Jump to content

ஜெனீவாக் கணக்குத் தீர்க்கும் சிறிலங்கா! கடும் சீற்றத்தில் இந்தியா


Recommended Posts

lk-india2.jpg

http://naathamnews.com/?p=4820

(செய்தி ஆய்வு)

2009ம் ஆண்டு மே17ல், தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழவிடுதலைப் போராட்டம் இனி சனநாயக வழிமுறைப் பொறிமுறையூடாக முன்னெடுக்கப்படுமென தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆயுதபயிற்சி பெற்ற விடுதலைப் புலிகள், மீண்டும் சிறிலங்காவில் களமிறங்கியுள்ளனர் என சிங்கள தேசத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள செய்தி, இந்திய-சிறிலங்கா முறுகல் நிலையை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் நாட்டின் மூன்று முகாம்களில் பயிற்ச்சியளிக்கப்பட்ட 150 வரையிலான போராளிகளை, இந்தியா சிறிலங்காவில் களமிறக்கியுள்ளதாக, சிங்கள தரப்பினால் தீவீரமாக பரப்பபட்ட செய்தியானது, தென்னிலங்கை ஊடகங்களையும் தாண்டி, சர்வதேச ஊடகங்களிலும் முக்கிய செய்தியாக வெளிவந்திருந்தது.

ஆயுத வழிமுறையூடான ஈழவிடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தினை நினைவூட்டும் வகையில், மீண்டும் இந்தியாவில் போராளிகள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக சிங்கள தரப்பினால் தீவிரப்படுத்தப்பட்ட இந்த பரப்புரைக்கு வலவூட்ட, தென்தமிழீழமெங்கும் சிறிலங்கா இராணுவத்தின் தேடுதல் வேட்டையினைவும், சிறிலங்கா அரச தரப்பு மேற்கொண்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றபட்டுள்ள தீர்மானம், சர்வதேச சட்டவிதிகளுக்கு புறம்பான சிறிலங்காவின் யுத்தமீறல்கள், சிங்கள தேசத்தினைச் சூழ்ந்துள்ள நிலையில், அதனை திசைதிருப்பும் நோக்கில், மீண்டும் சிறிலங்காவில் புலிகள் எனும் பரப்புரையினை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இந்தியாவுடனான ஜெனீவாக் கணக்கினை தீர்த்துக் கொள்ளவும், சிறிலங்காவின் இந்தப் பரப்புரையின பின்னாள் உள்ள அரசியல் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

போர் ஓய்வுக்கு பின்னர், இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில், தமிழீப் போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சிகளை இந்தியா வழங்குவதோடு, போராளிகளை சிறிலங்காவில் களமிறக்கியுள்ளதென பொருட்பட, சிங்கள தேசத்தின் சிங்கள-ஆங்கில ஊடகங்கள் பரப்புரையினை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை இலங்கைத்தீவில் இனநல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென்ற சர்வதேசத்தின் விருப்புக்கு மாறாக , இனநல்லிணக்துக்கு பங்கமாக இந்தியா மீண்டும் ஆயுதப் போராட்டத்தினை இலங்கைதீவில் ஊக்குவிக்கின்றதென்ற பரப்புரையினையும் இச்செய்தியின் ஊடாக நிறுவுவதற்கு சிறிலங்கா அரசு முனைவாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

சிறிலங்கா அரசாங்கம், குறித்த இந்தச் செய்திகளுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என மறுத்திருந்த போதும், இந்திய மத்திய அரசு இதனை முக்கிய விடயமாக கையில் எடுத்துள்ளது.

ஏற்கனவே சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதரகம் இச்செய்தியினை மறுத்திருந்ததோடு, தமிழக காவல்துறை ஆணையாளரும் மறுத்திருந்தார்.

தற்போது இந்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரமும், இச்செய்தியினை மறுத்திருப்பது , இவ்விவகாரத்தின் சூட்டினை உணரக்கூடியதாக உள்ளதென கருதமுடிகின்றது.

இந்தியாவில், தமிழ்நாடு உள்ளிட்ட எந்த இடத்திலும் ,விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம்கள் இல்லை எனவும் சிறிலங்க நாளிதழில் வெளியான செய்தி, முற்றிலும் அடிப்படையற்றது என பா.சிதம்பரம் நேற்று டெல்லியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் இந்த நடவடிக்கை குறித்து வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் இதுபற்றி இந்தியா விளக்கம் கோரும் என இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- சமராடி -

Link to comment
Share on other sites

சிங்களவன் லேசுப்பட்டவன் இல்லை..! இந்தியாவை ஒருவழிபண்ணாமல் விடமாட்டான்..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.