Jump to content

தமிழீழ போராட்டம் முடிந்து விட்டதா அல்லது முடக்கப்பட்டு விட்டதா?


Recommended Posts

தமிழீழம் என்ற விடுதலை உணர்வு இன்னும் மடிந்து போகவில்லை. இன்னும் உயிரோடு தான் இருக்கிறது. சர்வதேச சமூகம் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் மேற்கு நாடுகள் அண்மையில் ஒரு முடக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளன. தமிழீழக் கோரிக்கையை முடிக்க அது போதுமானதல்ல.

இலங்கையின் ஜனநாயகத் தோல்வியை ஈடு செய்வதற்காகச் சர்வதேச சமூகமும் இந்தியாவும் இலங்கையின் அரசியல் தலைமை மாற்றத்தையும் (Regime Change) தமிழீழத்திற்குப் பதிலாகப் புனர்வாழ்வையும் மேம்பாட்டுத் திட்டங்களையும் (Rehabilitation and Development) வழங்கினால் போதுமென்று உத்தேசிக்கின்றன.

இதற்காக முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும் விடுதலைப் புலிகளைச் சமாதானப் பொறிக்குள் வீழ்த்த உதவியவருமான றணில் விக்கிரமசிங்க என்ற அமெரிக்கச் சார்பு அரசியல்வாதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருடைய சென்ற வாரப் புது டில்லிப் பயணம் மேற்கூறிய பின்னணியைக் கொண்டது. அவர் ராஜபக்ச அரசு மீது பலவித குற்றச்சாட்டுகளை அப்போது சுமத்தினார்.

புலம்பெயர் தமிழர்கள் ஒன்றை மாத்திரம் மனங் கொள்ள வேண்டும். இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை, அது ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் இருபத்தி நான்கு நாடுகளால் அங்கீகரிக்கப் பட்டாலும் ஒரு போதும் ஈழத் தமிழர்களின் விடுதலைக் கோரிக்கைக்கு மாற்றீடாக அமையப் போவதில்லை.

ஈழத் தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகள் இரண்டு இலங்கையின் அரசியல் -.இராணுவத் தலைமையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முன்னோடி நடவடிக்கையாகச் சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இரண்டாவதாக தமிழீழ மக்கள் மத்தியில் சுய நிர்ணயக் கோரிக்கை அடிப்படையிலான ஒரு பகிரங்க கருத்துக் கணிப்பை (Referendum) ஜநா நடத்த வேண்டும். இதில் இலங்கை அரச படைகளின் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும். அதற்கான ஒழுங்குகளை ஜநா அதிகாரபூர்வமாகச் செய்ய வேண்டும்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தளவில் ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் நடவடிக்கைகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளன. அது 2009 மே 27ம் நாள் இலங்கையின் போர் வெற்றியைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதே நாள் சுவிற்சர்லாந்து பிறிதோர் பிரேரணையைக் கொண்டு வந்தது.

இலங்கை அரசு போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அந்தப் பிரேரணை கோரியது. சீனா, ரூஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் முன்னின்று அதைத் தோல்வி அடையச் செய்தன. அதன் தொடர்ச்சியாக 2012 மார்ச்சு 23ம் நாள் இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தீர்மானத்தை அமெரிக்கா, ஜக்கிய இராச்சியம், நோர்வே, இந்தியா ஆகிய நாடுகள் நிறைவேற்றின.

இந்த மூன்று வருட இடை வெளிக்குள் அறிக்கைகள், ஆவணப் படங்கள், தனியார் நீதி மன்ற வழக்குகள் என்பன பதிவாகியுள்ளன. இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு இழைத்த இன அழிப்பு கொடூரங்கள் பற்றிய செய்திகள் உலகின் கவனத்தில் இருந்து மறைய மறுக்கின்றன.

முதலாவது அறிக்கை முள்ளிவாய்க்கால் முடிந்த ஆறாவது மாதம் வெளிவந்தது. அமெரிக்க செனேற் சபை வெளிவிவகார குழுத் தலைவர் ஜோன் கெரி பெயரில் (John Kerry Senate Foreign Relations Committee Report) 2009 டிசம்பர் 07ம் நாள் வெளிவந்தது.

“ இலங்கையை இழக்க அமெரிக்காவுக்குக் கட்டுப்படியாகாது” என்ற செய்தி அதில் கூறப்படுகிறது. ஈழத் தமிழர்களுக்கு நல்லிணக்கத்தையும் மேம்பாட்டையும் (Reconciliation and Development) வழங்க வேண்டும் என்றும்; இந்த அறிக்கை கூறுகிறது.

2009 மே 27ல் மனித உரிமைக் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்திற்குச் சவாலாக அயர்லாந்து டப்ளின் தீhப்பாயம் (Dublin Tribunal) வழங்கிய நான்கு அம்சத் தீர்ப்பு அமைகிறது. அவையாவன.

1) இலங்கை அரசும் அதன் இராணுவமும் போர்க் குற்றம் புரிந்துள்ளன.

2)இலங்கை அரசும் அதன் இராணுவமும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்துள்ளன.

3) இன அழிப்புக் குற்றச்சாட்டு விரிவாக விசாரிக்கப்பட வேண்டும.;

4) அமைதி நடவடிக்கை தோல்வி அடைவதற்குச் சர்வதேச சமூகம் குறிப்பாக அமெரிக்கா, ஜக்கிய இராச்சியம் என்பன பொறுப்பேற்க வேண்டும்.

இந்தத் தீர்ப்பு இலங்கைப் போர் பற்றிய கரிசனை காட்டாத ஜநா பொதுச் செயலாளரைச் செயற்படத் தூண்டியது. அவர் நியமித்த நிபுணர் குழு தனது அறிக்கையை 2011 மார்ச்சு 31ம் நாள் வெளியிட்டது. ஜநாவைச் செயற்படத் தூண்டியதற்கு ஜக்கிய இராச்சிய சீ4 தொலைக்காட்சி வெளிட்ட வீடியோ ஆவணப் படங்களும் துணைக் காரணமாக அமைந்தன.

ஜநா அறிக்கை போர் குற்றங்கள் (War Crimes) என்ற குறுகிய பரப்புக்குள் முடக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இரு தேசங்கள் இருப்பதையும் ஒரு தேசம் விடுதலைப் போர் நடத்துவதையும் அது கருத்தில் எடுக்க மறுத்துவிட்டது. அது மாத்திரமல்ல போர் குற்றங்களை போரில் ஈடுபட்ட இரு பகுதி மீதும் சுமத்துவதில் அது குறியாக இருந்தது.

நோர்வே நாடும் தனது அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடுவராகத் தோன்றிய நோர்வே அமெரிக்காவின் பினாமியாகச் செயற்பட்டு ஈழத்தமிழர்களின் இன அழிப்பிற்குத் துணை போயுள்ளது.

இறுதியாக இலங்கை அரசும் தனது பங்கிற்கு நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. குற்றவாளி நாடு தன்னை நிரபராதியாகக் காட்டுவதற்கு வெளியிட்ட அறிக்கைக்கு அமெரிக்கா தலைமையிலான நாடுகள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழீழத் தேசியத்தைத் திருப்திப்படுத்த அதில் கூறப்பட்டவை போதுமானதாம்.

அமெரிக்கா தலைமையிலான நாடுகள் நிறைவேற்றிய மனித உருமைக் கவுன்சில் தீர்மானத்தால்; உலகத் தமிழர்கள் மீண்டும் ஏமாந்து விடக் கூடாது. சர்வதேச விசாரணைகளை இல்லாமற் செய்வதும் இலங்கை அரசை காப்பாற்றுவதும் அமெரிக்காவின் பிரதான நோக்கமாகும்.

அமெரிக்கத் தீர்மானம் ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைக்கிறது. இன அழிப்பிற்கு அனுசரணை வழங்கிய அமெரிக்கா இந்தத் தீர்மானத்தின் வாயிலாகத் தமிழீழத்தின் கட்டமைப்பு அழிப்பை மேற்கொள்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கத் தீர்மானத்திற்கு வழங்கும் ஆதரவு இனத் துரோகமாகக் கணிப்பிடப்பட வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத் தமிழரின் சுய நிர்ணயக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கை இத்தீர்மானம் கொண்டிருக்கிறது. டப்ளின் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அடுத்து 2010 மே 17ம் நாள் சர்வதேச நெருக்கடிக் குழு (International Crisis Group) என்ற என்ஜிஓ (NGO) இலங்கை போர்க் குற்றங்கள் (War Crimes in Sri Lanka) என்ற விரிவான அறிக்கையை வெளியிட்டது.

ஜநா அறிக்கையில் அவதானிக்கப்பட்ட அதேயளவு அடிப்படைக் குறைபாடுகள் இதிலும் காணப்படுகின்றன. போரின் இரு பகுதியும் போர்க் குற்றம் புரிந்ததாக குற்றஞ் சுமத்தும் இந்த அறிக்கை ஈழப் போரின் வரலாற்றுப் பின்னணியையும் மக்களின் சுய நிர்ணயக் கோரிக்கையின் நியாயப்பாடுகளையும் விளக்கிக் கூறாமல் விடுத்துள்ளது.

மிக அண்மையில் தமிழ் நாட்டின் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தியையும் பிற உறுப்பினர்களையும் மேற்கூறிய நெருக்கடிக் குழுவின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். இது பற்றி 2012 மார்ச் 18ம் நாள் திருவல்லிக்கேணி, சென்னை கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் திருமுருகன் காந்தி தகவல் வெளியிட்டார்.

“போர்க் குற்றங்கள் பற்றிப் பேச வேண்டாம் என்று கேட்டார்கள். ஈழத் தமிழர்களின் தனி நாட்டுக் கோரிக்கை பற்றியும் எம்மைப் பேச வேண்டாம் என்றும் கேட்டார்கள். இந்திய அரசோடு தமிழர்களுடைய புனர்வாழ்வு பற்றி மாத்திரம் பேசும்படி அவர்கள் எம்மை வேண்டினார்கள்” என்றார் காந்தி.

தமிழ் நாட்டின் பிற அரசியல் கட்சிப் பிரதிநிதிகளோடும் இதே மாதிரியான வேண்டுகையை நெருக்கடிக் குழு உறுப்பினர்கள் விடுத்துள்ளனர். தனி நாட்டுக் கோரிக்கையை போர்க் குற்றங்கள். மனித உரிமை மீறல்கள் என்ற குறுகிய பரப்புக்குள் முடக்குவது மேற்கு நாடுகளின் நிதி உதவியில் இயங்கும் இந்த நிறுவனத்தின் நோக்கமாகும்.

சர்வதேச சமூகம் ஏன் தமிழீழத்தை எதிர்க்கிறது என்ற கேள்வி எழுகிறது. இலங்கையைப் பிளவுபடாத தரைப்பரப்பாக வைத்துக் கொண்டு அதைத் தமக்கிடையில் பங்குபோட இந்த நாடுகள் திட்டமிடுகின்றன. இதற்காக அவர்கள் ஈழத் தமிழர்களின் தேசிய எழுச்சியைத் துடைத்தழிக்க விரும்புகின்றனர்.

இலங்கைத் தீவு ஏற்கனவே நான்கு வலயங்களாகப் பிரிந்துள்ளன. மேற்கில் சிங்கள மேலாதிக்கம், வடக்கில் இந்தியாவின் ஊடுருவல், தெற்கில் சீனக் கட்டுப்பாடு, திருகோணமலை உட்படக் கிழக்கில் அமெரிக்க ஆதிக்கம் இதற்கு ஈழத் தமிழர்களின் சுய நிர்ணயக் கோரிக்கை முட்டுக்கட்டையாக அமைகிறது. அது அமைதியாக நீக்கப்பட வேண்டும் என்பது அவர்கள் அபிலாசை.

அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேவை முடிந்து விட்டது. பாக்கிஸ்தானில் சியா உல் ஹக், ஈராக்கில் சதாம் குசேயின், எகிப்தில் முபராக் ஆகியோரைப் போல் இவரையும் தூக்கி எறிய அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இந்தியா இதற்கு ஒப்புதல் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் எற்பட்டுள்ளது.

ஆட்சித் தலைமை மாற்றம் ஈழத் தமிழர்களை எவ்விதத்திலும் திருப்திப் படுத்தப்போவதில்லை. சர்வதேச சமூகத்தின் பின்னணி ஆதரவோடு சிங்கள மேலாதிக்கம் கூடுதல் பலம் பெற்றுவிடும். ஈழத் தமிழர்கள் புனர்வாழ்வு மற்றும் மேம்பாடு என்ற எல்லைக்குள் முடக்கப்படுவார்கள்.

குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதால் மாத்திரம் ஈழத் தமிழர்களுக்கு நீதி நியாயம் கிடைக்கப் போவதில்லை. உண்மையான நீதியும் நியாயமும் ஈழத் தமிழர்களின் தனி நாட்டுக் கோரிக்ககையை அங்கீகரிப்பதில் மாத்திரம் தங்கியுள்ளன.

http://thaaitamil.com/?p=15724

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் பொசுக்கப்படுகிறது. :(

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழர்கள் ஒன்றை மாத்திரம் மனங் கொள்ள வேண்டும். இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை, அது ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் இருபத்தி நான்கு நாடுகளால் அங்கீகரிக்கப் பட்டாலும் ஒரு போதும் ஈழத் தமிழர்களின் விடுதலைக் கோரிக்கைக்கு மாற்றீடாக அமையப் போவதில்லை.

ஈழத்தமிழரின் விடுதலைக்கு முதல் படி என வைத்துக்கொள்ளலாம்.

இலங்கையின் அரசியல் -.இராணுவத் தலைமையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முன்னோடி நடவடிக்கையாகச் சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதற்கான பிரேரணையில் இலங்கை கையொப்பமிடவில்லை. அதனால் சாத்தியப்படவில்லை. இருந்தாலும் எம் கோரிக்கைகளை நாமும் வைத்த படியே இருப்பம்.

தமிழீழ மக்கள் மத்தியில் சுய நிர்ணயக் கோரிக்கை அடிப்படையிலான ஒரு பகிரங்க கருத்துக் கணிப்பை (Referendum) ஜநா நடத்த வேண்டும். இதில் இலங்கை அரச படைகளின் தலையீடு தவிர்க்கப்பட வேண்டும். அதற்கான ஒழுங்குகளை ஜநா அதிகாரபூர்வமாகச் செய்ய வேண்டும்.

இதற்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேவை முடிந்து விட்டது. பாக்கிஸ்தானில் சியா உல் ஹக், ஈராக்கில் சதாம் குசேயின், எகிப்தில் முபராக் ஆகியோரைப் போல் இவரையும் தூக்கி எறிய அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இந்தியா இதற்கு ஒப்புதல் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் எற்பட்டுள்ளது.

என்ன தான் அமெரிக்காவும், இந்தியாவும் நினைத்தாலும் எமது நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழும் சாத்தியம் இதுவரைக்கும் இல்லை. ரணில் இப்பொழுது மிக பலவீனமான நிலையில் இருக்கிறார். பொன்சேகாவோ சிறைக்குள். மகிந்தவுக்கு பணத்தையும் அதிகாரத்தையும் ஆயுதங்களையும் பயன்படுத்தி மக்களை தனக்காக வாக்களிக்க செய்து விடும் திறமை உண்டு.

குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதால் மாத்திரம் ஈழத் தமிழர்களுக்கு நீதி நியாயம் கிடைக்கப் போவதில்லை. உண்மையான நீதியும் நியாயமும் ஈழத் தமிழர்களின் தனி நாட்டுக் கோரிக்ககையை அங்கீகரிப்பதில் மாத்திரம் தங்கியுள்ளன.

இதற்காக இன்னும் நிறைய பாடுபட வேண்டும்.

Link to comment
Share on other sites

தமிழீழ போராட்டம் முடிந்து விட்டதா அல்லது முடக்கப்பட்டு விட்டதா?

தமிழீழ போராட்டம் முடிந்துவிடவுமில்லை,முடக்கப்படவுமில்லை.வேறு வடிவத்திலே உருவமெடுத்து முன்னேறிக்கொண்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

தமிழீழ போராட்டம் என்பது ஆயுதப்போராட்டம் அல்ல. அது விடுதலைப்போராட்டம். மக்கள் விடுதலை அடையும்வரை பலவேறு வடிவங்களில் தொடரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.