Jump to content

டரைவோன் மார்டின் கொலையும் அமெரிக்காவும் ஒபாமாவும்


Recommended Posts

ரைவோன் மார்டின் கொலையும் அமெரிக்காவும் ஒபாமாவும்

கறுப்பினத்தவரான 17 வயதான டரைவோன் மார்டின் கொலை அமெரிக்காவை உலுக்கியதுடன் வழமையாக இனம் சம்பந்தப்பட்ட விடயங்களில் விலகி இருக்கும் அதிபர் ஒபாமாவையே தனக்கு ஒரு மகனிருந்தால் என ஒப்பிட வைத்து பேசவைத்துள்ளது !

இந்த இளையவர் 'முதலில் கொல் பின்னர் காரணத்தை கூறு' என்ற சட்டத்திற்கு அமைய கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு பலரும் கொல்லப்பட்டு, கொன்றவர்கள் எவருமே தண்டனை அனுபவித்ததில்லை. ஆனால், இம்முறை இந்த சட்டம், அதன் தீமைகள் விவாதிக்கப்படலாம்.

Link to comment
Share on other sites

இந்தகொலையை செய்தவர் தன்னை இறந்த கறுப்பினத்தவர் தாக்கியது எனக்கூறியமை பொய் என கூறப்படுகின்றது.

அமெரிக்கா தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.

Link to comment
Share on other sites

நீதி கேட்டு தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தக் கானொலிகளை பார்க்கவில்லை என்ன நடந்தது அவருக்கு?...ஏன் கொல்லப்பட்டார்?

Link to comment
Share on other sites

நான் இந்தக் கானொலிகளை பார்க்கவில்லை என்ன நடந்தது அவருக்கு?...ஏன் கொல்லப்பட்டார்?

கொல்லப்பட்டவர் யார் : கறுப்பின பதினேழு வயது வாலிபர்

கொன்றவர் யார் : ஒரு வெள்ளை இனத்தை சார்ந்தவர்

என்ன நடந்தது: அமெரிக்காவில் உள்ள 'நெய்பர் ஹூட்' என்ற கண்காணிப்பு பிரிவை சேர்ந்தவர் சிம்மர்மான். இவர் புளோரிடாவில் உள்ள மூடப்பட்ட வீடுகளை கொண்ட பகுதியில் (gated community) இந்தக்கண்காணிப்பில் பணியாற்றியபொழுது இவரை சுட்டுக்கொன்றுள்ளார்.

என்ன பிரச்சனை: சிம்மர்மானை இன்னும் காவல்துறை கைதுசெய்யவில்லை (கொலை நடந்தது மாசி மாதம் 26 ஆம் திகதி)

ஏன்: சில இடங்களில் உள்ள விதிப்படி இந்த 'நெய்பர் ஹூட்' என்ற கண்காணிப்பு பிரிவை சேர்ந்தவர்களுக்கு கொள்ள உரிமை உள்ளது.

கறுப்பினத்தவர் கடையில் ஒரு கோலாவையும் இனிப்பு ஒன்றையும் வாங்கி தலையை மூடும் (கூடி) உடுப்பையும் அணிந்துள்ளார். அவர் கையில் துவக்கு உள்ளதாக வெள்ளையர் சந்தேகித்துள்ளார். கறுப்பினத்தவரும் தனது காதலியை தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னை ஒருவர் பின்தொடர்வதாக கூறியுள்ளார்.

ஆர்ப்பாட்டம் ஏன்: வெள்ளை இனத்தவர் அநியாயமாக கொன்றுள்ளார். இவர் கொல்லமுதல் காவல்துறையை தொடர்புகொண்டுள்ளார். அவர்கள் கறுப்பு இன வாலிபரை தொடரவேண்டாம் எனக்கேட்டுள்ளனர்.

தன்னை கறுப்பின வாலிபர் தாக்கியதாக கூறினார். அது பொய் என ஒளிப்பதிவு ஒன்று காண்பிக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் அடிக்கடி நடைபெறும் இனவெறிதாக்குதலா?

என்னதான் நாகரீகம் வளர்ந்து வந்தாலும் கூடவே அதர்மமும் அநியாயமும் வளர்ந்து வருகின்றது என்பது துரதிஸ்ரம்.

Link to comment
Share on other sites

கறுவல் இனத்தவர் மத்தியிலும் பல சமூக பிரச்சனைகள் உள்ளன. மற்றைய சமூகங்கள் முன்னேறிய அளவிற்கு இவர்கள் முன்னேறவில்லை.

ஆனால், வெள்ளை இனத்தவரும் அடிமைகளாக கொண்டுவந்த கறுப்பினத்தவரை ஒதுக்கவே பார்க்கின்றனர். மார்டின் லூதர் கிங் போன்றவர்களால் முன்னேற்றம் கண்டனர், அப்படியான போராட்டம் தொடர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஏற்கனவே காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிம்மர்மான் மீது இரண்டாம் தர கொலைக்குற்றச்சாட்டு நீதிபதியால் இன்று சுமத்தப்பட்டுள்ளது!

George Zimmerman charged with second-degree murder in Trayvon Martin shooting

http://news.nationalpost.com/2012/04/11/george-zimmerman-charged-with-second-degree-murder-in-trayvon-martin-shooting/

Link to comment
Share on other sites

அமேரிக்காவின் குடித்தொகையில் 9% கறுப்பர்கள் ஆவார்கள்

ஆமேரிக்கவின் சிறைகைதிகளில் 80% கறுப்பர்கள் ஆவார்கள்

Link to comment
Share on other sites

அமேரிக்காவின் குடித்தொகையில் 9% கறுப்பர்கள் ஆவார்கள்

ஆமேரிக்கவின் சிறைகைதிகளில் 80% கறுப்பர்கள் ஆவார்கள்

இப்படியான ஒரு நிலைக்குள் தாயகத்தில் எமதுறவுகளை வைத்திருக்க சிங்களம் விரும்புகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா, சுட்டவர் வெள்ளையர் (caucasian) அல்ல. ஸ்பானிய இனத்தவர். பெயரை ஸ்பானிய அடையாளங்கள் இல்லாமல் சிம்மர்மான் என்று வைத்திருக்கிறார்.அப்பாவின் அடி வந்த பெயராக இருக்கும். அமெரிக்காவில் கறுப்பினத்தவரும் ஸ்பானியரும் ஒரே அளவான தொகை கொண்ட சிறு பான்மையினர் தான். ஆனாலும் பல காரணங்களால் கறுப்பினத்தவர் குற்றவாளிகளாகப் பார்க்கப் படும் நிலை தொடர்கிறது. இதனால் கறுப்பினத்தவர் சட்ட அமுலாக்கல் துறையினரை வெறுத்து அதனால் மீண்டும் குற்றங்கள் இழைக்கும் நிலையும் இருக்கிறது. இந்த நச்சுச் சக்கரத்தை இல்லாதொழிக்க இரண்டு பகுதியினருமே உழைக்க வேண்டும். சிம்மர்மானை சட்டப் படி தண்டிப்பது இதில் ஒரு படியாக இருக்கும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

நன்றி ஜஸ்டின் திருத்தத்திற்கு.

அத்துடன் அமெரிக்காவில் சில இடங்களில் உள்ளா இந்த சட்டமானது, 'முதலில் சுடுபின்னர் காரணம் கூறு' மிகவும் தவறானது. அது கூட மாற்றப்பட இல்லை அகற்றப்படல் வேண்டும்.

New York mayor Bloomberg accuses NRA of backing 'licence to murder'

Michael Bloomberg launches nationwide campaign on gun reform and says 'shoot first' laws have harmed public safety

http://www.guardian.co.uk/world/2012/apr/11/michael-bloomberg-nra-gun-control?newsfeed=true

Link to comment
Share on other sites

  1. மன்னிப்பு கோரினார் சிம்மர்மான்
  2. 150,000 USD பிணையில் விடப்பட்டார்
  3. கொல்லப்படலாம் எனவும் அஞ்சப்படுகின்றது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.