Jump to content

'காத்திருப்பேன்.. ' 17 வயது மாணவனைக் கடத்திக் கைதான 37 வயது ஆசிரியை பிடிவாதம்!


Recommended Posts

'காத்திருப்பேன்.. ' 17 வயது மாணவனைக் கடத்திக் கைதான 37 வயது ஆசிரியை பிடிவாதம்!

-kumuthu-teacher.jpg"என்னால் மாணவனைப் பிரிந்திருக்க முடியாது. அதேபோல அவனாலும் என்னை விட்டுப் பிரிந்து வாழ முடியாது. அவனுக்கு 21 வயது வரும் வரை காத்திருப்பேன். அதற்குப் பிறகு சேர்ந்து வாழ்வேன். அதுவரை அவனை எனது மகன் போல பார்த்துக் கொள்வேன்" என முறை தவறிய உறவால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னையைச் சேர்ந்த 37 வயது ஆசிரியை குமுது கூறியுள்ளார்.

சமீபத்தில் சென்னையை அதிர வைத்த சம்பவம் 17 வயது மாணவனுடன், 37 வயது ஆசிரியை வீட்டை விட்டு ஓடிப் போன விவகாரம். அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை குமுதுவையும் மாணவனையும் கடும் சிரமத்திற்குப் பின்னர் போலீஸார் டெல்லியில் வைத்து கைது செய்தனர்.

இருவரும் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். பின்னர் குமுதுவை பொலிஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவனை சிறார் சீர்திருத்த காப்பகத்தில் அடைத்தனர்.

மைனர் பையனை கூட்டிச் சென்றதால் ஆசிரியை குமுது மீது கடத்தல் வழக்கைப் போலீஸார் பதிவு செய்துள்ளனர். மாணவனுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் மாணவனைப் பிரிந்து பெரும் வேதனையில் இருக்கிறாராம் ஆசிரியை குமுது. இதுகுறித்து அவர் சிறை அதிகாரிகளிடம் கூறுகையில்இ நாங்கள் பழகுவதில் இத்தனை சட்ட சிக்கல் இருக்கும் என தெரியவில்லை. இருந்தாலும் மாணவனுக்கு 21 வயது ஆகும் வரை நான் காத்திருப்பேன்.

வாழ்ந்தால் அவனோடு தான் வாழ்வேன். மாணவனை என் மகன் போல் பார்த்து கொள்வேன். என்னை மாணவன் நெடுநாள் பிரிந்து இருக்க மாட்டான் என்கிறாராம் ஆசிரியை குமுது.

குமுது வட மாநிலத்தைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள பள்ளியில் இந்தி ஆசிரியையாக இருந்து வந்தார். அவர் வேலை பார்த்த பள்ளியில் பிளஸ் ஒன் படித்தவன்தான் அந்த 17 வயது மாணவன்.

மாணவனுடன் தனக்கு ஏற்பட்ட முறை தவறிய உறவு குறித்து முன்னதாக ஆசிரியை குமுது அளித்த வாக்குமூலத்தில்...

"நான் வேலை பார்த்த பள்ளியில் 7 மற்றும் 8-வது வகுப்புகளுக்கு இந்தி பாடம் சொல்லிக்கொடுப்பேன். எனக்கு பெற்றொர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். எனக்கும் எனது கணவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போட்டுக்கொள்வோம்.

கடந்த செப்டம்பர் மாதம் எனது கணவர் சிறிய மனத்தாங்கலில் என்னைவிட்டு பிரிந்து அவரது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். நான் தனிமையில் மிகவும் அவதிப்பட்டேன். அப்போதுதான் மாணவனுடன் அறிமுகம் ஏற்பட்டது. செப்டம்பர் மாதம் பள்ளியில் ஒரு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒரு நாடகம் நடத்தப்பட்டது. நாடகத்தில் மாணவனும் நடித்தான். நான்தான் நாடக ஒத்திகை சொல்லிக் கொடுத்தேன்.

அப்போது நாங்கள் இருவரும் ஏதேச்சையாக கட்டிப்பிடித்து விட்டோம். அந்த முதல் ஸ்பரிசம் என்னை மின்சாரம் தாக்கியதுபோல் தாக்கிவிட்டது. அதில் இருந்து நாங்கள் இருவரும் காதல் வயப்பட்டோம். இருந்தாலும் அவன்தான் முதலில் காதலை சொன்னான். எனது அழகை அவர் வர்ணிப்பான். அவன் வகுப்பில் முதல் மாணவர். நான் அதை பாராட்டுவதுபோல அவனை புகழ்ந்து பேசுவேன். இப்படியாக காதல் வளர்ந்தது.

16 வயது மாணவியாக உணர்வேன்

எனது கணவர் வீட்டில் இல்லாதது எங்களுக்குள் காதல் மேலும் வளர ஒரு தூண்டுதலாக இருந்தது. நான் அவனை சந்திக்கும்போதெல்லாம் என்னை ஒரு 16 வயது மாணவியைப்போல மனதுக்குள் நினைத்துக்கொள்வேன். அவன் பிளஸ்-1 வகுப்பு என்பதால் எங்களால் அடிக்கடி பார்த்துக்கொள்ள முடியாது. பள்ளி முடிந்து வீடு செல்லும்போது இருவரும் பார்த்து பேசிக்கொள்வோம். செப்டம்பர் மாத கடைசியில் ஒரு நாள் அவனை எனது வீட்டுக்கு வருமாறு அழைத்தேன். அந்த சந்திப்புதான் எங்களை காதலோடு நிறுத்தாமல் உடல் ரீதியாகவும் இணைய வைத்தது.

அதன்பிறகு இருவரும் அடிக்கடி எனது வீட்டில் சந்தித்து உல்லாசத்தை பகிர்ந்து கொண்டோம். செல்போனில் இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருப்போம். எங்கள் காதல் விவகாரம் அவனது தந்தைக்கு தெரிந்துவிட்டது. அவர் என் மீது போலீசில் புகார் கொடுத்துவிட்டார். பின்னர் சமாதானமாக பேசி முடித்து விட்டனர். அதன்பிறகு அவனை பள்ளிக்குவர அவனது தந்தை தடை போட்டு விட்டார். அவனை செல்போனில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் மிகவும் தவித்த நிலையில் இருந்தேன்.

இந்த நிலையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் 26, 27, 28 ஆகிய 3 நாட்களும் பள்ளி பிராக்டிக்கல் வகுப்பில் கலந்துகொள்ள வந்தான். அப்போது நாங்கள் மீண்டும் சந்தித்துக்கொண்டோம். மீண்டும் நாங்கள் காதல் வானில் சிறகடித்து பறந்தோம்.

எல்லாவற்றையும் மறந்தோம்...

இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் நாம் மீண்டும் சேர முடியாதுஇ இதில் நாம் சேர்ந்து வாழ நல்ல முடிவு எடுத்தாக வேண்டும் என்று அவன் கூறினான. நாங்கள் அப்போது வயது வித்தியாசத்தை பார்க்கவில்லை. போலீஸ் மற்றும் சட்டம் பற்றி சிந்திக்கவில்லை. மாணவர்-ஆசிரியை என்ற மதிப்புமிக்க உறவு பற்றியும் நாங்கள் மறந்துவிட்டோம். சென்னையை விட்டு, வெளியேறி உல்லாச வாழ்க்கையில் மிதக்க முடிவு செய்தோம்.

நான் ரூ.60 ஆயிரம் செலவுக்கு பணம் எடுத்துக்கொண்டேன். இருவரும் கடந்த 4-ந் தேதி அன்று புதுச்சேரிக்கு பஸ்சில் சென்றோம். நாங்கள் செய்த காரியம் எவ்வளவு பெரிய தவறான காரியம் என்பது பற்றி நினைக்கவில்லை. அதன்பிறகு கோவை, சேலம் ஆகிய ஊர்களுக்கும் சென்றோம். அங்கு லாட்ஜுகளில் தங்கி சந்தோஷமாக இருந்தோம். அதன்பின் நாக்பூர், டெல்லி வழியாக ஜம்மு சென்றோம். ஜம்முவில் வைஷ்ணவி கோவிலில் தங்கி இருந்தோம்.

இதற்குள் செலவுக்கு நான் எடுத்துச்சென்ற பணம் தீர்ந்து போனது. சென்னையில் உள்ள எனது தங்கைக்கு போன் செய்து உதவி கேட்டேன். அவள் டெல்லியில் அவளது தோழி வீட்டுக்கு செல்லுமாறு கூறினாள். அதன்படி டெல்லி சென்றோம். அங்கு எனது தங்கையின் தோழி எங்களை ஏமாற்றி விமானத்தில் சென்னை அழைத்து வந்து விட்டார். இங்கு போலீசார் எங்களை பிடித்துவிட்டனர்.

எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை. எங்கள் காதலை வாழவிடுங்கள். இனி எனது கணவருடன் சேரமாட்டேன். வாழ்ந்தால் அவனோடு வாழ்வேன். அவன் கிடைக்காவிட்டால் நான் செத்து மடிவேன். அவனுக்கு 21 வயது முடியும்வரை நான் காத்திருப்பேன்" என்றார் குமுது.

இதேபோலத்தான் அந்த மாணவனும் கூறி வருவதாக தெரிகிறது. மாணவனுக்கு தற்போது கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனராம். இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நிஜத்தை உணர ஆரம்பித்துள்ளானாம் அந்த மாணவன்.

முன்னதாக நேற்று கோர்ட்டில் ஆசிரியை குமுதுவை ஆஜர்படுத்தினர் போலீஸார். அப்போது அவர் கதறி அழுதபடி இருந்தார். மயங்கியும் விழுந்தார். அவருக்கு சூடான டீ வாங்கிக் கொடுத்து போலீஸார் அமைதிப்படுத்தினர். அப்படியும் கூட அவர் அழுதபடிதான் இருந்தார். (மூலம்: தட்ஸ் தமிழ்)

Link to comment
Share on other sites

என்ன கொடுமைசார் இது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம், அந்த ஆசிரியை.

கணவனைப் பிரிந்து... என்ன மன உளச்சலில் இருக்கிறாரோ....

மாணவனின் படிப்புத்தான்... பாழாகப் போகுது.

ஆசிரியையின் வயதுக்கு, பொருத்தமாக ஒரு ஆளை கண்டுபிடித்து, மறுமணம் செய்து வைக்க... ஊர்ப்பெரிசுகள் முன்வர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே மேற்கு நாடு என்றால்.. சர்வ சாதாரணமாக இந்த விடயம்.. இரு மனிதருக்குள் அவர்களோடேயே முடிந்திருக்கும்..! இந்தியாவிலும்.. அதனை அண்டியுள்ள நாடுகளைச் சார்ந்தோரிடமும்.. அடுத்தவனின் வளவுக்குள் என்ன நடக்கிறது என்று ஆராயுறதே வேலையாப் போச்சு.

சட்டத்தின் படி அவன் 18வயசு ஆனதும்... இவர்கள் இருவரும் விரும்பின படி முடிவெடுக்க அனுமதிப்பதே அடிப்படை மனித உரிமை அனுமதிப்பதாகும்.

வயசு.. என்பது நாம் எமக்கு எம் ஆளுமைகளுக்கு தடை போட... போட்டுள்ள.. வெறும் இலக்கங்கள்..! அதைத் தாண்டி சாதிப்பதும்.. பழகுவதும் உலகில் பன்னெடும் காலமாக நடந்து கொண்டே தான் இருக்கின்றது என்ற நிலையில்.. மனிதன் தனக்குத் தானே வயது என்று வழங்கியுள்ள இலக்கங்கள்.. அர்த்தமற்றதாகி விடுகின்றன..!

மற்றும்படி.. இதில் அறிவுரை சொல்லும் அளவிற்கு.. விமர்சனம் எழுதவோ.. இதில் சம்பந்தப்பட்டவர்களை குறை சொல்லவோ.. யாருக்கும் தகுதி இருப்பதாகக் கொள்ள முடியாது. அது அடுத்தவனின் தனிப்பட்ட சுதந்திரத்தை பறிக்கும் செயல்.

உளவியல் ரீதியில் உடல் ரீதியில்.. இவர்கள் ஆரோக்கியமானவர்கள் என்றால்.. அவர்கள் அவர்களின் விருப்பப்படி முடிவெடுக்கவும்.. வாழ விடுவதுமே.. ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வாக அமைய முடியும்..! இவர்களால் சமூகத்திற்கு பாதிப்பு வராதவரை சமூகம் ஏன் இவர்களை விரட்ட வேண்டும். விமர்சிக்க வேண்டும்..???!

நடந்ததை வெளிப்படையாகப் பேசும் இந்த ஆசிரியை மதிக்கலாம். மறைச்சு வைச்சு.. ஆயிரம் கள்ளம் செய்திட்டு வெளில நல்ல பிள்ளைக்கு நடிப்பவர்களைக் காட்டிலும் இவர் எவ்வளவோ மேல்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

இதே மேற்கு நாடு என்றால்.. சர்வ சாதாரணமாக இந்த விடயம்.. இரு மனிதருக்குள் அவர்களோடேயே முடிந்திருக்கும்..! இந்தியாவிலும்.. அதனை அண்டியுள்ள நாடுகளைச் சார்ந்தோரிடமும்.. அடுத்தவனின் வளவுக்குள் என்ன நடக்கிறது என்று ஆராயுறதே வேலையாப் போச்சு.

நீங்கள் எங்கை ஆபிரிக்காவிலா இருக்கிறீங்கள்?

மேற்கு நாடுகளிலும் ஒரு ஆசிரியர் தான் பாடம் எடுக்கும்ம் மாணவனுடன் உறவு வைத்து இருப்பதை ஆதிரிப்பதும் இல்லை உடனநடியாக வேலையை விட்டு தூக்கிவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே முக்கியமான பிரச்சனை, அந்தப் பெண்ணுக்கும்,அந்தப் பையனுக்கும் உள்ள உறவல்ல!

ஒரு ஆசிரியைக்கும், மாணவனுக்கும் ஏற்பட்ட உறவு!

ஆங்கிலத்தில் 'Duty of Care' என்று கூறுவார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எங்கை ஆபிரிக்காவிலா இருக்கிறீங்கள்?

மேற்கு நாடுகளிலும் ஒரு ஆசிரியர் தான் பாடம் எடுக்கும்ம் மாணவனுடன் உறவு வைத்து இருப்பதை ஆதிரிப்பதும் இல்லை உடனநடியாக வேலையை விட்டு தூக்கிவிடுவார்கள்.

முதலில் நீங்கள் செய்திகளை கவனமாகப் படிக்க வேண்டும். மேற்கு நாடுகளில் 16 வயதுக்கு மேற்பட்ட எவரும் எவரோடும் உறவு வைத்துக் கொள்ளலாம். அதற்கு எல்லாம் கட்டுப்பாடு கிடையாது. கட்டாய உறவு கொள்ளுதலும் 16 வயதிற்கு குறைவான மாணவர்களோடு தவறான நடத்தை உள்ளவர்களுமே தண்டனைக்கு ஆளாகின்றனர்..!

இங்கு அந்த மாணவன் - ஆசிரியை சொந்த விருப்பில் சேர்ந்து வாழ்கின்றனர். அந்த வகையில் அந்த மாணவனின் வயது (குறித்த நாட்டின் சட்டத்திற்கு இணங்க) தவிர மற்றைய விடயங்களில்.. மற்றவர்கள் சட்டத்திற்குள் நின்று கருத்துச் சொல்ல முடியாது.! அது அவர்களின் சொந்த முடிவின் பாலானது..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

முதலில் நீங்கள் செய்திகளை கவனமாகப் படிக்க வேண்டும். மேற்கு நாடுகளில் 16 வயதுக்கு மேற்பட்ட எவரும் எவரோடும் உறவு வைத்துக் கொள்ளலாம். அதற்கு எல்லாம் கட்டுப்பாடு கிடையாது. கட்டாய உறவு கொள்ளுதலும் 16 வயதிற்கு குறைவான மாணவர்களோடு தவறான நடத்தை உள்ளவர்களுமே தண்டனைக்கு ஆளாகின்றனர்..!

இங்கு அந்த மாணவன் - ஆசிரியை சொந்த விருப்பில் சேர்ந்து வாழ்கின்றனர். அந்த வகையில் அந்த மாணவனின் வயது (குறித்த நாட்டின் சட்டத்திற்கு இணங்க) தவிர மற்றைய விடயங்களில்.. மற்றவர்கள் சட்டத்திற்குள் நின்று கருத்துச் சொல்ல முடியாது.! அது அவர்களின் சொந்த முடிவின் பாலானது..! :lol::icon_idea:

பல்கலைக்கழகங்களில் கூட விரிவுரையாளர் தமது மாணவன்/மாணவியுடன் உறவு வைக்கத் தடை உள்ளது!

ஆசிரியர்கள் தம் மாணவர்களுடன் உறவு வைக்க முடியாது. 16 வயதெல்லாம் சாதாரணமானவர்களுக்கு. ஆசிரியர்கள் தம் மாணவரல்லாத ஒரு 16 வயதுடைய நபருடன் உறவு வைப்பது தவறல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழகங்களில் கூட விரிவுரையாளர் தமது மாணவன்/மாணவியுடன் உறவு வைக்கத் தடை உள்ளது!

ஆசிரியர்கள் தம் மாணவர்களுடன் உறவு வைக்க முடியாது. 16 வயதெல்லாம் சாதாரணமானவர்களுக்கு. ஆசிரியர்கள் தம் மாணவரல்லாத ஒரு 16 வயதுடைய நபருடன் உறவு வைப்பது தவறல்ல.

பல்கலைக்கழகத்திலோ... பாடசாலையிலோ.. தொழில்நிறுவனத்திலோ.. உறவு கொள்ள எவருக்கும் அனுமதியில்லை.

ஆனால் அதற்கு வெளியில் எவரும் குறித்த வயதெல்லையை தாண்டியவர்களாகவும் சுயவிருப்போடும் வைத்துக் கொண்டால் அதை சட்டம் தடுக்காது..!

இங்கும் கூட.. அந்த ஆசிரியை - மாணவன் பள்ளிக்கூடத்துக்கு வெளியில் ஆணும் பெண்ணுமே தவிர.. ஆசிரியை - மாணவன் என்று சட்டம் சொல்லுமா..????! :icon_idea::rolleyes::unsure:

Link to comment
Share on other sites

நெடுக்கின் கருத்து சரிதான்..! கல்விக்கூடத்தின் வெளியே யாரும் என்னத்தையும் செய்யலாம்..! :rolleyes:

ஆனால் இந்த உரிமையை விட்டுக்குடுக்காமல் இருக்க நெடுக்கு படுற பாடு இருக்கே..!! :icon_idea::lol:

Link to comment
Share on other sites

பல்கலைக்கழகத்திலோ... பாடசாலையிலோ.. தொழில்நிறுவனத்திலோ.. உறவு கொள்ள எவருக்கும் அனுமதியில்லை.

ஆனால் அதற்கு வெளியில் எவரும் குறித்த வயதெல்லையை தாண்டியவர்களாகவும் சுயவிருப்போடும் வைத்துக் கொண்டால் அதை சட்டம் தடுக்காது..!

இங்கும் கூட.. அந்த ஆசிரியை - மாணவன் பள்ளிக்கூடத்துக்கு வெளியில் ஆணும் பெண்ணுமே தவிர.. ஆசிரியை - மாணவன் என்று சட்டம் சொல்லுமா..????! :icon_idea::rolleyes::unsure:

பள்ளிக்கூடத்துக்கு வெளியேயும், மாணவன், மாணவனாக இருக்கும் காலம் வரை உறவு கொள்ளமுடியாது! நன்கு விசாரிக்கவும்.

நெடுக்கு, பிரச்சனையில் மாட்டப் போகிறார்.

இது விரிவுரையாளர்களுக்கும் உள்ள கோட்பாடு தான். மாணவர்கள் படித்து முடித்து வெளியேறும் வரை இந்த கட்டுப்பாடு இருக்கும்.

நெடுக்கின் கருத்து சரிதான்..! கல்விக்கூடத்தின் வெளியே யாரும் என்னத்தையும் செய்யலாம்..! :rolleyes:

ஆனால் இந்த உரிமையை விட்டுக்குடுக்காமல் இருக்க நெடுக்கு படுற பாடு இருக்கே..!! :icon_idea::lol:

இல்லை என்பதே இங்கிலாந்து சட்டம்.

Link to comment
Share on other sites

இதே மேற்கு நாடு என்றால்.. சர்வ சாதாரணமாக இந்த விடயம்.. இரு மனிதருக்குள் அவர்களோடேயே முடிந்திருக்கும்..! இந்தியாவிலும்.. அதனை அண்டியுள்ள நாடுகளைச் சார்ந்தோரிடமும்.. அடுத்தவனின் வளவுக்குள் என்ன நடக்கிறது என்று ஆராயுறதே வேலையாப் போச்சு.

இது மேற்குலகில் இப்படி நடந்து கொண்ட ஆசிரியர்கள் சிறைத் தண்டனையைக் கூட அனுபவித்திருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி லங்காவில் கல்வி தரம் குறைந்துவிட்டது. 

மாணவர்களையும் அடித்து துவைத்து மனவதை செய்து தற்கொலைக்கு தள்ளும் கல்வி முறை  மாற்றப்படவேண்டும்.

முரளி  not out.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் மக்களுக்கு பயன் தரக் கூடிய செய்திகள் என்று யாராச்சும் நினைக்கிறீங்களா.....கடவுளே..கடவுளே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் கருத்து சரிதான்..! கல்விக்கூடத்தின் வெளியே யாரும் என்னத்தையும் செய்யலாம்..! :rolleyes:

ஆனால் இந்த உரிமையை விட்டுக்குடுக்காமல் இருக்க நெடுக்கு படுற பாடு இருக்கே..!! :icon_idea::lol:

தனிப்பட்ட வகையில் எனக்கு இந்த ஆசிரியையின் நடத்தையில் உடன்பாடில்லை. ஆனால் சமூகம்.. சட்டம்... அடிப்படை ஆண் - பெண் உரிமைகள்... என்று பார்க்கையில் நாம் எமது நிலைப்பாட்டை ஒரு அகண்ட வெளிக்குள் தள்ளிப் பார்க்க வேண்டிய தேவை உள்ளது.

ஒரு நீதிபதி தனிப்பட்ட வகையில்.. எவ்வளவு தான் நல்லவராக இருந்தாலும்.. தீர்ப்பளிக்கும் போது.. கெட்டதையும் அலசி ஆராய வேண்டியவராகவும் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டியவராகவும் இருப்பதில்லையா. அதுபோலவே தான் சில விடயங்களில் எமது நிலைப்பாடும் அமைய வேண்டி உள்ளது. :):icon_idea:

பள்ளிக்கூடத்துக்கு வெளியேயும், மாணவன், மாணவனாக இருக்கும் காலம் வரை உறவு கொள்ளமுடியாது! நன்கு விசாரிக்கவும்.

நெடுக்கு, பிரச்சனையில் மாட்டப் போகிறார்.

இது விரிவுரையாளர்களுக்கும் உள்ள கோட்பாடு தான். மாணவர்கள் படித்து முடித்து வெளியேறும் வரை இந்த கட்டுப்பாடு இருக்கும்.

இல்லை என்பதே இங்கிலாந்து சட்டம்.

இங்கிலாந்தில் அரசியல் சட்டக் கோவையில் அமைந்த சட்டம் இல்லை. பிரேரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட சட்டங்களும்.. தீர்ப்புக்கள் வாயிலாக எழுந்த சட்டங்களுமே உண்டு..! அதுமட்டுமன்றி பள்ளிக்கு வெளியில்.. பல்கலைக்கழகத்திற்கு வெளியில்.. ஒரு வழங்கப்பட்டுள்ள சட்ட அங்கீகாரத்துக்குள்.. நிகழ்கின்ற விடயங்கள் பல்கலைக்கழக விடயங்கள் ஆகா..! அது அந்த நபர்களின் தனிப்பட்ட விடயங்களாக காண்பிக்கப்படும் தீர்ப்புக்களும் வெளியாகி உள்ளன..!

குறிப்பாக அமெரிக்க விமானத்தை தகர்க்க முனைந்த ஒருவர் பிரித்தானிய பல்கலைக்கழக மாணவராக இருந்தவர். அதேபோல் லண்டன் குண்டு வெடிப்பில் பங்கெடுத்தவர்களில் சிலர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள். அதன் மூலம் தண்டனை பல்கலைக்கழகத்திற்கா கிடைத்தது. தனிநபர்களுக்குத் தானே.. பல்கலைக்கழகத்திற்கு வெளியில் தனிநபர்களின் செயற்பாட்டிற்கு பல்கலைக்கழகம் பொறுப்புக் கூற வேண்டிய அவசியம் இல்லை. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட வகையில் எனக்கு இந்த ஆசிரியையின் நடத்தையில் உடன்பாடில்லை.

ஆனால் சமூகம்.. சட்டம்... அடிப்படை ஆண் - பெண் உரிமைகள்... என்று பார்க்கையில் நாம் எமது நிலைப்பாட்டை ஒரு அகண்ட வெளிக்குள் தள்ளிப் பார்க்க வேண்டிய தேவை உள்ளது.

தம்பி நெடுக்கு

இதைத்தானே பெரியவர்களும் சொல்கிறார்கள்.

சட்டம் இடம் கொடுத்தா என்னவும் செய்யலாம் என்றிருக்காப்பா....???

என்னிடம் இருக்கும் சட்டப்படி

என் பிள்ளையை இப்படி ஒருத்தர் கெடுத்தால்

இருவரையும் அழித்துவிடுவேன். அப்புறம் சடங்கு துவசம்.............? எல்லாம் நடக்கும்.

இது என் சட்டப்புத்தகம்.

Link to comment
Share on other sites

அங்க தான் இடிக்குது அலைமகள்.

Link to comment
Share on other sites

அந்த மனிசி பெடியை மகன் போலப் பார்க்கப் போகுதாம் அதுக்கை நீங்க வேற!

என்ன பிழைகளை சுட்டி காட்டுவீர்கள் என்றால் அங்கால சரியிற மாதிரி இருக்கு.

ஏனெனில் நீங்கள் இருக்கும் இடம் அப்படி.பிரஞ்சு கொலனியில் எப்படியும் வாழலாம் என்கிற கோட்பாடு உண்டு அதனால் தான் சொன்னேன். நானும்18 வருடங்கள் மொசூர் சொல்லித்தான் பிழைத்தேன்.இருந்தாலும் நீங்கள் இருக்கும் இடம் போல கனடாவில் வசதிகள் எங்கும் கிடைக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, பேராசிரியர் மாணவர் இடையே காதல் உறவை நாட்டின் சட்டம் தடுக்காது. ஆனால் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் ஆசிரியர்களுக்கு "நடத்தைக் கோவை" (code of conduct) என்று ஒன்று இருக்கும். அதன் படி மாணவர்/மாணவியருடன் காதல் உறவு வைத்திருக்கும் ஆசிரியர் நடத்தைக் கோவையை மீறியதாகக் காணப்பட்டுப் பணி நீக்கம் செய்யப் படுவார். உண்மையில் நிரந்தரமாக்கப் பட்ட ஒரு பேராசிரியர் (tenured professor) தனது பணியிலிருந்து நீக்கப் படும் மிகச் சில காரணங்களில் இதுவும் ஒன்று. இதைத் தான் சசி சொல்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, பேராசிரியர் மாணவர் இடையே காதல் உறவை நாட்டின் சட்டம் தடுக்காது. ஆனால் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் ஆசிரியர்களுக்கு "நடத்தைக் கோவை" (code of conduct) என்று ஒன்று இருக்கும். அதன் படி மாணவர்/மாணவியருடன் காதல் உறவு வைத்திருக்கும் ஆசிரியர் நடத்தைக் கோவையை மீறியதாகக் காணப்பட்டுப் பணி நீக்கம் செய்யப் படுவார். உண்மையில் நிரந்தரமாக்கப் பட்ட ஒரு பேராசிரியர் (tenured professor) தனது பணியிலிருந்து நீக்கப் படும் மிகச் சில காரணங்களில் இதுவும் ஒன்று. இதைத் தான் சசி சொல்கிறார்.

பல்கலைக்கழகத்திற்கு வெளியில் நிகழும் சம்பவங்களை எப்படி பல்கலைக்கழகம் கட்டுப்படுத்த முடியும். நடத்தைக் கோவைகள்.. போராசிரியர்.. மாணவன் பல்கலைக்கழகத்துக்குள் நடந்து கொள்ளும் வழிமுறையை வகுக்கின்றனவே தவிர வெளியில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கண்காணிக்க அல்ல என்பதும் நியாயம் தானே. பல்கலைக்கழகத்திற்கு வெளியில் நிகழும் உறவாடலுக்கு பல்கலைக்கழகம் பொறுப்புக் கூற வேண்டிய தேவை இல்லைத் தானே..! அது அந்த தனிநபர்கள் சார்ந்த விடயமாகத் தானே நோக்கப்படும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழகத்திற்கு வெளியில் நிகழும் சம்பவங்களை எப்படி பல்கலைக்கழகம் கட்டுப்படுத்த முடியும். நடத்தைக் கோவைகள்.. போராசிரியர்.. மாணவன் பல்கலைக்கழகத்துக்குள் நடந்து கொள்ளும் வழிமுறையை வகுக்கின்றனவே தவிர வெளியில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கண்காணிக்க அல்ல என்பதும் நியாயம் தானே. பல்கலைக்கழகத்திற்கு வெளியில் நிகழும் உறவாடலுக்கு பல்கலைக்கழகம் பொறுப்புக் கூற வேண்டிய தேவை இல்லைத் தானே..! அது அந்த தனிநபர்கள் சார்ந்த விடயமாகத் தானே நோக்கப்படும். :icon_idea:

பல் கலைக்கு வெளியே மாணவியைக் காதலிக்கும் ஒரு பேராசிரியர் பல்கலையில் அம்மாணவிக்கு விசேட கவனம் காட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இதைத் தடுக்கவே இந்த நடைமுறை. நான் இருக்கும் பல் கலையில் நேரடியாக தான் வகுப்பெடுக்காத ஒரு மாணவியை (மாணவிக்கு வயது 30) க் காதலித்த பேராசிரியர் "நாம் காதலர்கள் அல்ல" என்று வாக்கு மூலம் கொடுத்த பின்னர் தான் அவரைப் பணி நீக்கம் செய்யாமல் விட்டார்கள். இருந்தாலும் மாணவியை வேறொரு பிரிவிற்கு மாற்றி விட்டார்கள். இது நான் கண்ட இரண்டாவது சம்பவம், கடந்த 7 வருடங்களுக்குள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே மேற்கு நாடு என்றால்.. சர்வ சாதாரணமாக இந்த விடயம்.. இரு மனிதருக்குள் அவர்களோடேயே முடிந்திருக்கும்..! இந்தியாவிலும்.. அதனை அண்டியுள்ள நாடுகளைச் சார்ந்தோரிடமும்.. அடுத்தவனின் வளவுக்குள் என்ன நடக்கிறது என்று ஆராயுறதே வேலையாப் போச்சு.

சட்டத்தின் படி அவன் 18வயசு ஆனதும்... இவர்கள் இருவரும் விரும்பின படி முடிவெடுக்க அனுமதிப்பதே அடிப்படை மனித உரிமை அனுமதிப்பதாகும்.

-----

மேற்கு நாடுகளில் என்றால்.... 17 வயது மாணவனுடன் உல்லாசமாய் இருந்ததற்கு... குறைந்தது 15 வருடம் மறியல்தான் கிடைக்கும்.

அவ வெளியிலை... வர, பெடியனுக்கு 32 வயதாய்ப் போய் விடும். :)

Link to comment
Share on other sites

பல்கலைக்கழகங்களில் வேலை செய்யும் பொது, சக ஊழியருடன் காதல்/ தொடர்பு என்றாலும் line manager க்கு அறிவிக்க வேண்டும் என்ற கோட்பாடும் உள்ளது.

Link to comment
Share on other sites

என்ன பிழைகளை சுட்டி காட்டுவீர்கள் என்றால் அங்கால சரியிற மாதிரி இருக்கு.

ஏனெனில் நீங்கள் இருக்கும் இடம் அப்படி.பிரஞ்சு கொலனியில் எப்படியும் வாழலாம் என்கிற கோட்பாடு உண்டு அதனால் தான் சொன்னேன். நானும்18 வருடங்கள் மொசூர் சொல்லித்தான் பிழைத்தேன்.இருந்தாலும் நீங்கள் இருக்கும் இடம் போல கனடாவில் வசதிகள் எங்கும் கிடைக்காது.

நீல அண்ணா! நான் பிழைகளைச் சுட்டிக் காட்டினாலும் நீங்கள் ஏற்கவா போகின்றீர்கள்????

நீல அண்ணா நாம் எங்கிருந்தாலும் நாம் தமிழீழத்துத் தமிழர் என்பதை ஒரு போதும் மறக்கவில்லை. தமிழ் பண்பாட்டுப் படி தான் இருக்கின்றோம். (அது எந்தக் கொலனியில் என்றாலும்.)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
    • பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில்  இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு  விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும். 
    • சகோதரி சிகண்டி அக்கா, 22ம் திகதி, விஷு புண்ணிய காலத்தில், R. விஜி மற்றும் மிர்சேல் ஒபாமா வை ஏவும் படி நெதென்யாகுவிற்கு நேரம் குறித்து கொடுத்தவ. ஆள் அவசரப்பட்டுட்டார்.  
    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.