Jump to content

விமர்சிப்பவன் எதிரியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு விமர்சனம் உடன்பாடற்றதாக இருக்கலாம். ஆனால் அது தேவையற்றதாக இருக்க முடியாது. மனித உடலி்ல் வலியின் செயற்பாட்டை இது ஒத்திருக்கிறது. அதாவது இது நலமற்ற நிலையின் மீது கவனத்தைக் குவிக்கச் செய்கிறது. என்று விமசனம் பற்றி  Winston Churchill கூறுகிறார்.

(Criticism may not be agreeable, but it is necessary. It fulfils the same function as pain in the human body. It calls attention to an unhealthy state of things. ― Winston Churchill)

சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல் விமர்சனமின்மையே என்கிறார்.1986 இல் இலக்கியத்திற்காக நோபல் பரிசுபெற்ற நைஜீரிய நாட்டு எழுத்தாளும் நாடகசாரியருமான Wole Soyinka.

(The greatest threat to freedom is the absence of criticism. ― Wole Soyinka)

எமது சமுதாயம் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுமளவுக்கு பண்படைந்துள்ளதா அல்லது நெகிழ்ச்சித்தன்மையுள்ளதா?

எமது சமுதாயம் விமர்சனத்தை எவ்வாறு பார்க்கிறது?  விமர்சனம் செய்பவர் எவ்வாறு சமூகத்தால் நோக்கப்படுகிறார்? விமர்சிப்பவருக்கும், விமர்சிக்கப்பட்டவருக்குமான உறவு எவ்வாறு இருக்கிறது என்று நோக்குவோமெனில் நாம் கடந்துசெல்லுவேண்டிய பாதை அதிகமாய் இருப்பதுபோல இருக்கிறது

எமது சமுதாயம் உணர்ச்சிகளினால் கட்டுண்டது. பலரும் விமர்சனங்களை அறிவார்த்தமாக பகுத்தாராய்வு செய்வதில்லை. தன்னைச் சூழவுள்ள மனிதர்கள், நெருக்கமானவர்கள், தாம் சார்ந்துள்ள நிறுவனங்கள், குழுக்கள் என்று விமர்சனங்களை பல வித நிறங்களைக்கொண்ட கண்ணாடிகளுக்குள்ளால் பார்ப்ப‌தே வழமையாக இருக்கிறது. அதன் காரணமாக விமர்சனம் புகழ்ச்சியாக இருக்கும்போது மட்டுமே பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மாற்றுக்கருத்துடைய விமர்சனங்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. மாற்றுக்கருத்துடைய விமர்சனத்தை முன்வைப்பவரை எதிரியாகநோக்கும் சிந்தனையையும் கொண்டது எமது சமூகம். எவையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது கிடையாது.

அதேவேளை விமர்சனத் தர்மம், விழுமியங்கள், நெறிமுறைகளுக்கு உட்பட்டு விமர்சனம் அமையவேண்டும் என்பதும் மிகவும் அவசியம்.


பலரிடம் உள்ள பலவீனம் என்னவென்றால், அவர்கள் புகழ்ச்சியினூடாக பாழாகிப்போவதையே விரும்புகிறார்கள், விமர்சனத்தினூடாக மீட்கப்படுவதைவிட  என்கிறார் Norman Vincent Peale என்னும் அறிஞர்.

(The trouble with most of us is that we would rather be ruined by praise than saved by criticism. - Norman Vincent Peale)



புகழ்ச்சியை அதிகம் உள்ளடக்காது, மாற்றுக்கருத்துக்களை முன்வைத்து எழுதப்படும் விமர்சனங்களால் விமர்சகருடன், விமர்சிக்கப்பட்டவரும் அவரது ஆதரவாளர்களும் முரண்பட்டுக்கொள்ளும் நிலையே எமது சமூகத்தில் அதிகம் காணப்படுகிறது. இது வளமான ஒரு பண்பட்ட சமூகத்திற்கு உகந்ததல்ல.

விமர்சனங்களும் விமர்சிக்கப்படவேண்டும் என்னும் கருத்துடையவன் நான். ஆனால் விமர்சனங்கள் விமர்சிக்கப்படும்போது மிக முக்கியமாக அந்த கருத்துப்பரிமாற்றல் விவாதமாக மாறிவிடாதிருப்பது அவசியம். மற்றையவரின் நியாயமான கருத்தை / விமர்சனத்தை புரிந்துகொள்ளும் நெகிழ்ச்சித்தன்மை எம்மிடம் இல்லாதுவிட்டால் நாம் எமது முன்னேற்றத்தின் படிக்கட்டுகளை மூடிவிடுகிறோம் என்றே நான் கருதுகிறேன்.

நோர்வேயில் விமர்சனங்களை முதுகுக்குப்பின்னே விமர்சிக்கும் தன்மையே அதிகம். நேருக்கு நேர் தமக்கு கூறப்பட்டு புகழ்ச்சி தவிர்ந்த விமர்சனங்களை விமர்சித்து வளமான உரையாடலை நடாத்துபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம். விமர்சனங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டாது இருப்பதும் விமர்சனத்தை விரும்பாத தன்மையை ஒத்ததுதே.

வேதனை என்னவென்றால் பல மாபெரும் கலைஞர்களுக்கும், மனிதர்களுக்கும், கல்விமான்களுக்கும் மேலே கூறப்பட்ட நெகிழ்ச்சித்தன்மை இல்லாதிருப்பதே ஆகும். தற்பெருமையும், அதீத சுயநம்பிக்கையும் தேவைக்கு அதிகமாகும்போது வரட்டுக்கௌரவம் அதிகரித்து, நெகிழ்ச்சித்தன்மை அற்றுப்போகிறது. இதுவே வளர்ச்சியை தேக்கநிலையடையவைக்கிறது.

அண்மையில் ஒரு பேராசிரியரை எனது நண்பர் ஒருவர் சந்தித்தார். அப் பேராசிரியர் தமிழர்களிடத்தில் மட்டுமல்ல, இலங்கையிலும், வேறு பல நாடுகளிலும் தனது ஆராய்சிகளை மேற்கொண்டு தனக்கென்றெரு தனிஇடத்தை கல்விமான்களுக்கிடையில் பெற்றுக்கொண்டவர். பல் மொழி வித்துவர். தலைசிறந்த அறிஞர்.

எனது நண்பரோ நோர்வேயில் 27 வருடத்திற்கும் அதிகமாக வசிப்பவர். நோர்‌வே கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே சிந்திப்பவர். அவரின் பேச்சும் நோர்வேஜிய சிந்தனையோட்டத்தை ‌‌அடிப்படையாகக்கொண்டது. குறிப்பிட்ட அந்த பேராசிரியர் நோா்வேக்கு வந்து 5 - 6 ஆண்டுகள் ஆகியிருப்பினும் அவரிடம் நோர்வேஜியப் புலமை இல்லை. 

போராசிரியர் தமிழக்குழந்தைகளுக்கு தமிழின் தொன்மை, பெருமைபற்றி கற்பித்துக்கொண்டிருந்தார். அவரின் மொழியாடல் ஆங்கலமும், தமிழும் கலந்திருந்தது. மாணவர்களுக்கு தமிழ் கற்பதன் அவசியம் பற்றியும் கூறினார்.

என் நண்பருக்கு பேராசிரியர் சற்றேனும் நோர்வேஜிய அறிவு இல்லாதிருப்பதும், தமிழை சற்றெனும் அறிந்த குழந்தைகளிடம் அவர் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவது இரட்டை நாக்கால் பேசுவதுபோல் இருக்கிறது என்றார், என்னிடம். அவரிடமே இதுபற்றிக் கேட்கலாமே என்றேன் நான். சம்மதித்தாா்.

நண்பர், இடைவேளையின் போது சற்று காரமாகவே தனது கேள்வியைக் கேட்டார். பேராசிரியர் ஆம், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் தனது தொழில், வயது, சூழ்நிலை போன்றவற்றினாலேயே தான் இம்மொழியை இன்னும்  கற்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் சூழ்நிலைவந்தால் நான் இம்மொழியை கட்டாயம் கற்பேன். நோர்‌வே மொழியை கற்கக் கூடாது என்று நான் நினைக்கவில்லை என்பதை மிகவும் அழகாகவும், பண்பாகவும், நெகிழ்ச்சித்தன்மையுடனும் விளக்கியபோது நண்பர் தனது விமர்சனம் தவறு என்று ஓரளவு புரிந்துகொண்டார். பேராசிரியருக்கும் அக் கேள்வி பலத்த சிந்தனையை தூண்டிவிட்டிருக்கும் எனது எண்ணம்.

இப்படியான ஒரு அறிஞர் ஒரு சாதாரண மனிதனின் விமர்சனத்துக்கு பணிவாக விடையளித்து உரையாடியது ”நிறைகுடம் தளும்பாது” என்பதை உறுதிப்படுத்தியது.

விமர்சனத்தை தனிப்பட்ட தாக்குதலாக எடுக்காது, அதன் சாரம்சத்தை உணர்ச்சிகளை தவித்து, குழுவாதங்களை தவித்து ஆறிவுபூர்வமாக சிந்திப்போமேயானால் பண்பட்ட, வளமான ஒரு சமுகமாற்றத்திற்கு நாம் அடித்தளமிடுகிறோம்.

இதைத்தவிர்த்து விமர்சனத்தை விஷம் என்று கருதி, விமர்சித்தவனையும் கோடாலிக்காம்பு என்று விமர்சித்து, குழுவாதங்களை மீண்டும் மீண்டும் நிறுவமுற்படுவது பண்பட்ட, வளமான சமூகத்தை நோக்கி இட்டுச்செல்லுமா என்றும் கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

நஞ்சற்ற நெஞ்சமே வளமான சமூகத்தின்  சாரளம் என்பேன் நான்.

விமர்சனம் பற்றி உங்கள் கருத்து என்ன நண்பர்களே!
----------------

விமர்சனத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதை கீழுள்ள வரைபு அழகாகக் காட்டுகிறது. இந்த செயற்பாடு (Process)  ஆறு பகுதிகளைக்கொண்டது.

  1. செவிமடுத்தல்
  2. உள்வாங்கிக்கொள்ளுதல்
  3. விமர்சனம் பற்றிய உங்கள் கருத்தினை பகிர்தல்
  4. உண்மையான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளல்
  5. விமர்சித்தவருக்கு நன்றி தெரிவித்தல்
  6. நீங்கள் ஏற்றுக்கொண்ட விமர்சனக்கருத்துக்களுக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளல்.
    மீண்டும் 1வது இலக்கத்திற்கு செல்லல். (இது ஒரு தொடர்ச்சியான செயற்பாடு)
How_to_receive_criticism.png
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

But I say to you, Love your enemies and pray for those who persecute you, so that you may be sons of your Father who is in heaven; for he makes his sun rise on the evil and on the good, and sends rain on the just and on the unjust. Jesus Christ.

 

 எதிரி சுகம் பெறவேண்டும் என்று வணங்கி கொண்டு இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

அவர் அது சொன்னார் ....
இவர் இது சொன்னார் ....
என்பதெல்லாம் காலம் சூழ்நிலை பொறுத்தது.
 
விமர்சனம் என்பது .... ஒருவிடயம் பற்றிய  உங்களது சொந்த பார்வை.
அதை யார் தவிர்கிறான் ?
விமர்சனம் என்ற போர்வையை போர்த்தி விட்டு ....... கண்ட அவதூறுகளை எல்லாம் கொட்டுவதை யார் தான் ஏற்க போகிறான் ?
 
என்ன சொல்கிறார்கள் என்பதை விட ....
யார் சொல்கிறார்கள் என்பது ரொம்ப முக்கியம்.
 
மலேசிய அரசு மந்திரவாதியை அழைத்து தொலைந்த விமானத்தை தேடுவதற்கும் ....
ஒரு மலேசிய பிரஜை மந்திரவாதியை அழைத்து தனது தொலைந்த சயிக்கிளை தேடுவதற்கும் ....
நிறைய வேறுபாடு உண்டு.
உலக அரசியலையே குழப்பி விட்டது மலேசிய அரசு. 
 
சுவாமி விவேகாந்தர் வாருங்கள் ........ தியானத்தின் மூலம் சாந்தியை காட்டுகிறேன் என்று அழைப்பதற்கும்.
சுவாமி நித்தியானதா ............... சாந்தி காட்ட அழைப்பதற்கும் .
நிறைய வேறுபாடு உண்டு.
 
விமர்சனங்களை வியாபாரம் செய்து காசு பார்த்துகொண்டு .... அதை ஏற்றுகொள்ளுங்கள் என்றால். சமூகம்  
ஏற்றுகொள்ளுமா ?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சொற்பதமே தப்பு

 

முதலில்

விமர்சிப்பவர் யார்?

அவரது வழி என்ன?

அவரது கொள்ளை  அல்லது லட்சியம் என்ன?

அது சார்ந்து அவரது செயற்பாடுகள் என்ன?

விமர்சிக்கப்போகும் விமர்சனம் சார்ந்து  அவரது நிலை என்ன?

 

இதற்கெல்லாம் விமர்சனம் வைத்தபின்பே

இன்னொன்றை  ஒருவர் விமர்சிக்கமுடியும்

எதுவும் வைக்காமல்

தான் ஒழித்துக்கொண்டு அல்லது தன்னை மறைத்துக்கொண்டு

இன்னொரு பயனுள்ள  அல்லது நடந்து கொண்டிருக்கும் ஒரு விடயத்தை  

ஒருவர் விமர்சிப்பாராயின் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

அது விமர்சனமும் அல்ல

தூற்றுதல் மட்டுமே.

அதை அனுமதிக்கமுடியாது..........

அனுமதிக்கவும் கூடாது...........

Link to comment
Share on other sites

உதைத்தைதான் திரும்ப திரும்ப கோத்தாவும் சொல்லுகின்றான் . :icon_mrgreen:

அரசும் சரி புலிகளும் சாடிக்கு ஏற்ற மூடிகள் .

அவர்களுக்கு முதல் அலர்ஜி விமர்சனம் தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதுவும் விசுகரும் சொல்வதை ஒரே வரியில் சொல்லி விடலாம்: "conflict of interests உள்ளவர்கள் செய்யும் விமர்சனம் ஏற்றுக் கொள்ளப் படாது"

 

அர்ஜூன்,  சிறி லங்கா மீது விமர்சனம் வைப்பது அவர்கள் மீது கோபத்திலிருக்கும் தமிழர்கள் மட்டும் அல்லவே! அமெரிக்காவும், ஐ.நாவும், ஐரோப்பிய யூனியனும் தான் விமர்சிக்கின்றன. இதுக்கு கோத்தா என்ன பதில் சொல்லுவார் எண்டு ஒருக்கா யோசிச்சுச் சொல்லுங்கோவன்! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று அந்தப் பரமசிவனிடமே தவறு கண்ட நக்கீரன் தான் உண்மையான விமர்சகன். நக்கீரன் ஒரு தீவிர சிவ பக்தன். இருந்தாலும்.. விமர்சனம் என்று வருகின்ற போது.. அவன் அதற்கு தான் முன்னுரிமை கொடுத்தான். அவனது அறிவுக்கு..தவறென்று பட்டத்தை தவறென்று சுட்டிக்காட்டினான். அதை பரமசிவனே தாங்கிக்காத போது.. விமர்சன உலகில் பலரும் அதே வழியில்.. அதை தாங்க முடியாது தான் தவிக்கின்றனர். எப்போதுமே பாராட்டுடன் கூடிய நேர் விமர்சனத்தையே விரும்புகின்றனர் சிலர். அதற்காக கண் முன்னாள் காணும் தவறுகளை விமர்சிக்க வாய்ப்பிருந்தால்.. விமர்சிக்காமல் போக முடியாது தானே. விமர்சகன்.. எதுக்கும் அஞ்சத் தேவையில்லை. அதேவேளை.. தன்னை நோக்கி வரும் விமர்சனங்களையும் அலசக் கூடியவற்றை கருத்தில் எடுக்கும் பக்குவத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவசியமற்றவற்றை தவிர்ப்பது நல்லது. நேர விரயத்தை தடுக்கும்.

 

 

(பரமசிவன்.. நக்கீரன்.. ஒப்புவமைகளுக்காக.. பாவிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் எல்லா வகையிலும்..உயர்ந்தவராகவும் மற்றவர் ஆற்றல் மிகுந்தவராகவும் அதில் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது.)

Link to comment
Share on other sites

மருதுவும் விசுகரும் சொல்வதை ஒரே வரியில் சொல்லி விடலாம்: "conflict of interests உள்ளவர்கள் செய்யும் விமர்சனம் ஏற்றுக் கொள்ளப் படாது"

 

அர்ஜூன்,  சிறி லங்கா மீது விமர்சனம் வைப்பது அவர்கள் மீது கோபத்திலிருக்கும் தமிழர்கள் மட்டும் அல்லவே! அமெரிக்காவும், ஐ.நாவும், ஐரோப்பிய யூனியனும் தான் விமர்சிக்கின்றன. இதுக்கு கோத்தா என்ன பதில் சொல்லுவார் எண்டு ஒருக்கா யோசிச்சுச் சொல்லுங்கோவன்! :lol:

ஒரு ரிப்போர்ட்டும் வாசிக்கவில்லை போலிருக்கு . :icon_mrgreen: அரசைவிட புலிகளில் தான் சர்வதேசம் காட்டமான விமர்சனம் வைத்திருக்கு .

அவர்கள் கை விட்ட கேஸ்கள் என்றபடியால் எவரும் கணக்கில் எடுப்பதில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ரிப்போர்ட்டும் வாசிக்கவில்லை போலிருக்கு . :icon_mrgreen: அரசைவிட புலிகளில் தான் சர்வதேசம் காட்டமான விமர்சனம் வைத்திருக்கு .

அவர்கள் கை விட்ட கேஸ்கள் என்றபடியால் எவரும் கணக்கில் எடுப்பதில்லை .

 

ஒருவேளை நீங்கள் நீதி பதியாக இருந்தால் .............
 
கொலை யுண்டவனுக்கு  மரண தண்டனையும் ....
கத்தியால் குத்தியவனுக்கு 30 நாள் சிறையும் 
என்று தீர்ப்பு வழங்கி இருப்பீர்கள்.
 
ரொம்பதான் காமடி பண்ணுறீங்க.

உதைத்தைதான் திரும்ப திரும்ப கோத்தாவும் சொல்லுகின்றான் . :icon_mrgreen:

அரசும் சரி புலிகளும் சாடிக்கு ஏற்ற மூடிகள் .

அவர்களுக்கு முதல் அலர்ஜி விமர்சனம் தான் .

 

உங்களுக்கு புலி அலர்ச்சி இருக்கும்போது ..........
அலற்சிகளின் அலர்ஜி மேலே அவர்கள் அலர்ஜி கொள்வதில் என்ன தப்பு ?
 
தொற்றுவியாதிகள் தொற்றிவிடும் சாத்தியம் இருக்கிறது அல்லவா ??
Link to comment
Share on other sites

மேற்படி கட்டுரை விமர்சனம் என்பதின் உண்மையான அரத்தத்தை உணர்த்தி நிற்கிறது. கட்டுரையை இங்கு இணைத்த சஞ்சயனுக்கு நன்றி. விமர்சனம் என்பது முழுவதுமாக பக்கசார்பற்று இருப்பது ஜதார்த்தத்தில் கடினம். இருந்தாலும்  ஒரளவிற்காவது  பக்க சார்பற்று இருக்கவேண்டியது அவசியம்.

 

எதிர்கருத்தை விமர்சிக்கும் போது அதன் சாதக பாதக அம்சங்களை ஆராய்வதில் நடுநிலை தேவை. தனது கருத்தை நியாயபடுத்துவதற்காக  உங்களுக்கு  ஒன்று தெரியாது. உங்களுக்கு  அறிவு இல்லை .நான் எல்லாம் தெரிந்தவன். எனது கருத்தை ஏற்று கொள்ளாதவர்கள் எல்லோரும் ஐந்து அறிவு உடையவர்கள்,  என்ற கூறி மற்றவர்களின் விமர்சனங்களை கேலி செய்வதை விமர்சனமாக கருத முடியாது. அதை மட்டும் செய்பவர்களும் மற்றவர்களை சீண்டுபவர்களும்  தங்களால் வெறுப்பவர்களை திட்டி தீர்ப்பதற்காக   கருத்து களங்களுக்கு வருபவர்களும் தங்களை விமர்சகர்களாகவே கருதுகிறார்கள்.

 

 "இவை தவறானவை முற்றாக இதை நிராகரிக்கிறேன்".  "இவை ஒரளவு சரியானவை சிறிது மாற்றங்கள் செய்யலாம்", "இவை சரியானவை என்னால் ஏற்றுகொள்ள கூடியவை", என்ற பகுப்பாய்வுடன், அதற்குரிய காரணங்களை தெளிவாக கூறி அத்துடன்  தன்னுடன் வாதிடுவரை உரிய மரியாதையுடன் விமர்சிப்பவரே உண்மையான விமர்சகர் ஆவார். அவ்வாறான ஆக்கபூர்வமான  விமர்சனங்களை மேற்கொள்பவர்களாக மாறுவதற்கு  நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

விமர்சனம் என்னும் மனித அறிவுசார் நாகரீகத்தை தமிழ்ச்சமூகம் தொடுவதென்பது எக்காலத்தில் நிகழும் என்று கூற முடியாது.

தமிழ்ச்சமூகத்துக்குத் தெரிந்த விமர்சனம் என்பதும் அதன் தோற்றுவாய் என்பதும் அறிவுக்கு எதிர்த்திசையில் உருவானது. அதன் மரபில் இருந்து அது மீள்வது என்பது நடைமுறைச்சாத்தியம் இல்லை.

தோற்றுவாய் என்பதன் அடிப்படையில் வசைபாடுதல் குறை கூறுதல் தாழ்த்துதல் நய்யப்புடைத்தல் ஒடுக்குதல் அடக்குதல் சுரண்டல் அனைத்தும் சம்மந்தப்படும் சாதீய நடைமுறையை ஏற்க வைப்பதும் ஏற்பதும் தான் இச்சமுகத்துக்கான தோற்றுவாய். கூடவே மதவாதங்களும் பிரதேசவாதங்களும் இணைந்துகொள்ளும். இவைகள் முடிவு அற்ற பாரம்பரியமாக சமூக வரலாறாக தொடர்கின்றது. அறிவுக்கு அப்பாற்பட்ட இந்தக் குணாம்சத்தை கடந்த ஒரு விமர்சனம் என்பது தமிழ்ச்சமூகத்தில் சாத்தியமில்லை.

இச்சமூகத்தின் முற்றுமுழுதான விமர்சனத் தோற்றுவாய் என்பது சாதி மத பிரதேச ஏற்றதாழ்வுகள் அடிப்படையில் நீ இதை செய்யக் கூடாது அதைச் செய்யக்கூடாது என்ற கட்டளைகளில் தொடங்கி எப்படி செய்யலாம் என்ற கேள்விகளாகப் பெருகி சமூகம் எங்கும் வியாப்பித்து நிற்கின்றது. எங்கும் குறுக்கீடுகள் தலையீடுகள் வசைகள் சொட்டை நொட்டைகள் பிறப்பில் தொடக்கம் மொட்டை வழித்தல் காதுகுத்து சாமத்திய வீடு காதல் கலியாணம் தாலியறுப்பு செத்தவீடு என்று எங்கும் முடிவற்ற விமர்சனங்களும் தலையீடுகளுடம் கட்டளைகளும் கேள்விகளும் அறிவுக்கு முரணாக தொடர்கின்றது. இதற்கு முடிவில்லை.

தமிழ்ச்சமூகத்தில் பிறக்கும் ஒரு குழந்தை பெயருடன் பிறப்பதில்லை இன்னாருக்குத்தான் என்ற மரபணுச் சோதனை ஆதாரத்துடன் பிறப்பதில்லை ஆனால் அது இன்ன சாதி என்றுதான் பிறக்கின்றது. இச்சமூகத்துக்குத் தெரிந்த விமர்சனத்தின் விழைவு அது.

இச்சமூகம் ஒரு கருத்தை அல்லது செயலை நடைமுறையை எப்படி விமர்சிக்கவேணும் என்பதை மேற்சொன்ன பாரம்பரியத்தின் ஊடாக தன்னகத்தே வைத்துள்ளது. அதனால் விமர்சனங்கள் இச்சமூகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராமாட்டாது. விமர்சனங்கள் எந்த முடிவையும் எட்டமாட்டாது. நீ இன்ன சாதி என்று ஆயிரம் வருடம் சுட்டிக்காட்டும் ஒரு போக்கே நீ செய்வது பிழை என்ற போக்கை உருவாக்குகின்றது. பிழை என்பது பிழைதான் சரி என்பது சரிதான். பிழையும் சரியும் மண்டையில் போடுவதை அல்லது தற்கொலை செய்வதை தனது இறுதி எல்லையாகக் கொண்டுள்ளது. இது சரி இது பிழை என்பதை இவன் சரி இவன் பிழை என்ற அடிப்படையே தீர்மானிக்கின்றது. விமர்சனம் என்பதும் அதனூடாக புதிய அணுகுமுறைகள் அனுசரிப்புகள் மாற்றுவழிகள் மாற்றங்களை நோக்கி நகர்த்தல் இவ்வாறான பல்வேறு நடைமுறைச்சாத்தியமான விசயங்களுக்கும் இச்சமூகத்தின் மரபுசார் குணத்துக்கும் ஏணிவைத்தாலும் எட்டாது. சுருக்கமாகச் சொன்னால் விமர்சனம் என்ற வார்த்தைக்கும் பொருளுக்கும் இச்சமூகத்தில் வேறுவிதமான அர்த்தம். ஓரளவு நாகரீகமாக தோற்றமளிக்கும் இச்சமூகம் அதன் அகநிலையில் தனது அடிப்படை காட்டுமிராண்டிக்குணத்தை தக்கவைப்பதையே தனது இயக்க சக்தியாகவும் பாரம்பரியம் பண்பாடாகவும் கொண்டுள்ளது. அதனால் மாற்றங்கள் என்பது இலகுவானதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.