Jump to content

என் தலைவா உன்னை இந்த விதமாகத்தான் நான் புரிந்து கொள்ள விரும்புகிறேன்(செத்தும் கொடுத்தான் சீதக்காதி)


Recommended Posts

அண்மையில் நடந்த இரு சம்பவங்கள் பிரபாகரனை நான் எவ்வாறு விளங்கிக் கொண்டேன் என்பதனைக்கூறுமாறு என்னை நிர்ப்பந்தித்தன. பிரபாகரன் என்று சொல்லாமல் தேசியத் தலைவர் என்று அவரை அழைக்கவே விரும்புகிறேன். என் புரிதலில் பிரபாகரன் அவ்வாறானவர் தான். மேலும், தேசியத்தலைவரை மெச்சுவதனாலும்இ தேசிய விடுதலைப் போராட்டம் மீதான ஆர்வத்தினாலும் என் வாழ் நாளை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த முடியாது இடர்ப் படுகின்றேன். அது வெறும் அல்லது ‘சும்மாவான’ இடர்ப்பாடு அல்ல. ஆனால், “அண்ணை கவனம்! அண்ணையை கவனமாகப் பாருங்கோ!” என்று எழுதிவைத்துவிட்டு அனுராதபுரம் விமானப் படைத்தள தாக்குதலில் களப்பலியான லெப்.கேணல்.இளங்கோவனுக்கு முன்னாலேயோ அல்லது ‘அண்ணை’ பெயர் சொல்லி தம்மை கொடையாகக் கொடுக்கின்ற கரும்புலிகள் முன்னாலேயோ என் இடர்ப்பாடு தூசு.

இவர்கள் இப்படி களப்பலி ஆனார்களேஇ கரும்புலி ஆகப் போனார்களே, இவற்றில் இருந்து தான் அல்லது இவர்களில் இருந்து தான் தேசியத் தலைவரை நான் விளங்கிக் கொள்ள முயல்கிறேன். ஹஅடி முடி அறியமுடியாதஇஉணரமுடியாத, விளங்கமுடியாத, அண்டப் பெரும் சக்தி’ என்று அவரை நான் விளங்கிக் கொள்கிறேன்.

இரண்டு சம்பவங்களை முதலில் நான் கூறிவிடுகிறேன். கணேசன் அய்யர் எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் என்ற நூலை வாசித்தது என்பது ஒன்று. மற்றயது, சனல் 4 காணொளியில் தலைவரின் மரணம்பற்றிய மர்மம் துலங்கிவிடும் என்று மக்கள் பதை பதைத்தபடி காத்திருந்தது, அப்படிக் காட்டி விடுவார்களோ என்று அஞ்சி ஒரு தொலைக்காட்சி அதனை ஒளிபரப்பவில்லை. மற்றும் சிலர் அக் காணொளியைக் காண மறுத்தும் விட்டனர்.

அந்த மகா வீரனின் மரணத்தை மர்மமாக வைத்திருப்பது, அம் மாமனிதனுக்கு நாம் செய்யும் மரியாதைக் கேடு.அந்த நூலில் அய்யர் என்ன சொல்ல வருகிறார்? அந்நூல் முழுவதிலும் தேசியத்தலைவர் மீதான குற்றச்சாட்டுக்கள் மூன்று வகைப் படுத்தப் பட்டிருக்கின்றன.

  1. தனிநபர் பயங்கரவாதம்
  2. அராஜகம்
  3. அரசியலின்மை

இப்படி வகைப்படுத்துவது ஒரு சுலபத்துக்கே அன்றி கொச்சைப்படுத்தும் நோக்கமல்ல. இக்குற்றச் சாட்டுக்களை முன் வைக்கின்ற அய்யர் பலசந்தர்ப்பங்களில் இக் குற்றச்சாட்டுகளுடன் ஒத்தோடியாகவே காணப்படுகின்றார் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இப்பொழுது 55 வயதுக்கு மேற்பட்டவரும் அரசியல் முதிர்ச்சியின்பாற்பட்டவருமான அய்யர், களத்தில் நின்றுகொண்டு 20-25 வயதிற்கு இடைப்பட்ட இளம் போராளியான தேசியத்தலைவரை விமர்சித்தல் எங்கனம் தகும்? மேலும், ஆயுதப் போராட்டத்தை திட்டமிடலுடனும் தன்னம்பிக்கை உடனும் கையில் எடுத்துக்கொண்ட ஒருவரை, எவ்வித முன்னெடுப்புகளும் இன்றி, சிறு துரும்புகூட அசைக்காத ஒருவர் குற்றம் சாட்டுதல் என்னவகை நியாயம்?

தேசியத் தலைவரினது தளத்தையும், வயதையும், ஆரம்ப காலத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.’அந்தப் பருவத்தில் அது அப்படித்தான் ஆகும்’ என்ற வாக்கியத்துடன் அதனை கடந்து நாம் போகலாம். தவறுகளில் இருந்து நாம் கற்கவேண்டும். அனுபவத்தை உள்வாங்கி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவேண்டும். அய்யர்அத் தவறுகளில் இருந்து கற்றது என்ன? அந்த அனுபவங்களில் இருந்து எவ்வாறு அவர் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறார்? அப்படியொன்றும் இல்லையெனில் இந்நூல் எழுதுவதன் அவசியம் என்ன?இ அரசியல் என்ன? பிரபா கரனைக் காட்டி இவரும் பிழைப்பு நடாத்துகிறாரா? இந்த அரசியல் சூழலை தனது ‘யாவாரத்துக்குப்’பயன் படுத்துகிறாரா? ‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ கதை தான் நினை வுக்கு வருகிறது.

இரண்டு விசயங்கள் இதில் குறிப்பிட வேண்டி இருக்கின்றன. தேசியத் தலைவர் என்ற பெருமரம் தான் காய்த்தபடி இருக்கிறது. அய்யர் போன்ற சின்னஞ் சிறார்கள்அதற்குக் கல் எறிகின்றார்கள். உண்மையில் ‘செயற்கரிய செய்தவர்’ தேசியத் தலைவர். ‘பெரியன’ செய்ய தேசியத் தலைவர் களம் வருகின்ற போது, களத்தில் யாவற்றையும் கைவிட்டு வெறும் கையோடும் தோல்வி மனப்பான்மையோடும் தமிழகத்துக்கு வள்ளம் ஏற மன்னார் கரையை வந்தடைகிறார் அய்யர். காரியம் செய்தால் தானே குறையும் வரும், பிழையும் தெரியும். ஒரு காரியமும் ஆற்றாவிட்டால் யார் காணப்போகிறார்கள்? நிறைகுடம் தளும்பாது. குடத்தில் ஒன்றும் இல்லாவிட்டாலும் தளும்பாது.

இரண்டு, தலைவர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி விட்டு அந்த அடுக்குகளில் மேல் அமைப்பைக் கட்டியவர்கள் மீதும் அதே குற்றச்சாட்டுக்கள் அடுக்கப் படுகின்றனவே! தலைவர் மீது குற்றம் சாட்டி உமாமகேஸ்வரன் பிரிந்து போகிறார். ஆனால் உமா மகேஸ்வரன் என்ன செய்தார்? என்பதனை கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவல் சொல்லும். முன்னூறுக்கும் மேற்பட்டோரை படுகொலை செய்தவர் உமாமகேஸ்வரன் என்று அந்நாவல் சொல்கிறது. உமாமகேஸ்வரனிடம் இருந்து பிரிந்த தீப்பொறி குழுவினர் உமாமகேஸ்வரனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அந்த உமாமகேஸ்வரன் கொழும்பில் நட்ட நடு வீதியில் படுகொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

ஆனால் நமது தலைவரின் சாதனை என்ன? மாபெரும் இயக்கத்தைக் கட்டி எழுப்பி, பல்லாயிரம் போராளிகளை உருவாக்கி, மகத்தான சாதனைகள் பல புரிந்து, உலகத்தமிழர் அனைவரும் தம் தலைவர் இவர் தான் என உணர வைத்தவர். இது எப்படி சாத்தியப்பட்டது? எப்படித் தேசியத் தலைவரால் இதனை நிகழ்த்த முடிந்தது?

நான் தேசியத் தலைவரை இவ்வாறு தான் புரிந்து கொள்கிறேன். அவரது உண்மை, நேர்மை, உறுதி, வீரம், ஓர்மம், வீறு இவை தாம் அவரை தலைவர் என்ற இடத்தில் நிறுத்தி வைத்திருக்கிறது. இவற்றுடன் கடும் உழைப்பு, முன் முயற்சி, திட்டமிடல், தளம்பாத இலக்கு, தடுமாறாத இலட்சியம், தலைமைத்துவப் பண்பு இவைகளையும் இணைத்துக் கொள்ளவேண்டும். இவற்றுடன், தலைவர்’இறக்குமதி’ அரசியல் செய்யவில்லை. மார்க்சிய புராணம் பாடவில்லை. எவரையும் ஏத்தி ஏத்தி தொழுதவர் இல்லை. நான் சொல்ல ஒன்றே ஒன்று தான் உண்டு. மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்ற அரசியல் நடாத்தினார். தனக்கு எது இயலுமோ அதையே சொன்னார், செய்தார். தனது கொள்கையில் பிறழாது நின்றமையால் வீரனாக அவர் மண்ணில் வீழ்ந்தார். தனது குடும்பத்தையே ஒட்டு மொத்தமாகக் காவு கொடுத்தார். தாயையும் தந்தையையும் மக்களோடு மக்களாக அனுப்பி வைத்தார். உலகில் எந்த ஒரு மனிதன் இவ்வாறு செய்திருப்பான்? மகாத்மா எனப்பட்ட காந்தி செய்திருப்பாரா?

இறைவா, என் தலைவா உன்னை இந்த விதமாகத்தான் நான் புரிந்து கொள்ள விரும்புகிறேன். அது போதும் எனக்கு.

http://www.orupaper.com

Link to comment
Share on other sites

1. இருப்பிடம் எங்கே? - இந்தியா

ஈழத்தமிழர்கள் அகதி முகாமை விட்டே வெளியேறி சுதந்திரமாக நடமாட இந்திய காவல் துறை அனுமதிக்காத காலத்தில், கொலைகளுக்கு துணை போனேன், சேர்ந்தியங்கினேன் எனச் சொல்லிக் கொண்டு ஆயுதப் போராட்டத்துக்கு தயார் என்று சொல்லிக் கொண்டு ஐயர் எப்படி இந்தியாவில், பல வாகன்களின் சொந்தக்காரனாக எந்த பயமும் இன்றி சுதந்திரமாக உலவ முடிகின்றது.

2. சூழ்ச்சி ?

ஐயரின் புத்தகத்தில் உள்ளவை பிழை என்று வாதிடவருபவர்கள் தங்களை வெளிப்படுத்த வேண்டியதுடன் தங்களது செயற்பாடுகளையும் கூறவேண்டியிருக்கும். விவாதத்துக்கு வரட்டும் எல்லோரையும் மாட்டுவோம் என்ற பெரிய சதியின் அங்கமாகவும் இது இருக்கலாம். ஆகையால் ஐயரின் புத்தகத்தை விமர்சிக்க சம்பந்தப்பட்டவர்கள் இப்போதைக்கு தயாரில்லை என அறியக் கிடைக்கிறது.

3. காட்டிக்கொடுத்தல் ?

சுய விமர்சனம் என்ற நோக்கத்தோடு வெளியிடப்பட்ட ஐயரின் புத்தகத்தில், ராகவன், ரவி, குலம், தனி, சற்குணம், ஞானம், கறுப்பி, சாந்தன், மதி, வாத்தி போன்ற பத்துக்கு மேற்பட்டோர் தொடர்பான தகவல்கள் உண்டு. இன்று வேறுவேறு நாடுகளில் வசிக்கும் இவர்களுடன் கலந்தாலோசிக்கப்படாமல் தவறான தகவல்களுடன், உண்மைக்கு புறம்பான கற்பனைகளுடன் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது எனத் தெரிய வருகின்றது.

4. இறுதியாக

சுருக்கமாகச் சொன்னால் நான்குவருடங்கள் மட்டுமே இயக்கத்தில் இணைந்திருந்த ஐயர் அப்ரூவர் ஆகி இருக்கிறார். இனியொரு இணையதளத்தை நடாத்தும் நாவலன் துணை போயிருக்கின்றார். ஹிட்லருடன் கூட இருந்தவர்கள் இன்றும் தேடித் தேடி கைது செய்யப்படுகையில், ஐயரின் தகவல்கள் யாருக்கு பயன்படபோகின்றது என்பதனை யாரும் இலகுவில் ஊகித்தறிந்து கொள்ள முடியும்.

http://www.orupaper.com/blogs/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%90%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்ற அரசியல் நடாத்தினார்

அத்துடன் சிங்களத்துக்கும் ஏற்ற அரசியல் நடாத்தினார்....

Link to comment
Share on other sites

ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்,எங்கள்தலைவர் பிறந்தார்......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட தலைவன் நாட்டுக்கு தண்ட குடும்பத்தை கொடுத்தான்.

ஐயனட தலைவர்  மகளை அமெரிக்காவில்  லாயரா வைச்சு சொத்து வேண்டி போடுறார். 

சும்மா கண்ட கண்ட நாய் எல்லாம் காசு பார்க்க எழுத தொடங்கிட்டுதுகள். 

ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்,எங்கள்தலைவர் பிறந்தார்......................

ஆயிரம் இளைய தலைவர்களை உருவாக்கி "மறைந்தார்".

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
    • தங்களது கவி வரிகளில் வாழ்கிறது எமதுபோராட்டமும் வாழ்வும் வலியும். அதற்கேற்ற படங்களும்... பாராட்டுகள் உரித்தாகுக. 
    • திங்கள் முதல் நானும் கவனித்தேன். எண்ணை விலை வீழ்ந்துகொண்டே போகிறது. பிட்காயின்ஸ் விலை வீழ்ச்சியோடு தொடர்பிருக்குமோ தெரியவில்லை.
    • 5 ஓ…. 8 ஓ…. 10 ஓ….. சும்மா வாய்க்கு வந்தபடி அண்ணைனை ஏசுவதில் எனக்கும் உடன்பாடில்லை. அவர் தன் குறிக்கோளில் தெளிவாக இருக்கிறார்…… முடிந்தளவு, அதிமுக+, திமுக+ வாக்குகளை பிரித்து…..அமித்ஷாவின் 5 டார்கெட் தொகுதிகளிலாவது பிஜேபி யை வெல்ல வைப்பது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.