Jump to content

முல்லைப் பெரியாறின் உண்மை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனால் இழக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணைப் பகுதியுடன் ஏறக்குறைய சம்பந்தப்பட்ட குமரி மாவட்ட போராட்ட வரலாற்றை இங்கே இணைப்பது இக்காலத்திற்கு பொருத்தமாக இருக்குமெனெ நம்புகிறேன்...

குமரி மாவட்ட விடுதலைப் போராட்டம்

"குமரி மாவட்ட விடுதலைப் போராட்டம்" என்பது தமிழ் பேசும் குமரி மக்கள் திருவிதாங்கூரிலிருந்து குமரி மாவட்டத்தை தமிழ் நாட்டுடன் இணைக்க திரு.மார்சல் ஏ. நேசமணி தலைமையில் 1947 முதல் 1956 வரை நடத்தியப் தொடர் போராட்டத்தைக் குறிக்கிறது. இப்போராட்டத்தின் விளைவாக நவம்பர் 1, 1956 ம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. இப் போராட்டத்தை தலைமைதாங்கி வழிநடத்தி வெற்றி பெற்றதனால் குமரி மக்கள் திரு மார்சல் நேசமணியை "குமரித் தந்தை" என்று அழைக்கின்றனர்.

வரலாறு:

இந்தியா 1947 ம் ஆகத்து 15ம் நாள் சுதந்திரம் பெற்றபோது மன்னர் சமஸ்தானமான திருவிதாங்கூர் இந்திய கூட்டாட்சியில் சேருவதில்லை என்று முடிவெடுத்தது. இருப்பினும் வேறுவழியின்றி மன்னர் திரு சித்திரை திருநாள் பாலராமலர்மா, பல்வேறு சூழ்நிலைகளால் இந்திய கூட்டாட்சியில் 1947 செப்டம்பர் 4 ம் நாள் இணைந்தார். 1949 ம் ஆண்டு அன்றய திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்துடன் குமரிப் பகுதி இணைக்கப்பட்டது. அக்காலத்தில் தென் திருவிதாங்கூரில் தென் தாலுக்காகளான நெய்யாற்றின்கரை, விளவக்கோடு, கல்குளம், அகத்தீசுவரம், மற்றும் தோவாளை ஆகியவற்றில் வாழ்ந்த பெருவாரியான மக்கள் தமிழை தாய் மொழியாக கொண்டிருந்தனர்.

முதல் மற்றும் இரண்டாம் ஐந்து ஆண்டுத் திட்டங்களில் இத் தமிழ் பகுதிகளில் விவசாய வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட நீர்பாசன திட்டங்களான சிற்றாறு பட்டணம் கால்வாய் திட்டம், பெருஞ்சாணி அணைத் திட்டம், நெய்யாறு இடதுகரை கால்வாய்த் திட்டம், குழித்துறை நீரூற்றுத் திட்டங்களை மலையாள திருவிதாங்கூர் அரசு முடக்கியது. இதனால் வெறுப்படைந்த தமிழர்கள், திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைவதற்கு 1948 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி மார்சல் ஏ. நேசமணி தலைமையில் போராட்டங்களை தொடங்கினர். இவரின் தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற அரசியல் அமைப்பை அவர் உருவாக்கி, இணைப்பு போராட்டங்களை நடத்தினார்.

தமிழர்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள் பல உயிர் தியாகங்களும், சிறை கொடுமைகள் மற்றும் காவல் துறையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டனர். இதன் பயனாக 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. மலையாள ஆதிக்க நாயர்களிடமிருந்து சுமார் 200 ஆண்டு காலங்களாக அனுபவித்து வந்த சாதிக் கொடுமையில் இருந்து விடுதலை பெறுவதற்காகவும் இந்த போராட்டத்தை நாடார் மக்கள் முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றனர். திருவிதாங்கூர் பகுதிகளில் நிலவிவந்த சாதிக் கொடுமைகளும் இப்பகுதிகள் பிரிந்து சென்று தமிழகத்துடன் இணைய இன்னொரு காரணமாக இருந்தது.

போராட்டத்திற்கான காரணங்கள்:

தமிழர்கள் பெரும்பாலாக வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதிகளான கல்குளம், விளவங்கோடு, தோவாளை, மற்றும் அகத்தீசுவரம் ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க மூன்று காரணங்களைக் கூறலாம்.

முதல் காரணம்:

இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக பல்வேறுத் ஐந்தாண்டு திட்டங்களை வகுத்து செயல்படுத்தியது. இதன்படி முதலாவது ஐந்தாண்டு திட்டம் 1950 முதல் 1955 வரை செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தில் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகளின் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் தீட்டப்பட்டது. அவை பெருஞ்சாணி அணைத் திட்டம், சிற்றாறு பட்டணம் கால்வாய்த் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், குழித்துறை லிப்டு இரிகெசன் (Lift Irrigation) திட்டம், ஆகியன ஆகும். இந்த முக்கிய நீராதாரத் திட்டங்களை சுதந்திர திருவிதாங்கூர் அரசு செயல்படுத்தவில்லை. இதனால் மக்கள் இந்த அரசு மீது வெறுப்படைந்தனர். ஐந்தாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எந்த திட்டங்களையும் செயல்படுத்த முன்வரவில்லை. மக்கள் தலைவர்கள் பலமுறை வேண்டிக் கேட்டுக்கொண்டும், இப்பகுதி வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேண்டுமென்றே வட திருவிதாங்கூர் வளர்ச்சிக்கென திருப்பிவிட்டது. இதனால் தென் திருவிதாங்கூர் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள் முற்றிலும் புறக்கணித்தது திரு பட்டம் தாணுபிள்ளையின் அரசு. இத்தகைய தென் பொருளாதார வளர்ச்சிப் புறக்கணிப்பு, தாய் தமிழகத்துடன் இணைவதற்கான கோரிக்கை வலுவடைய முக்கிய காரணியாக அமைந்தது.

இரண்டாம் காரணம்:

திருவிதாங்கூர் நாடு இந்து ஆகம அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட்டமையால் சாதிக் கோட்பாடுகள் மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. உயர் இந்துக்கள், இழிவு இந்துக்கள் என சமுதாயத்தை இருகூறுகளாக்கினர். இழிவு இந்துக்களை தீண்டத்தகாதவர்களாகவும், காணத்தகாதவர்களாகவும், நடமாடத் தகுதியற்றவர்களாகவும் கருதி சமுதாயத்தில் அவர்களை இழிவுபடுத்தினர். இந்த நிலை மாற திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து செல்ல தமிழர்கள் விரும்பினர். இதுவும் பிரிவினைக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது.

மூன்றாம் காரணம்:

தமிழ் மக்கள் குறிப்பா:க நாடார் சமுதாய மக்கள், மலையாள நாயர்கள் மற்றும் அவர்களைச் சாரந்தப் பிரிவு மக்களுக்கு எதிராகப் போராடினர். 1948 ல் இப்போராட்டம் தீவிரமடைந்தது. பட்டம் தாணு பிள்ளை சுதந்திர திருவிதாங்கூரின் பிரதமராக அப்போது செயலாற்றி வந்தார். இவர் இழிவு சமூகம் என கருதப்பட்டவர்களின் மேல் கடுமையான அடக்குமுறைகளை பயன்படுத்தினார்.

மாங்காட்டில் தேவசகாயம் நாடாரையும், கீழ்க்குளத்தில் செல்லையன் நாடாரையும் மலையாளக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நாடார்களுக்கும் நாயர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நாயர்களுக்கு தாணுபிள்ளையில் அரசு ஆதரவு அளித்தது. இந்த சூழ்நிலையில் 1954 ம் ஆண்டு ஆகத்து 11 ம் நாள் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகள் முழுவதிலும் விடுதலை தினம் கடைபிடிக்கப்பட்டது. இத்தருணத்தில் பட்டம் தாணு பிள்ளை திருவிதாங்கூரில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின் படி தமிழர்களான நாடார் மக்கள் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாள காவல்துறையினர். இதனால் மார்த்தாண்டத்தில் ஆறுபேரும், புதுக்கடையில் ஐவரும் குண்டடிப்பட்டு இறந்தனர். இவர்களில் ஐந்துபேர் நாடார் சமுதாயத்தை சார்ந்தவர்கள். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் போராட்டக்காரர்களை அடக்க தாணு பிள்ளை அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அன்று முதல் (11-08௧954) தாணு பிள்ளை பதவியிலிருந்து விலகும் வரை (14-02௧955), அதாவது 188 நாட்கள், விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுக்காக்களில் நாடார் மக்கள் மீது காவல் துறையினர் மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர். இதுவும் பிரிவினைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இப் போராட்டங்களின் தொடர்ச்சியாக 01-11-1956 அன்று கன்னியாகுமரி மாவட்டம் உதயமாகி, தமிழகத்துடனே இணைந்தது

மக்களின் விழிப்புணர்வை மதித்த தமிழக அரசு, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1956-1961) நீர் பாசனத்திற்காக பெருஞ்சாணி அணை திட்டம், சிற்றாறு பட்டணம் கால்வாய் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், விளத்துறை லிப்டு இரிகேசன்(Lift Irrigation) திட்டம் ஆகியவற்றிற்கு செயலாக்கம் தந்தது. குமரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கும் திட்டமும், சித்த மருத்துவக் ஆய்வு மையம் தொடங்குவதற்கும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டம் தீட்டப் பட்டது. சுற்றுலாத்துறையைப் பொறுத்தமட்டில் நாகர்கோவிலிலும், கன்னியாகுமரியிலும் பயணிகள் விடுதிகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப் பட்டு திட்ட காலக் கெடுவில் முடிக்கப் பட்டது.

Source: http://ta.wikipedia.org/

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

Rising emotions, falling objectivity, the truth behind Mullaiperiyar coverage in Chennai newsrooms

By Radhika Giri

28 Dec 2011

120511_0211_Radhika%20Giri.jpgPosted 05-Dec-2011

Vol 2 Issue 48

Closely following the reportage in the various English newspapers on the latest eruption of the Mullaiperiyar dam issue, I have some serious doubts over the professional integrity of journalists from Kerala.

If journalists writing for Malayalam newspapers seek to reflect the state government’s views and the local people’s sentiments without bothering about the truth, it is one thing. But when Malayalee journalists working for the English media, that too in Tamil Nadu, do that, it is a matter of concern. dec5-11-dam.jpg

Is it Mullaiperiyar or Mullaperiyar? The answer will tell which side you support

The latest slip up on journalistic ethics is on covering the deposition of the Kerala Advocate General, K P Dhandapani, in court that even in the event of the Mullaiperiyar dam breaking, the water will collect at the Idukki and other dams downstream.

The day after the deposition, no English paper in Chennai carried the news. Only after Malayalees were up in arms against the Advocate General for making what they would consider as a preposterous statement, the news came out, that too in the context of the controversy that the statement had triggered.

The point that I am making is that no reporter in Kerala found the Advocate General’s view worthy of reporting – whether they would like to agree with it or treat it as a faux pas is a different matter.

To put it otherwise, I find Malayalee journalists conducting themselves as Malayalees first and journalists next even in the line of duty.

What prompted me to make a close study of the developments in the past two weeks is the "Times View" published on 24 November in the Times of India Chennai edition.

The opinion piece below the story “TN theatres bow to protests, pull the plug on Dam999,” started quite innocuously, defending freedom of expression. But the bomb was in the third sentence, which read: “Admittedly, the Mullaperiyar dam is an emotive issue and often exploited by political parties to generate sympathy among people in the southern districts.”

It is common knowledge that Mullaiperiyar (‘Mullaperiyar’ without the ‘I’ is typical Malayalee spelling and pronunciation, which Times of India prefers to follow) is an emotive issue in Kerala and not Tamil Nadu, though there is now a fear that the Kerala government, journalists and people together may make the issue emotive here also through the falsehoods they are systematically spreading.

So, without any doubt, one can say that the ‘Times View’ was a Malayalee’s view even if he or she was living in Chennai and working as a journalist.

Those with some insight into the media industry know the composition of the Times of India’s newsroom in Chennai. Every key post in the paper is held by a Malayalee – a Nair or Menon and so on. The Resident Editor, Political Editor and Metro Editor are all Malayalees.

As a journalist, who earlier worked for Times of India, said: ‘The news room is filled with Malayalees, who speak to each other always in Malayalam. The overpowering presence of Malayalee ethos is always perceptible in the Chennai office.”

Another former employee of Times of India said: “The present situation in Times of India is that Tamils are in a fractional minority. When I was there, I and a colleague used to argue over various issues when we felt that the causes of Tamil Nadu were neglected or sidelined.

“Apart from that an instance that largely irritated the Tamils there was when the TOI management allowed the Chennai office to be decorated for Onam but refused to do it for Tamil New Year. Some of us raised an issue but nothing happened.”

Another senior journalist, who has nothing to do with Times of India other than being a reader, analyses the English media situation in Chennai thus: “Tamil people and their subaltern culture have always been ignored by the English media mainly because it was dominated by the elite classes. So that has led to a certain kind of dichotomy in media reportage between the English and the Tamil newspapers.

“Even as people from ordinary backgrounds managed to find the way into newsrooms of English newspapers, the voice of the subaltern classes remains subdued. The “Tamil viewpoint” still remains that of the elite, which in fact has caused several misconceptions about the state itself.

“One example is that people in places like Delhi, Mumbai and Kolkatta link ‘Idli, Dosa and Sambar’ to Tamil culinary tradition and believe that the predominant population of Tamil Nadu is vegetarian in food habit. Whereas the truth is that an overwhelming majority of Tamil people are meat eaters by tradition.

“Another cultural association of Tamil Nadu is Carnatic music and Bharatanatyam. The truth is that classical forms of music can be understood and appreciated by hardly about ten percent of the population. So what is the musical and art tradition of the 90 percent of the population?

“Such art forms never get their due recognition and the English media never bothered to acknowledge that because the journalists from other states, particularly those holding high editorial positions, relate themselves only to the dominant elite classes.’

“As far as the Mullaiperiyar issue is concerned, it was the Kerala government that started a campaign against the Mullaipeiryar dam’s safety with the help of the Malayalam newspapers. The primary intention of the Kerala government was to get water for the Idukki dam which can be achieved only if the Mullaipeiryar dam is knocked down.

“In due course as the Malayalam newspapers vied with one another in espousing the ‘cause’ of the state government, it turned into an emotive issue. So in Kerala every Malayalee has been made to believe that the Mullaiperiyar dam is a water bomb. Though there has been no scientific basis to that, people today believe that the dam will give way anytime and have been saying that for a few decades.”

Keeping in line with the sentiments, the Malayalee journalist also takes the same view point. Now that the English media in Tamil Nadu is fully under the stronghold of Malayalee journalists all newspapers reflect the Kerala views.

The lowering of the water in the dam from152 ft to 136 ft happened during the tenure of M G Ramachandran, a Malayalee by birth, who was then Chief Minister of Tamil Nadu. The Chief Secretary at that time was also a Malayalee.

Apart from the Times of India, which consistently spells the name of the dam erroneously as ‘Mullaperiyar’, reflecting the Malayalee sentiment, even The Hindu, the newspaper of Chennai, spells it that way.

When Malayalee journalists try to echo the view of the Kerala government, whose sole aim now is to whip up public frenzy and have the Mullaiperiyar dam pulled down, then journalism suffers and objectivity in reportage takes a beating.

But then the genesis of the big lie that the Mullaiperiyar is weak and would collapse, goes a long way back.

As a senior journalist in Chennai, who is privy to the happenings way back in 1978, said: ‘It started in Kerala with the Trivandrum based then Bureau Chief of Malayalam Manorama, Mr Patros Chummar, a towering figure among journalists in Malayalam journals who also enjoyed a back slapping rapport with the politicians of those days and who was even given to advising them.

In 1978 the Manorama newspaper, then the largest circulated daily in Kerala, carried the banner headline for the first time “Mullaiperiyar Pottan Porunnu” (Mullaiperiyar going to burst) after the then Congress leader of Kerala K Karunanakaran had a chat with M K Parameswaran Nair, chief engineer of the Kerala State Electricity Board and now an advisor to the Kerala government, who was disappointed with four monsoons not yielding the necessary waters in the Idukki dam since its commissioning in 1976.

The Mullaiperiyar is upstream to it and lies in Kerala territory with the legal control under an agreement with Tamil Nadu.

Parameswaran Nair is said to have jokingly told the Congress leader “Nammudae Chettandidathu paranju avide storage koraikka paraiyanullae!” (We will tell our brother - M G Ramachandran, the then Chief Minister of Tamil Nadu - there to decrease the storage level.)

What started as a thigh slapping joke ended with Nair telling the congress leader seriously: “Pedi create seinjittu chettanidathu poyaala.” (First fear should be created and then we should take the matter with our brother.)

The "fear" first created by Malayala Manorama, was picked up by the rest of the Malayalam journals. To cut a long story short, the Supreme Court passed a landmark order in February 2006 stating the dam was not weak and allowed the Tamil Nadu government to raise the water level.

Today I find every Malayalee journalist doing a Patros Chummar, which is a tragedy - not just for journalism but for truth. But what those journalists do not understand is that their chauvinism could well tear the pluralistic fabric of India apart.

For some water and just to retrieve a piece of land that a British India government obtained from the Travancore Maharaja legally, should the journalists from Kerala give up their professional integrity?

Radhika Giri is a Special Correspondent with The Statesman

http://www.theweekendleader.com/Causes/853/The-M-factor.html

Link to comment
Share on other sites

தமிழின விரோதிகளான மலையாளிகளின் கடைகளை உலகம் முழுவதும் தமிழர் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'டேம் 999' படத்துக்கு பதிலடி : 'அணை 555' புதிய சினிமா தயாரிப்பு !

மதுரை : டேம் 999 படத்துக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, முல்லை பெரியாறு அணை பாதுகாப்பானது என்பதை விளக்கி அணை 555 என்ற பெயரில் புதிய சினிமா தயாரிக்கப்படுகிறது. இந்திய குற்றவியல் கழக மதுரை கிளை நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உண்மை என்ன, அதன் தீர்வு என்ன என்பது குறித்து 'தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கம்' வெளியிட்டுள்ள சிடியை மையமாக வைத்து அணை 555 என்ற சினிமா எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை முதல் நாளில் படத்தை வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

source: http://www.dinakaran...11.asp?Nid=7964

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாறு அணை உடைந்தால் என்ன பாதிப்பு? கேரளா ஆய்வால் பரபரப்பு.

டிசம்பர் 29,2011:

கூடலூர்: முல்லைப்பெரியாறு அணை உடைந்தால், கேரளாவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ரூர்க்கி ஐ.ஐ.டி.,(இந்திய தொழில்நுட்ப மையம்) குழுவினர் நேற்று அணைப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.

முல்லைப் பெரியாறு அணை பலமிழந்துள்ளதாகவும், இப்பகுதியில் ஏற்படும் நிலநடுக்கத்தால் அணை விரைவில் உடைந்து விடும் என கேரளா தொடர்ந்து புகார் கூறி வருகிறது. இதனால், அணை அருகே புதிய அணை கட்டியே தீர வேண்டும் என பிடிவாதமாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக சுப்ரீம் கோர்டில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், அணைப்பகுதியில் பல்வேறு ஆய்வுகளை கேரளா தனது சொந்த பொறுப்பில் நடத்தி, அதன் அறிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், கேரளாவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக கேரள அரசின் அழைப்பின் பேரில் ரூர்க்கி ஐ.ஐ.டி., (இந்திய தொழில்நுட்ப மையம்) குழுவின் ஆராய்ச்சியாளர் எஸ்.கே.மிஸ்ரா தலைமையில் நேற்று வந்தனர். இக்குழு, பெரியாறு அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகளை பார்வையிட்டது.

தமிழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் :o இக்குழுவினர் அணைப் பகுதிக்கு வந்ததால், அணையில் உள்ள நீர்க்கசிவு காலரிக்குள் இக்குழுவினர் செல்ல முடியவில்லை. இதனால், நீர்க்கசிவு காலரியில் இருந்து வெளியே வந்த தண்ணீரை சாம்பிள் எடுத்தனர். அணை உடைந்தபின் உடனடியாக வெளியேறும் தண்ணீரால் பாதிப்புகள் என்ன என்பதை அறிவதற்காக இக்குழுவினர் அணைப் பகுதியில் இருந்து நீர் வெளியேறும் வல்லக்கடவு, வண்டிப் பெரியாறு, உப்புதறா, சப்பாத்து, இடுக்கி அணைப்பகுதிகளை பார்வையிட்டது. எத்தனை குடியிருப்புகள் நீரில் மூழ்கும், சேதமடையும் நிலங்கள், பெரியாறு அணையில் இருந்து திடீரென வெளியேறும் நீரால் இடுக்கி அணை தாங்குமா? போன்ற ஆய்வுகளை இக்குழு நடத்துகிறது. இதற்கான அறிக்கையை வரும் ஜன., 15ம் தேதி கேரள அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பலம் குறித்து கடந்த ஓராண்டாக ஐவர் குழுவினர் பல்வேறு சோதனைகளை நடத்தி வரும் நிலையில், கேரள அரசு தன்னிச்சையாக ஒரு குழுவை அழைத்து ஆய்வு செய்து வருவது, மேலும் பிரச்னையை அதிகப்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.

http://www.dinamalar...=375872#comment

'தினமலர்' ஊடகத்தில் வெளியான இந்த செய்திக்கு வந்த பதில்களில் சில:

Natarajan - Jeddah,சவுதி அரேபியா. .2011-12-30 14:30:30 IST

மலையாளத்தான்களுக்கு வேறு வேலையே இல்லையா? எங்கு சென்றாலும் அரசியல் செய்வதே இவனுங்க வேலையாக உள்ளது. அதிகமாக படித்த சமுதாயம்தானே தவிர,அவர்கள் பிழைக்கும் வழி மிகக் கேவலமானது. அரபு நாடுகளில் அவர்கள் செய்யக் கூடிய செயல்களை பார்த்தாலே, "என்ன பொழப்புடா" என்று நினைக்க தோன்றும். அவன் வாழ வேண்டும் என்றால், மற்றவர்களை அழிக்க வேண்டுமெனில் அதை செய்து முடிக்கும் வரை தூங்க மாட்டான். எந்த ஒரு கேவலமான குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடியும் எனில் அதை கூட செய்வான். :lol: தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு முல்லைப் பெரியாறு பிரச்சனையில் அவனுகளுடைய சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்.அரசியல்வாதிகளுக்கோ, பணக்கரர்களுக்கோ அணையை உடைப்பதால் எந்த பாதிப்பும் இல்லை! உழைப்பாளிகளுக்கும்,ஏழை மக்களுக்குமே பாதிப்பு! நடிகர்களோ அங்கு (கேரளாவில்) தன்னுடைய படம் ஓட வேண்டுமெனவும், நகைக்கடை விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமெனவும் தமிழன் என்ற உணர்வே இல்லாமல் போய்விட்டனர். எனவே யாரையும் நம்பாமல் ஒன்றுபடுவோம், தமிழனின் போராட்ட குணத்தை உலகிற்கு பறைசாற்றுவோம்.

Siva Balan - Guwahati, இந்தியா. .2011-12-30 03:59:34 IST

இன்னும் எத்தனை நாள் இப்படி பொறுமையாக இருக்கிறது இந்த தமிழக அரசு? ஏன் குட்டக் குட்ட குனிய வேண்டும் ? இன்னும் எத்தனை நாள் தீர்மானம், பொதுகுழு கூட்டம் அப்படினு நாட்களை தள்ளிக் கொண்டே போவது? தூங்குகிறதா தமிழக அரசு? கேரள அரசின் அராஜகத்துக்கு அளவுயில்லாமல் போய்கொண்டே இருக்கிறது. இவர்களுக்கு ஏன் பதில் அடி கொடுக்க மறுக்கிறது ? நிறுத்துங்கள் உடனடியாக, அத்தியாவசிய பொருள்களை கேரளாக்கு கொண்டு செல்வதை முழுவதுவமாக நிறுத்துங்கள்! இப்படி பொறுமையாக இருந்துதான் அங்கே இலங்கையில் நம் இனம் அழிவதை தடுக்க முடியவில்லை. இன்று தமிழ்நாட்டிலேயே அது நடக்க இந்த அரசு நடப்பதை பார்க்க போகிறதா?

:huh: வீரத்திற்கு வித்திட்ட கட்டபொம்மனும் ,பாரதியாரும் இன்னும் பல வீரர்கள் வாழ்ந்த தமிழ் மண்ணுக்கா இந்த நிலைமை ? நெஞ்சு பொறுக்க வில்லையா? வீரம் வரவில்லையா என் தமிழ் மக்களே? இனியும் இந்த அரசியல்வாதிகளை நம்பி உபயோகம் இல்லை. ஒருவன் ஊழல் செய்துகொண்டிருக்கும் தன் குடும்பத்தை மட்டும் காப்பாற்ற போராடிக்கொண்டு இருக்க்கிறான்! மற்றொரு கூட்டம் தன் மீது இருக்கும் வழக்குகளையும், கட்சியினையும் காப்பாற்ற பொதுகூட்டம் என்று தன்னையும், தன் கட்சியையும் மட்டும் காப்பாற்றும் வேலையில் மும்மரமாக உள்ளார். மத்திய அரசோ இதை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறது தமிழ் மக்களாகிய நாம் அனாதை போல வீதியில் என்ன செய்வது? என்று இருக்கிறோம். பொறுத்தது போதும் பொங்கி எழுவோம்..இன்னொரு புரட்சி செய்வோம்..இனி இந்த அரசியல்வாதிகளுக்கும், கேரளாவுக்கும் தக்க பாடம் புகட்டுவோம்!

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாறு உருவாவது தமிழ்நாட்டில் என்றால் இப்போது உள்ள அணைக்கு மேலே நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஏதேனும் அணை கட்டும் சாத்தியம் உள்ளதா? :rolleyes:

மழையினால் சரிந்து வரும் நீரைத் தேக்கிவைக்க சமபரவலான பகுதி தேவை.. அப்பகுதியில் தேங்கும் நீரை மலைகளைக் குடைந்து கால்வாய்கள் அமைத்து தமிழகத்திற்கு திருப்ப மிக அத்தியாவசியமான புவி அமைப்பும் இப்போது அணை கட்டப்பட்டிருக்கும் பகுதியிலேயே அதிகம் சாதகமாக உள்ளது டங்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியாயத்தினை நோக்கி முதல் படி...

Mullai Periyar row: Empowered Committee rejects Kerala's demand.

January 03, 2012:

New Delhi: The five-member Empowered Committee - appointed by the Supreme Court - over the raging controversy on the Mullaperiyar Dam today rejected Kerala's demand to reduce the water level to 120 feet in the disputed structure. The committee said since the Supreme Court had ordered water level to be at 136 feet, it can't reduce the level to 120 feet.

"The committee rejected Kerala's demand to reduce the water level because the Supreme Court had ordered status quo of 136 feet," said Justice KT Thomas, one of the members of Empowered Committee.

The committee will meet again on January 24 and 25 to finalise its report and it will be submitted to the Supreme Court in February.

The Committee today discussed the various reports on the safety of the dam including the one submitted yesterday by the two-member panel constituted by it. The panel comprising C D Thatte and D K Mehta had visited the dam site in December after Kerala yet again expressed fears in the wake of recent tremors in the area.

The two-member team which inspected the Mullaperiyar Dam has reportedly said in its report that the dam is safe and the recent tremors have had no impact on the Mullaperiyar and Idukki dams.

Kerala yesterday claimed that the report by the two-member expert panel was biased and opposed its consideration by the five-member committee.

Kerala contended that a new dam should be built as the existing structure was vulnerable to earthquakes and consequently posed a major threat to the lives of people staying in the area. It also pressed its demand to reduce the water level in the dam to 120 feet from the existing 136 feet to ensure that safety was not compromised.

Kerala, however, complained to the Empowered Committee headed by former Chief Justice of India Justice A S Anand that the expert panel was unfair and had openly supported Tamil Nadu during its inspection of the dam site. It claimed that the panel was acting against Kerala's interests.

Kerala government officials had stayed away from the December 23 visit alleging that the experts did not hear the state's views on the dam's safety aspects. According to official sources, the state government had received legal advice for lodging its displeasure at the way the two members had conducted their proceedings.

The dam is located in Kerala but Tamil Nadu controls it under a decades-old agreement and uses its waters to irrigate five of its southern districts. Tamil Nadu fears that Kerala's demand for a new structure is a ploy to wrest control over the dam. The state maintains that the structure is safe with reinforcements being carried out periodically and has accused its neighbour of fear-mongering.

MDMK leader Vaiko, who led protests against Kerala last month, yesterday reiterated that Tamil Nadu had legal rights over the dam and accused Kerala of disregarding directions to raise the water level. Agriculture would suffer if the water level was decreased, as Kerala has been suggesting, he pointed out.

Tamil Nadu Chief Minister J Jayalalithaa and Kerala Chief Minister Oomen Chandy had earlier approached Prime Minister Manmohan Singh to intervene and settle the dispute.

.http://www.ndtv.com/...s-demand-163023

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

gallerye_234811625_378808.jpg

முல்லைப் பெரியாறு அணையில், எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவித்த ஐவர் குழு, அணையின் நீர்மட்டத்தை 120 அடிக்கு குறைத்திட வேண்டுமென்ற கேரளாவின் கோரிக்கையையும் நிராகரித்து விட்டது. இது தமிழக அரசின் நிலைக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

அடுத்த கூட்டம் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை தீர்க்கும் ஒரு நடவடிக்கையாக, நீதிபதி ஆனந்த் தலைமையில், ஐவர் குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. அணை பலமாக உள்ளதா, இல்லையா என்பதை ஆராய்ந்து, அறிக்கை தரும்படி, இந்த ஐவர் குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. அணையின் பலம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி, குழுவில் இடம் பெற்றுள்ள தத்தே மற்றும் மேத்தா ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அணை பகுதிக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்தி, அறிக்கை தயாரித்தனர்.

இந்நிலையில், ஐவர் குழு நேற்று முன்தினம் டில்லியில் கூடியது. முதல் நாளான அன்று, இரு தரப்பிலும் வழக்கறிஞர்களின் வாதம் நடைபெற்றது. மேலும், வல்லுனர் குழு சார்பில் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கேரள அரசின் புதிய அணை வாதத்திற்கு ஆதரவு காட்டவில்லை.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்த அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. தத்தே மற்றும் மேத்தா ஆகியோர் ஆராய்ந்து அளித்த அந்த அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில், இடுக்கி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அணைக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை. முல்லைப் பெரியாறு, வைகை, சிறுதோணி உள்ளிட்ட அணைகள் சமீபத்திய நில அதிர்வுகளால் பாதிக்கப்பட்டனவா என்று பார்த்த போது, எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை. மேலும், முல்லைப் பெரியாறு அணை வலுவாகவே உள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது. இக்கருத்தை ஐவர் குழுவும் ஏற்றிருக்கிறது.

தவிர தத்தேயும், மேத்தாவும் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டனர் என்று கூறி, அவர்களை நீக்க வேண்டுமென்று கேரளா சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் மனுவை பரிசீலனை செய்த ஐவர் குழு, இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும், அவர்களை நீக்கம் செய்திட முடியாது என்று கூறி புகார் மனுவை நிராகரிப்பதாக தெரிவித்தது. :lol:

அதுமட்டுமல்லாது, கேரளா சார்பில் அணையின் நீர்மட்டத்தை, 136 அடியில் இருந்து, 120 அடி வரை குறைத்திட வேண்டுமென்று கோரி அளிக்கப்பட்டிருந்த மனுவையும் நிராகரித்தது. தாங்கள் ஆய்வு செய்வதற்கு முன் அணையின் நீர் தேக்க அளவை 136 அடியாக தொடரலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்த கருத்தை சுட்டிக் காட்டி, அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டுமா, வேண்டாமா என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும் தெளிவுப்படுத்தியது.

இது விஷயமாக ஏற்கனவே கேரள எம்.பி,க்கள் பிரதமருக்கு தெரிவித்த மனு தங்கள் ஆலோசனைக்கு வந்ததாகவும், அதை பற்றிய கருத்துக்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் திட்டவட்டமாக கூறப்பட்டிருக்கிறது.

தவிரவும், முதல் நாள் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தங்களது வாதத்தின் போது, அணை பழமையானதாகி விட்டதே தவிர, அணையில் விரிசல் ஏதும் இல்லை என, கேரள வழக்கறிஞர்கள் கூறியதையும், ஐவர் குழு சுட்டிக் காட்டியது.

இனி மேலும் கால நீட்டிப்பு கோரப் போவதில்லை என்பதால், வரும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தன் இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதற்கு ஐவர் குழு முடிவெடுத்துள்ளது. இது தமிழகம் சார்பில் வலியுறுத்திய விஷயங்களுக்கு வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது. அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில், தன் இறுதி அறிக்கையை நீதிபதி ஆனந்த் தயாரிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.dinamalar...l.asp?Id=378808

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடத்தின் செயற்கைக் கோள் படம் (satellite imagery).

இரு மாநில எல்லைகள் வெள்ளைக் கோடினால் குறிக்கப்பட்டுள்ளது..அணையின் நீர் பிடிப்பு பகுதி தோராயமாக பர்ப்பிள் வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது.

124v3nt.jpg

.

அணையின் இடம் - பெரிதாக்கப்பட்ட செயற்கைக் கோள் படம்

70ky1k.jpg

Source: Google Earth.

.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.