Jump to content

நான் சாலை மனிதனின் பிரதிநிதி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருபத்திரண்டு வருட சுவிசின் குளிர்கால வாழ்வின் கடினமான சூழலை அன்றுதான் உணர்ந்து கொண்டேன் .

எல்லாத்திசைகளிலும் வெள்ளாடை உடுத்திய விதவை கோலத்தில் வெண்பனி போர்த்திய மரங்கள் .

ஆட மறந்த கிளைகளில் இலைகளுக்கு பதிலாக சூரிய வரவுக்காய்த் தவம்வேண்டிப் பனிப் பறவைகள் குந்தியிருந்தன .

மிகவும் அழகானகாலம் அதையும் தாண்டி நள்ளிரவு நேரம் .குளிர்நிலை பூச்சியம் தாண்டிக் கீழ்பதினைந்தை தொட்டிருந்தது .

எட்டி நடக்கச் சொன்ன கால்களை மறந்து நின்று ரசிக்கச் சொன்னது மனது.கால்களினுடாக குளிர் நெருப்பு மூண்டு மேல் நோக்கி நகர

கால்களிலிருந்த வெயில்காலக் காலணி என் வறுமையை உணர்த்தியது .மூளையின் கட்டளைக்கேற்ப கால்கள் இயங்க மறுத்தன .

சிறு வயதில் மூக்கு வழியத்திரிந்து அம்மா துடைத்துவிட்ட ஞாபகம் .

இப்போது மூக்கால்வழிவதை உணர முடியாத குளிரும் உணரும்போது மூக்குஎங்கே இருக்கிறது எனத் தேட வேண்டிய நிலையுமாய் இருக்க உலகப் பணக்காரர்களின் சொர்க்கபூமி என் நரகபூமியாகியிருந்தது .கால்கள் எட்டி நடக்கநடக்க என் இலக்குத்தூரமாகிக்கொண்டிருப்பதுபோன்றிருந்தது .

வீதியில் வெண்மணலாய் கொட்டியிருந்தபனிவிழுகையுடன் ஓர் வாகனம்பல்லாங்குழியடிக்கொண்டிருக்க நான் தாண்டிநடக்கிறேன் இப்போதுகுளிர்உடலின்முக்கியபகுதியைதாண்டி மேல்நோக்கிநகர்கிறது.

இவ்வேளையில்நம்ஊரின்ரம்பிட்டான்பழத்தின்ஞாபகம்வரஎன்னையறியாமலே நான் சிரித்துக்கொண்டேன் .

நேற்றையவிடுமுறைநாளில் இணையத்தளத்தில் நான் கண்டகாட்சியொன்று மனதுள்வந்தது .

ஐரோப்பியநாகரிகத்தின் பிறப்பிடமாகவும் இன்றைய ஐரோப்பியபொருளாதாரத்தின் இறப்பிடமாகவும் உள்ள கிரேக்கநாட்டின் வீதியொன்றிலே ஓர் சாலைமனிதன் காலணியற்ற கால்களுக்குகழிவுக்காகிதங்களால்கவசமிட்டுபொலித்தீன்பைகளை சுற்றிக்கட்டிக்கொண்டுநடந்துபோனதனை இப்போதுமனதுஉணரும் போதுவலித்தது .

என் கால்களிலிருந்தவெய்யில்காலக் காலணி எனதுகாப்பரனாகதெரிந்தது .

அழகானகுளிர்காலம் ஏழைமக்களுக்கு எவ்வளவுகொடுந்துயரம் என்பதனை அனுபவமே உணர்த்தியது .

சற்றுத்தொலைவில் யாரோ சிரிக்கும் ஒலிகேட்க உற்றுப்பார்த்தேன் .குளிருக்குப்பிறந்த குஞ்சுகள் சிலது

குடிபானவிடுதிஒன்றிலிருந்து வெளியேவந்து பனிப்பந்து எறிந்துவிளையாடிக்கொண்டிருந்தனர் .நான்

அவர்களைத் தாண்டி சென்றாகவேண்டும் .இந்த நேரமும்பிழை' அவர்களின்கோலமும்பிழை 'என் நிறமும் இங்கு பிழை .

என்றாலும் குளிர்விரட்டஓடிக்கொண்டிருக்கும் என்னால் கால்களுக்குதடையிடமுடியவில்லை .

அவர்களை நான்தாண்டும்போது பனிப்பந்துகள்சில என்னையும்தாக்கின .எப்போதும்என்முன்னால்இருக்கும்

இருக்கும்கோபம் எங்கேஎனத்தேடினேன் .குளிருக்குமுன்னால்மண்டியிட்டு காணாமல்போயிருந்தது .

சில அடி தூரம்தாண்டும்போது குளிர்காற்றுஎன் பிடரியில்அறைந்துகாதில்நுழைந்தது அவர்களின் நிறவெறிப்பேச்சுகளை தாங்கி

குளிர்நிறைந்தஇந்தஅழகானகொடுமைக்காலத்தைவிட எங்கள்தேசத்தின் வியர்வைவழியும் கோடைகாலம்எங்கள்

மனப்பறவைக்குஅழகானசிறகுகள் தந்தகாலம்.அதுமுகவரிதொலைத்துவாழும் சாலைமனிதனின்பிரதிநிதியாய் நானும் இக்குளிரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகு தமிழ்...ரசிக்க வைக்கும் எழுத்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னி லிங்கம்

வணக்கம் அனைவருக்கும்.நான் நீண்ட காலயாழ் இணையத்தின் வாசகன்நான் ஆனாலும்தற்போதுதான்புதிதாகஇணைந்துள்ளேன் .

நான் இணைத்த சாலைமனிதனின்பிரதிநிதி க்கு பதில்தந்த அனைவருக்கும் நன்றி .

என்னை வரவேற்றுஏற்றுக்கொண்ட யாழின் உறவுகள்அனைவருக்கும்நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அன்னி லிங்கம் வாருங்கள்.

ஏற்கனவே இங்குள்ள ஒருவர்தான் புதிய முகமூடியுடன் வருகிறீர்களா அல்லது உண்மையிலேயே யாழில் எழுதிப் பரிச்சயம் இல்லாத புதிய முகமா?

ஏன் கேட்கிறேன் என்றால் பழைய முகங்கள் புதிய வேடம் தரித்தாலும் பற்பல முகங்களின் அலட்டல்கள் தாங்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் புதிதாய் இணைந்தவன் .பழையமுகம் அல்ல . என்னை வரவேற்றதற்கு நன்றி

வல்வை சஹாராவிற்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப மறுக்கிறது மனம், இருப்பினும் நம்ப முயற்சிக்கிறேன்

என்னுடைய பெயர் "சகாறா" அவசியமில்லாமல் வடமொழி எழுத்துக்களை பாவிப்பதைத் தவிர்ப்போமே.... :rolleyes:

திருத்தம் செய்யப்பட்ட காரணம்

எழுத்துப்பிழை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் தவறுக்கு மன்னிக்கவும் சகாறா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அன்னி லிங்கம் வாருங்கள்.

நான் தற்போது வருபவர்களை வரவேற்பதில்லை. காரணம் அவர்கள் பழையவரே என்பதனால் வந்த ஏமாற்றம்.

ஆனாலும் தங்களது உறுதிமொழிக்காய் வரவேற்கின்றேன்.

நல்ல எழுத்துத்திறமையுள்ளது.

தமிழுக்காய் அதன் உயர்வுக்காய் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குஇங்குயார்பழையவர்என்றோபுதியவர்என்றோதெரியாது.

ஆனால்நான்புதிதாகவந்துள்ளேன்.நீண்டநாட்களாகஅல்ல வருடங்களாக யாழ்இணையத்தினை பார்த்துவருகின்றேன்.

தமிழில்தட்டச்சுசெய்யத்தெரியாததால்காலதாமதமாகஇணைந்துள்ளேன்.எழுதவேண்டும்என்றஆசைநீண்டநாட்களாகஉள்ளதுநண்பர்களே ஆனால்இங்கே மிகச்சிறந்தகருத்தாடுபவர்கள்மத்தியில்

நான் சமுத்திரத்தில்வீழ்ந்தசிறு துளியாய்காணாமல் போய்விடுவேன்என்றபயத்தில்என் எண்ணச்சிறகுகளைகத்தரித்துவைத்திருந்தேன்.

அண்மையில்ஓர் நண்பன்மூலம்தமிழில்எழுதப் பழகினேன்.

முயற்சிக்கிறேன்உறவுகளே' என்எழுத்தின்தவறுகளையும்

கருத்தின்தவறுகளையும்சுட்டுங்கள் சொந்தங்களே.

என் கருத்தாடல்தவறாகிப்போனாலும் என் தமிழாடல் தவறிப் போய்விடக்கூடாதுஎன்ற பயத்தில் எழுதுகிறேன்

என்னைவரவேற்றஅனைவருக்கும் மீண்டுமொருமுறை நன்றி.

முகவரிதொலைத்துவாழும்சாலைமனிதன்

அன்னி லிங்கம்

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள் நண்பரே.................

Link to comment
Share on other sites

அல அக்கா உன்க பெயரும் தமிழ் பெயர்இல்ல அக்கா

http://en.wikipedia.org/wiki/Magal

http://www.babynamew...pedia/boy/makal

நன்றி குண்டா :) , நான் "அலைமகள்" தமிழ் பெயர் என்று சொல்லவில்லையேபா :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரவேற்ற அனைவருக்கும் நன்றி

அன்னி லிங்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"என் கருத்தாடல்தவறாகிப்போனாலும்

என் தமிழாடல் தவறிப் போய்விடக்கூடாது".............

...இனிய நல் வரவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அத்துடன்நன்றி நிலாமதிக்கு .

எல்லோருக்கும்வேறுபட்டஆடுகளங்கள்இருக்கும்

என்னிடம்உள்ள தளத்தில்நான் தோற்றுவிட கூடாதல்லவா

ஆனந்தப்பயத்தில்தான்நீங்கள் மேற்காட்டியகருத்தை

வைத்தேன் .

Link to comment
Share on other sites

வணக்கம்! வாருங்கள் !! வாருங்கள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வதா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அன்னி லிங்கம்,

வாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.