Jump to content

மாதம் 7 லட்சம் லீற்றர் மது குடிக்கின்றனர் யாழ்.மக்கள்; நகர வாசிகளே பெரும் குடிகாரர்கள்


Recommended Posts

மதுபானம் அதிகளவில் விற்பனையாவது தொடர்பாக சோதிநாதனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

drinking_problem%20(1).jpg

மாதாந்தம் சராசரியாக 2 லட்சத்து 82 ஆயிரம் லீற்றர் சாராயம் விற்பனையாகி றது. 4 லட்சத்து 9 ஆயிரம் லீற்றர் ஏனையவகை மதுபானம் விற்பனையாகிறது. இதனுள் பியர், விஸ்கி, பிரன்டி, ஜின், ரம் எனப் பலவகைகள் உள்ளடங்குகின்றன.

யாழ். மதுவரி நிலையம் தவிர்ந்த ஏனைய மதுவரி நிலையங்களில் 30 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 35 ஆயிரம் லீற்றர் வரையான சாராயம் விற்பனை யாகின்றன. 55 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 60 ஆயிரம் லீற்றர் வரையான ஏனைய மதுபான வகை கள் விற்பனையாகின்றன. எனத் தெரிவித்தார்.

யாழ்.மதுவரி நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஜனவரியில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 904 லீற்றர் மதுபான வகையும், பெப்ர வரியில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 450 லீற்றர் மதுபான வகைகளும் விற்பனையாகியுள்ளன என்று பிரதம மதுவரிப் பரிசோதகர் என்.கிருபாகரன் தெரிவித்தார்.

சாராயம் ஜனவரியில் ஒரு லட்சத்து 77 ஆயிரம் லீற்றரும் பெப்ரவரியில் 82 ஆயிரத்து 775 லீற்றர் விற்பனையாகியுள்ளது. கள்ளு ஜனவரியில் 38 ஆயிரத்து 900 லீற்றரும் பெப்ரவரியில் 70 ஆயிரத்து 900 லீற்றரும் விற்பனையாகியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்துக்கு வரும் காலங்களில் மதுபான விற்பனை அதிகரிக்கின்றன. சுமார் 10 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 15 ஆயிரம் லீற்றர் வரையில் இத்தகைய காலங்களில் அதிகரித்து விற்பனையாகின்றது.

யாழ். மதுவரி நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தென்னை பனை, மரங்கள் அதிகளவில் காணப்படுவதனால் அத்தகைய இடங்களில் கள்ளு விற்பனை அதிகளவில் இடம்பெறுகிறது. சாராயம் மற்றும் ஏனைய மதுபான வகைகளின் விற்பனையை கள்ளின் விற்பனையும் தீர்மானிக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு ஆண் ஒருவர் 3 யுனிற் அற்ககோலுக்கு அதிகமாகவும் பெண் ஒருவர் 2 யுனிற் அற்க கோலுக்கு அதிகமாகவும் அருந்துவார்களானால் அவர்களுக்கு ஈரல் பாதிப்பு உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

சாராயம் மற்றும் ஏனைய மது பானவகைகள் வேறுபட்ட அளவில் அற்ககோல் அளவைக் கொண்டுள்ளன. அதனை அவதானிக்காது அளவுக்கதிகமாக மது அருந்தும் போது அருந்துபவர்களுக்குத் தெரியாமலேயே நோய் அவர்களைப் பற்றிக் கொள்கிறது.

தற்காலத்தில் வயது வந்தவர்களுக்கு நிகராக 21 வயதுக்குட்பட்டவர்களும் தாராளமாக மது பாவிக்கிறார்கள். கடைகளில் நின்று மது அருந்தாது ரின்கள், போத்தல்களாக வேண்டிச் சென்று வீதிச் சந்திகளில் வைத்து அருந்துகிறார்கள்.

இதனைச் சமூகத்தவர்கள் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்று அந்த வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=63247960508441073

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதன் மூலம் கிடைக்கும் வருமானம் சிங்கள ஆக்கிரமிப்பாளனையும்... அவனோடு ஒட்டிப் பிழைக்கும்.. ஒட்டுக்குழு சமூக விரோதிகளையும் இன விரோதிகளையுமே போய் சேர்கிறது..! மக்கள் இது குறித்து சிந்திக்க வழிகாட்டுவது அவசியம். :icon_idea::(

Link to comment
Share on other sites

யாழில் உள்ள சந்திரசிறியும், அங்குள்ள 40000 + ஆக்கிரமிப்பு இராணுவமும், முளைக்கும் சீனர்களும் அகற்றப்படல் வேண்டும்.

Link to comment
Share on other sites

இதன் மூலம் கிடைக்கும் வருமானம் சிங்கள ஆக்கிரமிப்பாளனையும்... அவனோடு ஒட்டிப் பிழைக்கும்.. ஒட்டுக்குழு சமூக விரோதிகளையும் இன விரோதிகளையுமே போய் சேர்கிறது..! மக்கள் இது குறித்து சிந்திக்க வழிகாட்டுவது அவசியம். :icon_idea::(

அப்போ குடித்தால் பறவாயில்லை, ஆனால் குடிக்கிறதால சிங்களவனுக்கும் ஓட்டுக்குழுக்களுக்கும் தான் வருமானம் என்றகவலையோ? :icon_idea::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாதம் 7 லட்சம் லீற்றர் மது குடிக்கின்றனர் யாழ்.மக்கள்; நகர வாசிகளே பெரும் குடிகாரர்கள்

முந்தி....அதுதான் எங்கடைகாலத்திலை....பனை,தென்னையாலை இறக்கினவுடனை முட்டியாடை சாத்தினதையெல்லாம் எவன் கணக்கெடுத்தவன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன முட்டியாடை சாத்தினது கு.சா தாத்தா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ குடித்தால் பறவாயில்லை, ஆனால் குடிக்கிறதால சிங்களவனுக்கும் ஓட்டுக்குழுக்களுக்கும் தான் வருமானம் என்றகவலையோ? :icon_idea::D

:rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ குடித்தால் பறவாயில்லை, ஆனால் குடிக்கிறதால சிங்களவனுக்கும் ஓட்டுக்குழுக்களுக்கும் தான் வருமானம் என்றகவலையோ? :icon_idea::D

குடிக்கிறதால வாற ஆபத்தைக் குறைக்கனுன்னா.. முதலில் குடிக்கத் தூண்டுறவனை தூக்கி வெளில போடனும். அதைச் செய்யாமல் குடியை குறைக்கவோ... நிறுத்தவோ முடியாது..!

மது.. சிகரெட்.. போதை..மாது இவற்றின் தீமை அறிந்தும் விற்பனை செய்கிறார்கள் அல்லது செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு இரண்டு காரணம் தான் முக்கியமாக இருக்க முடியும்..

1. வருமானம்..!

2. சமூகச் சீரழிவை ஊக்குவித்தல்.. அதன் மூலம் வேறு சிலர் நன்மை அடைதல்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் பேத்தை அமைச்சரின் குடியையும் சேர்த்தால் மில்லியன் லீட்டர் தாண்டும். 

Link to comment
Share on other sites

குடிக்கிறதால வாற ஆபத்தைக் குறைக்கனுன்னா.. முதலில் குடிக்கத் தூண்டுறவனை தூக்கி வெளில போடனும். அதைச் செய்யாமல் குடியை குறைக்கவோ... நிறுத்தவோ முடியாது..!

மது.. சிகரெட்.. போதை..மாது இவற்றின் தீமை அறிந்தும் விற்பனை செய்கிறார்கள் அல்லது செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு இரண்டு காரணம் தான் முக்கியமாக இருக்க முடியும்..

1. வருமானம்..!

2. சமூகச் சீரழிவை ஊக்குவித்தல்.. அதன் மூலம் வேறு சிலர் நன்மை அடைதல்..!

குடிப்பதை நிறுத்தும் போராட்டத்தை உடனே தொடங்குவோம் அதையும் இன்றே நாம் வாழும் நாடுகளில் இருந்து தொடங்வோம்.

:D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடிப்பதை நிறுத்தும் போராட்டத்தை உடனே தொடங்குவோம் அதையும் இன்றே நாம் வாழும் நாடுகளில் இருந்து தொடங்வோம்.

:D:lol::icon_idea:

அடுத்தவன்.. அதை அவங்களுக்கு ஏற்ற மாதிரி.. வடிவாவே பார்த்துக்குவாங்க.. முதலில.. உள் வீட்டில உள்ள பிரச்சனைகளுக்கு முடிவு கட்டிட்டு.. ஊர் அலுவலைப் பார்க்கிறது நல்லம்..! :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன முட்டியாடை சாத்தினது கு.சா தாத்தா?

அதொண்டுமில்லை பாருங்கோ! மப்பிலை மதிகளண்டு எழுத்துமாறிப்போச்சுது......முட்டியாடை எண்டதை முட்டியோடை எண்டு மாத்தி வாசியுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த எழு லட்சத்தில வெளிநாட்டால வந்த ஆக்கள் கொண்டுவந்தது இல்லை அதையும் சேர்த்தால் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த எழு லட்சத்தில வெளிநாட்டால வந்த ஆக்கள் கொண்டுவந்தது இல்லை அதையும் சேர்த்தால் :)

அதை விட தவறணைக்கு வராமல் பனைக்கு கீழை இருந்து குடிச்சதும் கணக்கிலை இல்லையே தாத்தா? :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.