Jump to content

நாட்டில் தமிழ், சிங்கள மக்களுக்கு ஒரு சட்டமும் முஸ்லிம்களுக்கு தனிச்சட்டமும் அமுல் : இதுவே முஸ்லிம் தீவிரவாதம் பரப்பப்படுவதற்கு காரணம்


Recommended Posts

தமிழ், - சிங்­கள மக்­க­ளுக்கு ஒரு சட்­டமும் முஸ்­லிம்­க­ளுக்கு பிறி­தொரு சட்­டமும் ஒரே நாட்டில் செயற்­ப­டு­வதன் கார­ணத்­தி­னா­லேயே முஸ்லிம் தீவி­ர­வாதம் பரப்­பப்­ப­டு­கின்­றது. தேர்­தலில் வாக்­க­ளிப்­பின்­போது முஸ்­லிம்கள் நிஜாப் அணிய தடை விதிக்­கப்­பட்­டமை எமக்கு கிடைத்த வெற்­றி­யாகும் என்று ஜாதிக ஹெல­உ­று­மய தெரி­வித்தது.
 
JHU_Logo_1.jpg
 
ஜாதிக ஹெல உறு­ம­ய­வினால் நேற்று கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அக்­கட்­சியின் தேசிய செயற்­குழு உறுப்­பி­னரும் மேல் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான நிஷாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;
 
இந்த நாட்டில் முஸ்லிம் பெண்­க­ளுக்கு ஒரு சட்­டமும் தமிழ் சிங்­கள பெண் பிள்­ளை­க­ளுக்கு வேறு சட்­டமும் செயற்­ப­டுத்த முடி­யாது. ஆனால் இன்று பாட­சா­லை­க­ளிலும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் இவ்­வாறு பிரி­வி­னையே இடம்­பெ­று­கின்­றது. முஸ்லிம் மாண­விகள் தலையை மூடிய வண்ணம் ஹபா­யாக்­களை அணி­வதால் தமிழ்இ சிங்­கள மாண­வர்­க­ளுக்கே பாதிப்பு ஏற்­ப­டு­கின்­றது. கிழக்கு மாகா­ணத்தில் பாட­சா­லை­களில் முஸ்லிம் பெண்கள் ஹபா­யாக்­க­ளுக்குள் விடைத்­தாள்­க­ளையும் ஹிஜாப்­பினுள் தொலை­பே­சி­க­ளையும் வைத்தும் பரீட்சை செய்து சித்­தி­ய­டை­கின்­றனர். இவற்றை கண்­டித்து நட­வ­டிக்கை எடுக்க எவரும் இல்லை.
 
பாட­சா­லை­களில் முஸ்­லிம்­களே பிரி­வி­னை­யினை தூண்­டு­கின்­றனர்
 
பாட­சா­லை­களில் தனித்­துவம் என்ற பெயரில் முஸ்­லிம்கள் பிரி­வி­னை­யினை தூண்டும் வகையில் செயற்­ப­டு­கின்­றனர். பாட­சா­லை­களில் இருந்தே இன்று முஸ்லிம் பிரி­வி­னை­வாதம் தூண்­டப்­ப­டு­கின்­றது. ஹபா­யாக்­க­ளையும் ஹிஜாப்­பி­னையும் அணிந்து செயற்­ப­டு­கின்­றமை தொடர்பில் கடந்த காலங்­களில் பிரச்­சி­னைகள் தோற்­று­விக்­கப்­பட்­டன. இந்த நாட்டின் பாட­சா­லை­களில் அனை­வ­ருக்கும் ஒரு சட்­டம்தான்.
 
வாக்கு நிலை­யத்தில் ஹிஜாப்­பிற்கு தடை
 
அதேபோல் இடம்­பெ­ற­வி­ருக்கும் ஊவா மாகாண சபை தேர்­தலில் முஸ்­லிம்கள் தமது முகத்தை மூடும் வகையில் அணியும் ஹிஜாப் மற்றும் புர்கா உடை­க­ளுக்கு தடை விதிக்­கப்­பட வேண்டும் என நாம் முன்­வைத்த கோரிக்­கையில் வெற்றி பெற்­றுள்ளோம். வாக்கு நிலை­யங்­களில் முஸ்­லிம்கள் கள்ள வாக்­கு­களை போடு­வதும் சட்­ட­வி­ரோத செயல்­களை செய்­வ­தையும் இதன்­மூலம் நாம் தடுத்­துள்ளோம் என்றே கூற வேண்டும். இது எமக்கு மட்­டு­மல்ல முழு சிங்­க­ள­வர்­க­ளுக்கும் கிடைத்­துள்ள வெற்­றி­யாகும். இன்று வாக்கு நிலை­யங்­களில் மட்டும் தடை செய்­யப்­பட்­டதை எதிர்­வரும் காலங்­களில் அனைத்து செயற்­பா­டு­க­ளிலும் மேற்கொள்வோம். முஸ்லிம் தீவி­ர­வாத செயற்­பா­டு­களில் இருந்து இந்த நாட்டை காப்­பாற்ற நாம் போரா­டுவோம்.
 
காஸா தாக்­கு­தலை கண்­டிக்­கின்றோம்
 
மேலும், இன்று சர்­வ­தேச அளவில் முஸ்லிம் தீவி­ர­வாதம் செயற்­பட்­டுக்­கொண்­டு­தா­னி­ருக்­கின்­றது. இதனால் முஸ்­லிம்­களே இன்று அழி­கின்­றனர். இன்று காஸாவில் ஆயி­
ரத்­திற்கும் அதி­க­மான பொது மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். இவர்கள் மீதான தாக்­கு­த­லுக்கு நாம் கடு­மை­யான கண்­ட­னத்தை தெரி­விக்­கின்றோம். எனினும் இன்று பாலஸ்
தீன் தாக்­கு­தலை கண்­டித்து இலங்­கையில் கிழக்கில் உள்ள முஸ்­லிம்கள் ஆயி­ரக்­க­ணக்கில் வீதியில் இறங்கி போரா­டு­கின்­றனர். முஸ்­லிம்கள் மீதான தாக்­குதல் என கண்­டிக்­கின்­றனர். ஆனால் இதுவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­பினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தாக்­குதல் போஹோ கராம் அமைப்­பினர் பெண்­களை நடத்­து­கின்­ற­மை­யினை கண்­டித்து ஏன் இவர்கள் வாய் திறக்­க­வில்லை.
 
முஸ்லிம் அமைச்­சர்கள் எங்கே?
 
நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்­களு எதி­ராக பௌத்த தீவி­ர­வாதம் பர­வு­வ­தாக சர்­வ­தேச அளவில் பேசு­கின்­றனர். இங்­குள்ள முஸ்லிம் அமைச்­சர்கள் சர்­வ­தேச மட்­டத்தில் அறிக்கை வெளி­யி­டு­கின்­றனர். ஆனால் முஸ்லிம் தீவி­ர­வா­திகள் செய்யும் எதையும் ஏன் கண்­டு­கொள்­ள­வில்லை. பெண்­க­ளுக்கு எதி­ராக கலப்பு திரு­ம­ணத்­திற்கு எதி­ராக முஸ்­லிம்கள் போரா­டு­கின்­றனர். ஆனால் முஸ்லிம் தீவி­ர­வா­திகள் மதம் என்ற பெயரில் செய்யும் கொடு­மை­களை ஆத­ரிக்­கின்­றனர்.
 
இலங்கை முஸ்­லிம்­களும் தீவி­ர­வா­தி­களா?
 
மதம் என்ற போர்­வையில் இடம்­பெறும் அடக்கு முறை­க­ளையும் கொலை­க­ளையும் கொடு­மை­யான தண்­ட­னை­க­ளையும் ஆத­ரிக்கும் இலங்கை முஸ்­லிம்கள் இலங்­கை­யிலும் அவற்றை பரப்பி நாட்டில் முஸ்லிம் இராச்­சியம் ஒன்­றினை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். இன்று ஐ.எஸ். அமைப்பின் வரை­ப­டத்தில் இலங்­கை­யையும் உள்­ள­டக்கி ஆள்­வ­தாக கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் இலங்கை முஸ்­லிம்கள் ஒரு­வ­ரேனும் இதற்கு எதி­ராக வாய் திறக்­க­வில்லை. போஹோ கராம் தீவி­ர­வா­திகள் 200 கிறிஸ்தவ பெண்­களை கடத்தி மதம் மாற்­றி­யுள்­ளனர். இதை ஒரு­வ­ரேனும் கண்­டிக்­க­வில்லை. ஆப்­கானில் முஸ்­லிம்கள் வேற்று மதத்­த­வரை விரும்­பி­ய­மைக்­காக உயிர்களை பறித்து விடுகின்றனர்.
 
இது எவருக்குமே தவறாகத் தெரியவில்லை. ஆனால் அளுத்கமயில்இ பேருவளையில் ஏற்பட்ட சிறிய பிரச்சினையினை குற்றம் கண்டுபிடித்து இனக்கலவரமாக மாற்றி விட்டனர். சர்வதேச அளவில் பரப்பி பௌத்த தீவிரவாதம் என்ற மாயையை உருவாக்கி விட்டனர். இலங்கையில் இன்று பல முஸ்லிம் தீவிரவாதிகள் உள்ளனர். அவர்களை இனம் காண வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு பிரிவினருக்கே உள்ளது. அவர்கள் அலட்சியமாக இருப்பது நாட்டிற்கே பாதிப்பு.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எனக்கு யாழில் இரெண்டு பேர் பத்த வச்சிடுவினமோ எண்டு பயமா கிடக்கு🤣
    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.