Jump to content

அமெரிக்க போர் விமானத்தை நடுவானில் வழிமறித்த சீன போர் விமானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்க போர் விமானத்தை நடுவானில் வழிமறித்த சீன போர் விமானம்
 
திகதி: Aug 24, 2014 | இணைத்தவர்: மாலதி
 
அமெரிக்க போர் விமானத்தை சர்வதேச வான்பரப்பில் சீனப் போர் விமானம் வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இதற்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.  
 
தென் சீன கடல் உரிமை மற்றும் கிழக்கு சீன கடல் விவகாரங்களால் அப்பகுதி எப்போதும் பதற்றத்துடனேயே இருக்கிறது. மேலும் சீனாவுக்கு எதிரான நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது ராணுவத்தை அப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளது.  
 
சீனா கடற்பரப்பில் மேலாக சர்வதேச வான் எல்லையில் அமெரிக்க போர் விமானமான யு.எஸ் பி-8 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது, சீனாவின் போர் விமானமான சைனீஸ் ஜெ-11 அமெரிக்க போர் விமானத்திற்கு மிகவும் நெருக்கமாக 50 இல் இருந்து 100 அடி இடைவெளியில் 3 முறை வழிமறித்துள்ளது.  
 
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் மூத்த செய்தித் தொடர்பாளரான ஜான் கிர்பி, சீன போர் விமானமானத்தின் நடவடிக்கை இது தொடர்பாக சீன அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் சீனாவின் போர் விமானத்தை இயக்கிய விமானி சர்வதேச சட்டங்களை மதிக்கவில்லை என்றார்.  
 
மேலும் இதுபோன்ற அச்சுறுத்தும் வகையிலான செயல்கள் சீனாவுடன் நாங்கள் வைத்துக் கொள்ள விரும்பும் ராணுவ தரப்பிலான உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.sankathi24.com/news/_212/58/article
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24-us-plane-600.jpg

 

அமெரிக்க ராணுவ விமானத்தை எங்கள் போர் விமானம் முட்டுவது போல் பறக்கவில்லை: சீனா.

 

பெய்ஜிங்: அமெரிக்க ராணுவ விமானத்திற்கு மிக அருகில் தங்கள் நாட்டு போர் விமானம் பறந்ததாக அமெரிக்கா கூறுவதை ஏற்க சீனா மறுத்துள்ளது.

 

சீனாவில் உள்ள ஹைனான் தீவுகளில் இருந்து 220 கிமீ தொலைவில் உள்ள சர்வதேச கடற்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க ராணுவ விமானம் பறந்தபோது அதற்கு மிக அருகில் சீன போர் விமானம் பறந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும் சீன விமானம் அமெரிக்க கண்காணிப்பு விமானத்திற்கு மிக அருகில் 3 முறை வந்ததாகவும், அதில் இருந்த ஆயுதங்களை காட்டி மிரட்டியதாகவும் அமெரிக்க ராணுவ அட்மிரல் ஜான் கிர்பி கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

 

இந்நிலையில் இது குறித்து சீன பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் யாங் யுஜுன் கூறுகையில்,

 

அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அமெரிக்க விமானம் தான் சீன கடற்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. அமெரிக்க கண்காணிப்பு விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச கடற்பகுதியில் பறக்கையில் சீன விமானம் போதிய அளவு இடைவேளையில் தான் பறந்தது என்றார்.

 

அமெரிக்கா கண்காணிப்பது தான் சீன விமான மற்றும் கடல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று சீன நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

முன்னதாக கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹைனான் தீவுகளில் உள்ள கடற்பகுதியில் பறந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான உளவு விமானம் இபி-3 மற்றும் சீன விமானம் மோதிக் கொண்டதில் சீனாவைச் சேர்ந்த விமானி பலியானார். இதையடுத்து அமெரிக்க விமானம் ஹைனானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

தெரியாமல் நடந்திருக்கும் 

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அமெரிக்க விமானம் தான் சீன கடற்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது.

தென்சீனக்கடலில் அமெரிக்காவுக்கு என்ன வேலை? :rolleyes:மெக்சிக்கோ வளைகுடாவில் சீன விமானங்கள் பறந்து திரிய முடியுமா?? :huh::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.