Jump to content

யாழ் நிர்வாகம் தொடர்பான ஒரு அறிவித்தல்


Recommended Posts

....

வலைஞன் வந்தால் உதுவும் எழுதேலாது அந்தாளுட்டை வெட்டுக்கொத்து வாங்கினவங்களுக்கு இன்னும் காயம் ஆறியிருக்காது :lol:

கு.சா.அண்ணா அடிக்கடி வலைஞன் அண்ணாவை நினைத்து மனம் நெகிழ்ந்து கொள்ளுறது தெரிகிறது... :lol::D

Link to comment
Share on other sites

  • Replies 163
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இணையம் தொடர்ந்து இயங்க இருப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி. புதிய நிருவாகத்தினர் யாழின் வடிவமைப்பிலும் சில மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

வாழ்த்துக்க‌ள்.

முல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலைஞன் திருப்பியும் வாறது உங்கை கனபேருக்கு  வயித்தைகலக்குது :lol: ...நான் வந்து எதுக்கும் எவரெடி :mellow:

ஏன் தாத்தா வலைஞன் அவர்கள் அப்படி கண்டிப்பானவரா.... :rolleyes::)

Link to comment
Share on other sites

மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி.. :D மகிழ்ச்சி..! :D

எல்லாம் என்னோட ராசி :rolleyes:<_<

போனமுறை நிக்கபோகுது எனற போது லவ் பண்றதா சொன்னேன்..

இந்த வருடம் ஜீவாக்கு கல்யாணம் என்று வெடிய பத்த வச்சிட்டாங்க ..

அடுத்த முறை??????..... :rolleyes::icon_idea:

அடுத்தமுறை பிள்ளை பிறந்திட்டுது எண்டு பீதியைக் கிளப்பப் போறாங்கள்..! :lol:

Link to comment
Share on other sites

சித்திரை முதலாம் திகதியிலிருந்து, புதிய நிர்வாகத்தை பொறுப்பெடுத்து நடாத்த இருக்கும்,

இணையவன், நிழலி, வலைஞன் ஆகியோருக்கு நன்றிகள்.

எனது ஒத்துழைப்பு என்றுமே... யாழிற்கு இருக்கும்.

மோகன் அண்ணா தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் யாழின் கொள்கைகள் என்பது மோகன் அண்ணாவின் நல்ல எண்ணங்களாகும். அதன் பால்.. ஒரு ஈடுபாட்டோடு யாழில் இணைந்திருந்தவர்கள் என்ற வகையில்.. அவர் யாழை விட்டு சற்றே விலகி நிற்பது என்பது அவர் மீது... loyalty உள்ள எம்மைப் போன்றவர்களும் சற்று விலகி நிற்கவே தூண்டச் செய்கிறது..!

யாழில் பல சர்ச்சைகள் மத்தியிலும் எமக்கு எழுத குறிப்பாக அறிவியல் சார்ந்து தமிழ் ஆக்கங்களை எழுத ஊக்கமளித்தவர்களில் மோகன் அண்ணா.. சுரதா அண்ணா... ஜேர்மனி ராஜன் அண்ணா.. ஜேர்மனி.. சோழியண்ணா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மோகன் அண்ணா அறிவியலுக்கு என்று தனிப் பகுதியில் செய்திகளை யாழின் முகப்பில் இட ஒரு காலத்தில் நாங்களும் யாழின் நிர்வாக அலகுக்குள் நிற்க உதவி நின்றவர். அவை யாழின் வசந்த காலங்கள். அந்தக் காலம் மீண்டும் மீளவே இல்லை. காரணம் அதன் பின் வந்தவர்களால் நாங்கள் எதிரிகளாகக் காட்டிக்கொள்ளப்பட்டது தான்.

அதுமட்டுமன்றி.. இவன் எழுதிறதெல்லாம்.. ஒரு அறிவியல் செய்தியா என்று எமது வலைப்பூவில் வந்து பின்னூட்டம் இட்டவர்களும் இதே களத்தில் இன்றும் இருக்கின்றனர். அதேவேளை அந்த அறிவியல் செய்திகளுக்கு தமிழகத்தின் முன்னணி வார ஏடு ஆனந்த விகடன் கெளரவம் அளித்து அதன் இதழில்.. வலைப்பூவையும் அறிமுகம் செய்து வைத்தது. இந்த அளவில் தான் உள்ளது இன்றைய யாழில் ஒரு சுய ஆர்வமுள்ள எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பாணி. எது எப்படியோ.. அவற்றை தமிழுக்காய் தமிழ் தாய் மண்ணுக்காய் மன்னித்தோம்... மறந்தோம்..!

எதிர் வரும் ஏப்ரல் 1 இல் இருந்து யாழின் புதிய நிர்வாக நடைமுறைகளும் விதிகளும் ஒத்து வந்தால் அன்றி யாழில் அதிகம் எழுதுவது என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயமாகவே இருக்கும். புதிய நிர்வாகம் அடிப்படை கொள்கை அளவில் என்றாலும் மோகன் அண்ணாவின் வழித்தடம் பற்றி பயணித்தால் யாழோடு தொடர்ந்து உறவாடுவதில் பிரச்சனை இருக்காது. இன்றேல்.. எல்லாமே யோசிக்க வேண்டிய மாற்றமடைய வேண்டிய விடயமாகவே இருக்கும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா உண்மையான,நேர்மையான ஆள் தான் ஆனால் கடைசியாக நடந்த பிரச்சனையில் அதை கடைப் பிடிக்க முடியாத படியால் தான் அவர் யாழை விட்டுப் போகிறார்...உண்மையில் பாவம் அவர்...பார்ப்போம் எந்தளவிற்கு நிழலி யாழை கொண்டு நடத்தப் போகிறார் என?...உண்மையாய் சொல்லப் போனால் இணையவனில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.ஓர‌ளவுற்கு யாழ் நட்பு வட்டத்தையும்,மட்டு பதவியையும் நியாயமாக வெவ்வேறாக கொண்டு செல்ல முடிந்த நிழலியால் முடிகிறது ஆனால் இணையவனால் முடியவில்லை என்பது தான் என் கருத்து.இணையவன் ஆர‌ம்ப காலத்தில் தனது நட்பு வட்டார‌த்திற்கு சில சலுகைகள் காட்டிய படியால் தான் அவர்கள் படிப்படியாக வளர்ந்து பிர‌ச்சனை இந்த நிலைக்கு வந்தது...வலைஞனைப் பற்றி எனக்குத் தெரியாது அதனால் அவரைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.

மோகனைப்போல இணையவனும் , வலைஞனும் மிகுந்த பொறுமைசாலிகள் ரதி. இந்த 3சாதுக்களும் ஒருநாளும் மிரண்டதில்லை. இணையவன் தனிமடல் அறிவிப்புச் செய்யாவிட்டாலும் நீதி தவறியதில்லை. இதேபோலத்தான் வலைஞனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை முதலாம் திகதியிலிருந்து, புதிய நிர்வாகத்தை பொறுப்பெடுத்து நடாத்த இருக்கும்,

இணையவன், நிழலி, வலைஞன் ஆகியோருக்கு நன்றிகள்.

எனது ஒத்துழைப்பு என்றுமே... யாழிற்கு இருக்கும்.

மோகன் அண்ணா தொடர்ந்து யாழில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.

Link to comment
Share on other sites

யாழை மூடாமல், தொடரப்போவது நல்ல செய்தி.

Link to comment
Share on other sites

I was so sad to hear about the closure plans now so glad this circle to contiue.

Weldone Mohan for all the years hard job & good luck to the new management.

-Thevaki Acca-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சியும் தொடர்ந்து இணையத்தை நடத்த இருக்கும் மூவருக்கும் நன்றியும்.அத்துடன் மோகனும் தொடர்ந்து எம்முடன் இணைந்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

Link to comment
Share on other sites

எனக்கும் இங்கு என் நண்பரின் ஓர் ரவல்ஸ் நிறுவனம் ஒன்றுள்ளது. கேட்டால் உடன் தருவார் ... என்ன சிறிலங்கன் எயார்லைன்ஸ் அட்வேட்டாக இருக்கும், அது சரி வராது!

விளம்பரங்கள் கேட்கும்போது அவர்களிடம் கருணைகாட்டுமாறு கேட்பதுபோல் அல்லாது யாழில் இணைப்பதால் எப்படியான நேரடி, மறைமுக நன்மைகள் உள்ளன என விளங்கப்படுத்தி எடுத்தால் அதாவது இங்கு விளம்பரமுதலீடு செய்வதால் எப்படியான பயன்கள் கிடைக்கும் என்பதை தெளிவுபடுத்தினால் அவர் யாழுக்கு நீங்கள் விளம்பரம் பெறுவதை அவர் உங்களுக்கு உதவிபோல் செய்வதாக நீங்களோ அவரோ நினைக்கத்தேவையில்லை.

உங்கள் நண்பர் என்கின்றீர்கள், சிறீலங்கன் விமானப்பயணத்துறை சம்மந்தமானது எனவும் கூறியுள்ளீர்கள். அதாவது யதார்த்தவாழ்வில் உங்களுக்கு தெரிகின்றது எம்மைச்சுற்றியுள்ள உறவுகளிடையே குறிப்பிட்ட சில விடயங்களுக்கு (புறக்கணிப்பு) ஆதரவு இல்லை, பெறமுடியாது, சாத்தியம் இல்லையென்று. அப்படியாயின், யாழில் மட்டும் ஏன் சிலுவை சுமந்து வர்த்தகரீதியான வாய்ப்புக்களை நழுவவிடவேண்டும்? இப்படியான விடயத்தில் எமக்கு நாமே தடைகள், கட்டுபாடுகள் போட்டு சாதித்தவை எவை? யாழென்பது கொள்கைரீதியாக கற்பனையுலகில் சஞ்சரிப்பதற்கு மட்டும்தானா?

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா உண்மையான,நேர்மையான ஆள் தான் ஆனால் கடைசியாக நடந்த பிரச்சனையில் அதை கடைப் பிடிக்க முடியாத படியால் தான் அவர் யாழை விட்டுப் போகிறார்...உண்மையில் பாவம் அவர்...பார்ப்போம் எந்தளவிற்கு நிழலி யாழை கொண்டு நடத்தப் போகிறார் என?...உண்மையாய் சொல்லப் போனால் இணையவனில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.ஓர‌ளவுற்கு யாழ் நட்பு வட்டத்தையும்,மட்டு பதவியையும் நியாயமாக வெவ்வேறாக கொண்டு செல்ல முடிந்த நிழலியால் முடிகிறது ஆனால் இணையவனால் முடியவில்லை என்பது தான் என் கருத்து.இணையவன் ஆர‌ம்ப காலத்தில் தனது நட்பு வட்டார‌த்திற்கு சில சலுகைகள் காட்டிய படியால் தான் அவர்கள் படிப்படியாக வளர்ந்து பிர‌ச்சனை இந்த நிலைக்கு வந்தது...வலைஞனைப் பற்றி எனக்குத் தெரியாது அதனால் அவரைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

முக்கியமாக புதிய நிர்வாகத்திற்கு கூற விரும்புவது கருத்துக்களை நீக்கும் போது கட்டாயம் அதை எதற்காக நீக்குகிறோம் என்பதை "கருத்துக்களில் மாற்றங்கள்" என்ட‌ தலைப்பில் கட்டாயம் எழுத வேண்டும் அல்லது தனி மட‌லிலாவது அறிவிக்க வேண்டும்...நிழலிக்கு அந்த பழக்கம் கொஞ்ச‌ம் இருக்கிறது ஆனால் இணையவணுக்கு சுத்தமாக இல்லை.

ரதி ... ஒரு பச்சை! ... உண்மையை உண்மையாக எழுதியதற்கு!

... தெரிந்தவர்கள் பலர், ஆனால் மதிப்பளிப்பது சிலருக்கே! அதில் மோகனும் ஒருவர்! அதிகம் எழுதாதவர் மட்டுமல்ல, அதிகம் கதைக்காத ஓர் பண்பாண ஜீவன்! ... என் 12 வருட யாழ் பயணத்தில் மோகன் என் மூலம் மட்டுமல்ல பல யாழ் உறவுகள் மூலமும் சந்தித்த நெருக்கடிகள் பல ... தாக்குப்பிடித்து இழுத்துக் கொண்டு சென்ற பண்பாளன்! யாழ் மூலம் பலதை செய்தோம் ... எமது விளம்பரங்களுக்காகவல்ல ... அவைகளுக்கெல்லாம் அன்று தொடக்கம் இன்று வரை ஆதரவளித்த மனிதன்! ... எல்லாவற்ருக்கும் மேலாக தமிழை வலைத்தளத்தில் பதியத்தொடங்கியதே இந்த யாழ் மூலம்தான் .. பின் சில தளங்களிலும்!

மோகன் யாழில் இருந்து தற்காலிகமாக விலகுவதை ஏற்க முடியவில்லை, ஆனால் மோகன் தற்காலிகமாக இதிலிருந்து விலகத்தான் வேண்டும் ... சிறிது மூச்சு விடட்டும்!

புதிய யாழ் நிர்வாகம் ..

நிழலி ... சுமூகமாக/சாதுரியமாக கொண்டு செல்லும் வல்லமை இருக்கிறது!

வலைஞன் ... எனக்கு பெரிதாக தெரியாது!

இணையவன் ... எனக்கு நம்பிக்கை இல்லை(மன்னிக்கவும் இப்படி எழுதுவதற்கு)!

... நான் இதுவரை யாழில் பயணித்தது போலவே ... என் கருத்துக்களாகட்டும் / கேள்விகள் கேட்பதாகட்டும் / விவாதங்கள் ஆகட்டும் ... பயணிக்க விரும்புகிறேன். என்னை மாற்றவும் முயலவில்லை/இலகுவும் அல்ல! .. அதில் உங்களுக்கு ஆட்சேபனை இருக்குமென்று நான் உணரும்போது ... உங்களுக்கு உங்கள் பார்வையில் தொடர்ந்து தொந்தரவு தராமல் விலகுவதே நன்மை! ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி, இணையவன், வலைஞன் ஆகியோருக்கு எமது மீனகம் இணையம் சார்பாக வாழ்த்துக்கள். 05.09.2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை சார் ஊடகவியலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட எமது மீனகம் இணையத்தை புலம் பெயர்வாழ் உறவுகளிடமும் தமிழகத் தமிழர்களிடம் கொண்டு சேர்த்தததில் "யாழ்" கருத்துக்களத்திற்கே முதன்மை பங்கு என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா, எனக்கு நீங்கள் யாரென்றே தெரியாது. ஆனாலும் என்னவோ உங்களை நான் miss பண்ணுறன் ....

புதிய நிர்வாகத்திற்கும் வாழ்த்துகள்...

Link to comment
Share on other sites

யாழ் தொடர்வது மகிழ்ச்சி, அத்துடன் புதிய நிர்வாகக் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். மோகன் அண்ணாவும் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

ஒரு வார விடுமுறையில் இவ்வளவும் நடந்து விட்டதா? எது எவ்வாறு இருப்பினும், ஒரு கருத்துக் களத்திலாவது நாம் ஒற்றுமையாக இருக்கலாமே என்பதே எனது வேண்டுகோள்/அவாவாகும். இனியாவது கொஞ்சம் பொறுமையுடனும் ஒற்றுமையுடனும் நாம் செயற்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

மோகன் அண்ணா எமக்கான ஆலோசனைகளை தந்து உதவுவதுடன் தொழில்நுட்ப ரீதியிலான அனைத்து ஆதரவு மற்றும், உதவிகளை வழங்குவார்.

இங்கு எழுதப்பட்டுள்ள கருத்துக்களை பார்க்கும்போது பலர் இந்தவசனத்தை கவனிக்கவில்லை போல்த்தெரிகின்றது. மோகன் ஒரு இடமும் ஓடிஒதுங்கமாட்டார், யாழ் இணையம் உள்ளவரை திரைமறைவிலாவது இருந்து செயற்பட்டுக்கொண்டுதான் இருப்பார். 'யாழ் இணையம்' மோகனின் குழந்தை. தனது குழந்தையைவிட்டு அவர் எங்குபோய்விடமுடியும்? உங்கள் கருத்துக்களில், தெளிவான சிந்தனைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிழலி பற்றியோ வலைஞன் பற்றியோ இணையவன் பற்றியோ சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

Link to comment
Share on other sites

தொடர்ச்சிகள் தொடரட்டும். இதற்குள் எப்படிப்பட்ட பிரச்சனைகள் உண்டென எனக்குத் தெரியாது. இருந்தும் ஒன்றாயிருப்போம்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றி . நான் இணைந்து கொஞ்ச நாட்களே .

சந்தோசமாக இருக்கின்றது . இன்னும் தொடர எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

மேலே காதல் சொன்னது போல் மோகன் அண்ணாவுடன் தனிப்பட்ட பரிச்சயம் இல்லாவிட்டாலும், ஒரு மிகுந்த மரியாதைக்குரிய நபராகத்தான் கருதுகிறேன். அவருடைய வழிகாட்டல் தொடர்ந்தும் தொடரவேண்டும், அவரது பங்களிப்பும் தொடரவேண்டும் என்பதே என் விருப்பமும்.

நிழலி, இணையவன், மற்றும், வலைஞனுக்கும் வாழ்த்துக்கள். தம் வேலை, வீடு, குடும்பம் போக, இதற்கும் நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் மெச்சத்தக்கது.

யாழ் களம் தொடர்ந்தும் சிறப்பாக இயங்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு. மோகன் அவர்கட்கு, சில விடையங்களை நான் கடுமையாகவே சந்திக்கப் பழக்கப் படுத்தப்பட்டுவிட்டேன். எனினும் கடந்த காலங்களில் வன்னி நிலமை மிகவும் மோசமாக இருந்த காலங்களில் தேசத்தின் தேவைகருதி நான் தங்களிடம் கேட்ட உதவிகளை உடனுக்குடன் நிறைவேற்றினீர்கள் அதற்காக, இம் முகமறியா மனிதனுக்கு நன்றி கூறுகின்றேன். தொடர்ந்தும் யாழுடன் இணைந்திருப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்துகள்

என்னால் முடிந்த பங்களிப்பினையும் நான் செய்வேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.