Jump to content

ஓரினச்சேர்க்கை குற்றமா?


Recommended Posts

homosexuality-forum-300x225.jpgமுரண்பாடுகளை ஏற்பதுதான் கலாசாரம். நாகரிகமும்கூட. குடும்ப முறை வளர்ந்த பிறகுதான், முதல் பாலியல் தொழிலாளி உருவாகியிருக்கவேண்டும். அன்றிலிருந்து இன்று வரை பாலியல் தொழிலாளர்கள் கெட்டவர்களாகவே  பார்க்கப்படுகிறார்கள். குடும்ப முறை வளர்ந்த பிறகு, திருநங்கைகள் மனிதர்களாகப் பார்க்கப்படுவதில்லை. இவர்களை அருவருக்கத்தக்க மனிதர்களாக மாற்றிய பெருமை கலாசாரத்தையே சாரும்.

என்னைப் பொறுத்தவரை, ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு முரணானதோ, வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியதோ அல்ல. ஒத்த எண்ணம் கொண்ட இரு ஆணோ அல்லது பெண்ணோ தங்களுக்குள் ஏற்பட்ட விருப்ப உணர்வுகளை, சிற்றின்பத்தை மற்றவர்களுக்கு தெரியாத வகையில் அந்தரங்கமாக செய்கிற ஒரு விஷயம். அப்படி இருக்கும்வரையில் இதில் எந்த தவறும் இல்லை. ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்று உபநிஷதம் சொல்வதன்படி, எல்லாமே  இறைத் தன்மையின் வெளிப்பாடுகதான்!

பலரும் நினைப்பது போல் ஓரினச்சேர்க்கை என்பது வெளிநாட்டு இறக்குமதி அல்ல. நம் புராணங்களில், கோயில் சிற்பங்களில் பார்த்த நிகழ்வுகளை, கேட்டறியாத பல கதைகளை நாம் அறிந்திருந்தால், நம் எண்ணங்களை சற்று பரந்த மனதுடன் வரவேற்றிருப்போம். குறுகிய எண்ணத்தை விட்டொழித்தாலே பல தவறான சிந்தனைப் போக்குகள் நம்மைவிட்டு விலகியோடும்.

ஒரு கணவனும் மனைவியையும் போலவே ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் உறவைத் தங்களுக்குள் வைத்துக்கொள்ளும் பட்சத்தில் பிரச்னை எதுவுமில்லை. பொதுவிடங்களில் தவறாக நடக்கும்போது, அது கண்டிக்கப்படவேண்டிய தவறாக மாறுகிறது. இது ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் பொருந்தக்கூடிய உண்மை. நாகரிகச் சமூகம் என்று சொல்லிக்கொண்டு, பேருந்துகளில் பெண்களை உரசுபவர்களை உத்தமர்கள் என்றா அழைக்கமுடியும்?

பால்ய விவாகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது அந்தக் காலகட்டத்துக்கு உகந்த ஓர் அமைப்பாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஏனெனில், ஒரு மனிதனின் சராசரி வயது அப்போது 40. ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படையில் மறுமணம் செய்யவேண்டிய அவசியமில்லாமல் இருந்திருக்கலாம். மருத்துவ உலகின் பல அறிய சாதனைகள் மனித வாழ்வை சராசரியாக 60-க்கு கொணர்ந்தபோது, ஒரு பெண் காலம் முழுக்க விதவையாக இருக்கலாமா என்ற கேள்வி மறுமணத்தை ஏற்றுக் கொண்டது. நேற்று வரை சரியாக இருந்த ஒரு விஷயம் இன்று தவறாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஓரினச் சேர்க்கையாளர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காத மனோபாவமும் நிச்சயம் ஒருநாள் வரும்.

ஓரினச்சேர்க்கை தவறு என்று சொல்பவர்கள் முன்வைக்கும் ஒரு வாதம், அது சந்ததி பெருக்கத்துக்கு உதவாது என்பது. சந்ததியைப் பெருக்கும் உறவு முறையே இயற்கையானது என்றும் இவர்கள் வாதிடுகிறார்கள். எனில், பிரம்மச்சாரிகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? குற்றவாளிகளாகவா? ஓரினச்சேர்க்கையாளர்களை வெறுப்பது போலவேதான் அவர்களையும் நீங்கள் வெறுக்கிறீர்களா? ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணம் செய்து வைக்கிறோம். ஒருவேளை அவர்களால் குழந்தை பெற இயலவில்லை என்னும் பட்சத்தில் அவர்களை என்ன செய்யப்போவதாக உத்தேசம்?

ஓரினச்சேர்க்கை இன்று அதிகரித்து வருவதற்கு காரணம் 32  வயது வரை திருமணமாகாமல் இருக்கும் ஒரு நிலை. மேலும், சமூக வாழ்வில் இன்று ஆண்களும் பெண்களும் கல்லூரிகளிலும் விடுதிகளிலும் குழுக்களாக தங்கிப் படிக்கும் சூழலில், தங்களுக்குள் இச்சையைத் தீர்த்துக்கொள்ள முனைகிறார்கள். பதின் பருவத்தில் இயல்பாக எழும் காம உணர்ச்சியைத் தடை செய்துவிடமுடியுமா?

உண்மையில், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பான உறவு குறித்தும் பின் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அதே போல், அவர்களை வெறுப்பவர்களுக்கும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

 

http://www.tamilpaper.net/?cat=1058

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குற்றமில்லை... அது, அவரவர் விருப்பம்.
மற்றவர்களின்... சுத்தந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.
இங்கு ஒரு முக்கிய அமைச்சர் தனது, பதவி ஏற்பு வைபவத்துக்கு, தனது ----- ஃபிரண்டை கோட், சூட்டுடன் கூட்டிக் கொண்டு வந்தவர். அதனை... ஒருவரும், பெரிதாக எடுக்கவில்லை.
ஏனென்றால்.... அவரிடம் திறமை உள்ளது.
"வல்லவன் வீழ்ந்ததும் இல்லை, ---- ----கெட்டதுமில்லை." :icon_idea:  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரினச்சேர்க்கை குற்றமா என்பதற்கு அப்பால் இது அசாதாரண மனித நடத்தை என்று தான் கொள்ள வேண்டும். இது இயற்கைக்கு மாறான ஒரு நடத்தைக் கோலம் எனலாம். சில ஜீன்கள் சார்ந்து..மூளையில் ஏற்படும் நரம்பியல் இரசாயன மாற்றங்களால் இந்த நிலை ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்லும் நிலையில் இவர்களைக் குற்றவாளிகளாகக் காண முடியாது. ஆனால் இயற்கைக்கு மாறானவர்கள் என்று சாதாரணமானவர்கள் ஒதுக்கி வைப்பதை தடுக்கவும் ஏலாது..! ஆனால் மனிதர்கள் என்ற வகையில் பிறப்புரிமைக் குறைபாடுள்ளவர்களை.. புறக்கணிப்பது சரியான செயல் அல்ல..! அந்த வகையில்... இவர்களைப் புறக்கணிக்க வேண்டியதில்லை. சேட்டை விட்டால் மட்டும்.. ஒட்ட நறுக்கி விடுவது நன்று..! குறிப்பாக பள்ளிகளில் மாணவர்களோடு ஆசிரியர்களாக உள்ள இவர்களில் சிலர் சேட்டைகளில் ஈடுபடும் முறைப்பாடுகள் இங்கு இங்கிலாந்தில் பிரச்சனைகளாகி வருகின்றன. தனிப்பட்ட முறையில் எனக்கு இப்படியானவர்களை கண்ணில் காட்டக் கூடாது. எனது நல்ல காலத்திற்கு இப்படியானவர்களை இதுவரை நேரிடையாக சந்திக்கும் நிலையை கடவுள் தரவில்லை..! கடவுளுக்கு நன்றி. :):icon_idea:

 

Link to comment
Share on other sites

--------- -----.அது அவரவர் விருப்பம் மற்றவர்களைதொந்தரவுசெய்யாதவரை.

Link to comment
Share on other sites

தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தைக்குப் புரையேறியதால் குழந்தை இறந்தது. தாய்ப்பால் குடிக்கும்போது முலையில் மூக்கு அழுந்தியதால் மூச்சுத்திணறி குழந்தை இறந்தது. ஆதலினால் தாய்ப்பால் கொடுப்பதும் குழந்தைக்கு கெடுதியை விளைவிப்பதாக நியாயப்படுத்திக் கொள்ள முடியும்.

 

மேற்கூறிய நியாயத்தின்படியே ஓரினச்சேர்க்கையையும் நியாயப்படுத்தி வாழ்வியலைச் செப்பனிடலாம்.

''இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருக்க காய் கவர்ந்தற்று''

 

Link to comment
Share on other sites

பிறக்கும் போது  உறுப்புக்கள் ஊனமாக பிறக்கும் ஒருவரை இச்சமுதாயம் ஏற்றது போல் இவர்களையும் ஏற்க வேண்டும்.இவர்கள் பிறப்பிலேயே (பெரும்பாலும்) ஓரின சேர்க்கையாளர்களாகவே பிறக்கிறார்கள்.நாகரீக உலகில் இவர்களை ஏற்று திருமணம் செய்ய கூடி சட்டங்கள் வந்து விட்டன.
 
எனவே சமுதாயம் அவர்களை தண்டிப்பது நியாயமில்லை.சமுதாயத்தில் ஓரங்கமாக இவர்களை ஏற்க வேண்டும்.
 
பெண்களிடம் சேட்டை விடுபவர்களுக்கு என்ன தண்டனையோ அதே தண்டனையை சேட்டை விடும் இவர்களும் பெறுவார்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கறுமமோ செஞ்சு முடியுங்கோ, சனம் இப்ப ஆடு மாடுகளை மட்டும் தான் விட்டுவைச்சிருக்கு . கொஞ்ச காலத்தால அதுக்கும் (கொடி) தூக்குவாங்கள்

 

Link to comment
Share on other sites

குற்றமோ குற்றமில்லையோ தெரியாது ஆனால் சகிக்க முடியாது என்று சொல்லலாம்.  2 பெண்கள் ஒருவர் மிக இளவயதிலேயோ திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றவர், மற்றப் பெண் இப் பெண்னின் நண்பியாம், இணையத்தள மூலம் அறிமுகம். இதில் ஒரு பெண் தனது பெற்றோர் சகோதரங்களோடு இருக்கின்றா அவ்வோடு தான் மற்றப் பெண்ணும் இருக்கின்றா. இருவரும் பழகும் விதம் என்னவோ ஒரு சந்தேகத்தைதைத் தருக்கின்றது. உண்மையான நட்ப்பா அல்லது ஓரினச் சேர்க்கையா யாரறிவர்?  ஆண்டவா மன்னித்துவிடு  இருவரும் நண்பிகளாயின். இருவரும் தமிழ்ப் பெண்களே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபால் உறவை சட்ட ரீதியாக அனுமதித்துள்ள மேற்குநாடுகளில் இருந்தும் இதுபோன்ற விடயங்கள் பெரும்பான்மையான தமிழர்களுக்கு பேசாப் பொருளாகத்தான் இருக்கின்றது.

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்களை சமூகத்தில் இருந்து விலக்கிப் பார்ப்பதால்தான் பல துஸ்பிரயோகங்கள் நடைபெறுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நிலையில் சீனாவிலும் இந்தியாவிலும்

ஓரினச் சேர்க்கையாளர்களை  ஊக்குவிக்க வேண்டும்

 

சனத்தொகைப் பெருக்கம்  தாங்க முடியலையடா சாமி :D

 

 

Link to comment
Share on other sites

இன்றைய நிலையில் சீனாவிலும் இந்தியாவிலும்

ஓரினச் சேர்க்கையாளர்களை  ஊக்குவிக்க வேண்டும்

 

சனத்தொகைப் பெருக்கம்  தாங்க முடியலையடா சாமி :D

 

சுப்பண்ணையின் பின்னூட்டத்தையும் சிறிது ஊன்றிக் கவனிப்பது நல்லது.

 

 

என்ன கறுமமோ செஞ்சு முடியுங்கோ, சனம் இப்ப ஆடு மாடுகளை மட்டும் தான் விட்டுவைச்சிருக்கு . கொஞ்ச காலத்தால அதுக்கும் (கொடி) தூக்குவாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் சொல்வார்கள்

காய்ஞ்சமாடு

கம்பில  விழுந்ததுபோலென்று.

 

இதைத்தான் அப்படி சொன்னார்களோ என்று நினைப்பதுண்டு.

ஆனால்  காய்ந்து கிடந்தபோது சாப்பிட்டதை

பச்சைப்புல்லும் 

தளிரும்

இலைகுழைகளும் செளிப்பாக இருக்க

காத்திருக்க

தொடர்ந்து  காய்ஞ்சபோது தின்றதைத்தான் சாப்பிடுவேன் என்பது ஒருவித மனநோய்தானே

அது தான் மேற்கத்திய  நாட்டவர்

இவர்களை  மன நோய் போன்றே கருதி

அதை ஏற்கின்றனர்.

 

இது தப்பா இல்லையா  என்றால்

காய்ஞ்சபோது 

தப்பில்லாது  இருந்திருக்கலாம்

அதைத்தொடர்வது

சமுதாயத்துக்கும் அதன் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கும்  உகந்ததல்ல என்ற போது தப்புத்தான்.

 

Link to comment
Share on other sites

ஊரில் சொல்வார்கள்

காய்ஞ்சமாடு

கம்பில  விழுந்ததுபோலென்று.

 

இதைத்தான் அப்படி சொன்னார்களோ என்று நினைப்பதுண்டு.

ஆனால்  காய்ந்து கிடந்தபோது சாப்பிட்டதை

பச்சைப்புல்லும் 

தளிரும்

இலைகுழைகளும் செளிப்பாக இருக்க

காத்திருக்க

தொடர்ந்து  காய்ஞ்சபோது தின்றதைத்தான் சாப்பிடுவேன் என்பது ஒருவித மனநோய்தானே

அது தான் மேற்கத்திய  நாட்டவர்

இவர்களை  மன நோய் போன்றே கருதி

அதை ஏற்கின்றனர்.

 

இது தப்பா இல்லையா  என்றால்

காய்ஞ்சபோது 

தப்பில்லாது  இருந்திருக்கலாம்

அதைத்தொடர்வது

சமுதாயத்துக்கும் அதன் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கும்  உகந்ததல்ல என்ற போது தப்புத்தான்.

 

விசுகு தவறான பார்வை இது.

 

உங்கள் பார்வை முழுக்க முழுக்க பாலுறவு சம்பந்தமானதாக மட்டுமே இருக்கு. ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் முடிப்பதற்கு வெறுமனே பாலுறவு மட்டுமே காரணம் என்று சொல்வது எவ்வளவு தவறோ அதேப் போன்றுதான் இதுவும். உடலுறவுக்கு அப்பாலும் அன்பும், காதலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடத்தலும் போன்றன உள்ளன.

 

ஓரினச் சேர்க்கையும் வெறுமனே பாலுறவு சார்ந்த ஒன்று மட்டுமல்ல. ஒருவரின் தேடல் தொடர்பானது.  எதிர்பால் கிடைக்காமையால், தனக்கு உருவான காமத்தினை திருப்தி படுத்த அதே பாலிடம் செல்வது வேறு, தன் பாலினத்தின்மைச் சேர்ந்த ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்வது வேறு. இரண்டாவதில் காமம் மட்டுமே காரணம் அல்ல.

 

தான் அவ்வாறு இல்லை என்பதற்காகவும், சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கின்றார்கள் என்பற்காகவும் ஒரு விடயத்தினை எப்படி சமுதாயத்துக்கும் அதன் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கு தீங்கானது என்று தீர்மானிக்கின்றீர்கள்?

 

இந்த பரந்த விரிந்த உலகில் மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காத, தமக்கு விரும்பிய  அனைத்து செயல்களுக்கும் பெறுமதி உண்டு. அந்த செயல்களைச் செய்வதற்கான உரிமையும், வசதியும் கண்டிப்பாக கொடுக்கப்படல் வேண்டும்.

 

தனிப்பட்ட ரீதியில் நான் ஓரினச்சேர்க்கையாளன் இல்லை. இருபாலின சேர்க்கையாளனும் இல்லை. ஆனால் என் பிள்ளைகளில் ஒருவர் அப்படி ஆனாலும் அதற்காக கவலைப்படப் போவதில்லை.

Link to comment
Share on other sites

ஊரில் சொல்வார்கள்

காய்ஞ்சமாடு

கம்பில  விழுந்ததுபோலென்று.

 

இதைத்தான் அப்படி சொன்னார்களோ என்று நினைப்பதுண்டு.

ஆனால்  காய்ந்து கிடந்தபோது சாப்பிட்டதை

பச்சைப்புல்லும் 

தளிரும்

இலைகுழைகளும் செளிப்பாக இருக்க

காத்திருக்க

தொடர்ந்து  காய்ஞ்சபோது தின்றதைத்தான் சாப்பிடுவேன் என்பது ஒருவித மனநோய்தானே

அது தான் மேற்கத்திய  நாட்டவர்

இவர்களை  மன நோய் போன்றே கருதி

அதை ஏற்கின்றனர்.

 

இது தப்பா இல்லையா  என்றால்

காய்ஞ்சபோது 

தப்பில்லாது  இருந்திருக்கலாம்

அதைத்தொடர்வது

சமுதாயத்துக்கும் அதன் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கும்  உகந்ததல்ல என்ற போது தப்புத்தான்.

 

ஊரில் சொல்வார்கள்

காய்ஞ்சமாடு

கம்பில  விழுந்ததுபோலென்று.

 

 

இதற்கு பொருள் புரியவில்லை புரிய வைக்கவும். அடுத்தது ஓரின சேர்க்கையாளரகள்    இவர்களை மன நோயாளர்கள் என  நாம் நினைப்பது  எமது மனநோய் . அதை விட மேலை நாட்டவர்ககள்  இதனை மன நோயாக பார்ப்பதில்லை  அது தவறு . இவர்களை முதலுரிமை கொடுத்து  அவர்களை அன்போடு அரவணைப்பவர்களாக  இருக்கிறார்கள். இவர்களும்  பிறப்பால்  மாற்று திறனாளிகளை போன்றவர்கள். அதே போலத்தான் பெண்களும்.   எம்மால் இலகுவாக இரண்டும் கெட்டான் என ஒதுக்கப்பட்டு  அலிகள் என அழைக்கப்பட்ட   திரு நங்கைகள்.   அவர்களை  பார்க்கும் பார்வை

Link to comment
Share on other sites

இயற்க்கைக்கு முரணான இந்த உறவு கண்டிப்பா குற்றமே.....கறுமம் பிடிச்சதுகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்க்கைக்கு முரணான இந்த உறவு கண்டிப்பா குற்றமே.....கறுமம் பிடிச்சதுகள்....

சிலம்பாட்டம் தப்பா பாஸ்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலம்பாட்டம் தப்பா பாஸ்  :D

 

இது.. சிலம்பாட்டமா? கோலாட்டமா?

Link to comment
Share on other sites

ஆறறிவுள்ள இரண்டு பேர் சேர்ந்து எதை வேண்டுமானாலும் செய்யலாம்.. ஆடு, மாடுகளை வற்புறுத்துவதுதான் தவறு.. :D ஏனென்றால் அவைகளால் ஒரு "மே..".. இதைத்தவிர வேறு ஒன்றையும் கூறி அலற முடியாது அல்லவா? :icon_idea:

 

மற்றது.. ஒருபாலினர் கூடி வாழ்தலை "திருமணம்" என்று அங்கீகரிக்கிறார்கள்.. இதில் எனக்கு நூறு வீதம் உடன்பாடு உள்ளதுமாதிரி தெரியவில்லை.. வேறு பெயரில் அழைக்கலாம்.. ஏனென்றால் இன்று இரு ஒருபாலினர் கூடி அதை திருமணம் என்பர்.. நாளைக்கு ஆறுபேர் கூடியிருந்து அதையும் திருமணம் என்று அங்கீகரிக்கச்சொல்லிக் கேட்டால் எங்கே போய் முட்டுவார்கள்? :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு தவறான பார்வை இது.

 

உங்கள் பார்வை முழுக்க முழுக்க பாலுறவு சம்பந்தமானதாக மட்டுமே இருக்கு. ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் முடிப்பதற்கு வெறுமனே பாலுறவு மட்டுமே காரணம் என்று சொல்வது எவ்வளவு தவறோ அதேப் போன்றுதான் இதுவும். உடலுறவுக்கு அப்பாலும் அன்பும், காதலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடத்தலும் போன்றன உள்ளன.

 

ஓரினச் சேர்க்கையும் வெறுமனே பாலுறவு சார்ந்த ஒன்று மட்டுமல்ல. ஒருவரின் தேடல் தொடர்பானது.  எதிர்பால் கிடைக்காமையால், தனக்கு உருவான காமத்தினை திருப்தி படுத்த அதே பாலிடம் செல்வது வேறு, தன் பாலினத்தின்மைச் சேர்ந்த ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்வது வேறு. இரண்டாவதில் காமம் மட்டுமே காரணம் அல்ல.

 

தான் அவ்வாறு இல்லை என்பதற்காகவும், சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கின்றார்கள் என்பற்காகவும் ஒரு விடயத்தினை எப்படி சமுதாயத்துக்கும் அதன் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கு தீங்கானது என்று தீர்மானிக்கின்றீர்கள்?

 

இந்த பரந்த விரிந்த உலகில் மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காத, தமக்கு விரும்பிய  அனைத்து செயல்களுக்கும் பெறுமதி உண்டு. அந்த செயல்களைச் செய்வதற்கான உரிமையும், வசதியும் கண்டிப்பாக கொடுக்கப்படல் வேண்டும்.

 

தனிப்பட்ட ரீதியில் நான் ஓரினச்சேர்க்கையாளன் இல்லை. இருபாலின சேர்க்கையாளனும் இல்லை. ஆனால் என் பிள்ளைகளில் ஒருவர் அப்படி ஆனாலும் அதற்காக கவலைப்படப் போவதில்லை.

 

இது கருத்தாடல் முறையில் நியாயங்களாக பட்டாலும்....இயற்கையான வாழ்வுமுறைக்கு ஒருபோதும் ஒருங்கிணைய மாட்டாது. இயற்கைக்கு செய்யும் துரோகங்களில் இதுவுமொன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையில் இன்னொரு ஆணோடு உறவு கொள்ளாத ஆண்களும்........

இன்னொரு  பெண்ணுடன் உறவு கொள்ளாத பெண்களும்தான்..........
இதை தவறு என்று சொல்கிறார்கள்.
 
இயற்கையின்பால்........... ஆண்களும் பெண்களும் நேர் எதிரானவர்கள்.
ஒரு பகலும் ஒரு இரவும் சேர்ந்தே. ஒரு நாள் எனும் முழுமை ஏற்படுகிறது.
இருளும் ஒளியும் ஒரு முழுமையாகிறது......
மைனஸ் பவருடன் பொசிடிவ் பவர் கலக்கும்போதே மின்சாரம். அல்லது ஒரு சக்தி கிடைக்கிறது.
 
ஒரு எதிரும் + ஒரு மறையும் = ஒரு முழுமை 
இது இயற்கையாக இருந்து வந்துள்ளது.
 
இப்போது மனிதன் இயற்கையாக இல்லை. கிட்டதட்ட 20 வருடம் கழித்து ஒரு செவ்வாய் கிழமையில் நான்  என்ன செய்துகொண்டிருப்பேன்? என்று ஒரு திகதியை தொட்டு பார்த்தால். 75% நான் வேலையில் இருப்பேன் என்று சொல்லகூடியதாக இருக்கிறது.  மனிதன்  இயந்திரம் ஆகிவிட்டான். மனங்கள் இரும்புகள் ஆகி வருகின்றன.
60-70 வயதுகளில் பாலியல் சம்பந்தமான விடயங்களில் ஒரு தளர்ச்சி நிலை ஏற்பட்டு மனிதன்  தனது குடும்பம் கோவில் என்று இருந்த நாட்கள் இல்லாது போய்விட்டது .
வயாக்கிராவை போட்டுவிட்டு 18-19 வயது இளம் குமரிகளுக்கு வலை விரிக்கிறார்கள் தாத்தாக்கள்.
இரவு சாட்ரூமில் சந்திச்சு 
மறுநாள் மாலை ரெஸ்ட் ருரண்டில் சந்திச்சு 
இரவு கட்டிலுக்கு போய்.
ஞாஜிறு காலை டாட்ட சொல்லி விட்டு போகிறார்கள்.
 
நாகரிக வளர்ச்சி என்று பெண்களை வியாபார பொருட்கள் ஆக்கி வீதி எங்கும் கட்டவுட் வைத்து  வருகிறார்கள். நாளும் நாளும் இந்த வீதிகளில் நடந்தே ஒரு ஆண் வளருகிறான்.
போன போக்கில் தனது பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்ள ஒரு பெண்ணை தேடுகிறான். பெண்ணும் அதே நிலை.
இதற்குள் நாகரிக உலகம் தந்திரமாக கற்று கொடுத்த 
ஐ லவ் யூ ஹொனி ............. சீனி............. சர்க்கரை. போன்ற வார்த்தைகளை கொண்டு சில காலம்  உறவை தக்க வைத்து கொள்கிறார்கள்.
இதற்கு முன்பே அட இவளவுதானா? என்று பாலியல் விடயங்களில் சலித்து போகிறார்கள்.
வறுமையான அல்லது வெறுமையான உறவை தக்க வைக்க சிலர் விடாது போராடுகிறார்கள். சிலர் என்ன உயிரா போகிறது என்று கிளம்பி விடுகிறார்கள்.
 
ஆண்களுக்கு அலட்டுவது பிடிக்காது 
பெண்களுக்கு அலட்டுவதே பிடிக்கும்.
 
காலபோக்கில் ஒரு பெண் ஒய்யாரமாக இன்னொரு பெண்ணின் மடியில் கதை பேச தலை சாய்கிறாள்.
ஏமாற்று காசு திருட்டு அழகு என்ற ஆணவம் எல்லாம் உள்ள பெண்ணை விட்டு விலகி ஒரு ஆண்  உண்மையுடன் இன்னொரு ஆணுடன் கை கோர்கிறான்.
 
இதில் தவறு என்று சொல்ல ஒன்றும் இல்லை. மனித வாழ்வு திசை மாறி போய்விட்டது. இயற்கையில் இருந்து பிரிந்து  செயற்கை என்று ஆகிவிட்டது.
உண்மை என்று இப்போதும் உலகில் இருப்பது "மரணம்" ஒன்றுதான். மனித உடலுக்குள் இரும்புகள் கம்பிகளை  சொருக தொடங்கி விட்டார்கள். கால் போக்கில் அதுகும் இல்லது போனால்.
உண்மை இல்லாத உலகில்............ எதை பொய் என்று சொல்லி வாதாடுவது????
நானே ஒரு பொய் ......... அடுத்தவனை பார்த்து எப்படி பொய்யன் என்று சொல்வது??

 

Link to comment
Share on other sites

ஆணுக்கு பெண் ....பெண்ணுக்கு ஆண் ...அதாவது ஒருவனுக்கு ஒருத்தியாக  இறைவன் படைத்தான் .............வாழ்வியல்[ பாலியலும் உள்ளடக்கப்பட்ட]] சம்பந்தமாக அவளே அவனுக்கும் ,அவனே அவளுக்கும் துணையாயிருப்பார்கள்  என எதிர்பார்த்தார்.....ஆனால் பாவிமனிசாங்கள்     இறைவன் எதிர்பார்த்த அந்த ஒருமையை மாற்றி பன்மையாக்கிவிட்டார்கள் ...............இறைவனும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார் ..ஆனால் மனிதனின் வேகம் கூடியதே தவிர குறையவில்லை .இதனால் இறைவனே இந்த விடயத்தில் ஒதுங்கிவிட்டார் .................அப்புறம் நாமும் ஒதுங்கி இருப்பதே நல்லது ...........மனிசான் செய்யும் ஒவ்வொன்றும் பின்னால் அவனே அனுபவிப்பான் ...............

 

மரணசடங்கிற்கு போகும் ஒவ்வொருமுறையும் எனக்குள்ளே எழும் கேள்விகள் பல .............[ ஆணவமும்,அதர்மமும் ,அட்டகாசமும் அடங்கி போர்த்துப்படுத்திருப்பதை காணுவேன் ,]

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு தவறான பார்வை இது.

 

உங்கள் பார்வை முழுக்க முழுக்க பாலுறவு சம்பந்தமானதாக மட்டுமே இருக்கு.

 

உண்மைதான் நிழலி

எனக்கு மட்டுமல்ல  பலருக்கும் அதுதானே முதலில் ஞாபகம் வருகிறது.

அத்துடன் அது  இல்லாமல் எப்படி அன்பு வரமுடியும்? (இப்படி இன்னொரு திரியில் நீங்களே  கேட்டதாக ஞாபகம்??)

 

 

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் முடிப்பதற்கு வெறுமனே பாலுறவு மட்டுமே காரணம் என்று சொல்வது எவ்வளவு தவறோ அதேப் போன்றுதான் இதுவும்.    உடலுறவுக்கு அப்பாலும் அன்பும், காதலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடத்தலும் போன்றன உள்ளன.

 

ஓரினச் சேர்க்கையும் வெறுமனே பாலுறவு சார்ந்த ஒன்று மட்டுமல்ல. ஒருவரின் தேடல் தொடர்பானது.  எதிர்பால் கிடைக்காமையால், தனக்கு உருவான காமத்தினை திருப்தி படுத்த அதே பாலிடம் செல்வது வேறு, தன் பாலினத்தின்மைச் சேர்ந்த ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்வது வேறு. இரண்டாவதில் காமம் மட்டுமே காரணம் அல்ல.

 

எனக்கு அது தான் ஞாபகம் வருகிறது

அத்துடன் ஒரு அசிங்கமாக  வாந்தி  வருவதுபோல் ஒரு மனநிலை வருகிறது

நான் என்ன  செய்யட்டும்??? 

 

தான் அவ்வாறு இல்லை என்பதற்காகவும், சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கின்றார்கள் என்பற்காகவும் ஒரு விடயத்தினை எப்படி சமுதாயத்துக்கும் அதன் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்கு தீங்கானது என்று தீர்மானிக்கின்றீர்கள்?

 

இந்த பரந்த விரிந்த உலகில் மற்றவர்களுக்கு தீங்கு இழைக்காத, தமக்கு விரும்பிய  அனைத்து செயல்களுக்கும் பெறுமதி உண்டு. அந்த செயல்களைச் செய்வதற்கான உரிமையும், வசதியும் கண்டிப்பாக கொடுக்கப்படல் வேண்டும்.

 

உங்களது இந்த மனநிலைக்கே நான் விருப்பு வாக்கு போட்டேன்.

ஆனால் இதில் மாற்றுக்கருத்து எனக்குண்டு.

அதாவது  எல்லாவற்றையும் ஏற்கணும் அங்கீகரிக்கணும் என்று வெளிக்கிட்டால மனித வாழ்க்கை  என்பது ஒரு கட்டத்தில் ஒழுங்கு முறைக்குள் வராத பொருளாகிவிடும்.  அத்துடன் சமீபகாலமாக பிரான்சில் அதிகம பேசப்படும் இந்த விடயத்தை பார்த்தபோது இதில் பல தொடர் விளைவுகள் உண்டு. முக்கியமாக பிள்ளை  பெறுதல்.  வளர்த்தல். மற்றும் பிள்ளைகளை தத்தெடுத்த வளர்த்தல்.........................................

அதனால் அந்த பிள்ளைகள் வாழ்வில் வரக்கூடிய  அவலங்கள்.

 

தனிப்பட்ட ரீதியில் நான் ஓரினச்சேர்க்கையாளன் இல்லை. இருபாலின சேர்க்கையாளனும் இல்லை. ஆனால் என் பிள்ளைகளில் ஒருவர் அப்படி ஆனாலும் அதற்காக கவலைப்படப் போவதில்லை.

 

இது முக்கியமானது நிழலி.

உங்களது இந்த நிலைக்கும்  சேர்த்தே விருப்பு வாக்கு.

ஆனால்

நான் இதற்கு முதல் தலைமுறையைச்சேர்ந்தவன்.

என்னுடைய  மகன் ஒரு பெண்ணைக்காதலிப்பதையே  ஏற்கமுடியாத நிலையில் தான் என் மனம் இன்றும் உள்ளது.

இந்தநிலையில் எனது பிள்ளையை  ஓரினச்சேர்க்கை..............???

நடக்கிற விடயமா............???

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓரினச்சேர்க்கை இன்று அதிகரித்து வருவதற்கு காரணம்

1- 32  வயது வரை திருமணமாகாமல் இருக்கும் ஒரு நிலை. 

2- மேலும், சமூக வாழ்வில் இன்று ஆண்களும் பெண்களும் கல்லூரிகளிலும் விடுதிகளிலும் குழுக்களாக தங்கிப் படிக்கும் சூழலில், தங்களுக்குள் இச்சையைத் தீர்த்துக்கொள்ள முனைகிறார்கள்.

3- பதின் பருவத்தில் இயல்பாக எழும் காம உணர்ச்சியைத் தடை செய்துவிடமுடியுமா?

 

 

ஊரில் சொல்வார்கள்

காய்ஞ்சமாடு

கம்பில  விழுந்ததுபோலென்று.

 

 

இதற்கு பொருள் புரியவில்லை புரிய வைக்கவும்.

 

உங்களது முதலாவது கேள்விக்கு திரியில் பதிலிருக்கு சாத்திரி.

 

அடுத்தது ஓரின சேர்க்கையாளரகள்    இவர்களை மன நோயாளர்கள் என  நாம் நினைப்பது  எமது மனநோய் .

இவ்வாறு எழுதிவிட்டு

 

அதை விட மேலை நாட்டவர்ககள்  இதனை மன நோயாக பார்ப்பதில்லை  அது தவறு . இவர்களை முதலுரிமை கொடுத்து  அவர்களை அன்போடு அரவணைப்பவர்களாக  இருக்கிறார்கள். இவர்களும்  பிறப்பால்  மாற்று திறனாளிகளை போன்றவர்கள்.

 

மாற்றுதிறனாளிகள் என்கிறீர்கள்

இரண்டுக்கும் என்ன  வித்தியாசம்  சாத்திரி?????

 

அதே போலத்தான் பெண்களும்.   எம்மால் இலகுவாக இரண்டும் கெட்டான் என ஒதுக்கப்பட்டு  அலிகள் என அழைக்கப்பட்ட   திரு நங்கைகள்.   அவர்களை  பார்க்கும் பார்வை

 

Link to comment
Share on other sites

ஈழத்தில் குரக்கன் என்று சொல்வதைத்தான் தமிழகத்தில் கம்பு என்று சொல்வார்கள் என நினைக்கிறேன்.. அதாவது பசியால் காய்ந்துபோன மாடு குரக்கன் வயலுக்குள் போய் விழுந்தமாதிரி.. இதை காய்ந்துபோன வெளிநாட்டு மாப்பிளைகள் நினைவில் வைத்திருப்பது நல்லது.. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.