சை காரனை போல முகமெல்லாம் முடியோடு ஒரு பரதேசியாக அமெரிக்காவினால் வெளியுலகுக்கு காட்டப்பட்டார் சதாம்.

இராண்டாயிரதி ஆறின் இறுதியில் சதாம் தூக்கிலிடப்பட்டார் .இளமையில் பல சோதனைகளை கடந்த சதாம்.ஒரு தேசத்தை வழி நடத்தி செல்ல கிடைத்த வாய்ப்பை தவறாக பயன் படுத்தி பல உயிர்களை அழித்தார்.பல அரண்மனைகள்,சொத்துக்கள் எல்லாம் இழந்து இரண்டடி குழியில் பரதேசியாக வாழ்கையின் அத்தியாயத்தை முடித்து கொண்டார்!

Link to comment
Share on other sites

நல்லதொரு பதிவு சதாம் செய்த தவறுகள் இரண்டு...

அதில் முக்கியமானது அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் தான் ஒரு பலிக்கடாவாக வளர்க்க படுவது தெரிந்தும் துணை போனது..( இண்று தான் செய்யும் தவறுகளுக்கு பழி போட எண்றே கருணாவை இலங்கை ஆட்ச்சி வளர்ப்பது போல )

இரண்டாவது குவைத்தை கைப்பற்றியது... அப்படி கைப்பற்றி இருந்தாலும் சவுதி அரபியாவை சும்மா விட்டு வைத்தது...

Link to comment
Share on other sites

குரல், இதை இங்கு இப்ப பதிவதின் முக்கிய காரணம் என்ன?

ஒறுமை வேற்றுமைகளை இங்குள்ள உறுப்பினர்களை வைத்து அலத்தான்

Link to comment
Share on other sites

அப்ப இங்கயும் அந்த மாதிரி ஆட்கள் இருக்கினம் .பொருத்த நேரத்தில ,பொருத்த இடத்தில கழுத்தறுக்கிற ஆட்கள். யாழுக்கு வார எல்லோரும் கேணயன்கள் இல்லை பாருங்கோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.