Jump to content

பூவுக்கும் பெயருண்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான விடயங்களை பகிர்ந்த கோமகன் உங்களுக்கு எனது பாராட்டும் நன்றிகளும்.

Link to comment
Share on other sites

  • Replies 156
  • Created
  • Last Reply

கோமகன்! இவ்வளவு பொறுமையாக இருந்து இத்தொடரை முன்னெடுக்கின்றீர்கள்.அதுவும் இன்றையகால கட்டத்தில்.............வாழ்த்துக்கள். :wub:

மிக்க நன்றிகள் குசா அண்ணை உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :):) .

கோமகன் பூங்காவுக்குள் புகுந்தாலே குதுகலம்தான்.

பார்க்காத பூக்கள் எல்லாம் பார்க்கலாம் இங்கே.

பூங்காவனம் அமைத்த கோமகனுக்கு

இப்பூக்களினால் மாலை அணிவிக்கிறேன்.

உங்கள் எண்ணம் நிறைவேறும் செம்பகன் , மிக்க நன்றிகள் :):):) .

அருமையான விடயங்களை பகிர்ந்த கோமகன் உங்களுக்கு எனது பாராட்டும் நன்றிகளும்.

தமிழரசுவையும் கவர்ந்தால் அது ஆச்சரியம்தான் :lol::lol::D .

Link to comment
Share on other sites

55 தோன்றிப் பூ ( சுடர் பூந் தோன்றி ) .

82803410.jpg

இதைக் கார்திகைப் பூ அல்லது காந்தள் பூ என்றும் அழைப்பர்.

37173426.jpg

37724521.jpg

56 நந்திப் பூ ( நந்தியாவட்டை ) .

99993547.jpg

33716401.jpg

இந்தப் பூவானது தற்பொழுது நந்தியாவட்டைப் பூ என்று அழைக்கப்படுகின்றது.

41691065.jpg

65832809.jpg

Link to comment
Share on other sites

57 நரந்தம் பூ .

66978465.jpg

80394793.jpg

குறுந்தொகை 52, பனம்பாரனார்,

குறிஞ்சி திணை – தோழி சொன்னது

ஆர் களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பில்

சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே

நரந்த நாறும் குவை இருங் கூந்தல்

நிரந்து இலங்கு வெண்பல் மடந்தை

பரிந்தனென் அல்லனோ இறை இறை யானே.

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-bitter-orange/

29128400.jpg

58 நறவம் பூ .

14376146.jpg

57 நரந்தம் பூ .

66978465.jpg

80394793.jpg

குறுந்தொகை 52, பனம்பாரனார்,

குறிஞ்சி திணை – தோழி சொன்னது

ஆர் களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பில்

சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே

நரந்த நாறும் குவை இருங் கூந்தல்

நிரந்து இலங்கு வெண்பல் மடந்தை

பரிந்தனென் அல்லனோ இறை இறை யானே.

http://treesinsangam...-bitter-orange/

29128400.jpg

58 நறவம் பூ .

14376146.jpg

நரந்தம் பூவில் எனக்கு குளப்பமாக உள்ளது . யாராவது விளங்கப்படுத்தினால் மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாழம் பூவில் மிகவும் சிறிய தங்கூசி போன்ற வடிவில் பாம்பு இருக்கும். அது வேகமாக அசையாது, ஆனால் அதைக் கவனிக்காமல் கூந்தலில் சூடினால் காதுக்குள் போகச் சாத்தியம் உண்டு.

யாழ் இந்துவுக்கு பக்கத்தில் கொண்டலடிப் பிள்ளையார் கோவில் இருக்கின்றது. அங்கு கொண்டல் மரமும், வில்வ மரமும் அருகருகே தல விருட்சமாய் இருக்கின்றன! கொன்றைப் பூவின் நாடு அல்லியைச் சாப்பிடச் சுவையாய் இருக்கும்.

தொடருங்கள் கோமகன்!! :D

Link to comment
Share on other sites

59 நாகப் பூ ( நறும் புன்னாகம் ) .

20466471.jpg

58362938.jpg

சிறுபாணாற்றுப்படை .

ஆசிரியர் – நல்லூர் நத்தத்தனார் .

நறுவீ நாகமும் அகிலும் ஆரமும்

துறைஆடு மகளிர்க்குத் தோட்புணை ஆகிய

பொருபுனல் தரூஉம், போக்கறு மரபின்

தொல்மா இலங்கைக் கருவொரு பெயரிய

நல்மா இலங்கை மன்ன ருள்ளும்

மறுஇன்றி விளங்கிய வடுஇல் வாய்வாள்

உறுபுலித் துப்பின், ஓவியர் பெருமகன்

களிற்றுத் தழும்புஇருந்த கழல்தயங்கு திருந்துஅடி

பிடிக்கணம் சிதறும் பெயல்மழைத் தடக்கை

பல்இயக் கோடியர் புரவலன் பேர்இசை [116-125]

கருத்துரை :

மணம் வீசும் மலர்களையுடைய புன்னை, அகில் சந்தனம் ஆகிய மரங்களின் கட்டைகளை நீர்த் துறையிலே நீராடுகின்ற மகளிருக்குத் தெப்பமாக நீர்ப்பெருக்குக் கொணர்ந்து தருகின்ற குற்றமில்லாத பழமையான புகழினையுடைய, தொன்மையான பெரிய இலங்கையின் பெயரைத் தான் கருவிலே தோன்றிய போதே பெற்று, நல் இலங்கை நாட்டை ஆண்ட மன்னருள்ளும் குறையின்றி விளங்கிய குற்றமில்லாதவன். குறி தப்பாது வாளேந்தி வெற்றி பெற்ற வீரன். வலிமையில் புலியினைப் போன்றவன். ஓவியர் குடியிலே பிறந்தவன். பெருமைக்கு உரியவன். யானையைச் செலுத்தியதால் உண்டான தழும்புடைய வீரக்கழல் ஒளிவீசுகின்ற திருந்திய அடியினை உடையவன். பெண் யானைக் கூட்டங்களை இரவலருக்குப் பரிசாகக் கொடுத்த மழை போலும் கைகளை உடையவன். பல வாத்தியங்களை இசைக்கும் கூத்தர்களைப் பாதுகாப்பவன். பெரும் புகழினை உடையவன்.

24359436.jpg

இதற்குப் புன்னை என்ற பெயரும் உண்டு .

17665433.jpg

60 நாகப் பூ .

22708027.jpg

Link to comment
Share on other sites

61 நெய்தல்ப் பூ ( நீள் நறு நெய்தல் ) .

27825445.jpg

49799774.jpg

62 நெய்தல்ப் பூ ( மணிக்குலை கள் கமழ் நெய்தல் ) .

75781768.jpg

42441400.jpg

81014754.jpg

Link to comment
Share on other sites

63 பகன்றைப் பூ .

99502587.jpg

78639081.jpg

64 பசும்பிடிப்பூ .

77743697.jpg

14540514.jpg

ப தி ற் று ப் ப த் து

மன்னன் – பெருஞ்சேரல் இரும்பொறை .

பாடியவர் – அரிசில் கிழார் .

காந்தள்அம் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்

கலிமகிழ் மேவலர் இரவலர்க்கு ஈயும்

சுரும்பு ஆர் சோலைப் பெரும்பெயல் கொல்லிப்

பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து (22 – 25)

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf-mysore-gamboge/

95313649.jpg

35708051.jpg

Link to comment
Share on other sites

இது ஒரு பிரஜோசனம் உள்ள வேலை . பாராட்டுகள் அண்ணா , இவ்வளவு காலமும் சின்ன பூ, வெள்ளை பூ என்று குறிப்பு பெயர்களை தான் சொன்னான். இப்பதான் அதனுடைய உண்மையான பெயர் தெரிந்து கொண்டோம்

Link to comment
Share on other sites

இது ஒரு பிரஜோசனம் உள்ள வேலை . பாராட்டுகள் அண்ணா , இவ்வளவு காலமும் சின்ன பூ, வெள்ளை பூ என்று குறிப்பு பெயர்களை தான் சொன்னான். ப்பதான் அதனுடைய உண்மையான பெயர் தெரிந்து கொண்டோம்

எல்லோரும் சேர்ந்து அறிவது மட்டும் அல்லாது , இந்தப் பெயர்களை நடைமுறையினில் பாவிப்பதும் அத்தியாவசியமாகின்றது . மிக்கநன்றிகள் சுடலைமாடன் உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :):):) .

Link to comment
Share on other sites

தாழம் பூவில் மிகவும் சிறிய தங்கூசி போன்ற வடிவில் பாம்பு இருக்கும். அது வேகமாக அசையாது, ஆனால் அதைக் கவனிக்காமல் கூந்தலில் சூடினால் காதுக்குள் போகச் சாத்தியம் உண்டு.

யாழ் இந்துவுக்கு பக்கத்தில் கொண்டலடிப் பிள்ளையார் கோவில் இருக்கின்றது. அங்கு கொண்டல் மரமும், வில்வ மரமும் அருகருகே தல விருட்சமாய் இருக்கின்றன! கொன்றைப் பூவின் நாடு அல்லியைச் சாப்பிடச் சுவையாய் இருக்கும்.

தொடருங்கள் கோமகன்!! :D

இந்தக் கொண்டலடிப் பிள்ளையார் கோயலடியெல்லாம் எங்கடை கட்டுப்பாட்டுக்குள்ளை இருந்தது :lol::D . தாழம் பூ நாகத்தைப் பற்றி விளக்கமாகச் சொன்னதிற்கு மிக்க நன்றிகள் சுவியர் :):) .

Link to comment
Share on other sites

தாழம்பூவுக்குள் பாம்பு இருப்பதாகவும் அதனைப் பூ நாகம் என்று கூறுவதாகவும் கேள்வி.

பூ நாகம் என்றபெயரில் சிறிய குத்து வாளுக்கும் பெயர் உண்டு.

Link to comment
Share on other sites

தாழம்பூவுக்குள் பாம்பு இருப்பதாகவும் அதனைப் பூ நாகம் என்று கூறுவதாகவும் கேள்வி.

பூ நாகம் என்றபெயரில் சிறிய குத்து வாளுக்கும் பெயர் உண்டு.

மிக்க நன்றிகள் செம்பகன் பூ நாக விளக்கத்திற்கு . நானும் அப்பிடித் நினைக்கின்றேன் . ஆனால் , பூ நாகம் குறுவாள் இன்றுதான் உங்கள் மூலம் அறிகின்றேன் :):):) .

Link to comment
Share on other sites

67 பாங்கர்ப் பூ .

73926239.jpg

நற்றிணை 98 குறிஞ்சி திணை – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, தலைவி சொன்னது .

எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்

செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி

ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி

நூழை நுழையும் பொழுதில் தாழாது

பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென

மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து தன்

கல் அளைப் பள்ளி வதியும் நாடன்

எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்

துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி

இரவின் வரூஉம் அதனினும் கொடிதே

வைகலும் பொருந்தல் ஒல்லாக்

கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே.

http://treesinsangam...oth-brush-tree/

22995055.jpg

32226640.jpg

68 பாதிரிப் பூ ( தேங்கமழ் பாதிரி ).

27424215.jpg

குறுந்தொகை 147. பாலை திணை, -கோப்பெருஞ் சோழன் – தலைவன் சொன்னது.

வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன

மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை

நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல

இன்றுயில் எடுப்புதி கனவே

எள்ளார் அம்ம துணைப்பிரிந் தோரே.

44884828.jpg

பாதிரி (Stereospermum suaveolens அல்லது Bignonia suaveolens) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு மரமாகும். 25 மீட்டர் உயரம் வரை வளரும் இதன் இலை, பூ, விதை, காய், வேர் ஆகிய அனைத்தும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன.

இதன் வேர் - சிறுநீர் இலகுவாக வெளியேறப் பயன்படும், உடலுக்குக் குளிர்ச்சி தந்து பலமூட்டும்.

இதன் காய் - அரைத்துத் தலையில் பற்றுப் போட்டால் ஒற்றைத் தலைவலி நிற்கும்.

இதன் பூ - நசுக்கித் தேனுடன் கலந்து உண்டால் தொடர்ச்சியான விக்கல் நிற்கும், நீரிற் காய்ச்சிப் பருகினால் ஆண்மைக் குறைவு நீங்கும்.

பாதிரி மலரைச் சங்ககாலக் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது (சங்ககால மலர்கள்) கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர்க் கோயிலிலுள்ள இறைவன் பாடலீசுவரர். கோயிலிலுள்ள தலமரம் பாதிரி. இவற்றை எண்ணும்போது பாதிரி மரத்துக்குப் பாடலம் என்னும் பெயரும் உண்டு எனத் தெரிகிறத

http://ta.wikipedia....%AE%B0%E0%AE%BF

நற்றிணை 52, பாலத்தனார், பாலை திணை – தலைவன் தன் நெஞ்சுக்கு சொன்னது .

மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித்

தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்

மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்

சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி

வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லேம்

நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும்

பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே

அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர்

மழவர் பெரு மகன் மா வள் ஓரி

கை வளம் இயைவது ஆயினும்

ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே.

30301022.jpg

அகநானூறு 99, பாலைப் பாடியப் பெருங்கடுங்கோ

பாலை திணை தலைவன் , தலைவியிடம் சொன்னது

வாள்வரி வயமான் கோள்உகிர் அன்ன

செம்முகை அவிழ்ந்த முள்முதிர் முருக்கின்

சிதரார் செம்மல் தா அய், மதர்எழில்

மாண் இழை மகளிர் பூணுடை முலையின்

முகைபிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை

அதிரல் பரந்த அம்தண் பாதிரி

உதிர்வீ அம்சினை தாஅய், எதிர்வீ

மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்

அணங்குடை நகரின் மணந்த பூவின்

நன்றே, கானம்; நயவரும் அம்ம,

கண்டிசின வாழியோ – குறுமகள்! நுந்தை

அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பின்,

பிடிமிடை களிற்றின் தோன்றும்

குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தோ

http://treesinsangam...r-trumpet-tree/

53570108.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

61 நெய்தல்ப் பூ ( நீள் நறு நெய்தல் ) .

27825445.jpg

49799774.jpg

62 நெய்தல்ப் பூ ( மணிக்குலை கள் கமழ் நெய்தல் ) .

75781768.jpg

42441400.jpg

81014754.jpg

கோமகன் இணைப்புக்கு நன்றி,

இந்த பூவை நாங்கள் அல்லிபூ என்றுதான் அழைப்போம். :(

53570108.jpg

இந்தப்பூக்களை நான் எமது ஊரில் பத்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

கோமகன் இணைப்புக்கு நன்றி,

இந்த பூவை நாங்கள் அல்லிபூ என்றுதான் அழைப்போம். :(

53570108.jpg

இந்தப்பூக்களை நான் எமது ஊரில் பத்திருக்கின்றேன்.

மிக்க நன்றிகள் தமிழரசு உங்கள் கருத்துகளுக்கு :):):) .

Link to comment
Share on other sites

69 பாரம்பூ .

25711374.jpg

இந்தப் பூவானது பருத்திப் பூ என்றும் அழைக்கப்படும் .

70 பாலைப் பூ .

55713440.jpg

ஐங்குறுநூறு 317

ஓதலாந்தையார், பாலை திணை – தலைவி தோழியிடம் சொன்னது

சூழ்கம் வம்மோ தோழி பாழ் பட்டுப்

பைது அற வெந்த பாலை வெங்காட்டு

அருஞ்சுரம் இறந்தோர் தேஎத்துச்

சென்ற நெஞ்சம் நீடிய பொருளே.

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-ivorywood-tree/

பாலைப் பழம் .

17696233.jpg

Link to comment
Share on other sites

71 பிடவம் பூ .

46871220.jpg

இது இந்தப் பூவுடன் சம்பந்தமில்லாவிட்டாலும் இந்தச் சங்ககாலப் பாடல் சொல்லும் செய்திக்காக இதில் இணைப்பது அத்தியாவசியமாக எனக்குப் படுகின்றது . உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றேன் .

பூங்கணுத்திரையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பெயரைப் பூங்கண் உத்திரையார் என்று பிரித்துப் பார்க்கின்றனர். ஆதிரை என்பது போல உத்திரை என்பதும் ஒரு பெயர். உத்திரை நாள்மீன் 27 நாள்மீன் வரிசையில் 12ஆவது மீன். உத்திரை நாளில்(நட்சத்திரத்தில்) பிறந்த இவருக்கு உத்திரை என்று பெயரிட்டனர். புலவராக விளங்கியதால் இவரை உத்திரையார் என்னும் சிறப்புப் பெயரால் வழங்கலாயினர். இவரது கண்ணில் பூ விழுந்திருந்தது. அதனால் இவரைப் பூங்கண் உத்திரையார் என்றனர்.

சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் மூன்று இடம்பெற்றுள்ளன. குறுந்தொகை 48, 171, புறநானூறு 277 ஆகியவை

மூங்கில் இலையில் தூங்கும் பனிநீர் போல தாயின் கண்ணில் மகிழ்ச்சிக் கண்ணீர்த்துளி தொங்குகிறது. அவள் தலைமுடி மீன் உண்ணும் கொக்கின் தூவி போல் வெளுத்திருக்கிறது. அவள் மகன் போருக்குச் சென்றான். போரில் மாண்டான். எனினும் பகைவனின் களிற்றை வெட்டி வீழ்த்திய பின் மாண்டான். இதனை அறிந்தபோது அந்தத் தாய் மகனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி அடைந்தாளாம். புறநானூறு 277

http://ta.wikipedia....%AE%B0%E0%AF%8D

70358132.jpg

பொதும்பில் புல்லாளங் கண்ணியார் சங்ககாலப் பெண்பால் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அது அகநானூறு 154ஆம் பாடலாக உள்ளது.

போர்வினை முடிந்து மனை திரும்பும் தலைவன் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான்.

பகுவாய்த் தேரை மழை பொழிந்ததால் தவளை பல இசைக்கருவிகள் முழங்குவது போலக் கறங்குகிறது(ஒலிக்கிறது).

பிடவம் பிடவம் பூக்கள் நுண்மணல் போல் வழியெங்கும் வரிவரியாக வரித்துக் கிடக்கின்றன.

கோடல் பாம்பு படமெடுப்பது போல கோடல் பூ பூத்திருக்கிறது.

இரலை இரலைமான் ஊற்றோடும் அறல்நீரைப் பருகித் தன் துணையோடு படுத்துக்கிடக்கிறது.

வலவ! நம் தேரில் பூட்டிய குதிரை ஓடும் மணியோசை காடு முழுவதும் கேட்கும்படி தேரை ஓட்டுக!

(தேர்க்காலில் அகப்பட்டுக்கொள்ளாமல் அவை விலகட்டும்).

நான் அம்மா அரிவையைத் துன்னவேண்டும்.

  • துன்னல் = தைத்தல், புணர்தல்

http://ta.wikipedia....%AE%B0%E0%AF%8D

72 பிண்டிப் பூ (பல் பூம் பிண்டி ) .

35315904.jpg

இந்தப் பூவும் மரமும் இப்பொழுது அசோகமரம் , அசோகப்பூ என்று அழைக்கப்படுகின்றது .

குறுந்தொகை 214, கூடலூர்கிழார், குறிஞ்சி – குறிஞ்சி திணை – தோழி சொன்னது .

மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய

பிறங்குகுரல் இறடி காக்கும் புறந்தாழ்

அம் சில் ஓதி அசையியற் கொடிச்சி

திருந்திழை அல்குற்குப் பெருந்தழை உதவிச்

செயலை முழுமுதல் ஒழிய அயல

அரலை மாலை சூட்டி

ஏம் உற்றன்று இ அழுங்கல் ஊரே.

17673502.jpg

நற்றிணை 244, கூற்றங்குமரனார், குறிஞ்சி திணை – தலைவி தோழியிடம் சொன்னது .

விழுந்த மாரிப் பெருந் தண் சாரல்

கூதிர்க் கூதளத்து அலரி நாறும்

மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்

மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்

உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ

துயர் மருங்கு அறியா அன்னைக்கு இந் நோய்

தணியுமாறு இது என உரைத்தல் ஒன்றோ

செய்யாய் ஆதலின் கொடியை தோழி

மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த

செயலை அம் தளிர் அன்ன என்

மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே.

80814368.jpg

நற்றிணை 376, கபிலர், குறிஞ்சி திணை – தோழி சொன்னது .

முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ

இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை

வரையோன் வண்மை போல பல உடன்

கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்

குல்லை குளவி கூதளம் குவளை

இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன்

சுற்று அமை வில்லன் செயலைத் தோன்றும்

நல் தார் மார்பன் காண்குறின் சிறிய

நன்கு அவற்கு அறிய உரைமின் பிற்றை

அணங்கும் அணங்கும் போலும் அணங்கி

வறும் புனம் காவல் விடாமை

அறிந்தனிர்அல்லிரோ அறன் இல் யாயே.

http://treesinsangam...%88-asoka-tree/

Link to comment
Share on other sites

73 பித்திகம் பூ .

11084376.jpg

இந்தப் பூவானது காட்டு மல்லிகை என்ற இப்பொழுது அழைக்கப்படுகின்றது .

76240954.jpg

49144298.png

74 பீரம் பூ .

71220911.jpg

இந்தப் பூவானது பீர்க்கம் பூ அல்லது பிசுக்கம் பூ என்றும் அழைக்கப்படும்

49629683.jpg

72083010.jpg

55648479.jpg

Link to comment
Share on other sites

75 புன்னைப் பூ ( கடியிரும் புன்னை ) .

22892784.jpg

புன்னை (calophyllum inophyllum) மிகவும் அழகிய தோற்றம் கொண்ட மரங்களுள் ஒன்றாகும். இதன் இலைகள் சற்று பெரியதாகவும், பளபளப்பாகவும் இருக்கும். வெண்ணிறப் பூவும் மஞ்சள் நிறப் பூந்தூள் பகுதியும் கொண்டது. புன்னை மரத்தின் அறிவியற் பெயர் calophyllum inophyllum என்பதின் முதற்பகுதி calophyllum என்பதன் பொருள் அழகான இலை. calo என்பது கிரேக்கச் சொல்லான καλός (காலோசு), என்பதில் இருந்து பெற்றது. அதன் பொருள் அழகானது, அருமையானது என்பது. phyllum (φύλλον) என்பது இலை. சிங்கள மொழியில் இது தொம்ப (දොඔ) எனவும், மலையாளத்தில் புன்னாகம் (പുന്നാഗം ) எனவும் அழைக்கப்படுகிறது.

திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளிய மூன்றாம் திருமுறையில் இப்புன்னை மரம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பதிகம் மேல் வருமாறு.

பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்

சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே

செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய

வெங்காட்டு ளனலேந்தி விளையாடும் பெருமானே.

http://ta.wikipedia....%AE%A9%E0%AF%88

41886695.jpg

11104525.jpg

நற்றிணை 87, நக்கண்ணையார், நெய்தல் திணை – தலைவி சொன்னது .

உள்ளூர் மா அத்த முள் எயிற்று வாவல்

ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்

வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு

நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு

அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டுப்

பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை

துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்

சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்

பெருந் தண் கானலும் நினைந்த அப் பகலே.

99383140.jpg

நற்றிணை 311 – உலோச்சனார் , நெய்தல் திணை – தலைவி சொன்னது.

பெயினே விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி

இருங் கதிர் நெல்லின் யாணரதே

வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து

இருங் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்

அழியா மரபின் நம் மூதூர் நன்றே

கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி

சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே

ஒன்றே தோழி நம் கானலது பழியே

கருங் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி

இருங் களிப் பிரசம் ஊத அவர்

நெடுந் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே

http://treesinsangam...88-laurel-tree/

76 பூளைப் பூ ( குரீஇப் பூளை ).

27864878.jpg

19101848.png

69189362.png

64676099.png

66429716.png

Link to comment
Share on other sites

77 போங்கம் பூ .

50899166.jpg

81239032.jpg

குறிஞ்சிப்பாட்டு ஆசிரியர் - கபிலர்

பாறையில் மலர் குவித்த பாவையர்

———– ———— ———– வள்இதழ்

ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்

தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி

செங்கொடு வேரி,தேமா, மணிச்சிகை

உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ் கூவிளம்

எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்

வடவனம், வாகை, வான்பூங் குடசம்

எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை

பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,

பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,

விரிமலர் ஆவிரை, வரல், சூரல்,

குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,

குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,

போங்கம் , திலகம், தேங்கமழ் பாதிரி,

செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,

கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்

தில்லை, பாலை, கல்இவர் முல்லை,

குல்லை பிடவம், சிறுமா ரோடம்,

வாழை வள்ளி நீள்நறு நெய்தல்

தாழை தளவம் முள்தாள் தாமரை

ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,

சேடல், செம்மல், சிறுசெங் குரலி

கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை

காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,

பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,

ஈங்கை, இலவம், தூங்குஇணர்க் கொன்றை

அடும்புஅமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,

பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,

வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,

தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,

நந்தி, நறவம், நறும் புன்னாகம்,

பாரம், பீரம், பைங்குருக் கத்தி,

ஆரம் காழ்வை கடிஇரும் புன்னை,

நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,

மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்

அரக்குவிரிந் தன்ன பருஏர்அம் புழகுடன்

மால்அங்கு உடைய மலிவனம் மறுகி,

வான்கண் கழீஇய அகல்அறைக் குவைஇ(61-98)

85147810.jpg

பாடலின் விளக்கம் :

வளமையான இதழ்களையுடைய அழகிய செங்காந்தள் மலர், ஆம்பல் மலர், அனிச்ச மலர், ஆம்பல் மலர்,

குளிர்ச்சியான குளத்திலே பூத்த குவளை மலர், குறிஞ்சி மலர், வெட்சி மலர், செங்கோட்டு வேரி, இனிய கனிகளைத்

தரும் மாம்பூ , செம்மணிப்பூ, தனக்கே உரிய மணமும் விரிந்து கொத்தாகவுள்ளதுமாகிய பெரிய மூங்கிற்பூ,வில்வம்,

தீயின் நிறத்தை ஒத்த எறுழம்பூ, மராமரப்பூ, கூவிரம், வடவனம், வாகைப்பூ, வெண்ணிறமுடைய வெட்பாலைப்பூ,

பஞ்சாய்க்கோரை, வெண்காக்கண மலர், நீலமணி போன்றிருக்கும் கருவிளம்பூ, பயினிப்பூ, வானிப்பூ, பல கொத்துக்களையுடைய குரவ மலர், பச்சிலைப்பூ, மகிழம்பூ, கொத்தாய் மலர்ந்திருக்கும் காயாம்பூ, விரிந்த பூக்களையுடைய ஆவிரம், சிறுமூங்கிற்பூ, சூரைப்பூ, சிறு பூளை,குன்றிப்பூ, முருக்கிலை, மருதப்பூ, விரிந்த பூக்களையுடைய கோங்கமலர், மஞ்சாடிப்பூ, திலக மரத்தின் மலர், தேன் மணக்கும் பாதிரிப்பூ, செருந்தி மலர், புனலி, பெரிய குளிர்ச்சியான சண்பக மலர், கரந்தைப்பூ, காட்டு மல்லிகைப்பூ, மிக்க மணம் வீசும் மாம்பூ, தில்லைப்பூ, பாலைப்பூ, கல்லில் படர்ந்திருக்கும் முல்லைப்பூ, கஞ்சங்குல்லை மலர், பிடவ மலர், செங்கருங்காலி மலர், வாழைப்பூ, வள்ளிப்பூ, நீண்டிருக்கும் மணம் வீசும் நெய்தற்பூ, தெங்கம்பாளைப்பூ, செம்முல்லைப்பூ, முள்ளினையுடைய தண்டினைக் கொண்ட தாமரைப்பூ , ஞாழல்பூ, முல்லைப்பூ, குளிர்ந்த கொகுடிப்பூ, பவழமல்லிப்பூ, சாதிப்பூ, கருந்தாமக் கொடிப்பூ, கோடல்பூ, தாழைப்பூ, தாது முதிர்ந்து மணம் வீசும் சுரபுன்னைப்பூ, காஞ்சிப்பூ, நீலமணி போலும் கொத்துக்களையுடைய தேன் நாறும் கருங்குவளைப்பூ,பாங்கர்ப்பூ, ஓமைப்பூ, மரவப்பூ, பல பூக்களும் நெருங்கியிருக்கும் தணக்கம்பூ, இண்டம்பூ, இலவம்பூ, கொத்தாய் தொங்கும் சுரபுன்னைப்பூ, அடும்பம்பூ, ஆத்திப்பூ, நீண்ட கொடியில் மலரும் அவரைப்பூ, பகன்றைப்பூ, பலாசம்பூ, அசோக மலர், வஞ்சி மலர், பிச்சி மலர், கருநொச்சி மலர், தும்பைப்பூ, துளசிப்பூ, விளக்கின் ஒளி போன்றிருக்கும் தோன்றிப்பூ, நந்திவட்டப்பூ, நறவம்பூ, மணம் வீசும் புன்னாகம் பூ, பருத்திப்பூ, பீர்க்கம்பூ, பசுமையான குருக்கத்தி மலர், சந்தன மலர், அகிற்பூ, மிக்க மணத்தினையுடைய பெரிய புன்னைப்பூ, நாரத்தம்பூ, நாகப்பூ, நள்ளிரவிலே மணம் வீசும் இருவாட்சி மலர், கரிய பெரிய குருந்த மலர், வேங்கை மலர் முதலிய பிற பூக்களையும் சிவப்பு நிறத்தைப் பரப்பி வைத்தாற் போன்றிருக்கும் மிக்க அழகுடைய செம்பூவினையும் அங்கு இருந்த மிக்க காடு அடர்ந்த பகுதியில் மனமகிழ்ச்சியோடு உலவித் திரிந்து, ஆசையோடு மலர்களைப் பறித்து வந்தோம். மழை பெய்ததால்

கழுவி சுத்தம் செய்யப்பெற்ற அகன்ற மலைப்பாறையின் மீது அனைத்துப் பூக்களையும் குவித்து வைத்தோம்.

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-red-wood-tree/

56931860.jpg

78 மணிச்சிகைப் பூ .

37250010.jpg

13782300.jpg

68106755.jpg

76386570.png

70944577.jpg

47662248.jpg

Link to comment
Share on other sites

79 மராஅம் பூ.

38105580.jpg

25426863.jpg

29774768.jpg

80 மருதம் பூ .

53278869.jpg

குறுந்தொகை 50, குன்றியனார், மருதம் திணை – தலைவி சொன்னது

ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்

செவ்வி மருதின்செம்மலொடு தாஅய்த்

துறை அணிந்தன்று அவர் ஊரே இறை இறந்து

இலங்கு வளை ஞெகிழச் சாஅய்ப்

புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே.

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-arjuna-tree/

59689243.jpg

நற்றிணை 350 மருதம் – பரணர், தலைவி சொன்னது

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ

பழனப் பல் புள் இரிய கழனி

வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்

தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என்

தொல் கவின் தொலையினும் தொலைக சார

விடேஎன் விடுக்குவென்ஆயின் கடைஇக்

கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை

சாடிய சாந்தினை வாடிய கோதையை

ஆசு இல் கலம் தழீஇயற்று

வாரல் வாழிய கவைஇ நின்றோளே.

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-arjuna-tree/

19663466.png

பதிற்றுப்பத்து 27, *தொடர்ந்த குவளை *, பாலைக் கெளதமனார்,

பாடப்பட்டோன்: பல்யானைச் செல்கெழு குட்டுவன்

சிதைந்தது மன்ற நீ சிவந்தனை நோக்கலின்

*தொடர்ந்த குவளைத்* தூநெறி அடைச்சி

அலர்ந்த ஆம்பல் அகமடி வையர்

சுரியல்அம் சென்னிப் பூஞ்செய் கண்ணி

அரியல் ஆர்கையர் இனிது கூடியவர்

துறைநணி மருதம் ஏறித் தெறுமார்

எல்வளை மகளிர் தெள்விளி இசைப்பின்

பழனக் காவில் பசுமயில் ஆலும்

பொய்கை வாயில் புனல்பொரு புதவின்

நெய்தல் மரபின் நிரைகள் செறுவின்

வல்வாய் உருளி கதும்என மண்ட

அள்ளல் பட்டுத் துள்ளூபு துரப்ப

நல்எருதும் முயலும் அளறுபோகு விழுமத்துச்

சாகாட் டாளர் கம்பலை அல்லது

பூசல் அறியா நன்னாட்டு

யாணர் அறாஅக் காமரு கவினே.

http://treesinsangamtamil.wordpress.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-arjuna-tree/

99625263.jpg

37309658.jpg

Link to comment
Share on other sites

அண்ணா , இதில அனேகமாக எல்லா பூவையும் நாங்கள் பார்த்திருக்கிறோம் . ஆனால் சரியான தமிழ் பெயர் தான் தெரியாது . இந்த விடயங்களை முதலாம் வகுப்பில்லிருந்து ஜந்தாம் வகுப்பு வரையிலான பிள்ளைகளின் பாட திட்டத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டும் . அப்போதுதான் அந்த பெயர்கள் புழக்கத்தில் இருக்கும். வேறு மொழி கலப்பையும் ஓரளவு குறைக்கலாம் .

தாளம் பூ படத்தை கட்டாயம் பதியவும் . தாளம் பூ என்று தாளை பூ வையா சொல்றவங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் கோமகன்... நல்லா சமையலுக்கு பயன் படும் கோஸ்பூ .. முருங்கைப்பூ.. போன்ற பூக்களை இணைத்து போடுவீர்களா..?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.