Jump to content

உண்மையை உரைப்போம் - இந்தியத் தமிழர்களுக்கு


Recommended Posts

அனைவருக்கும் வணக்கம்.

இப்போழுது தமிழ்நாட்டில் தமிழீலத்தைப்பற்றி பல வதந்திகளும், உண்மைக்கு புறம்பான கருத்துக்களும் சிலரால் பரப்படுகின்றன். எனவே மக்களுக்கு உண்மையை கொண்டு செல்லும் நோக்கில் இந்த பக்கத்தை தொடங்குகிறென். தயவுசெய்து யாரும் இந்திய அரசாங்கத்திற்கு எதிறான எந்த கருத்தையும் பதியவேண்டாம். அது இந்திய தமிழர்களுக்கு சட்ட சிக்கலை உண்டு பண்ணகூடும்.

யாழில் நமக்கு கிடைக்கும் தகவல்களை பத்திரிக்கை உலகத்திற்கு (MEDIA People) எடுத்து செல்லவேண்டும்..

1. அனைவரும் தங்களுக்கு தெரிந்த நண்பர்களை யாழிர்க்கு அறிமுக படுத்தலாம்.

2. மீடியா தொடர்பு உடையவர்கள் உண்மை செய்திகளை மீடியாவில் வெளியிடலாம்.

3. அல்லது தங்களுக்கு தெரிந்த மீடியா நண்பர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

இதன் மூலம் உண்மை செய்திகளை நாடரிய செய்யலாம். சட்டபடியான எந்த அணுகு முரையும் நமக்கு வழு சேர்க்கும்.

தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கும்

வெங்கட்

Link to comment
Share on other sites

உண்மைதான் நண்பரே உங்கள்கருத்து வரவேற்கத்தக்கது

அனைவரும் இந்தக்கருத்தை ஒழுகிநடந்தால் அனைவராலும் வரவேற்கப்படும்

Link to comment
Share on other sites

நன்றி சிவா.

நானும் தங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். மேலும் யாழில் சில தமிழ்நாட்டு தமிழர்களை பார்ததாக நினைவு. சிவகாசி பாபு, வேலவன் மற்றும் ஆர்வமுள்ளவர்களை வரவேற்கிறேன்..

மற்ற தமிழ் நண்பர்களும் தங்கள் கருத்துக்களை பதிய அழைக்கிறேன்.

Link to comment
Share on other sites

வெங்கட் அவர்களின் உண்மையை உரைப்போம் என்ற இந்த அருமையான முயற்சிக்கு தமிழகத் தமிழர்கள் மட்டுமல்ல ஈழத் தமிழர்களும் நிச்சயம் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வெங்கட்

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும் என்பதற்கமைய சில தீயசக்திகள் செயற்படுகின்றன. அவற்றில் சில வெற்றியும் ஈட்டியிருக்கின்றன. இருந்தாலும் அதர்மம் என்றுமே நிலைப்பதில்லை. தர்மம் தலை தூக்கும்போது தீமைகள் யாவும் விலகும். விடியல் தோன்றும்.

நன்றி

Link to comment
Share on other sites

அனைவருக்கும் நன்றி,

வேலை பழு காரணமாக மெதுவாகத்தான் செயல்படுகிறேன். ஆனால் சரியான பாதையில்.

இது பலன்களை எதிர்பார்த்தல்ல,

நல்லதெ நடக்கும் என்ற நம்பிக்கையில்.

இங்கே யாழில் நான் பார்க்கும் சில கருத்துக்களை மற்ற இனையதளங்களுக்கும் எடுத்து செல்வது மற்றும் நண்பர்களுக்கு யாழை அறிமுகபடுத்துவது. இதுவே இப்போதய செயல்பாடுகள்.

உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்கிறேன்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல அருமையான கருத்து...

எல்லாம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்

இங்கட பாரீஸ்ல கூட நிறைய இந்திய தமிழர் இருக்கரோங்க...

புலத்தமிழர் அனைவரும் ஒன்று பட்டு அவங்க அவங்க நாட்டிலே போரடணும்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

எங்களை ஏமாற்ற முடியாது. நாங்கள் ஏமாறவும் மாட்டோம்.

எப்படி கண்டுபிடித்தீர்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • கடந்த சில வருடங்களாக இலங்கையின் காட்டு யானைகள், மனிதர்களிடமிருந்து உணவைப் பெற சாலையில் திரிவது அதிகரித்துள்ளது. பயணிகள் பலர் மீதமான உணவை சாலையில் கொட்டுவதால், பசியுடன் இருக்கும் யானைகளுக்கு இவை எளிதான உணவாகிவிட்டது.
    • படக்குறிப்பு, சோழர் ஆட்சியில் மருத்துவமனை செயல்பட்ட திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 26 மே 2024, 08:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ள தற்போதைய கால கட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் பல உள்ளன. சாதாரண தலைவலி முதல் இதயம் உள்ளிட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வரை மருத்துவத்துறை வெகுவாக முன்னேறிவிட்டது. நகர்ப்புறங்களில் பல மருத்துவமனைகள் 24 மணிநேரமும் இயங்குகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற மருத்துவமனைகள் இருந்தனவா? மக்கள் நோய்வாய்ப்பட்ட போது என்ன செய்தார்கள்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. அதற்கு விடையாகவே, காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் பகுதியில் உள்ள ஆதுலர் சாலை இருக்கிறது. சோழர் ஆட்சியில் 950 ஆண்டுகளுக்கு முன்பே அந்த இடத்தில் மருத்துவமனை செயல்பட்டு வந்திருப்பதாக இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும் துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், அந்த மருத்துவமனை பற்றிய முழு விவரங்களை பகிர்ந்து கொண்டார். படக்குறிப்பு,திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் ஆதுலர் சாலை என்பதன் பொருள் என்ன? "ஆதுலர் சாலையை ஆதுலர் + சாலை என்று பிரித்துப் பொருள் கொண்டால் ஆதுலர் என்பதற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் சாலை என்பதற்கு மருத்துவ நிலையம் என்றும் பொருள்படும். அதாவது, உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ நிலையம் என்றும் பொருள் சொல்லலாம்" என்றார் அவர். "வைத்திய சாலையை நிர்வாகம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும், அங்கே பணியாற்றுகின்ற மருத்துவர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கும் வைத்திய விருத்தி, வைத்திய பாகம், வைத்திய போகம், வைத்தியக்காணி, ஆதுலர் சாலைபுரம் போன்ற பெயர்களில் நில தானம் கொடுக்கப்பட்டுள்ளன" என்றும் அவர் கூறினார். படக்குறிப்பு, இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம்   மூன்று நதிகள் சந்திக்கும் இடம் தொடர்ந்து திருமுக்கூடலில் செயல்பட்டு வந்த ஆதுலர் சாலை குறித்து அவர் விவரித்தார். "காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் பாலாற்றின் கரையில் உள்ளது திருமுக்கூடல். பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் கலக்கும் இடம் என்பதால் இந்த ஊர் திருமுக்கூடல் என பெயர் பெற்றது . இங்குள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் 950 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் ஆட்சியில் ஆதுலர் சாலை என்று அழைக்கப்படும் மருத்துவமனை செயல்பட்டுள்ளது. கோவில் முதல் பிரகாரத்தின் கிழக்குப் பக்க சுவரில் ராஜகேசரி வீரராஜேந்திர சோழனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1068) பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு ஆதுலர் சாலையை பற்றி விரிவாக தெரிவிக்கின்றது" என்று வஞ்சியூர். க.பன்னீர்செல்வம் தெரிவித்தார். படக்குறிப்பு, திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் கல்வெட்டு   மருத்துவமனை எவ்வாறு செயல்பட்டது? அந்த கல்வெட்டின்படி, ராஜேந்திர சோழர் மாவலிவானராசன் என்ற இருக்கை சிம்மாசனத்தில் இருந்து கொண்டு 'வீரசோழன்' என்ற மருத்துவமனையை உருவாக்கி அதை நிர்வாகம் செய்வதற்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளார். கல்வெட்டின் அடிப்படையில் அந்த ஆதுலர் சாலை செயல்பட்ட விதம் குறித்து அவர் விளக்கினார். அதன்படி, "இந்த மருத்துவமனையில் திருக்கோவில்களில் பணியாற்றியவர்களுக்கும் வேத பாடங்களை பயில்கின்ற மாணவர்களுக்கும் வைத்தியம் பார்க்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 15 படுக்கைகள் இருந்துள்ளன. இதில் மருத்துவர் ஒருவர், அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், மூலிகை மருந்துகளை தயார் செய்கின்ற மருந்தாளுநர்கள் இரண்டு பேர், செவிலியர் இருவர், பொதுப் பணியாளர் ஒருவர் ஆகிய 7 பேர் பணி செய்துள்ளனர். அறுவை சிகிச்சை மருத்துவம் சல்லியக்கிரியை என்ற பெயரில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள், மனித உடலில் ஏற்படும் பெரிய காயங்களை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தியுள்ளனர். மருந்தாளுநர்கள் ஓராண்டு காலத்திற்கு நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை இருப்பு வைத்து பராமரித்தும் பாதுகாத்தும் அவற்றின் அளவுகளை சரிபார்த்தும் கணக்கிட்டும் வந்துள்ளனர். ஏறக்குறைய தற்பொழுது செயல்படும் மருத்துவமனை போலவே இந்த சோழர் கால மருத்துவமனையும் செயல்பட்டு வந்ததை கல்வெட்டு தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன" என்று அவர் கூறினார். படக்குறிப்பு, திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில்   20 வகை மருந்துகள் வீரசோழன் மருத்துவமனையில் நாடி பாா்த்து சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவர் மற்றும் உதவியாளா்கள் பணிபுரிந்த விபரமும் அவா்களின் ஊதிய விவரம் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட உணவு வகை குறித்தும் கல்வெட்டு தெரிவிக்கிறது. கோவிலின் ஒரு பகுதியான “ஜனநாத மண்டபம்” என்ற இடத்தில் மருத்துவனை செயல்பட்டு வந்திருப்பதாக வஞ்சியூர். க.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட கீழ்க்கண்ட மருந்துகளின் பெயா்கள் இந்த கோயில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 1.பிரம்மயம் கடும்பூரி 2.வாஸாரிதகி 3.கோமூத்திர கரிதகை 4.தஸமூல ஹரிதகி 5.பல்லாதக ஹரிதகி 6.கண்டிரம் 7.பலாகேரண்ட தைலம் 8.பஞ்சாக தைலம் 9.லசுநாகயேரண்ட தைலம் 10.உத்தம கரிநாடி தைலம் 11.ஸுக்ல ஸிகிரிதம் 12.பில்வாதி கிரிதம் 13.மண்டுகரவடிகம் 14.த்ரவத்தி 15.விமலை 16.ஸுநோரி 17.தாம்ராதி 18.வஜ்ரகல்பம் 19.கல்யாணலவனம் 20.புராணகிரிதம் "இந்த மருந்துகளில் ஒன்றிரண்டு நீங்கலாக மீதமுள்ள அனைத்தும் தற்காலத்திலும் பயன்பாட்டில் உள்ளன. இம்மருந்துகளைப் பற்றிய விரிவான குறிப்புகளும் அவை தீா்க்கும் நோய் பற்றிய விபரங்களும் “சரஹா் சம்ஹிதை” என்னும் ஆயுா்வேத நூலில் காணப்படுகின்றது" என்று கூறினார்.   படக்குறிப்பு,திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோயில் கல்வெட்டு "சோழர் ஆட்சியில் பல இடங்களில் மருத்துவமனைகள்" இதுபோல், சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோழர்கள் மிகச் சிறப்பாக ஆதுலர் சாலை என்று அழைக்கப்படக் கூடிய மருத்துவமனைகளை நடத்தி வருந்திருப்பதாக அவர் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் அருகே கோயில் தேவராயன் பேட்டையில் உள்ள மத்தியபுரீஸ்வரர் திருக்கோவிலிலும், நன்னிலம் அருகே திருப்புகலூரில் உள்ள அக்னிபுரீஸ்வரர் திருக்கோவிலிலும் ஆதுலர் சாலை செயல்பட்டு வந்திருப்பதாக கல்வெட்டு ஆதாரங்களை சுட்டிக்காட்டி முனைவர் வஞ்சியூர். க.பன்னீர்செல்வம் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/crggkk0z4ndo
    • ஆனாலும் சிங்கன்   @குமாரசாமி மகா கெட்டிக்காரன். உறவினர்களின் கொண்டாட்டத்திலேயே பெரிய விருந்தோம்பல் செய்தது மட்டுமல்லாமல் பொதி செய்தும் கொடுத்திருக்கிறார்.
    • 26 MAY, 2024 | 03:13 PM   வவுனியா வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டு, வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் தெரிவித்தார்.  இன்று (26) மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.  அங்கு அவர் மேலும் கூறுகையில், மேல் மாகாணத்தை போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கம் என்றும் அதற்காக கடந்த இரு வருடங்களில் வடக்கில் 4 மருத்துவ பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.  https://www.virakesari.lk/article/184524
    • இன்று தான் எத்தனையாம் இடம் என்று தெரியும்.   அதுவரை கவலை வேண்டாம்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.