Jump to content

ஆடிப்பிறப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

somasundarappulavar.jpg
 
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
 
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
 
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
 
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
 
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக வாயூறிடுமே
 
குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் பாடிப்பும் படைப்போமே
 
வன்னப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
 
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
 
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
 

என்னமாதிரி????? எல்லாரும் ஆடிக்கூழ் குடிக்கிறியளோ? :)  :D

Link to comment
Share on other sites

இன்றே ஆடிப்பிறப்பு.. கூழ் குடிக்க வேணும் போல இருக்கு. யாராவது கூழ் கொண்டு வந்து தாறோங்களோ பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றே ஆடிப்பிறப்பு.. கூழ் குடிக்க வேணும் போல இருக்கு. யாராவது கூழ் கொண்டு வந்து தாறோங்களோ பார்ப்பம்.

 

இந்தாங்கோ... யாழ்கவி, உங்களுக்காக செய்யப்பட்ட ஆடிக்கூழ். :D

 

6986804081_1b3ba2cf76_z.jpg

Link to comment
Share on other sites

இந்தாங்கோ... யாழ்கவி, உங்களுக்காக செய்யப்பட்ட ஆடிக்கூழ். :D

 

6986804081_1b3ba2cf76_z.jpg

 

இது மச்ச கூழெல்லோ, எனக்கு இனிப்பு கூழ் தான் வேணும். வளமையாக ஒரு மச்சாள் கொண்டு வந்து தாறவா, இந்த முறை வந்து கொண்டு வந்து தாறாவோ தெரியாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வெறும் கூழுக்கே, பெண் புரசுகளின்ர காலில, அஞ்சாறு தரம், விழுந்தெழும்ப வேண்டிக்கிடக்கு! :o

 

எல்லாம் முடிஞ்சு உமக்கு இப்ப, ஆடிக்கூழ் கேட்குதோ, எண்டு அகப்பைக்காம்பால அடி வாங்கித்தரத் தான், குமாரசாமி அண்ணர் ஆயத்தப் படுத்திறார் போல கிடக்குது!  :huh:

 

நவாலியூர் சோமசுந்தப்புலவரின்ர பேரன் சிட்னியில இருக்கிறார்! நல்ல ஒரு அருமையான பாடல் இது!

 

இணைப்புக்கு நன்றிகள் !

Link to comment
Share on other sites

சும்மா வெறும் கூழுக்கே, பெண் புரசுகளின்ர காலில, அஞ்சாறு தரம், விழுந்தெழும்ப வேண்டிக்கிடக்கு! :o

 

எல்லாம் முடிஞ்சு உமக்கு இப்ப, ஆடிக்கூழ் கேட்குதோ, எண்டு அகப்பைக்காம்பால அடி வாங்கித்தரத் தான், குமாரசாமி அண்ணர் ஆயத்தப் படுத்திறார் போல கிடக்குது!  :huh:

 

நவாலியூர் சோமசுந்தப்புலவரின்ர பேரன் சிட்னியில இருக்கிறார்! நல்ல ஒரு அருமையான பாடல் இது!

 

இணைப்புக்கு நன்றிகள் !

 

 

பாரதி என்று முடியும் பெயரா அவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரதி என்று முடியும் பெயரா அவர்?

ஓம், அலை!

 

இலங்கையில் பல் வைத்தியராக இருந்தவர்.

 

பாரதி இளமுருகனார் என்பது அவர் பெயர்! நல்ல கவிஞர்!

Link to comment
Share on other sites

சும்மா வெறும் கூழுக்கே, பெண் புரசுகளின்ர காலில, அஞ்சாறு தரம், விழுந்தெழும்ப வேண்டிக்கிடக்கு! :o

 

எல்லாம் முடிஞ்சு உமக்கு இப்ப, ஆடிக்கூழ் கேட்குதோ, எண்டு அகப்பைக்காம்பால அடி வாங்கித்தரத் தான், குமாரசாமி அண்ணர் ஆயத்தப் படுத்திறார் போல கிடக்குது!  :huh:

 

 

 

 

 

ஆடிக்கூழ் ஒரு பெரிய புரொஜெக்ட். உருண்டைகள் எல்லாம் உருட்டிப் போடவேணும் என்டு நினைக்கிறன்.
 
பின்னேரம் கேட்டுப் பார்ப்போம்.
 
அது இல்லாவிட்டால் ராசவள்ளிக் கஞ்சியாவது கிடைக்கலாம்.  :huh:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை சுமே அண்டி எனக்கு உங்கடை மண் சட்டீலை கூழ் தருவியளோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாங்கோ... யாழ்கவி, உங்களுக்காக செய்யப்பட்ட ஆடிக்கூழ். :D

 

6986804081_1b3ba2cf76_z.jpg

 

 

இந்தக்கூழையும் கோப்பையையும்  எங்கேயோ  பார்த்த  மாதிரி  இருக்கே......

அடப்பாவிகளா

சொந்த தயாரிப்பு என்றல்லோ  பெருமிதம் கொண்டேன்........ :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா,

இப்பாடலில் நீங்களும் கொஞ்சம் சேர்த்துள்ளீர்கள் போல இருக்கே. சோமர் எழுதியது மூன்று பந்திகள் தான் என நான் இத்தனை நாட்களாக எண்ணிக்கொண்டிருந்தேன்.

 

 

பச்சை அரிசியை ஊற வைத்து நல்ல
பதமாய் இடித்து மாவாக்கி
பாசிப் பயறுடன் பாலும் பனங்கட்டி
சேர்த்த நல்ல கூழ் குடிப்போம்

 

வாருங்கள் வாதவூரன் சேர்ந்தே கூழ் குடிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வெறும் கூழுக்கே, பெண் புரசுகளின்ர காலில, அஞ்சாறு தரம், விழுந்தெழும்ப வேண்டிக்கிடக்கு! :o

 

எல்லாம் முடிஞ்சு உமக்கு இப்ப, ஆடிக்கூழ் கேட்குதோ, எண்டு அகப்பைக்காம்பால அடி வாங்கித்தரத் தான், குமாரசாமி அண்ணர் ஆயத்தப் படுத்திறார் போல கிடக்குது!  :huh:

 

நவாலியூர் சோமசுந்தப்புலவரின்ர பேரன் சிட்னியில இருக்கிறார்! நல்ல ஒரு அருமையான பாடல் இது!

 

இணைப்புக்கு நன்றிகள் !

 

எனக்கெண்டா மச்சக்கூழ் காய்ச்சி  வச்சிட்டு நான்தான் நாள் முழுதும் குடிக்க வேணும். மனிசன் காச்சினதுக்காக ஒரு கோப்பை மட்டும் குடிப்பார். அதனால நான் நண்பர்களோ அம்மா தம்பியோ வந்தால்த்தான்  ஆசையாக் காய்ச்சுவது.

 

இது மச்ச கூழெல்லோ, எனக்கு இனிப்பு கூழ் தான் வேணும். வளமையாக ஒரு மச்சாள் கொண்டு வந்து தாறவா, இந்த முறை வந்து கொண்டு வந்து தாறாவோ தெரியாது?

 

மச்சாள் கலியாணம் கட்டவில்லையே யாழ்கவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இணைப்பு கு.சா.  வீட்டில கூழ் காச்ச ஆயத்தங்கள் நடக்குது !! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16072010cookl.jpg


ஆடிக்கூழ். 

Link to comment
Share on other sites

மச்சாள் கலியாணம் கட்டவில்லையே யாழ்கவி

 

 

என்னுடைய கணவருடைய அக்கா தான் தாறவா. நேற்று யாழில எழுதினதை பார்த்தா தரமாட்டா எண்டு நினைத்தேன். வீட்டை கொண்டு வந்து இருந்தா வேலையால வந்து குடித்து விட்டேன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கணவருடைய அக்கா தான் தாறவா. நேற்று யாழில எழுதினதை பார்த்தா தரமாட்டா எண்டு நினைத்தேன். வீட்டை கொண்டு வந்து இருந்தா வேலையால வந்து குடித்து விட்டேன்....

 

வயித்தெரிச்சலை ஏன் கிளப்புறியள் :D

 

Link to comment
Share on other sites

நன்றி அண்ணா. ஆடிப் பிறப்பை நினைவூட்டியதுக்கு  :)
 

ஆடிப்பிறப்பு ஏன் கொண்டாடுகிறம்? அதின் முக்கியத்துவம் என்ன? ஆடிப்பிறப்பு கூழுக்கும் /கொழுகட்டைக்கும் என்ன சம்மந்தம் ?

 
நான் இருக்கிற நாட்டில் பிட்டு செய்யவே மா கிடைக்குது இல்லை. கூழ் படங்களை போட்டு நாவுற வைக்கிறீர்கள்  :mellow:  :D
Link to comment
Share on other sites

 

நன்றி அண்ணா. ஆடிப் பிறப்பை நினைவூட்டியதுக்கு  :)
 

ஆடிப்பிறப்பு ஏன் கொண்டாடுகிறம்? அதின் முக்கியத்துவம் என்ன? ஆடிப்பிறப்பு கூழுக்கும் /கொழுகட்டைக்கும் என்ன சம்மந்தம் ?

 
நான் இருக்கிற நாட்டில் பிட்டு செய்யவே மா கிடைக்குது இல்லை. கூழ் படங்களை போட்டு நாவுற வைக்கிறீர்கள்  :mellow:  :D

 

 

 

ஜூவா, விசுகுவைத் தொடர்பு கொண்டால் அநுப்பிவிடுவார்களே. காசை மறந்திடாமல் கொடுத்துடுங்கோ காளான் :lol:

அது சரி நீங்கள் இருப்பது எந்தக்காட்டில்?

Link to comment
Share on other sites

ஜூவா, விசுகுவைத் தொடர்பு கொண்டால் அநுப்பிவிடுவார்களே. காசை மறந்திடாமல் கொடுத்துடுங்கோ காளான் :lol:

ஏன் check/credit card  எடுக்க மாட்டினமா ? :D 

 

அது சரி நீங்கள் இருப்பது எந்தக்காட்டில்?

 

Amazon :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் check/credit card  எடுக்க மாட்டினமா ? :D 

 

அதெல்லாம் எடுக்க மாட்டினம்.

கையிலை காசு, வாயிலை தோசை. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிப்பிறப்பு தமிழரின் விழாக்களில் ஒன்று. நெல் விதைப்புக்கான முதல் மழை ஆடியில் தான் பெய்யும். அதைத்  தமிழர் ஆடிப்பிறப்பு என்று கொண்டாடினர். ஆனால்  கூழும் கொழுக்கட்டையும் ஏன் எனத் தெரியவில்லை. வெட்கப்படவேண்டிய விடயம் தமிழர் நாம் எம் கொண்டாட்டங்களின் காரண காரியங்களைக் கூட அறியாது இருக்கிறோம்.

Link to comment
Share on other sites

ஆடிப்பிறப்பு தமிழரின் விழாக்களில் ஒன்று. நெல் விதைப்புக்கான முதல் மழை ஆடியில் தான் பெய்யும். அதைத்  தமிழர் ஆடிப்பிறப்பு என்று கொண்டாடினர். ஆனால்  கூழும் கொழுக்கட்டையும் ஏன் எனத் தெரியவில்லை. வெட்கப்படவேண்டிய விடயம் தமிழர் நாம் எம் கொண்டாட்டங்களின் காரண காரியங்களைக் கூட அறியாது இருக்கிறோம்.

 

நேற்று சேந்து குடிச்ச ஆடிக்கூழ் மறந்திட்டீங்களோ அக்காச்சி ? :lol: சீத்தாக்காட்டை சொல்லீடுவன். :lol:

 

Link to comment
Share on other sites

ஆடிப்பிறப்பு தமிழரின் விழாக்களில் ஒன்று. நெல் விதைப்புக்கான முதல் மழை ஆடியில் தான் பெய்யும். அதைத்  தமிழர் ஆடிப்பிறப்பு என்று கொண்டாடினர். ஆனால்  கூழும் கொழுக்கட்டையும் ஏன் எனத் தெரியவில்லை. வெட்கப்படவேண்டிய விடயம் தமிழர் நாம் எம் கொண்டாட்டங்களின் காரண காரியங்களைக் கூட அறியாது இருக்கிறோம்.

நன்றி  தகவலுக்கு bow.gif

 

 

 கூழும் கொழுக்கட்டையும் பயறு உழுந்து அறுவடை காலம் என்ற படியாலோ ?

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Koozh09.JPG

 

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
 
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
 
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
 
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
 
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே
 
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
 
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
 
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
 
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!..
 
K509.JPG
 

ஆடிப்பிறப்பு  தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை.தமிழ் வருடத்தின் மத்திய மாதங்களில் ஒன்றான ஆடி முதலாம் நாள்  ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது.

தட்சணாயண காலத்தின் தொடக்கதினம் (இன்று) ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலத்தில் கோடைகால வெப்பம், காண்டாவனம் உட்பட, தணிந்து குளிர்மை படிப்படியாகப் ஆரம்பிக்கிறது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.