Jump to content

2016இல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி முதல்வர் வேட்பாளர் ரஜினிகாந்த்; அமித் ஷா ரஜினியுடன் பேச்சு


nochchi

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2016இல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி முதல்வர் வேட்பாளர் ரஜினிகாந்த்; அமித் ஷா ரஜினியுடன் பேச்சு
2014-08-21 16:35:00 | General

புதுடில்லி : 2016இல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி ; ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் இந்த இரண்டு விடயங்களை மட்டுமே பிரதானமாகச் சொல்லி ரஜினியிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறாராம் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா.

ரஜினியைச் சுற்றி நடக்கும் அரசியல் பற்றி இன்று நேற்றல்ல. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக எழுதி வருகிறது பத்திரிகை உலகம்.

ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இரசிகர்களும் மக்களும் விமர்சகர்களும். ஒரு கட்டத்தில் இரசிகர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டாலும் மக்களும் விமர்சகர்களும் விடுவதாக இல்லை. ரஜினியும் எப்போதெல்லாம் அரசியல் பற்றிய கேள்விகள் வந்தாலும் அது ஆண்டவன் கையில் என்று தொடர்ந்து கமா போட்டுக் கொண்டே வருகிறார்.

 இப்போது ரஜினி அரசியலுக்கு வந்து விடுவார் போலிருக்கிறது என அரசியல் உலகில் பேச ஆரம்பித்திருக்கிறார்க, திரைமறைவில் நடக்கும் சில விடயங்களை மோப்பம் பிடித்து! 

இப்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி ரஜினிக்கு எந்த அளவு நெருக்கமான நண்பர் என்பது உலகமறிந்தது. அவரது விருப்பம் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான். அதை அவரே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். ரஜினியிடமும் பலமுறை சொல்லிவிட்டாராம்.

  தமிழகத்தில் 2016 இல் பா.ஜ.க. ஆட்சி மலர வேண்டும் என்பதுதான் அக்கட்சியின் முழக்கம், குறிக்கோள். அதற்கு எந்த அளவு வாய்ப்புகள் உள்ளன? பூஜ்ஜியம்தான். ஆனால் ஒரு நபரை உள்ளே கொண்டுவந்தால் இந்த பூஜ்ஜியம் போய் ராஜ்ஜியம் கிடைக்கும் என நம்பும் பா.ஜ.க. ரஜினியைக் குறிவைத்துள்ளது.

 இதெல்லாம் நடக்குமா? என்ற கேள்வி எழுந்தபோது ஏன் நடக்காது என்று கூறி பா.ஜ.க. தலைவரும் தனது நெருக்கமான சகாவுமான அமித் ஷாவிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் நரேந்திர மோடி.

 சில தினங்களுக்கு முன் ரஜினியிடம் நீங்கள் தமிழகத்தின் முதல்வராவது எப்போது? என்று மங்களூரில் ரஜினியிடம் நிருபர்கள் கேட்டபோது வழக்கம் போல ஆண்டவன் கையில் என்று சொல்லாமல் அது மக்களின் கையில் உள்ளது என்றதோடு, தொண்ணூறுகளில் ஒருநாள் தான் சாலையில் நடந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அதில் முதலவர் ஜெயலலிதா சிக்கிக் கொண்டதையும்  பின்னர் பொலிஸார் தன்னைக் காரில் ஏற்றி அனுப்பி விட்டு போக்குவரத்தை சீராக்கியதையும் நினைவு கூர்ந்திருக்கிறார்.

அமித் ஷாவிடம் அரசியல் குறித்து ஆர்வத்துடன் பேசிய ரஜினி, பா.ஜ.க.வில்  சேர்வது குறித்து எதுவும் உறுதியாகக் கூறவில்லையாம். ஆனால் லிங்கா வெளியான பிறகு இதுகுறித்து மீண்டும் பேச பா.ஜ.க. தலைவர் அமித் ஷா முடிவு செய்திருப்பதாக பா.ஜ.க. தரப்பில் கூறுகின்றனர்.

 தட்ஸ் தமிழ்

 

/www.thinakkural.lk/article.php?world/gsatajxvuf2575fecf2c55019841rtimh71d3195c879d115440ae45u0jix#sthash.1tkA8O9o.dpuf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
    • ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.