Jump to content

உராய்வு


Recommended Posts

நூல் வெளியீடு

அரங்கம் ஒன்று நிகழ்வு மூன்று

நட்புள்ள யாழ் களஉறவுகளுக்கு,

இளைஞனின் அன்பான அழைப்பு இது. வரும் ஓகஸ்ட் மாதம் 27ம் திகதி சனிக்கிழமை அன்று இலண்டன் மாநகரில் எனது முதலாவது கவிதைத் தொகுப்பான "உராய்வு" வெளியிடப்பட இருக்கிறது. யாழ் களஉறவுகள் அனைவரையும் அந்நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு அழைக்கிறேன். :D

நூல் வெளியீடு முதன்மை நிகழ்வாக இருந்தபோதிலும், ஆவணக்கண்காட்சியும், குறும்படக் காட்சியும் நடைபெற உள்ளது. ஆவணக்கண்காட்சியில் உலகநாடுகளின் முத்திரைகள், நாணயங்கள், பணத்தாள்கள் என பலதும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. அதேபோல் குறும்பட நிகழ்வில் புதியதாக வெளியான ஒரு குறும்படமும் காண்பிக்கப்படவுள்ளது.

"உராய்வு" கவிதைத் தொகுப்பிற்கென விசேடமாக அமைக்கப்பட்டுள்ள "உராய்வு இணையத்தளத்தில்" மேலதிக விபரங்களையும், நிகழ்வுகள் (+நிகழ்ச்சி நிரல்கள்) பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். உராய்வு பற்றிய அனைத்து ஆவணங்களையும் அங்கு பெறக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. (இத்தளம் இன்னும் முழுமைபெறவில்லை என்பதை அறியத்தருகிறேன்).

notice_uraayvu1_213.gif

* மாற்றம் செய்யப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • Replies 318
  • Created
  • Last Reply

களத்தின் நீண்ட கால நண்பர் இளைஞன் (சஞ்சீவ்காந்த்) அவர்களின் உராய்வு ( கவிதைத் தொகுப்பு ) நூல் வெளியீட்டு விழா சிறப்புற சக கள உறவாக எமது வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

உங்கள் அ௯ழைப்புக்கு நன்றி இளைஞன்

மேற்கு லண்டன் பகுதியில் இருப்பவர்களுக்கு ஈலிங் கனக துர்க்கை அம்மன் கோவில் அருகில் உள்ளது. எனவே நாம் எமது நண்பர்களுடன் வந்து நூல் வெளியீட்டை சிறப்பிப்போம்.

நேரில் வந்து உங்களுக்கு வாழ்த்தை தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கப் போவதையிட்டு மிக்க மன மகிழ்ச்சி அடைகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளைஞனின் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா சிறப்புற நடை பெற வேண்டுமென களஉறவுகள் எல்லோரும் வாழ்த்துவோம்--------------------------------------------------------------------------------------ஸ்ராலின்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் இளைஞன். உராய்வு கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற்ற வாழ்த்துக்கள். :P

Link to comment
Share on other sites

குருவி..தமிழினி..வருவீங்களா?

எனக்கு சனிக்கிழமையும் வேலைதான் என்றபடியால்

வருவது கஸ்டம். இருந்தாலும் கூடியவரை வர முயற்சி

செய்வேன்.

Link to comment
Share on other sites

அனைவருக்கும் எனது மனமகிழ்ந்த நன்றிகள். இங்கு எழுதுவது மட்டும் போதாது, நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். அப்பதான் உங்கள் யாழ் களஉறவான எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நிச்சயமாக வருவீர்கள். :D வசி சனிக்கிழமை வேலைக்கு விடுமுறை எடுங்கள் (இளைஞனுக்காக).

வசி

நித்திலா

ஸ்ராலின்

மைன்ட் hPடர்

வருவதாக சொல்லியுள்ளீர்கள். இது ஒரு யாழ் களஉறுப்பினர் சந்திப்பாகவும் அமையும் என நம்புகிறேன். எனவே குறிப்பாக இங்கிலாந்தில் இருப்பவர்கள் வர முயற்சி செய்யுங்கள். சரியா?

Link to comment
Share on other sites

குருவி..தமிழினி..வருவீங்களா?

இதென்ன கேள்வி? அவையும் கட்டாயம் வருவினம்! சரிதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்ணங்களுக்கு

எழுத்துரு கொடுத்து

எழுதிய கவிகள் தனை

ஏட்டில பதித்து...

எமையேல்லாம் அழைத்து

புதிய தோர் உலகம் செய்ய

புறப்படும் இளைஞனே! -உன்

புறப்பாடுகளின் பின்னே -எம்

பலமிருக்கும் என்நாளும் -உன்

முகமறியா...

முகவரியறியா...-உன்

முன்னுதாரணம் கொண்டு

சிறக்க வேண்டும்-என்

சமூகம்........

எட்டா தூரத்தில் நானிப்பதால்

பட்டென்று உம் நிகழ்வுக்கு

வரமுடியவில்லையேன்றோரு

மன வருதம் இருந்தாலும்...

என் மனம் உங்கள் அரங்குகளை காணுகிறது....

உள்ளத்தில் உவகையுடன் வாழ்த்துகிறேன்..உராய்வுகள் தஎங்கள் சமூகத்தில் உராய்வுகளை ஏற்ப்படுத்தட்டும்

லண்டன் வாழ் கள உறவுகள் உங்கள் நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்ற நம்புகிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் எனது மனமகிழ்ந்த நன்றிகள். இங்கு எழுதுவது மட்டும் போதாது, நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். அப்பதான் உங்கள் யாழ் களஉறவான எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நிச்சயமாக வருவீர்கள். :D வசி சனிக்கிழமை வேலைக்கு விடுமுறை எடுங்கள் (இளைஞனுக்காக).

வசி

நித்திலா

ஸ்ராலின்

மைன்ட் hPடர்

வருவதாக சொல்லியுள்ளீர்கள். இது ஒரு யாழ் களஉறுப்பினர் சந்திப்பாகவும் அமையும் என நம்புகிறேன். எனவே குறிப்பாக இங்கிலாந்தில் இருப்பவர்கள் வர முயற்சி செய்யுங்கள். சரியா?

நேரம் கிடைக்கும் என்றே நம்புகின்றேன். கட்டாயம் வர முயற்சிக்கின்றேன்.

சிற்றுண்டிகளும் வழங்கப்படுமா (இலவசமாக)? :wink:

Link to comment
Share on other sites

உராய்வு கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா சிறப்புடன் நடைபெற்ற வாழ்த்துக்கள் இளைஞன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா தமாசுக்கு எழதுறன்..யாரும் சீரியசாக எடுக்க வேண்டாம்.......கிருபன் பேரில் எழுதும் இளைஞன் என்று யாழ் களததில் யாரோ எழுதிய ஞாபகம்.......இப்ப இளைஞன் விழாவுக்கு கிருபன் வாறன் என்றார்...விழாவில் பார்க்கக்கை திரைப்படங்களிலை வர்ற டபிள் றோல் மாதிரி இருக்குமா............. :D

Link to comment
Share on other sites

இதென்ன கேள்வி? அவையும் கட்டாயம் வருவினம்! சரிதானே?

குருவிகள் தற்போது லண்டனில் வதியவில்லை...எனவே விழாவுக்கு நேரடியாக சமூகம் தரமுடிமோ தெரியவில்லை... இருந்தாலும் உங்களுக்கான எங்கள் வாழ்த்துக்கள் என்றும் எங்கும் இருக்கும்...! :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞன் இளைஞனாக வந்தால் நான் கிழவன் வேஷத்தில் வருகின்றேன் (இந்தியன் ஸ்ரைலில்) :wink:

Link to comment
Share on other sites

இளைஞனுக்கு எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இளைஞனுக்கு வாழ்த்துக்கள்.. யேர்மனீல வைச்சிருந்தால் வந்திருக்கலாம்.. :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இளைஞன். வெளியீடு சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்.

அழைப்புக் கிடைத்தது ஆனால் லண்டன் வர முடியாதுள்ளது

ஜேர்மனி அறிமுக விழாவிற்கு நிச்சயம் வருவேன்.

Link to comment
Share on other sites

இளைஞனுக்கு வாழ்த்துக்கள்.. யேர்மனீல வைச்சிருந்தால் வந்திருக்கலாம்.. :D

ஜேர்மனியில் அறிமுகவிழா இருக்கு. அதுக்கு சாட்டுச் சொல்லாமல் வந்திடுங்கோ சோழி. :D

Link to comment
Share on other sites

எட்டா தூரத்தில் நானிப்பதால்

பட்டென்று உம் நிகழ்வுக்கு

வரமுடியவில்லையேன்றோரு

மன வருதம் இருந்தாலும்...

என் மனம் உங்கள் அரங்குகளை காணுகிறது....

உள்ளத்தில் உவகையுடன் வாழ்த்துகிறேன்..

இதே நிலமையிலே தான் நானும் அண்ணா

உங்கள் முயற்சி வெற்றியளிக்க எனது அன்பான வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இன்றய தின உங்களின் விழா சிறப்பாய் நடைபெற வாழ்த்துக்கள்.. இளைஞன்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.