Jump to content

செக்ஸில் திருப்தி என்றால் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆணுக்கும் பெரும் அவமானம் என்ன தெரியுமா மனைவி தனது கணவனை கட்டிலில் வைத்து நிராகரித்தல். முன்னர் எஸ்.எச்.நிஃமத் நவமணி பத்திரிகையில் ஆசிரிய பீடத்தில் இருந்த போது கேள்வி பதில் பகுதியை செய்து கொண்டிருந்தார். ஒரு வாசகர் கேள்வி ஒன்றை “பெண்ணை நிருப்த்திப்படுத்த ஆண் என்ன செய்ய வேண்டும்.?” இப்படி கேட்டிருந்தார். அது செக்ஸ் தொடர்பான கேள்வி. அதற்கு எஸ்.எச். நிஃமத் சொன்ன பதில் ”ஒரு விரல் போதும்” இப்பொழுது நான் நிஃமத்தை கண்டால் இதனைத்தான் ஞாபகப்படுத்துவேன்.

இது சாதாரணமான ஒரு விடயமல்ல முழு செக்ஸ் சூத்திரமே அடங்கி இருக்கின்றது. ஆண்கள் தங்கள் மனைவிமாரை திருப்த்திப்படுத்த முடியாமல் போய்விடுவோமா என்று அச்சத்தில் பயத்தில் இல்லாத பொல்லாத மருந்துகள் எல்லாவற்றையும் பெரும் விலைகொடுத்து வாங்கி சாப்பிடுவதை நான் கண்டிருக்கின்றேன். இன்று நேற்றல்ல இது காலகாலமாக ஆணுக்கிருக்கின்ற பெரும் கவலை வேதனை. படுக்கையில் ஒரு பெண் தன்னை நிராகரித்து விடுவாளோ அப்படி நிராகரிக்க கூடாது என்ற ஒரு பயம் தொடர்ந்தும் ஒவ்வொரு ஆண்களிடத்திலும் இருந்து கொண்டே இருக்கின்றது.

அதனால் தங்களை பெண்களிடம் நிரூபித்து காட்ட பெரும் பாடுபடுகின்றான் ஆண். ஆனால் இந்த பாடெல்லாம் தேவையில்லாத ஒன்று ஒரு ஆண் ஒரு பெண்ணை திருப்த்திப்படுத்த இவ்வளவு சிரமப்பட்டு அச்சப்படத்தேவையில்லை.

மனித மன அச்சத்தை மனதில் கொண்டு ஆண்களுக்கான பாலியல் தொடர்பான மருந்துகள் ஆண்குறியை நீளமாக்கும் கருவிகள் என்று சந்தையில் மில்லியன் கணக்கான டொலர்களில் பொருட்கள் வியாபாரத்திற்காக குவிந்து கிடக்கின்றன. உலகம் முழுவதும் நிலமை இதுதான். இதெல்லாம் ஆணின் அச்சத்தின் காரணமாக கொளித்த வியாபாரம் என்றால் அது நூறுவீதம் உண்மை.

ஆணுக்கு நீளமான ஆண்குறி இருந்தால் தான் ஒரு பெண்ணை திருப்த்திபடுத்த முடியும் என்று பெரும்பொய்யை பல வியாபார நிறுவனங்கள் பரப்பி ஆண்களின் பலவீனத்தை தங்களுடைய வியாபாரத்தால் பெருக்கி வருகின்றனர்.

அண்மையில் ஒரு விளம்பரத்தை பார்த்தேன். மாத்திரை இல்லை ஊசி இல்லை அறுவை சிகிச்சை இல்லை என்று ஆரம்பிக்கின்றது அந்த விளம்பரம் திருப்த்தியின்மை முன்கூட்டியே விந்து வெளியேறுதல் தன்னம்பிக்கை குறைவு என்று தொடர்ந்து ஆணுறுப்பை வளரச்செய்யும் பெரிதாக்கும் என்று அந்த விளம்பரம் செல்கின்றது. அது ஒருவகையான பிளாஸ்டிக் பொருள் ஆணுறுப்பில் பொருத்தி வைக்க வேண்டும். அதனால் ஆணுறுப்பு வளருமாம்.

பொய் சுத்த பொய் ஆணுறுப்பு ஒன்றும் வளருவதற்கு தலைமுடியோ அல்லது நகம் போன்றதோ அல்ல அது குழந்தையில் இருந்து வளர்ந்து பெரியவரானதும் தனது வளர்திறனை முடித்துக்கொள்ளும். ஒரு கையைப்போல காலைப்போல அல்லது ஒருகாதைப்போல ஆணுறுப்பின் வளர்ச்சி அவ்வளவுதான்.

சிலரின் உடம்பு வாசியைப்பொறுத்து அதன் அளவு பெரிதாக அல்லது சிறிதாக இருக்கும். ஓவ்வொரு உடலுக்கும் எது பொருந்துமோ அதுதான் அளவு. இது உடலுக்கு தெரியும் மனதுக்கும் தெரியும். ஆனால் வியாபாரிகள் தான் அதை பெரிதாக்குகின்றோம் என்று அடம்பிடிக்கின்றார்களே ஒளிய அது அளவோடுதான் இருக்கின்றது.

ஒரு ஆண் தன்மீதான நம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் புதிதாக திருமணம் முடிக்கும் ஆண்கள் தான் முதலிரவில் மனைவியை திருப்த்திப்படுத்திவிட முடியாதோ என்று அச்சப்பட்டு அச்சப்பட்டே மனம் உடைந்து போவதை காண்கின்றோம். முதலிரவில் அங்கு அச்சப்பட்டு அவசரப்பட எதுவுமில்லை. அன்று நீங்கள் உங்களை நீங்கள் பேசி ஆசுவாசப்படுத்தவே முடிந்துவிடும். முதலிரவு என்பது புரிந்து கொள்வதற்கான இரவே தவிர அச்சப்பட்டு வேதனைப்படுவதற்கான இரவு அல்ல என்பதை புதுமாப்பிளைமார் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சும்மா பயந்து கொண்டிருப்பது அல்லது போலியாக டாக்டர்கள் சொல்வதை அல்லது விளம்பரங்கள் சொல்வதை நம்புவது. முழு முட்டாள்தனம். ஆண் பெண் உறவு தொடர்பாக எமது முன்னோர்கள் மிகவும் முக்கியமாக ஆராய்ந்து ஜோடி சேர்ப்பதற்கு முயன்றிருக்கின்றனர். அதில் செக்ஸ் சம்பந்தப்பட்ட விடயங்களும் பொருத்தம் பார்க்கப்பட்டு திருமணங்கள் நிட்சயிக்கப்பட்டன.

திருமணப் பொருத்தத்தில் யோனிப்பொருத்தம் என்ற ஒரு விடயம் இருக்கின்றது. பலருக்கு தெரியும். இது செக்ஸ் வாழ்க்கையை முதன்மைப்படுத்தி முன்னோர்கள் வைத்திருக்கும் ஒரு முறை. தாம்பத்திய உறவின் சுகம் திருப்த்திநிலை ஆகியவற்றை தீர்மானிக்கும் அளவுகோல் இது. ஆண்பெண் யோனி நிலைகளை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறையாக இருக்கின்றது இது . நட்சத்திரங்கள் 13 மிருகங்களின் பெயரைக்கொண்டு பிரிக்கப்பட்டு உள்ளது.

உத்தராட நட்சத்திரம் மட்டும் கீரி என்றும் சில நூல்கள் மலட்டு பசு என்றும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு . ஆண்பெண் பகை மிருகம் மட்டுமே பொருத்தமில்லை என்று சொல்வார்கள். பகை மிருகங்கள் சேராமல் பார்த்துக்கொள்வார்கள் பெரியவர்கள்.

இதில்

1. அச்சுவினி – ஆண் குதிரை

2. சதயம் – பெண் குதிரை

3. பரணி – ஆண் யானை

4. ரேவதி – பெண் யானை

5. கார்த்திகை – பெண் ஆடு

6. பூசம் – ஆண் ஆடு

7. ரோகினி – ஆண் பாம்பு

8. மிருகசீரிடம் – பெண் பாம்பு

9. திருவாதிரை – பெண் நாய்

10. மூலம் – ஆண் நாய்

11. புனர்பூசம் – பெண் பூனை

12. ஆயிலயம் – ஆண் பூனை

13. மகம் – ஆண் எலி

14. பூரம் – பெண்எலி

15. உத்தரம் – ஆண் மாடு

16. உத்தரட்டாதி – பெண்மாடு(பசு)

17. அத்தம ; – பெண் எருமை

18. சுவாதி – ஆண் எருமை

19. விசாகம் – ஆண் புலி

20. சித்திரை – பெண் புலி

21. அனுஷம் – பெண் மான்

22. கேட்டை – ஆண் மான்

23. பூராடம் – ஆண் குரங்கு

24. திருகோணம் – பெண் குரங்கு

25. உத்தராடம் – ஆண் கீரி

26. அவிட்டம் – பெண் சிங்கம்

27. பூரட்டாதி – ஆண் சிங்கம்

ஒவ்வொரு விடயத்தையும் இங்கு நோக்க வேண்டும்.

குதிரை-எருமை

யானை-சிங்கம்

ஆடு-குரங்கு

பாம்பு-எலி

பசு-புலி

ப10னை-எலி

கீரி-பாம்பு

மான்-நாய்

இவை சேரக்கூடாது யோனிவழி பிரிக்கப்பட்ட பகை மிருகங்கள்.

பகை மிருகங்களை சேரக்கூடாது என்கிறார்கள். அத்துடன் இருவரும் ஒரு யோனியாகிலும், ஆண்களுக்கு ஆண்யோனியும் பெண்களுக்கு பெண்யோனியாயினும், இருவருக்கும் பெண் யோனியாயினும் உத்தமம் என்றும் இருவருக்கும் ஆண் யோனியாகில் மத்திம பலன் என்றும் பெண்ணுக்கு ஆண் யோனியும் ஆணுக்கு பெண்யோனியும் பொருத்தம் வராது என்றும் ஜோதிட சாத்திரம் சொல்கிறது.

ஒரு ஆணையும் பெண்ணையும் சேர்கும் போது அவர்கள் மிக நீண்ட பாலியல் சுகம் அடைய வேண்டிய என்ற சிந்தனை தொன்றுதொட்டே எமது சமூக அமைப்புக்களில் முக்கியத்துவம் மிக்க ஒன்றாக இருந்து வந்திருக்கின்றது.

சரி செக்ஸ் திருப்தி என்பது வெறுமனே உடலுறவில் மட்டும் அல்லது ஆணுறுப்பின் நீள அகலத்தில் மட்டுமே முடிவு செய்யப்படுவதில்ல. அது மனதோடும் உடலோடும் சம்பந்தப்பட்ட விடயமாகும்.

செக்ஸில் உச்ச பட்ச இன்பம் தொடர்பாக இப்பொழுது சிந்திக்கின்ற சமூகம் முந்திய காலத்தில் சிந்தித்திருக்குமா? என்பது கேள்விதான். தொழில்நுட்ப வளர்ச்சி திரைப்படங்களில் செக்ஸ் உணர்வுகளை துல்லியமான நடிப்பின்மூலம் மூலம் வெளிப்படுத்திக்காட்டுதல் எப்படியான நிலைகள் எப்படியெல்லாம் ஒரு ஆணும் பெண்ணும் படுக்கையில் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றெல்லாம் தொலைக்காட்சியும் திரைப்படமும் வெளிப்படுத்தி காட்டி வருகின்றன.

முதல் என்றால் ஆங்கிலப்படத்தை பார்ப்பதற்கு எங்களுக்கு யாருமே அனுமதி தரமாட்டார்கள். முத்தக்காட்சி வந்துவிடும் என்ற பயம் எமது பெரியவர்களுக்கு. இப்பொழுது தொலைக்காட்சி சின்னப்பிள்ளைக்கும் வீட்டில் வைத்து சொல்லிக்கொடுத்து விடுகின்றது. ஹிந்தி திரைப்படங்களில் குறைந்தது 30 முத்தக்காட்சிகளை வைத்து விடுகின்றார்கள்.குடும்பத்துடன் தியேட்டருக்கு போனால் எப்படி முத்தக்காட்சியை ஓடவிட்டு பார்ப்பது. வீட்டில் என்றால் றிமோட்டும் கையுமாக பெற்றோர்கள் இருப்பார்கள். ஆனால் பிள்ளைகள் இன்ரநெற்றில் எல்லாவற்றையும் பார்த்து தெரிந்துவிடும்.

இப்பொழுது பெண்களுக்கும் செக்ஸ் தொடர்பான முழு இன்பத்தையும் முழுமையாக உய்த்து உணரவேண்டும் என்ற அவாவும். ஆசையும் வந்து விட்டது. அது உலக தொழில்நுட்ப மற்றும் மானுட அறிவின் வளர்ச்சிதான்.

பெண்களை முழுமையாக திருப்த்திப்படுத்த என்று ஒரு ஆண் கவலையோ கஷ்டமோ படத்தேவையில்லை. பெண்ணின் ஜனன உறுப்பில் உணர்வுகளின் எல்லா முடிச்சுக்களும் ஆரம்பத்தில் உள்ள பத்து சென்டிமீட்டர் அளவில்தான் குவிந்து கிடக்கின்றன. எனவே அதனை உணர்ந்து ஒரு ஆண் தன்னை ஈடுபடுத்துவானாகில் பெண் பூரண சுகத்தை அடைந்து விடுவாள்.

உண்மையில் 10 சென்டி மீட்டர் உடைய ஆணுறுப்பே போதும் ஒரு மனித உடலுறவுக்கு இதனை ஒரு பெரிய விடயமாக மனதைபோட்டு குழப்பிக்கொள்ளத்தேவையில்லை ஆண்கள். மன மகிழ்ச்சியான வாழ்வு என்பது இருவரும் புரிந்துகொண்டு ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதுதான். செக்ஸ் உறவு தொடர்பான அதீத கவலை- நான் மனைவியை திருப்த்திப்படுத்தும் ஆம்பிளைதானா என்ற விடயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கணவன் மனைவியாக சந்தோசமாக வாழுங்கள். உலகத்தில் இப்படி எத்தனைபேர் சிரித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உங்களால் முடியும். நவமணி நிஃமத் சொன்னது சரிதானே.

இளைய அப்துல்லா

http://www.tamilspy.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அச்சுவினியும் பூரமும் சேர்ந்தால்  எப்பிடியிருக்கும்?  happy0193_zps0ec55089.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நட்சத்திரப் பொருத்தப்படி எங்களுக்குள் இந்தப் பொருத்தம் இல்லை.  ஆனால், நடைமுறையில் நல்ல பொருத்தம் இருக்கிறதே  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருப்தி இல்லையென்றால் உள்ளங்கை ரேகை பற்றி யோசிக்காமல்,முயற்சியில் இறங்கவேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸில் திருப்தி என்றால்..... மழலைச் செல்வங்களுக்கு, அப்பா ஆகுதல்.

Link to comment
Share on other sites

செக்சில் திருப்தி என்றால்..... சந்தான விருத்தி அம்போ என்று ஆகிவிடும்..  :o
 
Link to comment
Share on other sites

அச்சுவினியும் பூரமும் சேர்ந்தால்  எப்பிடியிருக்கும்?  happy0193_zps0ec55089.gif

 

குசா தாத்தா தாங்கள் அச்சுவினி பரிமளம் அன்ரா பூரமா?  :D  :D  :lol: 

Link to comment
Share on other sites

தமிழில் என்றுமே அழியாத ஒரு பழமொழி உள்ளது. ஆனால் அதன் சொற்கள் கடுமையானவை. ஆகவே அதனை மென்மைப்படுத்தியுள்ளேன்.
 
'ஊத்தை போகக் குளித்தவனும் இல்லை. ஆசை தீர அனுபவித்தவனும் இல்லை.'
 
 
Link to comment
Share on other sites

தமிழில் என்றுமே அழியாத ஒரு பழமொழி உள்ளது. ஆனால் அதன் சொற்கள் கடுமையானவை. ஆகவே அதனை மென்மைப்படுத்தியுள்ளேன்.

'ஊத்தை போகக் குளித்தவனும் இல்லை. ஆசை தீர அனுபவித்தவனும் இல்லை.'

இதற்கு தமிழர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கணித சமன்பாடு ஒன்று வலுசேர்க்கிறது.

விருப்பம் = 1

மனநிறைவு = 0

இச்சை = விருப்பம் / மனநிறைவு :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம்  இடக்கு மடக்கான விடயம்

செக்சில் மனநிறைவு அல்லது கூடுதல் அனுபவிப்பு வேண்டுமெனில்

கற்பனையும்

அதிக ஆசையும் தேவை

ஆனால் இவை  இரண்டும் வந்துவிட்டால்

திருப்தி  என்பது எட்டமுடியாததாகிவிடும்..... :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

இதற்கு மேல் எழுதலாம்

ஆனால் எனது நேரத்தை வீணடித்தவிடுவார்கள்  கத்திரிக்கோலாளர்கள்.... :(

Link to comment
Share on other sites

உமி தூக்கும் பலம் உள்ளவரை இந்த ஆசை போகாது என்று படித்த ஞாபகம்........ :wub::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுக்குர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
    • பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது.  தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை. 
    • புலிகளின் உருவாக்கத்திற்காக நாம் எவ்வளவு காலத்திற்குப் பிரபாகரனைக் குறை கூறிக்கொண்டு இருக்கப்போகிறோம்? ஏன், பிரபாகரனுக்கு நிகரான பொறுப்பினை அன்றிருந்த அரசாங்களும் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? 1983 இல் தமிழர்களுக்கு அடித்தது அரசாங்கம் மட்டுமில்லையே? சிங்கள மக்களுமாகத்தானே சேர்ந்து அடித்தோம்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.