Jump to content

கற்பு என்பதாவது ....


Recommended Posts

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவர் ஒரு குளம் வெட்டினார்,குளத்திற்கு மடை வழியாகத் தண்ணீரைத் திறந்து விட்டார்கள். கால்வாயில் இருந்து மடை வழியாக போன தண்ணீர் எல்லாம் பூமிக்குள் போனதே தவிர குளம் நிறையவில்லை.

யார் யாரெல்லாமோ வந்து என்ன என்னவோ செய்தும் குளத்தில் தண்ணீர் தேங்கவே இல்லை. ராஜாவுக்கு ரொம்ப கவலையாப் போச்சு...ஏதோ தெய்வ குத்தமா இருக்குமுன்னு நினைச்சு பரிகாரமும் பண்ணிப் பார்த்தாச்சு.. அப்பவும் குளத்திலை தண்ணீர் தேங்கவே இல்லை..

இப்படி இருக்கும்போது அந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் நடந்த விடயங்களை எல்லாம் கேள்விப்பட்டு ராஜாவிடம் போய், ராஜாவே அந்தக் குளத்தில் தண்ணீர் தேங்க நான் ஒரு வழி சொல்லுறேன் .. செய்றீங்களா என்றார்.

ராஜாவும் விளைச்சல் பெருகணும், வெள்ளாமை வெளையனும் மக்களக்கு தண்ணீர் பஞ்சம் குறையணும் ..அதுக்கு ஒரு வழியச் சொல்லுங்க !!. செய்கிறேன் என்றார். முனிவர் அரசனைப் பார்த்து , அரசே! மனதளவில் கற்புள்ள பெண்களில் யாரவது ஒருத்தி ஒரு குடம் தண்ணீரைப் போய் ஊற்றினால் போதும்!..குளம் நிரம்பி விடும் என்றார்.

அதைக் கேட்ட ராஜா 'அட இது என்ன பிரமாதமான காரியமா !!... என்று சொன்னவர் தன் பட்டத்து ராணியை அழைத்து "நீ போய் ஒரு குடம் தண்ணீரை ஊற்றி விட்டு வா என்றார்..' இப்ப பட்டத்து ராணியோட நிலை ரொம்ப தர்மசங்கடமா போயிடுச்சு .. ராணியும் ராஜா சொன்ன சொல்லைத் தட்ட முடியாமல் வேறு வழி இல்லாமல் ஒரு குடம் தண்ணீரை குளத்தில் ஊற்றினாள். ஊர் மக்கள் எல்லோரும் குளம் நிரம்ப போகிறதை காண ஆவலாக நின்றார்கள்..ஆனால் இம்முறையும் தண்ணீர் தேங்கவே இல்லை ...

ராஜா ராணியை முறைக்க ராணி முனிவரை சுட்டு எரித்து விடுவதுபோல் பார்த்தாள். அப்புறம் மந்திரி மனைவியை அழைத்து வந்து குளத்தில் நீர் ஊற்றச் சொன்னார்கள் ..ம்ம்ம்ம் குளத்தில் நீர் பெருகவில்லை.

 

அதன் பிறகு அந்த ஊரில் 'பத்தினி' என்று யார் யாரையெல்லாம் நினைத்து வந்தார்களோ அவர்களை எல்லாம் அழைத்து வந்து நீர் ஊற்றச் செய்தார்கள்.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் குளம் அப்படியே இருந்தது...!! ஊரில் பல பெண்கள் இந்தக் கற்பு சோதனைக்குப் பயந்து தண்ணீர் ஊற்ற வர மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்.

அப்போது அந்த வழியாக ஒரு நாடோடிப் பெண்ணும் அவளது கணவனும் வந்தார்கள். அவர்கள் குளக்கரையில் உள்ள கூட்டத்தைப் பார்த்து 'என்ன விடயம்??' என்று கேட்க பக்கத்தில் நின்ற பெண் விபரத்தை எடுத்துக் கூறினாள்.உடனே அந்த நாடோடிப் பெண் ஒரு குடம் கொண்டு குளத்தில் தண்ணீர்  ஊற்ற.... குளம் பெருகி விட்டது. நாடோடிப் பெண்ணின் கற்பு நிலையைக் கண்ட ஊர் மக்கள் எல்லோரும் ஆச்சரியப் பட்டார்கள் ஆரவாரம் செய்தார்கள்...

கற்பு என்கிறது உடல் சம்பத்தப் பட்டது மட்டுமில்ல அது மனசும் சம்பத்தப்பட்டது. அழகு அந்தஸ்து எல்லாத்துக்கும் அது அப்பாற்ப்பட்டது என்பதே கதையின்  நியதி..

கழனியூரன் எழுதிய மறைவாய்ச் சொன்ன கதைகளில் எதாவது கில்மா இருக்குமுன்னு பார்த்தா பாதி நீதிக் கதைதான் இருக்கு :)
 

 

எழுத்துப் பிழைக்காக திருத்தப்பட்டது

Link to comment
Share on other sites

கற்பு என்பதன் தோற்றுவாய் கற்பித்தல் என்பதே.
 
ஒரு பெண் இவனே என்னவன் என்று தனக்கு கற்பிப்பதே கற்பு.
 
 
 
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
 
 
கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.