Jump to content

அமெரிக்காவுக்கு உள்ள உரிமை குறித்து அரசாங்கம் கேள்வி


Recommended Posts

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பயிற்சி வழங்­கு­வது உள்­ளிட்ட எத்தகைய செயற்­பாட்டை சர்­வ­தேசஅரச சார்­பற்ற நிறு­வ­னங் கள் முன்­னெ­டுத்­தாலும் அதனை அர­சாங்கம் சந்­தேகக் கண்­கொண்டே பார்க்கும். காரணம் வர­லாற்று பதி­வுகள் அவ்­வா­றான நிலையை தோற்­று­வித்­துள்­ளன. ஆனால் இது தொடர்பில் விமர்­சிக்க அமெ­ரிக்­கா­வுக்கு எந்­த­ள­வுக்கு உரிமை உள்­ளது என்று எங்­க­ளுக்கு புரி­ய­வில்லை என அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.
14-011_0.jpg
 
தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் என்று கூறப்­ப­டு­வதை ஏற்க முடி­யாது.அனை­வரும் இலங்கை நாட்டின் ஊட­க­வி­ய­லா­ளர்கள். நாம் இன ரீதி­யாக பிரித்­துப்­பார்க்­கக்­கூ­டாது. யாழ்ப்­பா­ணத்தில் இருந்து வந்த ஊட­க­வி­ய­லா­ளர்­களில் கஞ்சா கொண்­டு­வந்­த­வர்கள் இருந்­தார்­களா என்று எமக்குத் தெரி­யாது. எமக்கு கிடைத்த தக­வல்­களின் அடிப்­ப­டையில் விசா­ரணை செய்­யப்­பட்­டது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.நாட்டின் தேசிய பாது­காப்பு குறித்து கவனம் செலுத்­து­வது அர­சாங்­கத்தின் பொறுப்­பாகும். குறிப்­பாக சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் செயற்­பா­டுகள் குறித்து நாங்கள் அவ­தா­ன­மா­கவே இருப்போம் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.
 
ஊட­கத்­துறை அமைச்சில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
 
அமைச்சர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது,
 
கேள்வி: யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து வந்த தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் விசா­ரிக்­கப்­பட்­டுள்­ள­னரே ?
 
பதில்: தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் என்று கூற­வேண்டாம். தமிழ் முஸ்லிம் ஆங்­கில ஊட­க­வி­ய­லா­ளர்கள் என்று பிரித்து பேசு­வது முறை­யல்ல. அனை­வரும் இலங்கை ஊட­க­வி­ய­லா­ளர்கள். 30 வருட கால கொடூர அனு­ப­வத்தை கடந்து வந்­துள்ளோம். மேலும் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது.
 
கேள்வி:இந்த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான பயிற்சி பட்­ட­றைக்கு எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளதே?
 
பதில்: சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பயிற்சி வழங்­கு­வது உள்­ளிட்ட எந்த செயற்­பாட்டை முன்­னெ­டுத்­தாலும் அதனை அர­சாங்கம் சந்­தேகக் கண்­கொண்டே பார்க்கும். காரணம் வர­லாற்று பதி­வுகள் அவ்­வா­றான நிலையை தோற்­று­வித்­துள்­ளன. 1931 ஆம் ஆண்டு வாக்­கு­ரி­மையை எமது மக்கள் பெற்­றுள்­ளனர். அன்று முதல் மக்கள் வாக்­க­ளித்­து­வ­ரு­கின்­றனர். சில தேர்­தல்­களில் 80 வீத வாக்­க­ளிப்பும் பதி­வா­கி­யுள்­ளது. ஆனால் இவர்கள் வாக்­க­ளிப்­பது எவ்­வாறு என்று கற்­பிக்­கின்­ற­னரா? அல்­லது யாருக்கு வாக்­க­ளிக்­க­வேண்டும் என்று கற்­பிக்­கின்­ற­னரா? என்று தெரி­ய­வில்லை. எனவே அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் செயற்­பா­டுகள் குறித்து அர­சாங்கம் கவ­ன­மாக இருக்கும்.
 
கேள்வி: தமிழ் மொழி மூல ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு தமிழை விடுத்து ஆங்­கி­லத்தில் பயிற்சி வழங்க முடி­யுமா?
 
பதில்: தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் என்று கூற­வேண்டாம். இந்த இடத்­தி­லி­ருந்தே பிரி­வினை ஆரம்­பிக்­கக்­கூ­டாது. அத்­துடன் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் செயற்­பா­டுகள் குறித்தே இங்கு சந்­தேகம் எழுப்­பப்­ப­டு­கின்­றது. யாழ்ப்­பா­ண­ததில் இருந்த வந்த ஊட­க­வி­ய­லா­ளர்­களில் யாரா­வது கஞ்சா வைத்­தி­ருந்­த­னரோ என்று தெரி­ய­வில்­லையே?
 
கேள்வி:இந்த விவ­கா­ரத்தில் சட்­டத்­துக்கு புறம்­பாக செயற்­ப­டாமல் சட்ட ரீதி­யாக செயற்­பட முடியும் தானே?
 
பதில்: சட்­டத்­துக்கு புறம்­பாக செயற்­பட்­டி­ருந்தால் யாரும் நீதி­மன்றம் செல்­லலாம்.
 
கேள்வி: அப்­ப­டி­யாயின் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க முடி­யுமே?
 
பதில்: சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க கடந்த காலத்தில் முயற்­சிக்­கப்­பட்­டது. அவர்­களை உரிய முறையில் பதிவு செய்­யு­மாறு கோர­ப­பட்­டது. ஆனால் இதே ஊட­கங்கள் அதனை எதிர்த்­தன. நீங்­களே எதிர்த்து குரல் எழுப்­பி­னீர்கள். எனவே அதனை உரிய முறையில் செய்ய முடி­ய­வில்லை. யுத்த காலத்தில் புலி­களின் முகாம்­களை கைப்­ப­ற­றி­ய­போது அங்கு சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் கரு­விகள் காணப்­பட்­டன. இதுதான் வர­லாறு. எனவே தான் நாங்கள் நட­வ­டிக்கை எடுக்­கின்றோம். அவ­தா­னத்­துடன் இருக்­கின்றோம்.
 
கேள்வி; இந்த பயிற்சி பட்­ட­றைகள் ஆங்­கி­லத்­திலும் சிங்­க­ளத்­திலும் நடந்­த­போது பிரச்­சினை வர­வில்லை. ஆனால் தமிழில் நடக்­கும்­போது மட்டும் ஏன் சிக்கல் வர­வேண்டும்?
 
பதில்: தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் ஏற்­படும் எந்த விட­ய­மாக இருந்­தாலும் நாங்கள் நட­வ­டிக்கை எடுப்போம். அது எமது கட­மை­யாகும். அர­சாங்­கத்­துக்கு கிடைத்த தக­வல்­க­ளுக்கு அமை­யவே நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது.
 
கேள்வி: ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பயிற்சி வழங்கும் இடத்தில் ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­பட்­டதே?
 
பதில்: ஜன­நா­யக உரிமை குறித்து பேசு­கின்றோம். ஆர்ப்­பாட்டம் நடத்த இட­ம­ளிக்­காமல் இருக்க முடி­யுமா? ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ லண்டன் சென்­றி­ருந்­த­போது புலம் பெயர் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை தடுத்து நிறுத்தாத பிரிட்டன் அரசாங்கம் ஜனநாயகம் என்றது.
 
கேள்வி: இந்த சம்பவத்தை அமெரிக்கா கண்டித்துள்ளதே?
 
பதில்: இந்த விடயத்தை விமர்சிப்பதற்கு அமெரிக்காவுக்கு என்ன உரிமை உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. காஸாவில் இடம்பெறும் செயற்பாடுகளுக்கு அவர்கள் என்ன பதில் கூறப்போகின்றனர்? காஸா நிலைமை கவலையளிப்பதாகவும் எனினும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் அந்நாட்டின் செயலாளர் கூறுகின்றார். அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் இறக்கின்றனர்.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.